கல்வியும் அதன் அடிப்படைகளும்
(ق) عَنْ مُعَاوِيَةَ خَطِيبًا يَقُولُ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ يُرِدْ اللَّهُ بِهِ خَيْرًا يُفَقِّهْهُ فِي الدِّينِ وَإِنَّمَا أَنَا قَاسِمٌ وَاللَّهُ يُعْطِي وَلَنْ تَزَالَ هَذِهِ الْأُمَّةُ قَائِمَةً عَلَى أَمْرِ اللَّهِ لَا يَضُرُّهُمْ مَنْ خَالَفَهُمْ حَتَّى يَأْتِيَ أَمْرُ اللَّهِ . 294
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதைத் தாம் செவியுற்றதாக முஆவியா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : யாருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரை மார்க்கத்தில் விளக்கம் பெற்றவராக ஆக்கிவிடுகின்றான் . நான் விநியோகிப்பவன் தான் . அல்லாஹ்வே வழங்குகிறான் . இந்தச் சமுதாயத்தில் ஒரு சாரார் அல்லாஹ்வுடைய கட்டளையைப் பேணுவதில் நிலைத்தே இருப்பார்கள் . அல்லாஹ்வின் கட்டளை ( மறுமை நாள் ) வரும் வரை அவர்களுக்கு மாறு செய்பவர்களால் எந்தத் தீங்கும் செய்துவிட முடியாது .
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ يُرِدْ اللَّهُ بِهِ خَيْرًا يُفَقِّهْهُ فِي الدِّينِ . 295
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது : அல்லாஹ் யாருக்கு நன்மையை நாடுகின்றானோ அவரை அவன் மார்க்க அறிவு பெற்றவராக ஆக்குகிறான் .
عَنْ جَابِرٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ النَّاسُ مَعَادِنُ فَخِيَارُهُمْ فِي الْجَاهِلِيَّةِ خِيَارُهُمْ فِي الْإِسْلَامِ إِذَا فَقِهُوا . 296
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : மக்கள் சுரங்கங்கள் ஆவர் . அறியாமைக் காலத்தில் அவர்களுள் சிறந்தவர்களாயிருந்தவர்கள் இஸ்லாத்தைத் தழுவிவிடும் போதும் சிறந்தவர்களாயிருப்பார்கள் ; அவர்கள் மார்க்க ஞானத்தைப் பெற்றுக் கொண்டால் .
عَنْ أَبِي سَعِيدٍ ، قَالَ : أَصْحَابُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا جَلَسُوا كَانَ حَدِيثُهُمْ يَعْنِي الْفِقْهَ إِلَّا أَنْ يَقْرَأَ رَجُلٌ سُورَةً أَوْ يَأْمُرَ رَجُلًا بِقِرَاءَةِ سُورَةٍ. 297
அபூசஈத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்கள் ஒரு சபையில் அமர்ந்தால் அவர்களின் பேச்சு ஃபிக்ஹ் சார்ந்ததாகவே இருக்கும் . எனினும் ஒருவர் ஏதேனும் ஓர் அத்தியாயத்தை ஓதுவார் அல்லது ஓர் அத்தியாயத்தை ஓதச் சொல்லிக் கட்டளையிடுவார் .
(ق) عَنْ أَبِي مُوسَى عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَثَلُ مَا بَعَثَنِي اللَّهُ بِهِ مِنْ الْهُدَى وَالْعِلْمِ كَمَثَلِ الْغَيْثِ الْكَثِيرِ أَصَابَ أَرْضًا فَكَانَ مِنْهَا نَقِيَّةٌ قَبِلَتْ الْمَاءَ فَأَنْبَتَتْ الْكَلَأَ وَالْعُشْبَ الْكَثِيرَ وَكَانَتْ مِنْهَا أَجَادِبُ أَمْسَكَتْ الْمَاءَ فَنَفَعَ اللَّهُ بِهَا النَّاسَ فَشَرِبُوا وَسَقَوْا وَزَرَعُوا وَأَصَابَتْ مِنْهَا طَائِفَةً أُخْرَى إِنَّمَا هِيَ قِيعَانٌ لَا تُمْسِكُ مَاءً وَلَا تُنْبِتُ كَلَأً فَذَلِكَ مَثَلُ مَنْ فَقُهَ فِي دِينِ اللَّهِ وَنَفَعَهُ مَا بَعَثَنِي اللَّهُ بِهِ فَعَلِمَ وَعَلَّمَ وَمَثَلُ مَنْ لَمْ يَرْفَعْ بِذَلِكَ رَأْسًا وَلَمْ يَقْبَلْ هُدَى اللَّهِ الَّذِي أُرْسِلْتُ بِهِ . 298
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூமூஸா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அல்லாஹ் என்னை நேர்வழி மற்றும் ஞானத்துடன் அனுப்பியதற்கு உவமையாவது , நிலத்தில் விழுந்த பெருமழை போன்றதாகும் . அவற்றில் சில நிலங்கள் நீரை ஏற்றுக்கொண்டு ஏராளமான புற்களையும் பசுமையான செடி கொடிகளையும் முளைக்கச் செய்தன . மற்ற சில நிலங்கள் தண்ணீரைத் தேக்கி வைத்துக்கொள்ளும் தரிசு நிலங்களாகும் . அதனை இறைவன் மக்களுக்குப் பயன்படச் செய்தான் . அதனை மக்கள் அருந்தினர் ; ( தமது கால்நடைகளுக்கும் ) புகட்டினர் ; விவசாயமும் செய்தனர் . அந்தப் பெருமழை இன்னொரு வகை நிலத்திலும் விழுந்தது . அது ( ஒன்றுக்கும் உதவாத ) வெறும் கட்டாந்தரை . அது தண்ணீரைத் தேக்கி வைத்துக்கொள்ளவும் இல்லை ; புற்பூண்டுகளை முளைக்கச் செய்யவுமில்லை . இதுதான் அல்லாஹ்வின் மார்க்கத்தில் விளக்கம் பெற்று நான் கொண்டு வந்த தூதினால் பயனடைந்து , கற்றுத் தெரிந்து பிறருக்கும் கற்றுக் கொடுத்தவருக்கும் , நான் கொண்டு வந்த தூதை ஏறிட்டுப் பாராமலும் நான் கொண்டு வந்த அல்லாஹ்வின் நேர்வழியை ஏற்றுக்கொள்ளாமலும் வாழ்கிறவனுக்கும் உவமையாகும் .
عَنْ أَبِي الدَّرْدَاءِ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّهُ لَيَسْتَغْفِرُ لِلْعَالِمِ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ حَتَّى الْحِيتَانِ فِي الْبَحْرِ . 299
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதைத் தாம் செவியுற்றதாக அபுத்தர்தா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : திண்ணமாக ஒரு மார்க்க அறிஞருக்காக கடலில் உள்ள மீன்கள் உள்பட வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் பாவமன்னிப்புத் தேடுகின்றன .
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ عَنْ أَبِيهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْرُ مَا يُخَلِّفُ الرَّجُلُ مِنْ بَعْدِهِ ثَلَاثٌ وَلَدٌ صَالِحٌ يَدْعُو لَهُ وَصَدَقَةٌ تَجْرِي يَبْلُغُهُ أَجْرُهَا وَعِلْمٌ يُعْمَلُ بِهِ مِنْ بَعْدِهِ . 300
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் அபீகத்தாதா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ஒரு மனிதரின் மரணத்திற்குப் பிறகு ( அவரைப் பின்தொடர்ந்து ) வரக்கூடிய நன்மைகள் மூன்றாகும் . அவருக்காகப் பிரார்த்தனை செய்யக்கூடிய குழந்தை , நிரந்தரமான தானதர்மம் . அதன் நற்கூலி அவரை அடைந்து கொண்டேயிருக்கும் , அவருக்குப் பிறகு செயல்படுத்தப்படுகின்ற கல்வி ஆகியனவாகும் .
عَنْ أَبِي أُمَامَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : مَنْ غَدَا إِلَى الْمَسْجِدِ لَا يُرِيدُ إِلَّا لِيَتَعَلَّمَ خَيْرًا أَوْ يُعَلِّمَهُ كَانَ لَهُ أَجْرُ مُعْتَمِرٍ تَامِّ الْعُمْرَةِ ، فَمَنْ رَاحَ إِلَى الْمَسْجِدِ لَا يُرِيدُ إِلَّا لِيَتَعَلَّمَ خَيْرًا أَوْ يُعَلِّمَهُ فَلَهُ أَجْرُ حَاجٍّ تَامِّ الْحَجَّةِ . 301
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஉமாமா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : யார் ஒருவர் காலையில் , கற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கற்பிக்க வேண்டும் என்று கருதி மஸ்ஜிதுக்குச் செல்கிறாரோ அவருக்கு முழுமையான ஓர் உம்ரா செய்த நன்மை கிடைக்கும் . யார் ஒருவர் மாலையில் , கற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கற்பிக்க வேண்டும் என்று கருதி மஸ்ஜிதுக்குச் செல்கிறாரோ அவருக்கு முழுமையான ஹஜ் செய்த நன்மை கிடைக்கும் .
عَنْ أَنَسٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : مَنْهُومَانِ لَا يَشْبَعَانِ : مَنْهُومٌ فِي عِلْمٍ لَا يَشْبَعُ ، وَمَنْهُومٌ فِي دُنْيَا لَا يَشْبَعُ . 302
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : இரண்டு பேராசைக்காரர்கள் திருப்தியுறமாட்டார்கள் . கல்வியைத் தேடுவதில் பேராசையுடையவன் ( அதில் ) திருப்தியுற மாட்டான் . உலகத் தேடலில் பேராசையுடையவன் ( அதில் ) திருப்தியுறமாட்டான் .
عَنْ حُذَيْفَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : فَضْلُ الْعِلْمِ خَيْرٌ مِنْ فَضْلِ الْعِبَادَةِ ، وَخَيْرُ دِينِكُمُ الْوَرَعُ . 303
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக ஹுதைஃபா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : வழிபாட்டின் சிறப்பைவிடக் கல்வியின் சிறப்பு சிறந்தது . உங்களின் தீனுக்குள் சிறந்தது ஒழுக்கம் பேணல் ஆகும் .
(خ ) عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ بَلِّغُوا عَنِّي وَلَوْ آيَةً وَحَدِّثُوا عَنْ بَنِي إِسْرَائِيلَ وَلَا حَرَجَ وَمَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنْ النَّارِ. 304
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : என்னிடமிருந்து ஒரேயரு ( சிறு ) செய்தி கிடைத்தாலும் சரி , அதை ( ப் பிறருக்கு ) எடுத்துரையுங்கள் . பனூ இஸ்ராயீல்களின் வாயிலாகக் கிடைத்த செய்திகளையும் அறிவியுங்கள் . அதனால் குற்றமில்லை . எவன் என் மீது ( நான் சொன்னதாக ) வேண்டு மென்றே பொய்யுரைக்கின்றானோ அவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும் .
عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ نَضَّرَ اللَّهُ امْرَأً سَمِعَ مِنَّا حَدِيثًا فَحَفِظَهُ حَتَّى يُبَلِّغَهُ فَرُبَّ حَامِلِ فِقْهٍ إِلَى مَنْ هُوَ أَفْقَهُ مِنْهُ وَرُبَّ حَامِلِ فِقْهٍ لَيْسَ بِفَقِيهٍ . 305
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதைத் தாம் செவியுற்றதாக ஸைத் பின் ஸாபித் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : நம்மிடமிருந்து ஒரு செய்தியைக் கேட்டு அதைப் பாதுகாத்து , பின்னர் அதை ( ப் பிறருக்கு ) எடுத்துரைத்தவனை அல்லாஹ் மகிழ்ச்சிப்படுத்துவானாக ! மார்க்கச் சட்ட அறிவைப் பெற்றிருக்கக்கூடிய எத்தனையோ பேர் அவரைவிட மிகவும் அறிந்தவரிடம் எடுத்துரைக்கிறார் . மார்க்கச் சட்ட அறிவைப் பெற்றிருக்கக்கூடிய எத்தனையோ பேர் மார்க்க அறிஞர் இல்லை .
عَنْ جَدِّهِ مُعَاوِيَةَ الْقُشَيْرِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَلَا لِيُبَلِّغْ الشَّاهِدُ الْغَائِبَ . 306
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக முஆவியா அல்குஷைரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ( ஹஜ்ஷிலிருந்து விடைபெறும்போது இங்கு ) வந்தவர் வராதவருக்கு எடுத்துரைக்கட்டும் .
عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَسْمَعُونَ وَيُسْمَعُ مِنْكُمْ وَيُسْمَعُ مِمَّنْ سَمِعَ مِنْكُمْ . 307
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ( இப்போது என்னிடமிருந்து ) நீங்கள் செவியுறுகின்றீர்கள் ; ( பிற்காலத்தில் ) உங்களிடமிருந்து செவியுறப்படும் ; ( அதன்பின் ) உங்களிடம் கேட்டவர்களிடமிருந்து செவியுறப்படும் . ( இவ்வாறே இது தொடரும் ).
(ق) عَنْ علي قَالَ : قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : لَا تَكْذِبُوا عَلَيَّ فَإِنَّهُ مَنْ كَذَبَ عَلَيَّ فَلْيَلِجْ النَّارَ. 308
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அலீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ( நான் சொல்லாததைச் சொன்னதாக ) என் மீது பொய் சொல்லாதீர்கள் . ஏனெனில் , என் மீது பொய்யுரைப்பவன் நிச்சயம் நரகத்தில் நுழைவான் .
(ق) عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنْ النَّارِ . 309
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : என் மீது வேண்டுமென்றே இட்டுக்கட்டிப் பொய் சொல்பவன் தனது இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக்கொள்ளட்டும் .
(م) عَنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ حَدَّثَ عَنِّي حَدِيثًا وَهُوَ يَرَى أَنَّهُ كَذِبٌ فَهُوَ أَحَدُ الْكَاذِبَيْنِ . 310
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக சமுரா பின் ஜுன்துப் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : பொய்யெனத் தெரியும் என்னைப் பற்றிய ஒரு செய்தியை யார் அறிவிக்கிறாரோ அவரும் பொய்யர்கள் இருவருள் ஒருவர் ஆவார் .
(ق) عَنْ عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ قَالَ قَالَ [ ص: 40 ] النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا حَسَدَ إِلَّا فِي اثْنَتَيْنِ رَجُلٌ آتَاهُ اللَّهُ مَالًا فَسُلِّطَ عَلَى هَلَكَتِهِ فِي الْحَقِّ وَرَجُلٌ آتَاهُ اللَّهُ الْحِكْمَةَ فَهُوَ يَقْضِي بِهَا وَيُعَلِّمُهَا . 311
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : இரண்டு விஷயங்களைத் தவிர வேறெதிலும் பொறாமை கொள்ளக் கூடாது . ஒரு மனிதருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர் நல்ல வழியில் செலவு செய்தல் ; இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கி , அதற்கேற்ப அவர் தீர்ப்பு வழங்குபவராகவும் கற்றுக் கொடுப்பவராகவும் இருப்பது ( ஆகியவையே அந்த இரண்டு விஷயங்கள் ).
(ق) عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ مِنْ الشَّجَرِ شَجَرَةً لَا يَسْقُطُ وَرَقُهَا وَهِيَ مَثَلُ الْمُسْلِمِ حَدِّثُونِي مَا هِيَ فَوَقَعَ النَّاسُ فِي شَجَرِ الْبَادِيَةِ وَوَقَعَ فِي نَفْسِي أَنَّهَا النَّخْلَةُ قَالَ عَبْدُ اللَّهِ فَاسْتَحْيَيْتُ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ أَخْبِرْنَا بِهَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هِيَ النَّخْلَةُ قَالَ عَبْدُ اللَّهِ فَحَدَّثْتُ أَبِي بِمَا وَقَعَ فِي نَفْسِي فَقَالَ لَأَنْ تَكُونَ قُلْتَهَا أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ يَكُونَ لِي كَذَا وَكَذَا . 312
அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : “ மரங்களில் ( இப்படியும் ) ஒருவகை மரம் உண்டு ; அதன் இலை உதிர்வதில்லை . அது முஸ்லிமுக்கு உவமையாகும் . அது என்ன மரம் என்று சொல்லுங்கள் !`` என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்டார்கள் . நாட்டு மரங்களை நோக்கி மக்களின் கவனம் போயிற்று . அது பேரீச்ச மரம்தான் என்று எனக்குத் தோன்றியது . ( மூத்தவர்கள் மௌனமாய் இருக்கும் அவையில் நான் எப்படிச் சொல்வது என்று ) வெட்கப்பட்டுக்கொண்டு ( அமைதியாக ) இருந்துவிட்டேன் . பிறகு மக்கள் “ அது என்ன மரம் என்று தாங்களே சொல்லுங்கள் , அல்லாஹ்வின் தூதரே ?`` என்று கேட்க , “ அது பேரீச்ச மரம் `` என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் . பின்னர் என் தந்தையிடம் என் மனதில் தோன்றிய விஷயத்தை நான் கூறினேன் . அதைக் கேட்ட என் தந்தை “ நீ அதைக் கூறியிருந்தால் இன்னின்னவை எனக்குக் கிடைப்பதைவிட அது எனக்கு மிகவும் விருப்பமானதாக இருந்திருக்கும் `` என்றார்கள் .
(ق) عَنْ أَبِي وَاقِدٍ اللَّيْثِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَمَا هُوَ جَالِسٌ فِي الْمَسْجِدِ وَالنَّاسُ مَعَهُ إِذْ أَقْبَلَ ثَلَاثَةُ نَفَرٍ فَأَقْبَلَ اثْنَانِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَذَهَبَ وَاحِدٌ قَالَ فَوَقَفَا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَمَّا أَحَدُهُمَا فَرَأَى فُرْجَةً فِي الْحَلْقَةِ فَجَلَسَ فِيهَا وَأَمَّا الْآخَرُ فَجَلَسَ خَلْفَهُمْ وَأَمَّا الثَّالِثُ فَأَدْبَرَ ذَاهِبًا فَلَمَّا فَرَغَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَلَا أُخْبِرُكُمْ عَنْ النَّفَرِ الثَّلَاثَةِ أَمَّا أَحَدُهُمْ فَأَوَى إِلَى اللَّهِ فَآوَاهُ اللَّهُ وَأَمَّا الْآخَرُ فَاسْتَحْيَا فَاسْتَحْيَا اللَّهُ مِنْهُ وَأَمَّا الْآخَرُ فَأَعْرَضَ فَأَعْرَضَ اللَّهُ عَنْهُ . 313
அபூவாக்கித் ( அல்ஹாரிஸ் பின் மாலிக் ) அல்லைஸீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மக்களுடன் ( மஸ்ஜிதுந்நபவீ ) பள்ளிவாசலில் அமர்ந்து கொண்டிருந்தபோது மூன்றுபேர் வந்து கொண்டிருந்தனர் . அவர்களுள் இருவர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை முன்னோக்கி வந்தனர் . மற்றொருவர் ( அலட்சியப்படுத்திவிட்டுச் ) சென்றுவிட்டார் . ( பள்ளிக்குள் வந்த ) அவ்விருவரும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ( வீற்றிருந்த அவை ) முன்னால் வந்து நின்றார்கள் . அவ்விருவருள் ஒருவர் வட்டமான அந்த அவையில் ஓர் இடைவெளியைக் கண்டபோது அதில் அமர்ந்துகொண்டார் . மற்றவரோ அவையினருக்குப் பின்னால் அமர்ந்து கொண்டார் . அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ( தமது பேச்சை ) முடித்ததும் கூறினார்கள் : இம்மூன்று பேர்களைப் பற்றி உங்களுக்குச் சொல்லட்டுமா ? அவர்களுள் ஒருவர் அல்லாஹ்வின் ( அருளின் ) பக்கம் ஒதுங்கினார் . அல்லாஹ்வும் அவரை அரவணைத்துக் கொண்டான் . மற்றவரோ வெட்கப்பட்டு ( க்கொண்டு கடைசியில் உட்கார்ந்து ) விட்டார் . எனவே அல்லாஹ்வும் வெட்கப்பட்டுக்கொண்டான் . மூன்றாமவரோ அலட்சியப்படுத்திச் சென்றுவிட்டார் . எனவே அல்லாஹ்வும் அவரை அலட்சியப்படுத்திவிட்டான் .
(ق) عَنْ عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَتْ لَا تَسْمَعُ شَيْئًا لَا تَعْرِفُهُ إِلَّا رَاجَعَتْ فِيهِ حَتَّى تَعْرِفَهُ وَأَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ حُوسِبَ عُذِّبَ قَالَتْ عَائِشَةُ فَقُلْتُ أَوَلَيْسَ يَقُولُ اللَّهُ تَعَالَى فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا قَالَتْ فَقَالَ إِنَّمَا ذَلِكِ الْعَرْضُ وَلَكِنْ مَنْ نُوقِشَ الْحِسَابَ يَهْلِكْ . 314
இப்னு அபீமுலைக்கா ( அப்தில்லாஹ் பின் உபைதில்லாஹ்-ரஹிமஹுல்லாஹ் ) கூறியதாவது : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துணைவியார் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா தமக்குப் புரியாத ஒரு செய்தியைச் செவியுற்றால் அதனை அவர்கள் நன்கு புரிந்துகொள்ளும் வரை ( அதையொட்டி ) மீண்டும் மீண்டும் கேள்வி கேட்டுத் தெரிந்துகொள்வார்கள் . ( ஒருமுறை ) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் , “ எவர் ( மறுமை நாளில் துருவித் துருவி ) விசாரிக்கப்படுவாரோ அவர் வேதனை செய்யப்படுவார் `` என்று கூறினார்கள் . ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா , “ அல்லாஹ் ( குர்ஆனில் ) " வலக்கரத்தில் தமது வினைச்சுவடி வழங்கப்பட்டவரிடம் எளிய முறையில் கணக்கு வாங்கப்படும் ` (84:8) என்றல்லவா கூறுகின்றான் ?`` என்று கேட்டார்கள் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ இது ( கேள்வி கணக்குத் தொடர்பானது அன்று : மாறாக , மனிதர்களின் நன்மை தீமைகளின் பட்டியல் அவர்களுக்குமுன் ) சமர்ப்பிக்கப்படுவதுதான் . துருவித் துருவி விசாரிக்கப்படுபவர் அழிந்தே போய்விடுவார் `` என்று கூறினார்கள் .
(خ) عَنْ أَنَسَ بْنَ مَالِكٍ يَقُولُ بَيْنَمَا نَحْنُ جُلُوسٌ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَسْجِدِ دَخَلَ رَجُلٌ عَلَى جَمَلٍ فَأَنَاخَهُ فِي الْمَسْجِدِ ثُمَّ عَقَلَهُ ثُمَّ قَالَ لَهُمْ أَيُّكُمْ مُحَمَّدٌ وَالنَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُتَّكِئٌ بَيْنَ ظَهْرَانَيْهِمْ فَقُلْنَا هَذَا الرَّجُلُ الْأَبْيَضُ الْمُتَّكِئُ فَقَالَ لَهُ الرَّجُلُ يَا ابْنَ عَبْدِ الْمُطَّلِبِ فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ أَجَبْتُكَ فَقَالَ الرَّجُلُ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنِّي سَائِلُكَ فَمُشَدِّدٌ عَلَيْكَ فِي الْمَسْأَلَةِ فَلَا تَجِدْ عَلَيَّ فِي نَفْسِكَ فَقَالَ سَلْ عَمَّا بَدَا لَكَ فَقَالَ أَسْأَلُكَ بِرَبِّكَ وَرَبِّ مَنْ قَبْلَكَ آللَّهُ أَرْسَلَكَ إِلَى النَّاسِ كُلِّهِمْ فَقَالَ اللَّهُمَّ نَعَمْ قَالَ أَنْشُدُكَ بِاللَّهِ آللَّهُ أَمَرَكَ أَنْ نُصَلِّيَ الصَّلَوَاتِ الْخَمْسَ فِي الْيَوْمِ وَاللَّيْلَةِ قَالَ اللَّهُمَّ نَعَمْ قَالَ أَنْشُدُكَ بِاللَّهِ آللَّهُ أَمَرَكَ أَنْ نَصُومَ هَذَا الشَّهْرَ مِنْ السَّنَةِ قَالَ اللَّهُمَّ نَعَمْ قَالَ أَنْشُدُكَ بِاللَّهِ آللَّهُ أَمَرَكَ أَنْ تَأْخُذَ هَذِهِ الصَّدَقَةَ مِنْ أَغْنِيَائِنَا فَتَقْسِمَهَا عَلَى فُقَرَائِنَا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اللَّهُمَّ نَعَمْ فَقَالَ الرَّجُلُ آمَنْتُ بِمَا جِئْتَ بِهِ وَأَنَا رَسُولُ مَنْ وَرَائِي مِنْ قَوْمِي وَأَنَا ضِمَامُ بْنُ ثَعْلَبَةَ أَخُو بَنِي سَعْدِ بْنِ بَكْرٍ. 315
அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் நாங்கள் ( மஸ்ஜிதுந் நபவீ ) பள்ளிவாசலில் அமர்ந்திருந்தபோது ஒட்டகத்தில் ஒரு மனிதர் வந்து பள்ளி ( யின் வளாகத்தி ) ல் ஒட்டகத்தைப் படுக்கவைத்து அத ( ன் முன்னங்காலி ) னை மடக்கிக்கட்டினார் . பிறகு மக்களிடம் “ உங்களுள் முஹம்மது அவர்கள் யார் ?” என்று கேட்டார் . - அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மக்களிடையே சாய்ந்து அமர்ந்திருந்தார்கள் .- “ இதோ சாய்ந்து அமர்ந்திருக்கும் இந்த வெள்ளைநிற மனிதர்தாம் ” என்று நாங்கள் சொன்னோம் . உடனே அம்மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை “ அப்துல் முத்தலிபின் ( மகனின் ) புதல்வரே !” என்றழைத்தார் . அதற்கு நபியவர்கள் “ என்ன விஷயம் ?`` என்று கேட்டார்கள் . அப்போது அம்மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் “ நான் உங்களிடம் சில கேள்விகள் கேட்கப் போகிறேன் . சில கடினமான கேள்விகளையும் நான் கேட்கப் போகிறேன் . அதற்கு நீங்கள் என் மீது கோபப்பட்டுவிடக் கூடாது `` என்றார் . அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “ உம் மனதில் பட்டதைக் கேளும் !`` என்றார்கள் . உடனே அம்மனிதர் “ உம்முடைய , உம் முன்னோருடைய இரட்சகன்மீது ஆணையாகக் கேட்கிறேன் ; அல்லாஹ்தான் உம்மை மனித இனம் முழுவதற்கும் தூதராக அனுப்பினானா ?” என்றார் . அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “ ஆம் , அல்லாஹ் சாட்சியாக !`` என்றார்கள் . அடுத்து அவர் “ அல்லாஹ்வின் பொருட்டால் உம்மிடம் நான் கேட்கிறேன் ; அல்லாஹ்தான் இரவிலும் பகலிலுமாக ( நாளன்றுக்கு ) ஐவேளைத் தொழுகைகளைத் தொழுது வரவேண்டுமென்று உமக்கு ( ம் மக்களுக்கும் ) கட்டளையிட்டிருக்கின்றானா ?`` என்று கேட்டார் . அதற்கும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “ ஆம் , அல்லாஹ் சாட்சியாக `` என்றார்கள் . அவர் “ அல்லாஹ்வின் பொருட்டால் உம்மிடம் நான் கேட்கிறேன் ; அல்லாஹ்தான் ஒவ்வோர் ஆண்டிலும் ( குறிப்பிட்ட ) இந்த மாதத்தில் நோன்பு நோற்க வேண்டும் என்று உமக்குக் கட்டளையிட்டிருக்கிறானா ?`` என்று கேட்டார் . அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “ ஆம் , அல்லாஹ் சாட்சியாக !” என்றார்கள் . அவர் , “ அல்லாஹ்வின் பொருட்டால் உம்மிடம் நான் கேட்கிறேன் : அல்லாஹ்தான் எங்கள் செல்வர்களிடமிருந்து இந்த ( ஸகாத் எனும் ) தர்மத்தைப் பெற்று எங்கள் வறியோரிடையே விநியோகிக்குமாறு உமக்குக் கட்டளையிட்டிருக்கின்றானா ?`` என்று கேட்டார் . அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ ஆம் , அல்லாஹ் சாட்சியாக !` என்றார்கள் . ( இவற்றைக் கேட்டுவிட்டு ) அம்மனிதர் “ நீங்கள் ( இறைவனிடமிருந்து ) கொண்டு வந்தவற்றை நான் நம்பி ஏற்கின்றேன் `` என்று கூறிவிட்டு “ நான் , எனது கூட்டத்தார்களில் இங்கு வராமல் இருப்பவர்களின் தூதுவனாவேன் ; நான்தான் பனூ சஅத் பின் பக்ர் குலத்தாரின் சகோதரன் ளிமாம் பின் ஸஅலபா `` என்றும் கூறினார் .
(ق) عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ عَنْ أَبِيهِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ أَعْظَمَ الْمُسْلِمِينَ جُرْمًا مَنْ سَأَلَ عَنْ شَيْءٍ لَمْ يُحَرَّمْ فَحُرِّمَ مِنْ أَجْلِ مَسْأَلَتِهِ . 316
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக சஅத் பின் அபீவக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : எவர் தடை விதிக்கப்படாத ஒன்றைப் பற்றிக் கேள்வி கேட்டு , அவர் கேள்வி கேட்ட காரணத்தாலேயே அது தடை செய்யப்பட்டு விடுமானால் அவர்தாம் முஸ்லிம்களிலேயே பெருங்குற்றம் புரிந்தவர் ஆவார் .
(ق) عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ دَعُونِي مَا تَرَكْتُكُمْ إِنَّمَا هَلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ بِسُؤَالِهِمْ وَاخْتِلَافِهِمْ عَلَى أَنْبِيَائِهِمْ فَإِذَا نَهَيْتُكُمْ عَنْ شَيْءٍ فَاجْتَنِبُوهُ وَإِذَا أَمَرْتُكُمْ بِأَمْرٍ فَأْتُوا مِنْهُ مَا اسْتَطَعْتُمْ . 317
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நான் எதை ( செய்யுங்கள் என்றோ , செய்ய வேண்டாமென்றோ ஒன்றும் கூறாமல் ) உங்களு ( டைய முடிவு ) க்கு விட்டுவிட்டேனோ அதை ( ப் பற்றி எதுவும் கேட்காமல் ) நீங்களும் விட்டுவிடுங்கள் . உங்களுக்குமுன் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் அவர்கள் தங்கள் இறைத்தூதர்களிடம் ( அதிகமாகக் ) கேள்வி கேட்டதும் அவர்களுடன் கருத்து வேறுபாடு கொண்டதும்தான் . ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதிலிருந்து நீங்கள் தவிர்ந்து கொள்ளுங்கள் . ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிட்டால் அதை உங்களால் இயன்ற அளவிற்குச் செய்யுங்கள் .
(ق) عَنْ أَبِي مُوسَى قَالَ سُئِلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أَشْيَاءَ كَرِهَهَا فَلَمَّا أُكْثِرَ عَلَيْهِ غَضِبَ ثُمَّ قَالَ لِلنَّاسِ سَلُونِي عَمَّا شِئْتُمْ قَالَ رَجُلٌ مَنْ أَبِي قَالَ أَبُوكَ حُذَافَةُ فَقَامَ آخَرُ فَقَالَ مَنْ أَبِي يَا رَسُولَ اللَّهِ فَقَالَ أَبُوكَ سَالِمٌ مَوْلَى شَيْبَةَ فَلَمَّا رَأَى عُمَرُ مَا فِي وَجْهِهِ قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّا نَتُوبُ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ . 318
அபூமூஸா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அவர்களுக்குப் பிடிக்காத பல விஷயங்கள் பற்றிக் கேட்கப்பட்டது . அவர்களிடம் ( இது போன்ற ) கேள்விகள் அதிகமாகக் கேட்கப்பட்டபோது ( அதைக் கேட்டு ) கோபப்பட்டார்கள் . பின்னர் மக்களிடம் “ நீங்கள் நாடிய எதைப் பற்றி வேண்டுமானாலும் என்னிடம் கேளுங்கள் !`` என்று கூறினார்கள் . அப்போது ஒரு மனிதர் , “ என் தந்தை யார் ?`` என்று கேட்டார் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “ ஹுதாஃபாதான் உன் தந்தை `` என்று பதிலளித்தார்கள் . உடனே மற்றொருவர் எழுந்து “ என் தந்தை யார் , அல்லாஹ்வின் தூதரே ?” என்று கேட்க , “ உமது தந்தை ஷைபா என்பவரிடம் அடிமையாயிருந்த " சாலிம்`தான் `` என்றார்கள் . ( இம்மாதிரியான கேள்விகளால் ) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முகத்தில் தென்பட்ட ( கோபத் ) தைக் கண்ட உமர் ரளியல்லாஹு அன்ஹு , “ அல்லாஹ்வின் தூதரே ! நாங்கள் மெய்யாகவே வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருகிறோம் `` என்றார்கள் .
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّمَا هَلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ بِكَثْرَةِ سُؤَالِهِمْ وَاخْتِلَافِهِمْ عَلَى أَنْبِيَائِهِمْ لَا تَسْأَلُونِي عَنْ شَيْءٍ إِلَّا أَخْبَرْتُكُمْ بِهِ فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ حُذَافَةَ مَنْ أَبِي يَا رَسُولَ اللَّهِ قَالَ أَبُوكَ حُذَافَةُ بْنُ قَيْسٍ فَرَجَعَ إِلَى أُمِّهِ فَقَالَتْ وَيْحَكَ مَا حَمَلَكَ عَلَى الَّذِي صَنَعْتَ فَقَدْ كُنَّا أَهْلَ جَاهِلِيَّةٍ وَأَهْلَ أَعْمَالٍ قَبِيحَةٍ فَقَالَ لَهَا إِنْ كُنْتُ لَأُحِبُّ أَنْ أَعْلَمَ مَنْ أَبِي مَنْ كَانَ مِنْ النَّاسِ . 319
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : “ உங்களுக்குமுன் வாழ்ந்தவர்கள் அழிந்ததெல்லாம் அவர்கள் அதிகமாகக் கேள்வி கேட்டு , தங்கள் இறைத்தூதர்களிடம் கருத்து வேறுபாடு கொண்டதன் காரணமாகத்தான் . நான் எதை உங்களுக்கு அறிவிக்கின்றேனோ அதைத் தவிர வேறு எதைப் பற்றியும் என்னிடம் நீங்கள் கேட்காதீர்கள் ” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் . அப்போது அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா , “ அல்லாஹ்வின் தூதரே ! என் தந்தை யார் ?`` என்று கேட்டார் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “‘ ஹுதாஃபா பின் கைஸ்’தான் உன் தந்தை `` என்று பதிலளித்தார்கள் . அதைக் கேட்டபின் அவர் தம் தாயிடம் சென்றார் . ( தாம் கேட்ட கேள்வியையும் அதற்கான பதிலையும் அவரிடம் சொன்னார் .) அதைக் கேட்ட அவர்தம் தாய் , “ உனக்கு வந்த கேடே ! நீ செய்த செயலைச் செய்யத் தூண்டியது எது ? நாம் அறியாமைக் காலத்தில் அசிங்கமான செயல்களைச் செய்பவர்களாகவா இருந்து வந்தோம் ?” என்று வினவினார் . அதற்கு அவர் , “ என் தந்தை மக்களுள் எத்தகையவராக இருந்தார் என்று தெரிந்து கொள்ளவே நான் விரும்பினேன் ( அதுவன்றி எந்தக் கெட்ட நோக்கமும் இல்லை )” என்று பதிலளித்தார் .
(ق) عَنْ أَبِي وَائِلٍ قَالَ كَانَ عَبْدُ اللَّهِ يُذَكِّرُ النَّاسَ فِي كُلِّ خَمِيسٍ فَقَالَ لَهُ رَجُلٌ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ لَوَدِدْتُ أَنَّكَ ذَكَّرْتَنَا كُلَّ يَوْمٍ قَالَ أَمَا إِنَّهُ يَمْنَعُنِي مِنْ ذَلِكَ أَنِّي أَكْرَهُ أَنْ أُمِلَّكُمْ وَإِنِّي أَتَخَوَّلُكُمْ بِالْمَوْعِظَةِ كَمَا كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَخَوَّلُنَا بِهَا مَخَافَةَ السَّآمَةِ عَلَيْنَا . 320
அபூவாயில் ஷகீக் பின் சலமா ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு , ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் மக்களுக்கு அறிவுரை கூறும் வழக்கம் உடையவர்களாய் இருந்தார்கள் . ( ஒரு நாள் ) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து “ அபூ அப்திர் ரஹ்மான் ! தாங்கள் நாள்தோறும் எங்களுக்கு அறிவுரை கூற வேண்டும் என நான் பெரிதும் விரும்புகிறேன் ” என்றார் . அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு , “ உங்களைச் சலிப்படையச் செய்துவிடுவேனோ என்று அஞ்சுவதுதான் இதைச் செய்யவிடாமல் என்னைத் தடுக்கிறது . நான் உங்களுக்குச் சந்தர்ப்பச் சூழ்நிலைகளைக் கவனித்து அறிவுரை கூறுகிறேன் . இவ்வாறுதான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நாங்கள் சலிப்படைவதை அஞ்சி எங்களுக்கு அறிவுரை கூறிவந்தார்கள் `` என்றார்கள் .
(خ) عَنْ عِكْرِمَةَ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ حَدِّثْ النَّاسَ كُلَّ جُمُعَةٍ مَرَّةً فَإِنْ أَبَيْتَ فَمَرَّتَيْنِ فَإِنْ أَكْثَرْتَ فَثَلَاثَ مِرَارٍ وَلَا تُمِلَّ النَّاسَ هَذَا الْقُرْآنَ وَلَا أُلْفِيَنَّكَ تَأْتِي الْقَوْمَ وَهُمْ فِي حَدِيثٍ مِنْ حَدِيثِهِمْ فَتَقُصُّ عَلَيْهِمْ فَتَقْطَعُ عَلَيْهِمْ حَدِيثَهُمْ فَتُمِلُّهُمْ وَلَكِنْ أَنْصِتْ فَإِذَا أَمَرُوكَ فَحَدِّثْهُمْ وَهُمْ يَشْتَهُونَهُ فَانْظُرْ السَّجْعَ مِنْ الدُّعَاءِ فَاجْتَنِبْهُ فَإِنِّي عَهِدْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابَهُ لَا يَفْعَلُونَ إِلَّا ذَلِكَ يَعْنِي لَا يَفْعَلُونَ إِلَّا ذَلِكَ الِاجْتِنَابَ . 321
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : வாரத்தில் ஒரு முறை மக்களுக்கு உரை நிகழ்த்துங்கள் . ( அது போதாது எனக் கருதி ) அதற்கு நீங்கள் மறுத்தால் ( வாரத்தில் ) இரண்டு முறை உரை நிகழ்த்துங்கள் . அதைவிட அதிகமாகப்போனால் மூன்று முறை உரை நிகழ்த்துங்கள் . ( அதைவிட அதிகமாகப்போய் ) இந்தக் குர்ஆன் மீது மக்களுக்குச் சடைவை ஏற்படுத்திவிடாதீர்கள் . மக்கள் எதையோ பேசிக்கொண்டிருக்கும்போது நீங்கள் அவர்களிடம் சென்று உரையாற்ற , அதையடுத்து அவர்களின் பேச்சு தடைபட்டுவிட , அதனால் அவர்களை நீங்கள் சோர்வடையச் செய்கின்ற நிலையில் உங்களை நான் காணக் கூடாது . மாறாக , நீங்கள் ( அப்போது ) மௌனமாக இருங்கள் . அவர்களாக விரும்பி உங்களைக் கேட்டுக்கொண்டால் அவர்கள் மத்தியில் உரையாற்றுங்கள் . எதுகை மோனையுடன் பிரார்த்தனை செய்வதைக் கவனமாக இருந்து தவிர்த்து விடுங்கள் . ஏனெனில் , அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் நபித்தோழர்களும் இவ்வாறு செய்வதிலிருந்து தவிர்ந்திருக்கவே நான் கண்டுள்ளேன் .
(ق) عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِمُعَاذِ بْنِ جَبَلٍ حِينَ بَعَثَهُ إِلَى الْيَمَنِ إِنَّكَ سَتَأْتِي قَوْمًا أَهْلَ كِتَابٍ فَإِذَا جِئْتَهُمْ فَادْعُهُمْ إِلَى أَنْ يَشْهَدُوا أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ فَإِنْ هُمْ أَطَاعُوا لَكَ بِذَلِكَ فَأَخْبِرْهُمْ أَنَّ اللَّهَ قَدْ فَرَضَ عَلَيْهِمْ خَمْسَ صَلَوَاتٍ فِي كُلِّ يَوْمٍ وَلَيْلَةٍ فَإِنْ هُمْ أَطَاعُوا لَكَ بِذَلِكَ فَأَخْبِرْهُمْ أَنَّ اللَّهَ قَدْ فَرَضَ عَلَيْهِمْ صَدَقَةً تُؤْخَذُ مِنْ أَغْنِيَائِهِمْ فَتُرَدُّ عَلَى فُقَرَائِهِمْ فَإِنْ هُمْ أَطَاعُوا لَكَ بِذَلِكَ فَإِيَّاكَ وَكَرَائِمَ أَمْوَالِهِمْ وَاتَّقِ دَعْوَةَ الْمَظْلُومِ فَإِنَّهُ لَيْسَ بَيْنَهُ وَبَيْنَ اللَّهِ حِجَابٌ . 322
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் : நீர் வேதமுடையவர்களிடம் செல்கிறீர் . அவர்களிடம் சென்றடைந்துவிட்டால் , அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை ; முஹம்மத் அல்லாஹ்வின் தூதராவார் என்று ( ஏகத்துவத்திற்கு ) சாட்சியம் சொல்லும்படி அவர்களை அழைப்பீராக ! இதற்கு அவர்கள் ( இசைந்து ) உமக்குக் கட்டுப்பட்டுவிட்டால் , " அல்லாஹ் தினமும் ஐவேளை தொழுவதைக் கடமையாக்கியுள்ளான் ` என்பதை அவர்களுக்கு அறிவிப்பீராக ! அவர்கள் இதற்கும் ( இசைந்து ) உமக்குக் கட்டுப்பட்டுவிட்டால் " நிச்சயமாக அல்லாஹ் அவர்களில் செல்வர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டு அவர்களில் ஏழைகளுக்குக் கொடுக்கப்படுகின்ற ஸகாத்தைக் கடமையாக்கியுள்ளான் ` என அவர்களுக்கு அறிவிப்பீராக ! அவர்கள் இதற்கும் ( இசைந்து ) உமக்குக் கட்டுப்பட்டால் அவர்களின் பொருட்களில் சிறந்தவற்றை வசூலிப்பது குறித்து உம்மை எச்சரிக்கிறேன் . அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனைக்குப் பயந்துகொள்வீர் ! ஏனெனில் அவனுக்கும் இறைவனுக்கும் இடையே எந்தத் திரையுமில்லை . இதை முஆத் பின் ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை யமனுக்கு ஆளுநராக அனுப்பியபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் .
عَنْ جُنْدُبِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ فِتْيَانٌ حَزَاوِرَةٌ فَتَعَلَّمْنَا الْإِيمَانَ قَبْلَ أَنْ نَتَعَلَّمَ الْقُرْآنَ ثُمَّ تَعَلَّمْنَا الْقُرْآنَ فَازْدَدْنَا بِهِ إِيمَانًا . 323
ஜுன்துப் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நாங்கள் வலிமை மிக்க இளைஞர்களாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் இருந்தபோது குர்ஆனைக் கற்றுக்கொள்வதற்கு முன் இறைநம்பிக்கையைக் கற்றுக்கொண்டோம் . பிறகு குர்ஆனை நாங்கள் கற்றோம் . அதன் மூலம் எங்கள் இறைநம்பிக்கையும் அதிகரித்தது .
(ق) عَنْ أَبِي سَعِيدٍ، جَاءَتِ امْرَأَةٌ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ ذَهَبَ الرِّجَالُ بِحَدِيثِكَ، فَاجْعَلْ لَنَا مِنْ نَفْسِكَ، يَوْمًا نَأْتِيكَ فِيهِ تُعَلِّمُنَا مِمَّا عَلَّمَكَ اللَّهُ. فَقَالَ اجْتَمِعْنَ فِي يَوْمِ كَذَا وَكَذَا فِي مَكَانِ كَذَا وَكَذَا . 324
அபூசயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து , “ அல்லாஹ்வின் தூதரே ! ( பெண்கள் ) உங்கள் உரைகளை ( க் கேட்க முடியாதவாறு ) ஆண்களே தட்டிச் சென்றுவிடுகின்றனர் . ஆகவே , நாங்கள் தங்களிடம் வந்து , அல்லாஹ் தங்களுக்குக் கற்றுக்கொடுத்தவற்றிலிருந்து எங்களுக்கு நீங்கள் போதித்திட எங்களுக்கென ஒரு நாளை நீங்களே நிர்ணயித்து விடுங்கள் `` என்று கூறினார் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ இன்ன நாளில் இன்ன இடத்தில் நீங்கள் ஒன்று கூடுங்கள் `` என்று சொன்னார்கள் . அவ்வாறே ( அந்த நாளில் அந்த இடத்தில் ) பெண்கள் ஒன்று திரண்டனர் . அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அப்பெண்களிடம் சென்று , அல்லாஹ் தமக்குக் கற்றுக் கொடுத்தவற்றிலிருந்து அவர்களுக்குப் போதித்தார்கள் . பிறகு , “ உங்களுள் எந்தப் பெண் தனக்கு ( மரணம் வருவதற்கு ) முன்பாக , தன் குழந்தைகளுள் மூன்று பேரை இழந்துவிடுகின்றாரோ அவருக்கு அக்குழந்தைகள் நரகத்திலிருந்து காக்கும் திரையாக மாறிவிடுவார்கள் `` என்று சொன்னார்கள் . அப்போது அப்பெண்களுள் ஒருவர் , “ அல்லாஹ்வின் தூதரே ! இரண்டு குழந்தைகளை இழந்துவிட்டாலுமா ?`` என்று கேட்டார் . இதை அந்தப் பெண் இரண்டு முறை திரும்பத் திரும்பக் கேட்க , “ ஆம் ; இரண்டு குழந்தைகளை இழந்துவிட்டாலும்தான் `` என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மும்முறை பதிலளித்தார்கள் .
(ق) عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّ اللَّهَ لَا يَقْبِضُ الْعِلْمَ انْتِزَاعًا يَنْتَزِعُهُ مِنْ الْعِبَادِ وَلَكِنْ يَقْبِضُ الْعِلْمَ بِقَبْضِ الْعُلَمَاءِ حَتَّى إِذَا لَمْ يُبْقِ عَالِمًا اتَّخَذَ النَّاسُ رُءُوسًا جُهَّالًا فَسُئِلُوا فَأَفْتَوْا بِغَيْرِ عِلْمٍ فَضَلُّوا وَأَضَلُّوا . 325
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அல்லாஹ் கல்வியை ( த் தன் ) அடியார்களிடமிருந்து ஒரேயடியாகப் பறித்து கைவசப்படுத்திக் கொள்ளமாட்டான் . ஆயினும் , அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைக் கைப்பற்றுவான் . கடைசியாக எந்த அறிஞரையும் அல்லாஹ் விட்டுவைக்காதபோதே மக்கள் அறிவீனர்களைத் ( தம் ) தலைவர்களாக்கிக் கொள்வார்கள் . அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட , அவர்கள் எந்த அறிவுமில்லாமல் மார்க்கத் தீர்ப்பு வழங்குவார்கள் . எனவே தாமும் வழி கெட்டுப் போவார்கள் ; பிறரையும் வழி கெடுப்பார்கள் .
عَنْ زِيَادِ بْنِ لَبِيدٍ قَالَ ذَكَرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَيْئًا فَقَالَ ذَاكَ عِنْدَ أَوَانِ ذَهَابِ الْعِلْمِ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ وَكَيْفَ يَذْهَبُ الْعِلْمُ وَنَحْنُ نَقْرَأُ الْقُرْآنَ وَنُقْرِئُهُ أَبْنَاءَنَا وَيُقْرِئُهُ أَبْنَاؤُنَا أَبْنَاءَهُمْ إِلَى يَوْمِ الْقِيَامَةِ قَالَ ثَكِلَتْكَ أُمُّكَ زِيَادُ إِنْ كُنْتُ لَأَرَاكَ مِنْ أَفْقَهِ رَجُلٍ بِالْمَدِينَةِ أَوَلَيْسَ هَذِهِ الْيَهُودُ وَالنَّصَارَى يَقْرَءُونَ التَّوْرَاةَ وَالْإِنْجِيلَ لَا يَعْمَلُونَ بِشَيْءٍ مِمَّا فِيهِمَا . 326
ஸியாத் பின் லபீத் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஏதோ ஒன்றைக் கூறினார்கள் . அப்போது அவர்கள் , “ அது ( குர்ஆனின் ) கல்வி அழிந்துவிடும்போது ( நடைபெறும் )” என்று கூறினார்கள் . அல்லாஹ்வின் தூதரே ! ( குர்ஆனின் ) கல்வி எப்படி அழிந்துபோகும் ? நாங்கள் குர்ஆனை ஓதுகிறோம் . எங்கள் பிள்ளைகளுக்கு அதை ஓதிக்கொடுக்கிறோம் . எங்கள் பிள்ளைகள் அவர்களுடைய பிள்ளைகளுக்கு அதை மறுமை நாள் வரை ஓதிக்கொடுப்பார்கள் . ( அப்படியிருக்கும்போது எப்படி அது அழிந்துபோகும் ?) என்று வினவினேன் . அதற்கவர்கள் , “ ஸியாத் ! உம் தாய் உம்மை இழக்கட்டுமாக ! நான் உம்மை மதீனாவில் உள்ள அறிவாளி என்றல்லவா நினைத்தேன் . இந்த யூதர்களும் கிறிஸ்தவர்களும் தவ்ராத்தையும் இன்ஜீலையும் ஓதத்தானே செய்கின்றார்கள் ? அவர்கள் அவ்விரண்டிலிருந்தும் எதையும் விளங்குவதில்லையே ? என்று மறுவினாத் தொடுத்தார்கள் .
عَنْ حُذَيْفَةَ بْنِ الْيَمَانِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْرُسُ الْإِسْلَامُ كَمَا يَدْرُسُ وَشْيُ الثَّوْبِ حَتَّى لَا يُدْرَى مَا صِيَامٌ وَلَا صَلَاةٌ وَلَا نُسُكٌ وَلَا صَدَقَةٌ وَلَيُسْرَى عَلَى كِتَابِ اللَّهِ عَزَّ وَجَلَّ فِي لَيْلَةٍ فَلَا يَبْقَى فِي الْأَرْضِ مِنْهُ آيَةٌ وَتَبْقَى طَوَائِفُ مِنْ النَّاسِ الشَّيْخُ الْكَبِيرُ وَالْعَجُوزُ يَقُولُونَ أَدْرَكْنَا آبَاءَنَا عَلَى هَذِهِ الْكَلِمَةِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ فَنَحْنُ نَقُولُهَا. 327
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக ஹுதைஃபா பின் அல்யமான் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ஆடையின் ஓரம் தேய்வதைப் போன்று இஸ்லாம் தேய்வடையும் . இறுதியில் நோன்பு , தொழுகை , ( ஹஜ்ஜுக்கான ) கிரியைகள் , தர்மம் ஆகியவை என்னவென்றே தெரியாது . வல்லமையயும் மாண்பும் மிக்க அல்லாஹ்வின் வேதம் ஓரிரவில் உயர்த்தப்பட்டுவிடும் . ஆகவே அதிலிருந்து ஒரு வசனம் கூடப் புவியில் மிச்சமிருக்காது . மக்களுள் ஒரு குழுவினர் இருப்பார்கள் . அவர்களுள் முதியோர்களும் பாட்டிகளும் , லாயிலாஹ இல்லல்லாஹ் எனும் இந்தக் கலிமாவை எங்களின் மூதாதையர்கள் கூறுவதை நாங்கள் பார்த்திருக்கிறோம் . எனவே நாங்களும் அதைக் கூறுகிறோம் என்று சொல்வார்கள் . அப்போது ஸிலா என்பவர் ( இந்த ஹதீஸை அறிவித்த ஹுதைஃபா ) அவர்களிடம் , நோன்பு , தொழுகை , ( ஹஜ்ஜுக்கான ) கிரியைகள் , தர்மம் ஆகியவை என்னவென்றே தெரியாத அவர்கள் லாயிலாஹ இல்லல்லாஹ் எனும் கலிமாவைக் கூறுவதால் என்ன பயன் ? என்று வினவினார் . ( அதற்குப் பதிலளிக்காமல் ) அவரிடமிருந்து ஹுதைஃபா ( முகத்தைத் ) திருப்பிக்கொண்டார் . பின்னர் அவர் மும்முறை அதே வினாவை மீண்டும் மீண்டும் வினவினார் . ஒவ்வொரு தடவையும் ஹுதைஃபா அவரைவிட்டுத் திருப்பிக்கொண்டார் . பின்னர் மூன்றாம் தடவை , அவரை முன்னோக்கி , “ ஸிலா ! அது அவர்களை நரகத்திலிருந்து காப்பாற்றும் ” என்று மும்முறை விடையளித்தார் .
(ق) عَنْ مَحْمُودِ بْنِ الرَّبِيعِ قَالَ عَقَلْتُ مِنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَجَّةً مَجَّهَا فِي وَجْهِي وَأَنَا ابْنُ خَمْسِ سِنِينَ مِنْ دَلْوٍ . 328
மஹ்மூத் பின் ரபீஉ ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நான் ஐந்து வயதுச் சிறுவனாக இருந்தபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ( கிணற்றிலிருந்து இறைத்த ) ஒரு வாளியிலிருந்து ( தண்ணீரை எடுத்துத் தமது வாயில் வைத்து ) என் முகத்தில் ஒரு முறை உமிழ்ந்ததை நான் ( இப்போதும் ) நினைவில் வைத்திருக்கிறேன் .
(ق) عَنْ عَلِيٌّ رَضِيَ اللَّهُ عَنْهُ مَا عِنْدَنَا كِتَابٌ نَقْرَؤُهُ إِلَّا كِتَابُ اللَّهِ غَيْرَ هَذِهِ الصَّحِيفَةِ قَالَ فَأَخْرَجَهَا فَإِذَا فِيهَا أَشْيَاءُ مِنْ الْجِرَاحَاتِ وَأَسْنَانِ الْإِبِلِ قَالَ وَفِيهَا الْمَدِينَةُ حَرَمٌ مَا بَيْنَ عَيْرٍ إِلَى ثَوْرٍ فَمَنْ أَحْدَثَ فِيهَا حَدَثًا أَوْ آوَى مُحْدِثًا فَعَلَيْهِ لَعْنَةُ اللَّهِ وَالْمَلَائِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ لَا يُقْبَلُ مِنْهُ يَوْمَ الْقِيَامَةِ صَرْفٌ وَلَا عَدْلٌ وَمَنْ وَالَى قَوْمًا بِغَيْرِ إِذْنِ مَوَالِيهِ فَعَلَيْهِ لَعْنَةُ اللَّهِ وَالْمَلَائِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ لَا يُقْبَلُ مِنْهُ يَوْمَ الْقِيَامَةِ صَرْفٌ وَلَا عَدْلٌ وَذِمَّةُ الْمُسْلِمِينَ وَاحِدَةٌ يَسْعَى بِهَا أَدْنَاهُمْ فَمَنْ أَخْفَرَ مُسْلِمًا فَعَلَيْهِ لَعْنَةُ اللَّهِ وَالْمَلَائِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ لَا يُقْبَلُ مِنْهُ يَوْمَ الْقِيَامَةِ صَرْفٌ وَلَا عَدْلٌ . 329
யஸீத் பின் ஷரீக் அத்தைமீ ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : அலீ ரளியல்லாஹு அன்ஹு , “ நாங்கள் ஓதி வருகின்ற அல்லாஹ்வுடைய வேதத்தையும் ( நபியவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற ) இந்த ஏட்டையும் தவிர ( எழுத்து வடிவிலான மார்க்கச் சட்டம் ) வேறெதுவும் ( நபியின் குடும்பத்தாரான ) எங்களிடம் இல்லை `` என்று கூறிவிட்டு , அந்த ஏட்டை வெளியே எடுத்தார்கள் . அதில் காயங்களுக்கான தண்டனை குறித்தும் ( உயிரீட்டிற்காகவும் ஸகாத்தாகவும் வழங்கப்படும் ) ஒட்டகங்களின் வயது குறித்தும் எழுதப்பட்டிருந்தன . மேலும் , அதில் ( பின்வருமாறு குறிப்பிடப்பட்டு ) இருந்தது : மதீனா நகரம் " அய்ர் ` எனும் மலையிலிருந்து " ஸவ்ர் ` மலை வரை புனிதமானதாகும் . அதில் எவன் ( மார்க்கத்தின் பெயரால் ) புதிதாக ஒன்றை உருவாக்குகின்றானோ , அல்லது ( அவ்வாறு ) புதிதாக ஒன்றை உருவாக்குகின்றவனுக்கு அடைக்கலம் அளிக்கின்றானோ அவன்மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் அனைத்து மக்களின் சாபமும் உண்டாகும் . மேலும் , அவன் புரிந்த கடமையான வழிபாடோ கூடுதலான வழிபாடோ எதுவுமே அவனிடமிருந்து ஏற்கப்படாது . தன்னை விடுதலை செய்த எசமானர்களின் அனுமதியின்றி வேறு யாரையேனும் வாரிசுகளாக ஆக்கிக் கொள்ளும் அடிமைமீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் அனைத்து மக்களின் சாபமும் உண்டாகும் . மேலும் , அவன் புரிந்த கடமையான மற்றும் கூடுதலான வழிபாடுகள் எதுவும் அவனிடமிருந்து ஏற்கப்படாது . முஸ்லிம்களுள் யார் அடைக்கலம் கொடுத்தாலும் அது ஒன்றேயாகும் . ( மற்ற முஸ்லிம்கள் தரும் அடைக்கலத்திற்குச் சமமானதாகும் .) அவர்களுள் கீழ்நிலையில் உள்ளவர்கள்கூட அடைக்கலம் தர முன்வரலாம் . ஒரு முஸ்லிம் கொடுத்த அடைக்கலத்தை எவரேனும் முறித்தால் அவன்மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் அனைத்து மக்களின் சாபமும் உண்டாகும் . மேலும் , அவன் செய்த கடமையான வழிபாடு , உபரியான வழிபாடு மற்றும் எதுவுமே மறுமை நாளில் ஏற்றுக் கொள்ளப்படாது .
(م) عَنْ أَبِي الطُّفَيْلِ قَالَ سُئِلَ عَلِيٌّ أَخَصَّكُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشَيْءٍ فَقَالَ مَا خَصَّنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشَيْءٍ لَمْ يَعُمَّ بِهِ النَّاسَ كَافَّةً إِلَّا مَا كَانَ فِي قِرَابِ سَيْفِي هَذَا قَالَ فَأَخْرَجَ صَحِيفَةً مَكْتُوبٌ فِيهَا لَعَنَ اللَّهُ مَنْ ذَبَحَ لِغَيْرِ اللَّهِ وَلَعَنَ اللَّهُ مَنْ سَرَقَ مَنَارَ الْأَرْضِ وَلَعَنَ اللَّهُ مَنْ لَعَنَ وَالِدَهُ وَلَعَنَ اللَّهُ مَنْ آوَى مُحْدِثًا . 330
அபுத்துஃபைல் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் , “ அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உங்களிடம் மட்டும் தனிப்பட்ட முறையில் ஏதேனும் விஷயத்தை ( இரகசியமாக ) ச் சொன்னார்களா ?`` என்று கேட்கப்பட்டது . அலீ ரளியல்லாஹு அன்ஹு , " அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மக்கள் அனைவருக்கும் பொதுவாகச் சொல்லாத எந்த விஷயத்தையும் எங்களிடம் தனிப்பட்ட முறையில் ( இரகசியமாகச் ) சொல்லவில்லை ; இதோ இந்த வாளுறையில் இருப்பதைத் தவிர `` என்று கூறிவிட்டு , ஓர் ஏட்டை வெளியில் எடுத்தார்கள் . அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது : அல்லாஹ் அல்லாத மற்றவர் பெயரில் ( பிராணியை ) அறுத்தவனை அல்லாஹ் சபிக்கின்றான் . பூமியின் அடையாளச் சின்னங்களைத் திருடியவனை அல்லாஹ் சபிக்கின்றான் . தன் தந்தையைச் சபித்தவனை அல்லாஹ்வும் சபிக்கின்றான் . ( மார்க்கத்தில் இல்லாத ) புதுமைகளை ( மார்க்கத்தின் பெயரால் ) ஏற்படுத்தியவனுக்கு அடைக்கலம் அளித்தவனை அல்லாஹ் சபிக்கின்றான் .
عَنْ قَيْسِ بْنِ عَبَّادٍ قَالَ قُلْتُ لِعَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَخْبِرْنَا عَنْ مَسِيرِكَ هَذَا أَعَهْدٌ عَهِدَهُ إِلَيْكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمْ رَأْيٌ رَأَيْتَهُ فَقَالَ مَا عَهِدَ إِلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشَيْءٍ وَلَكِنَّهُ رَأْيٌ رَأَيْتُهُ . 331
கைஸ் பின் உபாத் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நான் அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் , “ உங்களுடைய இந்த நடை குறித்து எங்களுக்குச் சொல்லுங்கள் . இது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உங்களிடம் செய்துகொண்ட ஒப்பந்தமா ? அல்லது உங்களுடைய தனிப்பட்ட முடிவா ?” என்று கேட்டேன் . அதற்கு அவர்கள் , “ அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எதையும் என்னிடம் ஒப்பந்தம் செய்யவில்லை . எனினும் ( இது ) என்னுடைய தனிப்பட்ட முடிவாகும் ” என்றார்கள் .
(خ ) عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كَانَ أَهْلُ الْكِتَابِ يَقْرَءُونَ التَّوْرَاةَ بِالْعِبْرَانِيَّةِ وَيُفَسِّرُونَهَا بِالْعَرَبِيَّةِ لِأَهْلِ الْإِسْلَامِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تُصَدِّقُوا أَهْلَ الْكِتَابِ وَلَا تُكَذِّبُوهُمْ وَقُولُوا آمَنَّا بِاللَّهِ وَمَا أُنْزِلَ إِلَيْنَا الْآيَةَ . 332
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : வேதக்காரர் ( களான யூதர் ) கள் , தவ்ராத்தை ஹீப்ரூ மொழியில் ஓதி , அதை முஸ்லிம்களுக்கு அரபு மொழியில் விளக்கம் கொடுத்து வந்தார்கள் . அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ வேதக்காரர்களை ( அவர்கள் சொல்வதெல்லாம் உண்மை என ) நம்பவும் வேண்டாம் ; ( பொய் என ) மறுக்கவும் வேண்டாம் . ( மாறாக , முஸ்லிம்களே !) நீங்கள் சொல்லுங்கள் : நாங்கள் அல்லாஹ்வையும் எங்களுக்கு அருளப்பெற்றதையும் இப்ராஹீம் , இஸ்மாயீல் , இஸ்ஹாக் , யஅகூப் ஆகியோருக்கும் , யஅகூபின் வழித்தோன்றல்களுக்கும் அருளப்பெற்றதையும் , மூஸாவுக்கும் ஈஸாவுக்கும் வழங்கப்பெற்றதையும் மேலும் இறைத்தூதர்கள் அனைவருக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து வழங்கப்பெற்றவை அனைத்தையும் நாங்கள் நம்புகிறோம் . நாங்கள் அவர்களுள் யாருக்கிடையேயும் எந்த வேற்றுமையும் பாராட்டுவதில்லை . இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் கீழ்ப்படிந்தவர்களாக இருக்கிறோம் `` (2:136) என்று கூறினார்கள் .
(خ) عَنْ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ كَيْفَ تَسْأَلُونَ أَهْلَ الْكِتَابِ عَنْ شَيْءٍ وَكِتَابُكُمْ الَّذِي أُنْزِلَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحْدَثُ تَقْرَءُونَهُ مَحْضًا لَمْ يُشَبْ وَقَدْ حَدَّثَكُمْ أَنَّ أَهْلَ الْكِتَابِ بَدَّلُوا كِتَابَ اللَّهِ وَغَيَّرُوهُ وَكَتَبُوا بِأَيْدِيهِمْ الْكِتَابَ وَقَالُوا هُوَ مِنْ عِنْدِ اللَّهِ لِيَشْتَرُوا بِهِ ثَمَنًا قَلِيلًا أَلَا يَنْهَاكُمْ مَا جَاءَكُمْ مِنْ الْعِلْمِ عَنْ مَسْأَلَتِهِمْ لَا وَاللَّهِ مَا رَأَيْنَا مِنْهُمْ رَجُلًا يَسْأَلُكُمْ عَنْ الَّذِي أُنْزِلَ عَلَيْكُمْ . 333
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ( மார்க்கம் தொடர்பான ) எந்த விஷயம் குறித்தும் வேதக்காரர்களிடம் நீங்கள் ஏன் கேட்கிறீர்கள் ? அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அருளப்பெற்றுள்ள உங்களது வேதமோ புதியது . கலப்படமில்லாத தூய வேதமாக அதை நீங்கள் ஓதிவருகிறீர்கள் . வேதக்காரர்கள் ( தமக்கு அருளப்பெற்ற ) இறைவேதத்தைத் திரித்து மாற்றம் செய்து , தம் கரங்களால் வேதத்தை ( மாற்றி ) எழுதிக்கொண்டு , அதன்மூலம் சொற்ப விலையைப் பெறுவதற்காக " இது இறைவனிடமிருந்து வந்ததே ` என்று கூறுகிறார்கள் என அல்லாஹ் உங்களுக்குத் தெரிவித்துள்ளான் . உங்களுக்குக் கிடைத்துள்ள ( மார்க்க ) ஞானம் , வேதக்காரர்களிடம் கேட்பதிலிருந்து உங்களைத் தடுக்கவில்லையா ? அல்லாஹ்வின் மீதாணையாக ! வேதக்காரர்களுள் எவரும் உங்களுக்கு அருளப்பெற்ற ( வேதத் ) தைப் பற்றி உங்களிடம் கேட்பதை நாம் கண்டதில்லையே !
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ كَانَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحَدِّثُنَا عَنْ بَنِي إِسْرَائِيلَ حَتَّى يُصْبِحَ مَا يَقُومُ إِلَّا إِلَى عُظْمِ صَلَاةٍ . 334
அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , பனூ இஸ்ரவேலர்களைப் பற்றி விடியும் வரை எங்களுக்குத் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள் . கடமையான தொழுகைக்கே தவிர எழவில்லை .
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : حَدِّثُوا عَنْ بَنِي إِسْرَائِيلَ وَلَا حَرَجَ، حَدِّثُوا عَنِّي وَلَا تَكْذِبُو . 335
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூசஈதுல் குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது : பனூ இஸ்ராயீல்களின் வாயிலாகக் கிடைத்த செய்திகளை அறிவியுங்கள் . அதனால் குற்றமில்லை . என்னிடமிருந்து கிடைத்த செய்திகளை ( ப் பிறருக்கு ) எடுத்துரையுங்கள் . ( நான் சொன்னதாக வேண்டுமென்றே ) பொய்யுரைக்காதீர்கள் .
(خ) عَنْ عَلِيٌّ رَضِيَ اللَّهُ عَنْهُ : حَدِّثُوا النَّاسَ بِمَا يَعْرِفُونَ أَتُحِبُّونَ أَنْ يُكَذَّبَ اللَّهُ وَرَسُولُهُ . 336
அலீ ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : மக்களிடம் அவர்கள் புரிந்து கொள்பவற்றையே பேசுங்கள் . ( அவர்களுக்குப் புரியாதவற்றைப் பற்றிப் பேசி , அதனால் ) அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ( அவர்களால் ) பொய்யர்களென்று கருதப்படுவதை நீங்கள் விரும்புகிறீர்களா ?
(م) عَنْ عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ قَالَ : مَا أَنْتَ بِمُحَدِّثٍ قَوْمًا حَدِيثًا لَا تَبْلُغُهُ عُقُولُهُمْ إِلَّا كَانَ لِبَعْضِهِمْ فِتْنَةً . 337
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நீங்கள் ஒரு சமூகத்தாரிடம் அவர்களது அறிவுக்கு எட்டாத ஒரு விஷயத்தை அறிவிப்பதானது , அவர்களுள் சிலரையேனும் குழப்பத்தில் ஆழ்த்தாமல் விடுவதில்லை .
(م) عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّهَا قَالَتْ أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نُنَزِّلَ النَّاسَ مَنَازِلَهُمْ مَعَ مَا نَطَقَ بِهِ الْقُرْآنُ مِنْ قَوْلِ اللَّهِ تَعَالَى وَفَوْقَ كُلِّ ذِي عِلْمٍ عَلِيمٌ . 338
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறியதாவது : நாங்கள் மக்களுக்கு அவரவரது அந்தஸ்தை அளித்திட வேண்டும் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள் . குர்ஆனும் இதையே கூறுகிறது : கல்வியறிவுடைய ஒவ்வொருவருக்கும் மேலே ( அவர்களைவிட ) அறிந்தவன் ஒருவன் இருக்கின்றான் (12: 76)
(م) عَنْ عُبَادَةَ بْنِ الْوَلِيدِ بْنِ عُبَادَةَ بْنِ الصَّامِتِ قَالَ خَرَجْتُ أَنَا وَأَبِي نَطْلُبُ الْعِلْمَ فِي هَذَا الْحَيِّ مِنْ الْأَنْصَارِ قَبْلَ أَنْ يَهْلِكُوا فَكَانَ أَوَّلُ مَنْ لَقِينَا أَبَا الْيَسَرِ صَاحِبَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَعَهُ غُلَامٌ لَهُ مَعَهُ ضِمَامَةٌ مِنْ صُحُفٍ ,... وذكر الحديث. 339
உபாதா பின் அல்வலீத் பின் உபாதா பின் அஸ்ஸாமித் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : நானும் என் தந்தை ( வலீத் பின் உபாதா பின் அஸ்ஸாமித்-ரஹிமஹுல்லாஹ் ) அவர்களும் அன்ஸாரிகளில் குறிப்பிட்ட ஒரு கிளையாரிடம் , அவர்கள் இறப்பதற்குமுன் ( அவர்களிடமுள்ள நபிமொழிக் ) கல்வியைக் கற்றுக் கொள்வதற்காகப் புறப்பட்டோம் . நாங்கள் முதன் முதலில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர் அபுல் யசர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களையே சந்தித்தோம் . அவர்களுடன் அவர்களுடைய அடிமை ஒருவரும் இருந்தார் . அவரிடம் பதிவேடுகளில் ஒரு தொகுப்பும் இருந்தது ...
(م) عَبْدُ اللَّهِ بْنُ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ قَالَ سَمِعْتُ أَبِي يَقُولُ لَا يُسْتَطَاعُ الْعِلْمُ بِرَاحَةِ الْجِسْمِ . 340
அப்துல்லாஹ் பின் யஹ்யா பின் அபீகஸீர் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : என் தந்தை யஹ்யா பின் அபீகஸீர் ரஹிமஹுல்லாஹ் , “ உடல் சுகத் ( தைத் தேடுவ ) தினால் கல்வியை அடைய முடியாது `` என்று கூறினார்கள் .
عَنْ كَثِيرِ بْنِ قَيْسٍ قَالَ كُنْتُ جَالِسًا مَعَ أَبِي الدَّرْدَاءِ فِي مَسْجِدِ دِمَشْقَ فَجَاءَهُ رَجُلٌ فَقَالَ يَا أَبَا الدَّرْدَاءِ إِنِّي جِئْتُكَ مِنْ مَدِينَةِ الرَّسُولِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِحَدِيثٍ بَلَغَنِي أَنَّكَ تُحَدِّثُهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا جِئْتُ لِحَاجَةٍ . 341
கஸீர் பின் கைஸ் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : நான் டமாஸ்கஸ் மஸ்ஜிதில் அபுத்தர்தா ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் அமர்ந்திருந்தேன் . அப்போது அவர்களிடம் ஒருவர் வந்தார் . அவர் , “ அபுத்தர்தா ! நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வாழ்ந்த மதீனாவிலிருந்து உம்மிடம் வந்துள்ளேன் . நீர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து ஒரு ஹதீஸை அறிவித்துள்ளதாக எனக்குச் செய்தி கிடைத்தது . அந்த ஹதீஹுக்காக நான் உம்மிடம் வந்துள்ளேன் . வேறு ஏதேனும் தேவைக்காக நான் வரவில்லை ” என்று கூறினார் . அப்போது அபுத்தர்தா ரளியல்லாஹு அன்ஹு , தாம் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து செவியுற்றுள்ளதாகக் கூறியதாவது : “ ஒருவர் கல்வியைத் தேடி ஒரு பாதையில் நடந்தால் சொர்க்கம் செல்லும் பாதையில் அவரை அல்லாஹ் நடத்துகின்றான் . வானவர்கள் கல்வியைத் தேடும் ( மாணவர் ) ஒருவரை உவந்து கொண்டதைக் காட்டும் முகமாக தம் இறக்கைகளைக் கீழே தாழ்த்துகின்றனர் . கற்றறிந்த அறிஞர் ஒருவருக்கே வானங்களில் உள்ளவர்களும் பூமியில் உள்ளவர்களும் தண்ணீரில் வாழும் மீன்கள் உட்பட யாவும் பாவமன்னிப்புக் கோருகின்றன . பக்திமானைவிடக் கல்விமானுக்குள்ள சிறப்பு மற்ற நட்சத்திரங்களைவிடச் சந்திரனுக்குள்ள சிறப்பைப் போன்றதாகும் . மார்க்க அறிஞர்கள் இறைத்தூதர்களின் வாரிசுகள் ஆவர் . இறைத்தூதர்கள் பொற்காசுகளுக்கோ வெள்ளிக் காசுகளுக்கோ அவர்களை வாரிசுகளாக்கவில்லை . அவர்கள் இந்தக் கல்விக்குத்தான் வாரிசுகளாக்கியுள்ளனர் . யார் இந்தக் கல்வியைப் பெற்றுக்கொண்டாரோ அவர் நிறைவான பங்கைப் பெற்றுக்கொண்டார் ."
عَنْ أَبِي الْعَالِيَةِ قَالَ كُنَّا نَسْمَعُ الرِّوَايَةَ بِالْبَصْرَةِ عَنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمْ نَرْضَ حَتَّى رَكِبْنَا إِلَى الْمَدِينَةِ فَسَمِعْنَاهَا مِنْ أَفْوَاهِهِمْ . 342
அபுல் ஆலியா ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்கள் கூறியதாக பஸ்ராவில் நாங்கள் ஏதேனும் ஹதீஸைச் செவியுற்றால் , ( அதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக ) நாங்கள் மதீனா சென்று அதை அவர்களின் வாய்களிலிருந்து ( நேரடியாகச் ) செவியுறுகின்ற வரை திருப்தியுற மாட்டோம் .
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ أَنَّ رَجُلًا مَنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَحَلَ إِلَى فَضَالَةَ بْنِ عُبَيْدٍ وَهُوَ بِمِصْرَ فَقَدِمَ عَلَيْهِ وَهُوَ يَمُدُّ لِنَاقَةٍ لَهُ فَقَالَ مَرْحَبًا قَالَ أَمَا إِنِّي لَمْ آتِكَ زَائِرًا وَلَكِنْ سَمِعْتُ أَنَا وَأَنْتَ حَدِيثًا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجَوْتُ أَنْ يَكُونَ عِنْدَكَ مِنْهُ عِلْمٌ قَالَ مَا هُوَ قَالَ كَذَا وَكَذَا .. 343
அப்துல்லாஹ் பின் புரைதா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்களுள் ஒருவர் , எகிப்தில் இருந்த ஃபளாலா பின் உபைத் அவர்களிடம் பயணம் செய்து சென்றார் . இவர் சென்ற நேரத்தில் அவர் தம் ஒட்டகத்தை ஓட்டிச் சென்று கொண்டிருந்தார் . இவரைப் பார்த்ததும் , “ வாருங்கள் ” என்று வரவேற்றார் . பின்னர் , “ நான் உம்மை ( வெறுமனே ) சந்திக்க வரவில்லை . மாறாக நானும் நீரும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து ஒரு ஹதீஸைச் செவியுற்றுள்ளோம் . அது குறித்து ( வேறு ) ஏதேனும் கல்வியறிவு உம்மிடம் கிடைக்கும் என எண்ணியே நான் உம்மிடம் வந்தேன் ” என்று கூறினார் . அதற்கு அவர் , “ அது என்ன ( ஹதீஸ் )?” என்று வினவினார் . அதற்கு அவர் , “ இன்னின்னது ...” என்று கூறினார் .
عَنِ الْحَارِثِ بْنِ مُعَاوِيَةَ الْكِنْدِيِّ أَنَّهُ رَكِبَ إِلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ يَسْأَلُهُ عَنْ ثَلَاثِ خِلَالٍ قَالَ فَقَدِمَ الْمَدِينَةَ فَسَأَلَهُ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ مَا أَقْدَمَكَ قَالَ لِأَسْأَلَكَ عَنْ ثَلَاثِ خِلَالٍ قَالَ وَمَا هُنَّ قَالَ رُبَّمَا كُنْتُ أَنَا وَالْمَرْأَةُ فِي بِنَاءٍ ضَيِّقٍ فَتَحْضُرُ الصَّلَاةُ فَإِنْ صَلَّيْتُ أَنَا وَهِيَ كَانَتْ بِحِذَائِي وَإِنْ صَلَّتْ خَلْفِي خَرَجَتْ مِنْ الْبِنَاءِ فَقَالَ عُمَرُ تَسْتُرُ بَيْنَكَ وَبَيْنَهَا بِثَوْبٍ ثُمَّ تُصَلِّي بِحِذَائِكَ إِنْ شِئْتَ وَعَنْ الرَّكْعَتَيْنِ بَعْدَ الْعَصْرِ فَقَالَ نَهَانِي عَنْهُمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ وَعَنْ الْقَصَصِ فَإِنَّهُمْ أَرَادُونِي عَلَى الْقَصَصِ فَقَالَ مَا شِئْتَ كَأَنَّهُ كَرِهَ أَنْ يَمْنَعَهُ قَالَ إِنَّمَا أَرَدْتُ أَنْ أَنْتَهِيَ إِلَى قَوْلِكَ قَالَ أَخْشَى عَلَيْكَ أَنْ تَقُصَّ فَتَرْتَفِعَ عَلَيْهِمْ فِي نَفْسِكَ ثُمَّ تَقُصَّ فَتَرْتَفِعَ حَتَّى يُخَيَّلَ إِلَيْكَ أَنَّكَ فَوْقَهُمْ بِمَنْزِلَةِ الثُّرَيَّا فَيَضَعَكَ اللَّهُ تَحْتَ أَقْدَامِهِمْ يَوْمَ الْقِيَامَةِ بِقَدْرِ ذَلِكَ . 344
அப்துர் ரஹ்மான் பின் ஜுபைர் பின் ஜுபைர் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : ஹாரிஸ் பின் முஆவியா அல்கின்தீ ரஹிமஹுல்லாஹ் , உமர் பின் கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் மூன்று செய்திகளைப் பற்றி ( மதீனா சென்று ) கேட்கப் புறப்பட்டார்கள் . அவர் மதீனா வந்ததும் , அவரிடம் உமர் ரளியல்லாஹு அன்ஹு , “ உமது வருகையின் காரணம் என்ன ?`` என்று கேட்டார்கள் . “ மூன்று செய்திகளை உங்களிடம் நான் கேட்க வேண்டும் ” என்று கூறினார் . “ அவை என்ன ?” என்று கேட்டதும் , “ சில சமயம் நெருக்கடியான வீட்டில் நான் ஒரு பெண்ணுடன் இருக்கிறேன் . அப்போது தொழுகைக்குரிய நேரம் வந்து விடுகிறது . நான் தொழ வைத்தால் , அந்தப் பெண் எனக்குச் சமமாகத்தான் நிற்க வேண்டியது வரும் . என் பின்னே அப்பெண் தொழுதால் அவள் வீட்டிற்கு வெளியே நிற்க வேண்டியது வரும் . ( என்ன செய்வது )`` என்று கேட்டார் . உடனே உமர் ரளியல்லாஹு அன்ஹு , “ உமக்கும் அந்தப் பெண்ணிற்கும் இடையே ஓர் ஆடையைத் திரையாக்கி , பின் உமக்குச் சமமாக நிறுத்தி , நீ தொழு `` என்று பதில் கூறினார்கள் . அஸருக்குப் பின் இரண்டு ரக்அத் தொழுவது பற்றி ( கேட்டார் ). “ அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவ்வாறு தொழ என்னைத் தடுத்தார்கள் ”` என்று பதில் கூறினார்கள் . கனவிற்குப் பலன் கூறும்படி மக்கள் என்னை விரும்பி வருகிறார்கள் . கனவிற்குப் பலன் கூறலாமா ? என்பது பற்றிக் கேட்டார் . “ நீ விரும்பியபடி நடந்துகொள் `` என்று உமர் ரளியல்லாஹு அன்ஹு பதில் கூறினார்கள் . அவர்களின் பதில் , அதைத் தடுக்க வெறுப்பது போல் இருந்தது . “ உங்களின் வார்த்தை மூலம் அதை நான் செய்யாமல் இருக்கவே விரும்புகிறேன் `` என்றார் . “ நீ கனவுக்கு விளக்கம் கூறி , உன் உள்ளத்தில் அவர்களிடம் நீ உயர்வாக இருப்பதாகக் கருதும் நிலை ஏற்படுவதையே உம்மிடம் நான் பயப்படுகிறேன் . பின்பு நீ கனவுக்கு விளக்கம் கூறி , நீ உயர்வாகக் கருத ஆரம்பித்தால் நீ ஒரு நட்சத்திர அந்தஸ்தில் அவர்களைவிட உயர்வாகக் கருதத் தொடங்குவாய் . இதனால் ( அல்லாஹ் கோபமுற்று ) அவர்களின் கால்களுக்கும் கீழே உம்மை மறுமை நாள் வரை வைத்துவிடுவான் `` என்று கூறினார்கள் .
عَنْ ابْنِ مَسْعُودٍ قَالَ: إِنَّ الَّذِي يُفْتِي النَّاسَ فِي كُلِّ مَا يُسْتَفْتَى لَمَجْنُونٌ . 345
இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : மக்களால் கேட்கப்படுகின்ற ( எதற்கும் தெரியாது எனக் கூறாமல் ) அனைத்திற்கும் மார்க்கத் தீர்ப்பு வழங்குபவன் பைத்தியக்காரன் ஆவான் .
عَنْ ابْنِ عُمَرَ أَنَّ رَجُلًا سَأَلَهُ عَنْ مَسْأَلَةٍ فَقَالَ لَا عِلْمَ لِي بِهَا فَلَمَّا أَدْبَرَ الرَّجُلُ قَالَ ابْنُ عُمَرَ نِعْمَ مَا قَالَ ابْنُ عُمَرَ سُئِلَ عَمَّا لَا يَعْلَمُ فَقَالَ لَا عِلْمَ لِي بِهِ . يعني : نفسه . 346
உர்வா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ஒருவர் ( ஏதோ ) ஒன்றைக் குறித்து இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கேள்வி கேட்டார் . அதற்கு இப்னு உமர் , “ அது குறித்து எனக்குத் தெரியாது ” என்று கூறினார்கள் . ஆகவே அம்மனிதர் திரும்பிச் சென்றுவிட்டார் . ( அதன்பின் ) இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : இப்னு உமர் நன்றாகவே சொன்னார் . அவர் அறியாதது குறித்துக் கேட்கப்பட்டார் . அதற்கு அவர் , “ தமக்கு அது குறித்துத் தெரியாது ” என்று கூறிவிட்டார் . ( அதாவது தம்மையே அவ்வாறு குறிப்பிட்டார்கள் .)
عَنْ الشَّعْبِيِّ قَالَ لَا أَدْرِي نِصْفُ الْعِلْمِ . 347
ஜஅபீ ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : எனக்குத் தெரியாது என்று கூறுவது கல்வியில் பாதியாகும் .
عَنْ ابْنِ سِيرِينَ قَالَ مَا أُبَالِي سُئِلْتُ عَمَّا أَعْلَمُ أَوْ مَا لَا أَعْلَمُ لِأَنِّي إِذَا سُئِلْتُ عَمَّا أَعْلَمُ قُلْتُ مَا أَعْلَمُ وَإِذَا سُئِلْتُ عَمَّا لَا أَعْلَمُ قُلْتُ لَا أَعْلَمُ . 348
இப்னு சீரீன் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : நான் அறிந்ததைப் பற்றி அல்லது நான் அறியாததைப் பற்றி என்னிடம் கேட்கப்பட்டால் நான் அது குறித்துக் கவலைப்பட மாட்டேன் . ஏனென்றால் நான் அறிந்தது குறித்து என்னிடம் கேட்கப்பட்டால் , நான் அறிந்ததைச் சொல்வேன் . நான் அறியாதது குறித்து என்னிடம் கேட்கப்பட்டால் , “ நான் அறியேன் ” என்று கூறிவிடுவேன் .
(خ) قَالَ الْحُمَيْدِيُّ هَذَا كَمَا أَخْبَرَ بِلَالٌ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى فِي الْكَعْبَةِ وَقَالَ الْفَضْلُ لَمْ يُصَلِّ فَأَخَذَ النَّاسُ بِشَهَادَةِ بِلَالٍ . 349
ஹுமைதீ ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : " நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ( மக்கா வெற்றியின்போது ) கஅபாவினுள் தொழுதார்கள் ` என்று பிலால் ரளியல்லாஹு அன்ஹு செய்தியறிவிக்க , ஃபள்லு பின் அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு , " நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கஅபாவினுள் தொழவில்லை ` என்று கூறியபோது , பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் சாட்சியத்தையே மக்கள் ஏற்றுக்கொண்டதைப் போன்றதாகும் .``
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَعَلَّمَ عِلْمًا مِمَّا يُبْتَغَى بِهِ وَجْهُ اللَّهِ عَزَّ وَجَلَّ لَا يَتَعَلَّمُهُ إِلَّا لِيُصِيبَ بِهِ عَرَضًا مِنْ الدُّنْيَا لَمْ يَجِدْ عَرْفَ الْجَنَّةِ يَوْمَ الْقِيَامَةِ يَعْنِي رِيحَهَا . 350
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அல்லாஹ்வின் திருப்தியை ( மட்டுமே ) நாடிக் கற்க வேண்டிய கல்வியை யார் உலகாதாயத்தை நாடிக் கற்றாரோ அவர் மறுமைநாளில் சொர்க்கத்தின் வாடையைக்கூட நுகரமாட்டார் .
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَعَلَّمُوا الْعِلْمَ لِتُبَاهُوا بِهِ الْعُلَمَاءَ وَلَا لِتُمَارُوا بِهِ السُّفَهَاءَ وَلَا تَخَيَّرُوا بِهِ الْمَجَالِسَ فَمَنْ فَعَلَ ذَلِكَ فَالنَّارُ النَّارُ . 351
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அறிஞர்களோடு பெருமையடிப்பதற்காகவும் அறிவிலிகளோடு விவாதம் செய்வதற்காகவும் கல்வியைக் கற்காதீர்கள் . அதை வைத்துக்கொண்டு சபைகளைத் தேடாதீர்கள் . யார் அவ்வாறு செய்கின்றாரோ ( அவருக்கு ) நரகமே , ( அவருக்கு ) நரகமே .
عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : أَخْوَفُ مَا أَخَافُ عَلَيْكُمْ جِدَالُ الْمُنَافِقِ عَلِيمِ اللِّسَانِ . 352
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக இம்ரான் பின் ஹுஸைன் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : நான் உங்களுள் மிகவும் அஞ்சுவது மொழியறிவுகொண்ட நயவஞ்சகனோடு ( நீங்கள் ) தர்க்கம் செய்வதைத்தான் .
عَنْ ابْنُ كَعْبِ بْنِ مَالِكٍ قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ طَلَبَ الْعِلْمَ لِيُجَارِيَ بِهِ الْعُلَمَاءَ أَوْ لِيُمَارِيَ بِهِ السُّفَهَاءَ أَوْ يَصْرِفَ بِهِ وُجُوهَ النَّاسِ إِلَيْهِ أَدْخَلَهُ اللَّهُ النَّارَ . 353
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக கஅப் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : யார் கற்றோரிடம் விதண்டா வாதம் புரிவதற்காக அல்லது கல்லாதோரிடம் விளம்பரம் தேடுவதற்காக அல்லது மக்களின் முகங்களைத் தம் பக்கம் திருப்புவதற்காகக் கல்வியைத் தேடுகிறாரோ அவரை அல்லாஹ் நரகத்தில் நுழையச் செய்வான் .
عَنْ الْحَارِثَ الْأَشْعَرِيَّ حَدَّثَهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ اللَّهَ أَمَرَ يَحْيَى بْنَ زَكَرِيَّا بِخَمْسِ كَلِمَاتٍ أَنْ يَعْمَلَ بِهَا وَيَأْمُرَ بَنِي إِسْرَائِيلَ أَنْ يَعْمَلُوا بِهَا وَإِنَّهُ كَادَ أَنْ يُبْطِئَ بِهَا . 354
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக ஹாரிஸ் பின் அல்ஹாரிஸ் அல்அஷ்அரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அல்லாஹ் , ( தன் தூதர் ) யஹ்யா பின் ஸகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு ஐந்து கட்டளைகளை நிறைவேற்றுமாறும் அவற்றைச் செயல்படுத்தும்படி பனூஇஸ்ராயீல் சமுதாயத்தாருக்குக் கட்டளையிடும்படியும் உத்தரவிட்டான் . ஆனால் , அவற்றை பனூ இஸ்ராயீல் சமுதாயத்தாரிடம் கூறாமல் யஹ்யா அலைஹிஸ்ஸலாம் காலதாமதம் செய்ய முற்பட்டார்கள் . இந்நிலையில் ( இறைத்தூதர் ) ஈஸா அலைஹிஸ்ஸலாம் ( யஹ்யா அவர்களிடம் ), அல்லாஹ் ஐந்து கட்டளைகளை நிறைவேற்றுமாறும் அவற்றைச் செயல்படுத்தும்படி பனூ இஸ்லாயீல் சமுதாயத்தாருக்குக் கட்டளையிடும்படியும் உமக்கு உத்தரவிட்டான் . ( அவற்றைச் செயல்படுத்தும்படி ) அவர்களுக்கு நீங்கள் உத்தரவிட வேண்டும் . அல்லது நான் உத்தரவிட வேண்டும் . ( இதை நீங்கள் செய்கிறீர்களா , அல்லது நான் செய்யட்டுமா ?) என்று கேட்டார்கள் . அதற்கு யஹ்யா அலைஹிஸ்ஸலாம் , ( ஈஸா அவர்களிடம் ) இவ்விஷயத்தில் என்னை நீங்கள் முந்திக் கொண்டால் ( காலம் தாழ்த்திய குற்றத்திற்காக ) நான் பூமியில் புதையுண்டு விடுவேனோ , அல்லது வேறு தண்டனைக்கு நான் உள்ளாவேனோ என நான் அஞ்சுகிறேன் என்று கூறினார்கள் . பிறகு யஹ்யா அலைஹிஸ்ஸலாம் ( ஜெரூசலத்தில் உள்ள ) பைத்துல் மக்திஸ் பள்ளிவாசலில் ( இஸ்ரவேல் ) மக்களை ஒன்று கூட்டினார்கள் . பள்ளிவாசல் ( மக்கள் திரளால் ) நிரம்பி , ( மக்களுக்கு இடம் கிடைக்காமல் ) அவர்கள் பள்ளிவாசலின் மேல் தளத்தின்மீது ஏறிக் கொண்டனர் . அப்போது யஹ்யா அலைஹிஸ்ஸலாம் பின்வருமாறு கூறினார்கள் : ஐந்து கட்டளைகளை நான் நிறைவேற்ற வேண்டுமென்றும் அவற்றை உங்களுக்கு எடுத்துச் சொல்லி உங்களையும் அவற்றைக் கடைப்பிடிக்குமாறு கட்டளையிட வேண்டும் என்றும் எனக்கு அல்லாஹ் உத்தரவிட்டுள்ளான் . முதலாவது கட்டளை : அல்லாஹ்வை மட்டுமே நீங்கள் வழிபடுங்கள் . அவனுக்கு வேறு யாரையும் இணையாக்காதீர்கள் . அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவனின் நிலை , ஒரு மனிதரின் நிலையை ஒத்திருக்கிறது . அவர் தமக்கே உரிய செல்வத்தில் பொன் அல்லது வெள்ளியைக் கொடுத்து ஓர் அடிமையை விலைக்கு வாங்கினார் . அவர் ( தம் அடிமையிடம் ) " இது எனது வீடு ; இது எனக்கு நீர் செய்ய வேண்டிய வேலை ; நீர் வேலை செய்து ( இதில் கிடைக்கும் வருமானத்தை ) என்னிடமே கொடுத்துவிட வேண்டும் " என்று கூறினார் . அவ்வாறே அந்த அடிமையும் வேலை செய்தார் . ஆனால் , அதில் கிடைத்த ( வருமானத் ) தை தன் உரிமையாளரிடம் அளிக்காமல் வேறு யாரோ ஒருவரிடம் கொடுத்தான் . தம்முடைய அடிமை இவ்வாறு இருப்பது கண்டு உங்களில் யார் மகிழ்ச்சி அடைவார் ? ( இறைவன் வழங்கியவற்றை அனுபவித்துவிட்டு அவனுக்கு மட்டுமே செய்ய வேண்டிய வழிபாட்டைப் பிறருக்குச் செய்வது நியாயமா ?) ( இரண்டாவது கட்டளை :) அல்லாஹ் தொழுகையைக் கடைப்பிடிக்குமாறு உங்களுக்குக் கட்டளையிட்டுள்ளான . ஆகவே , நீங்கள் தொழும்போது ( இங்கும் அங்கும் ) திரும்பாதீர்கள் . ஏனெனில் , அல்லாஹ் , தொழுது கொண்டிருக்கும் தன் அடியார் தமது முகத்தைத் திருப்பாத வரை அவரது முகத்துக்கு நேராக தனது முகத்தை வைக்கிறான் . ( மூன்றாவது கட்டளை :) நோன்பு நோற்குமாறு உங்களுக்கு நான் கட்டளையிடுகிறேன் . நோன்பு நோற்பவரின் நிலையானது , ஒரு கூட்டத்தில் தமது கைப்பை நிரம்ப கஸ்தூரியை வைத்துக் கொண்டிருக்கும் ஒரு மனிதரின் நிலையை ஒத்திருக்கிறது . அந்தக் கஸ்தூரியின் மணம் அவர்களுள் ஒவ்வொருவரையும் வியப்படையச் செய்கிறது . நோன்பு நோற்றவரின் வாயிலிருந்து வரும் வாடை , அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாசனையைவிட நறுமணமிக்கதாகும் . ( நான்காவது கட்டளை :) தான தர்மம் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிடுகிறேன் : தர்மம் செய்பவரின் நிலையானது , ஒரு மனிதரின் நிலையை ஒத்திருக்கிறது . அவரை எதிரிகள் கைது செய்து அவரது கையைக் கழுத்தோடு சேர்த்துப் பிணைத்து , சிரச்சேதம் செய்வதற்காக அவரைக் கொண்டு சென்றனர் . அப்போது அந்தக் கைதி "( என்னிடமுள்ள ) குறைவான நிறைவான ( எல்லாப் ) பொருட்களையும் உங்களிடம் பிணைத் தொகையாகச் செலுத்துகிறேன் " என்று கூறி ( அவற்றைச் செலுத்தி ) அவர்களிடமிருந்து தம்மை விடுவித்துக் கொண்டார் . ( ஐந்தாவது கட்டளை :) அல்லாஹ்வை நினைவு கூர்ந்து துதிக்குமாறு உங்களுக்கு நான் கட்டளையிடுகிறேன் . அவ்வாறு அல்லாஹ்வை நினைவு கூர்ந்து துதிப்பவரின் நிலையானது , எதிரிகள் மிக வேகமாகப் பின்தொடர்ந்து வருகின்ற ஒரு மனிதரின் நிலையை ஒத்திருக்கிறது . அவர் பாதுகாப்பான கோட்டை ஒன்றில் புகுந்து அவர்களிடமிருந்து தம்மைத் தற்காத்துக் கொண்டார் . இவ்வாறுதான் ஓர் அடியார் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து துதிக்காமல் ஷைத்தானிடமிருந்து தம்மை விடுவித்துக் கொள்ள முடியாது . ( இந்தச் செய்தியைத் தம் தோழர்களிடம் தெரிவித்த ) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , நானும் அல்லாஹ்வின் ஆணைக்கிணங்க ஐந்து கட்டளைகளை நிறைவேற்றுமாறு உங்களுக்கு உத்தரவிடுகிறேன் . 1. ( தலைவரின் ஆணையைச் ) செவியேற்றல் . 2. ( தலைமைக்குக் ) கட்டுப்படல் . 3. அறப்போர் புரிதல் . 4. ( அவசியம் நேர்ந்தால் ) புலம் பெயர்ந்து ( ஹிஜ்ரத் ) செல்லல் . 5. சமூகக் கட்டமைப்பு ( டன் இணைந்திருத்தல் ) ஆகியவையாகும் . ஒருவர் சமூகக் கட்டமைப்பிலிருந்து ஒரு சாண் அளவு வெளியேறினாலும் அவர் ( மீண்டும் அதனுள் ) திரும்பி வரும் வரை இஸ்லாம் எனும் கட்டைத் தமது கழுத்திலிருந்து கழற்றிக் கொண்டுவிட்டார் . யார் அறியாமைக் கலாச்சாரத்திற்கு அழைப்பு விடுக்கிறாரோ அவர் நரகக் குவியலுக்குச் செல்பவர்களுள் உள்ளவர் ஆவார் . இவ்வாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னபோது " அல்லாஹ்வின் தூதரே ! அவர் தொழுதாலும் நோன்பு நோற்றாலுமா ?" என்று மனிதர் கேட்டார் . "( ஆம் ) அவர் தொழுதாலும் நோன்பு நோற்றாலும் சரியே ! ( நரகத்துக்குத்தான் செல்வார் ). ஆயினும் ( இவர்கள் முஸ்லிம்கள்தாம் . இவர்களை ) அல்லாஹ் உங்களைப் பெயர் சூட்டி அழைப்பதைப் போன்றே முஸ்லிம்கள் ( இறைவனுக்குக் கீழ்ப்படிபவர்கள் ), முஃமின்கள் ( இறைநம்பிக்கையாளர்கள் ), அல்லாஹ்வின் அடியார்கள் ( இபாதுல்லாஹ் ) என்றே அழையுங்கள் " என்று கூறினார்கள் .
عَنْ النَّوَّاسِ بْنِ سَمْعَانَ الْأَنْصَارِيِّ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ ضَرَبَ اللَّهُ مَثَلًا صِرَاطًا مُسْتَقِيمًا وَعَلَى جَنْبَتَيْ الصِّرَاطِ سُورَانِ فِيهِمَا أَبْوَابٌ مُفَتَّحَةٌ وَعَلَى الْأَبْوَابِ سُتُورٌ مُرْخَاةٌ وَعَلَى بَابِ الصِّرَاطِ دَاعٍ يَقُولُ أَيُّهَا النَّاسُ ادْخُلُوا الصِّرَاطَ جَمِيعًا وَلَا تَتَفَرَّجُوا وَدَاعٍ يَدْعُو مِنْ جَوْفِ الصِّرَاطِ فَإِذَا أَرَادَ يَفْتَحُ شَيْئًا مِنْ تِلْكَ الْأَبْوَابِ قَالَ وَيْحَكَ لَا تَفْتَحْهُ فَإِنَّكَ إِنْ تَفْتَحْهُ تَلِجْهُ وَالصِّرَاطُ الْإِسْلَامُ وَالسُّورَانِ حُدُودُ اللَّهِ تَعَالَى وَالْأَبْوَابُ الْمُفَتَّحَةُ مَحَارِمُ اللَّهِ تَعَالَى وَذَلِكَ الدَّاعِي عَلَى رَأْسِ الصِّرَاطِ كِتَابُ اللَّهِ عَزَّ وَجَلَّ وَالدَّاعِي فَوْقَ الصِّرَاطِ وَاعِظُ اللَّهِ فِي قَلْبِ كُلِّ مُسْلِمٍ . واللفظ لأحمد. 355
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக நவ்வாஸ் பின் சம்ஆன் அல்அன்ஸாரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : நேரான வழி ( எனும் இஸ்லாமு ) க்கு அல்லாஹ் ஓர் உவமை கூறுகிறான் : அது ஒரு சாலை போன்றது . அந்தச் சாலையின் இரு மருங்கிலும் இரு சுவர்கள் உள்ளன . அவ்விரண்டிலும் திறந்த தலைவாயில்கள் உள்ளன . தலைவாயில்களில் தொங்கும் திரைகள் உள்ளன . அந்தச் சாலையின் நுழைவாயிலில் அழைப்பாளி ஒருவர் இருக்கிறார் . அவர் " மக்களே ! இந்தச் சாலையில் அனைவரும் நுழைந்து கொள்ளுங்கள் . நீங்கள் கோணலான சாலையில் சென்றுவிடாதீர்கள் ” என்று அழைக்கிறார் . அல்லாஹ் அமைதி இல்லத்துக்கு அழைக்கிறான் . தான் நாடியோரை நேரான வழிக்கு வழிகாட்டுகிறான் " என்று கூறுகிறார் . அந்தச் சாலைக்கு மேல் மற்றோர் அழைப்பாளரும் இருக்கின்றார் . அந்தச் சாலையின் நுழைவாயில்களுள் எதையாவது திறக்க நாடினால் , “ உனக்குக் கேடுதான் . அதைத் திறக்காதே . திண்ணமாக நீ அதைத் திறந்தால் அதில் நுழைந்துவிடுவாய் ” என்று கூறுவார் . அந்த நேரான சாலைதான் இஸ்லாம் . ( அந்தச் சாலையின் இரு புறமும் உள்ள ) சுவர்கள் அல்லாஹ்வின் சட்ட வரையறைகளாகும் . திறந்த தலைவாயில்கள் அல்லாஹ்வால் விலக்கப்பட்டவையாகும் . அந்தச் சாலையின் தொடக்கத்திலிருந்து அழைப்பவர் அல்லாஹ்வின் வேதமாகும் . அந்த அழைப்பாளருக்கு மேலேயிருந்து அழைப்பு விடுப்பவர் ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது உள்ளத்தில் இறைவனால் நியமிக்கப்பட்ட உபதேசி ( மனசாட்சி ) ஆவார் .
عَنْ عَبْدِ الله بْنِ عَمْرٍو : أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَقُصُّ عَلَى النَّاسِ إِلَّا أَمِيرٌ أَوْ مَأْمُورٌ أَوْ مُرَاءٍ . 356
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஷுஐப் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது : ஆட்சித் தலைவர் அல்லது ( தலைவரின் ) கட்டளையை ஏற்று நடப்பவர் அல்லது பகட்டுக்காரர் தவிர ( யாரும் ) மக்களிடம் ( நற்செயலைத் தூண்டும் வகையில் ) கதை சொல்வதில்லை .
عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ الْأَشْجَعِيِّ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَا يَقُصُّ إِلَّا أَمِيرٌ أَوْ مَأْمُورٌ أَوْ مُخْتَالٌ . 357
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதைத் தாம் செவியுற்றதாக அவ்ஃப் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது : ஆட்சித் தலைவர் அல்லது ( தலைவரின் ) கட்டளையை ஏற்று நடப்பவர் அல்லது பெருமையடிப்பவர் தவிர ( யாரும் ) மக்களிடம் ( நற்செயலைத் தூண்டும் வகையில் ) கதை சொல்வதில்லை .
عن أَبَا عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيَّ يَقُولُ لَيْسَ هَدِيَّةٌ أَفْضَلَ مِنْ كَلِمَةِ حِكْمَةٍ تُهْدِيهَا لِأَخِيكَ . 358
அபூஅப்திர் ரஹ்மான் அல்ஹுபுலீ ரஹிமஹுல்லாஹ் கூறியுள்ளதாவது : உன் சகோதரனுக்கு வழிகாட்டும் ஞானம் நிறைந்த வார்த்தைகளைவிடச் சிறந்த அன்பளிப்பு வேறொன்றும் இல்லை .
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْكَلِمَةُ الْحِكْمَةُ ضَالَّةُ الْمُؤْمِنِ فَحَيْثُ وَجَدَهَا فَهُوَ أَحَقُّ بِهَا . 359
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ஞானம் நிறைந்த வார்த்தை ஓர் இறை நம்பிக்கையாளரின் காணாமல்போன சொத்தாகும் . அவர் அதை எங்குக் கிடைக்கப் பெறுகிறாரோ , அதை அடைந்துகொள்ள முற்றிலும் தகுதியானவர் .
عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ مَا اجْتَمَعَ قَوْمٌ فِي بَيْتٍ مِنْ بُيُوتِ اللَّهِ يَتَذَاكَرُونَ كِتَابَ اللَّهِ وَيَتَدَارَسُونَهُ بَيْنَهُمْ إِلَّا أَظَلَّتْهُمْ الْمَلَائِكَةُ بِأَجْنِحَتِهَا حَتَّى يَخُوضُوا فِي حَدِيثٍ غَيْرِهِ وَمَنْ سَلَكَ طَرِيقًا يَبْتَغِي بِهِ الْعِلْمَ سَهَّلَ اللَّهُ طَرِيقَهُ مِنْ الْجَنَّةِ وَمَنْ أَبْطَأَ بِهِ عَمَلُهُ لَمْ يُسْرِعْ بِهِ نَسَبُهُ . 360
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அல்லாஹ்வுடைய வீடுகளுள் ஒன்றில் ஒரு குழுவினர் ஒன்றுகூடி அல்லாஹ்வின் வேதத்தை நினைவுகூர்கின்றார்கள் . அவர்களுக்கு மத்தியில் அது பற்றிக் கருத்தைப் பரிமாறிக்கொள்கிறார்கள் என்றால் , அவர்களை வானவர்கள் தம் இறக்கைகளால் சூழ்ந்துகொள்ளாமல் இருப்பதில்லை - அவர்கள் அதுவல்லாத ( வேறு ) பேச்சில் ஈடுபடுகின்ற வரை . யார் கல்வியைத் தேடி ஒரு பாதையில் ( நடந்து ) செல்கின்றாரோ , அவர் சொர்க்கம் செல்வதற்கான பாதையை அல்லாஹ் அவருக்கு எளிதாக்குகிறான் . அ( க்கல்வி ) தனைக் கொண்டு யாருடைய செயல்பாடு மெதுவாகச் செல்கிறதோ , அவரை அவருடைய வமிசத்தினர் முந்திவிட முடியாது .
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ تَذَاكَرُوا الْحَدِيثَ فَإِنَّ الْحَدِيثَ يُهَيِّجُ الْحَدِيثَ . 361
அபூசஈத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ஹதீஸை ஒருவருக்கொருவர் நினைவுகூருங்கள் . ஏனென்றால் ஹதீஸை நினைவுகூர்கின்ற அந்தப் பேச்சானது ஹதீஸைத் ( தெரிந்துகொள்ளத் ) தூண்டும் .
عَنْ الْأَعْمَشِ قَالَ كَانَ إِسْمَعِيلُ بْنُ رَجَاءٍ يَجْمَعُ صِبْيَانَ الْكُتَّابِ يُحَدِّثُهُمْ يَتَحَفَّظُ بِذَاكَ. 362
அஉமஷ் ரஹிமஹுல்லாஹ் அறிவிப்பதாவது : இஸ்மாயீல் பின் ரஜாஉ அவர்கள் பாலர்வகுப்புச் சிறுவர்களை ஒன்றுகூட்டி அவர்களுக்கு ஹதீஸை அறிவிப்பார்கள் . அதன்மூலம் அவர்கள் ( தமக்குத்தாமே ) மனனம் செய்துகொள்வார்கள் .
عَنْ مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ عَنْ أَبِيهِ قَالَ كَانَ الْحَارِثُ بْنُ يَزِيدَ الْعُكْلِيُّ وَابْنُ شُبْرُمَةَ وَالْقَعْقَاعُ بْنُ يَزِيدَ وَمُغِيرَةُ إِذَا صَلَّوْا الْعِشَاءَ الْآخِرَةَ جَلَسُوا فِي الْفِقْهِ فَلَمْ يُفَرِّقْ بَيْنَهُمْ إِلَّا أَذَانُ الصُّبْحِ . 363
முஹம்மது பின் ஃபுளைல் ரஹிமஹுல்லாஹ் தம் தந்தையிடமிருந்து அறிவிப்பதாவது : ஹாரிஸ் பின் யஸீத் அல்உக்லீ , இப்னு ஜுப்ருமா , கஉகாஉ பின் யஸீத் , முஃகீரா ஆகியோர் இஷாத் தொழுகையைத் தொழுதுவிட்டால் , கல்வியைக் கற்றுக்கொள்ள அமர்ந்துவிடுவார்கள் . ஸுப்ஹு உடைய பாங்கு ( அதான் ) தவிர வேறு எதுவும் அவர்களைக் கலைப்பதில்லை .
عَنْ عَبْدُ اللَّهِ إِنَّ لِكُلِّ شَيْءٍ آفَةً وَآفَةُ الْعِلْمِ النِّسْيَانُ. 364
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ஒவ்வொரு பொருளுக்கும் ஆபத்து உண்டு . கல்வியின் ஆபத்து மறதியாகும் .
عَنْ عَلِيٌّ تَذَاكَرُوا هَذَا الْحَدِيثَ وَتَزَاوَرُوا فَإِنَّكُمْ إِنْ لَمْ تَفْعَلُوا يَدْرُسْ . 365
அலீ ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : இந்த ஹதீஸை ஒருவருக்கொருவர் நினைவுகூருங்கள் . ஒருவருக்கொருவர் சந்தித்துப் பரிமாறிக்கொள்ளுங்கள் . நிச்சயமாக நீங்கள் அவ்வாறு செய்யவில்லையானால் அது அழிந்துவிடும் .
عَنْ عِكْرِمَةَ قَالَ كَانَ ابْنُ عَبَّاسٍ يَضَعُ فِي رِجْلَيَّ الْكَبْلَ وَيُعَلِّمُنِي الْقُرْآنَ وَالسُّنَنَ . 366
இக்ரிமா ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு என் இரு ( முட்டிக் ) கால்கள்மீது முன்கையை வைப்பார்கள் . எனக்குக் குர்ஆனையும் சுன்னத்துகளையும் கற்பிப்பார்கள் .
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ سُئِلَ عَنْ عِلْمٍ فَكَتَمَهُ أَلْجَمَهُ اللَّهُ بِلِجَامٍ مِنْ نَارٍ يَوْمَ الْقِيَامَةِ . 367
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : யார் ( மார்க்கம் தொடர்பாகப் பயனளிக்கக்கூடிய ஒரு ) கல்வி குறித்துக் கேட்கப்படும்போது அவர் அதை ( த் தெரிந்திருந்தும் ) மறைக்கிறாரோ அல்லாஹ் அவருக்கு மறுமைநாளில் நெருப்பாலான கடிவாளம் இடுவான் .
عَنْ أَبي هُرَيْرَةَ يَقُولُ وَاللَّهِ لَوْلَا آيَتَانِ فِي كِتَابِ اللَّهِ تَعَالَى مَا حَدَّثْتُ عَنْهُ يَعْنِي عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَيْئًا أَبَدًا لَوْلَا قَوْلُ اللَّهِ إِنَّ الَّذِينَ يَكْتُمُونَ مَا أَنْزَلَ اللَّهُ مِنْ الْكِتَابِ إِلَى آخِرِ الْآيَتَيْنِ . 368
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறியுள்ளதாவது : அல்லாஹ்வுடைய வேதத்தில் இரண்டு வசனங்கள் மட்டும் இல்லையென்றால் , நான் எதையும் ஒருபோதும் அவர்களிடமிருந்து அதாவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து அறிவித்திருக்க மாட்டேன் . ( அவை ) இன்னல்லதீன யக்த்துமூன மா அன்ஸ லல்லாஹு மினல் கித்தாபி ..... எனும் இரண்டு வசனங்கள் ( அல்பகரா : 174-175) ஆகும் . ( பொருள் : நாம் இறக்கிய தெளிவான வேதத்திலிருந்து எவர்கள் மறைக்கின்றார்களோ .... எனும் இரண்டு வசனங்கள் .
عَنْ أَبِي أُمَامَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا ضَلَّ قَوْمٌ بَعْدَ هُدًى كَانُوا عَلَيْهِ إِلَّا أُوتُوا الْجَدَلَ ثُمَّ تَلَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَذِهِ الْآيَةَ مَا ضَرَبُوهُ لَكَ إِلَّا جَدَلًا بَلْ هُمْ قَوْمٌ خَصِمُونَ . 369
அபூஉமாமா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ நல்வழியில் இருந்துவந்த ஒரு சமுதாயம் வழிதவறிப் போகிறதென்றால் அவர்கள் விதண்டாவாதம் வழங்கப்பட்டனர் என்றே கொள்க `` என்று கூறிவிட்டு , “ இல்லை , அவர்கள் குதர்க்கவாதம் பேசும் கூட்டத்தார் ஆவர் `` (43:58) எனும் இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள் .
عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْمِرَاءُ فِي الْقُرْآنِ كُفْرٌ . 370
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : குர்ஆன் குறித்து விதண்டாவாதம் செய்தல் இறைமறுப்பு ஆகும் .
عَنْ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ يَقُولُ مَنْ جَعَلَ دِينَهُ غَرَضًا لِلْخُصُومَاتِ أَكْثَرَ التَّنَقُّلَ . 371
உமர் பின் அப்தில் அஸீஸ் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : யார் இந்த மார்க்கத்தை வாதங்கள் செய்வதற்கான பகடைக்காயாக ஆக்கிக்கொண்டாரோ அவர் ( வார்த்தைகளை ) அதிகமாக இடம் மாற்றிவிட்டார் .
عَنْ كَثِيرِ بْنِ مُرَّةَ قَالَ لَا تُحَدِّثْ الْبَاطِلَ الْحُكَمَاءَ فَيَمْقُتُوكَ وَلَا تُحَدِّثْ الْحِكْمَةَ لِلسُّفَهَاءِ فَيُكَذِّبُوكَ وَلَا تَمْنَعْ الْعِلْمَ أَهْلَهُ فَتَأْثَمَ وَلَا تَضَعْهُ فِي غَيْرِ أَهْلِهِ فَتُجَهَّلَ إِنَّ عَلَيْكَ فِي عِلْمِكَ حَقًّا كَمَا أَنَّ عَلَيْكَ فِي مَالِكَ حَقًّا . 372
கஸீர் பின் முர்ரா ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : தவறானதை அறிஞர்களிடம் கூறாதே . அவர்கள் உன்னிடம் கோபப்படுவார்கள் . ஞானத்தை அறிவிலிகளிடம் கூறாதே . அவர்கள் உன்னைப் பொய்யன் எனக் கூறுவார்கள் . கல்வியை அதற்குரியவர்களிடம் ( சேர்ப்பதில் ) தடையை ஏற்படுத்தாதே . ( அவ்வாறு செய்தால் ) நீ பாவம் செய்தவனாவாய் . தகுதி இல்லாதவர்களிடம் அதை ( ச் சேர்த்து ) வைக்காதே . ( அவ்வாறு செய்தால் ) நீ முட்டாளாக்கப்படுவாய் . உன் செல்வத்தில் உன்மீது கடமை இருப்பதைப்போல் உன் கல்வியிலும் உன்மீது கடமை உள்ளது .
عَنْ ابْنِ مَيْسَرَةَ قَالَ مَا رَأَيْتُ أَحَدًا مِنْ النَّاسِ الشَّرِيفُ وَالْوَضِيعُ عِنْدَهُ سَوَاءٌ غَيْرَ طَاوُسٍ وَهُوَ يَحْلِفُ عَلَيْهِ . 373
இப்னு மைசரா ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : மக்களுள் யாரையும் சிறப்பு வாய்ந்தவராகவும் தாழ்வானவராகவும் நான் கண்டதில்லை . தாவுஸ் - ரஹிமஹுல்லாஹ் - தவிர அனைவரும் சமமே . அவர் அதன்மீது சத்தியம் செய்வார் .
عَنْ الزُّهْرِيِّ قَالَ كُنَّا نَكْرَهُ كِتَابَةَ الْعِلْمِ حَتَّى أَكْرَهَنَا عَلَيْهِ السُّلْطَانُ فَكَرِهْنَا أَنْ نَمْنَعَهُ أَحَدًا . 374
அஸ்ஸுஹ்ரீ ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : கல்வியை எழுதி வைப்பதை நாங்கள் வெறுத்துவந்தோம் . அரசர் எங்களை அதற்காக நிர்ப்பந்திக்கின்ற வரை . பிறகு யாருக்கும் அதை ( கல்வியை ) நாங்கள் மறுத்துவிடுவதை வெறுத்தோம் .
عَنْ ابْنُ عَوْنٍ قَالَ كَلَّمُوا مُحَمَّدًا فِي رَجُلٍ يَعْنِي يُحَدِّثُهُ فَقَالَ لَوْ كَانَ رَجُلًا مِنْ الزِّنْجِ لَكَانَ عِنْدِي وَعَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ فِي هَذَا سَوَاءً . 375
இப்னு அவ்ன் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : முஹம்மது பின் சீரீன் அவர்களிடம் மக்கள் - அவருக்கு ஹதீஸ் அறிவிக்கிற - ஒரு மனிதரைப் பற்றிக் கேட்டனர் . அதற்கு அவர்கள் , “ ஹதீஸ் அறிவிக்கின்ற அவர் நீக்ரோ இனத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் அவரும் அப்துல்லாஹ் பின் முஹம்மது ஆகிய இருவரும் என்னிடம் இவ்விஷயத்தில் சமம்தான் ” என்று கூறினார்கள் .
عَنْ حُمَيْدٍ قَالَ قِيلَ لِعُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ لَوْ جَمَعْتَ النَّاسَ عَلَى شَيْءٍ فَقَالَ مَا يَسُرُّنِي أَنَّهُمْ لَمْ يَخْتَلِفُوا قَالَ ثُمَّ كَتَبَ إِلَى الْآفَاقِ وَإِلَى الْأَمْصَارِ لِيَقْضِ كُلُّ قَوْمٍ بِمَا اجْتَمَعَ عَلَيْهِ فُقَهَاؤُهُمْ . 376
ஹுமைத் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : நான் உமர் பின் அப்தில் அஸீஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் , “ மக்கள் அனைவரையும் ஒரே விஷயத்தில் ஒன்றிணைத்தால் என்ன ?” என்று கேட்டேன் . அதற்கு அவர்கள் , “ அவர்கள் கருத்து வேறுபாடு கொள்ளாமல் இருப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தராது ” என்று கூறினார்கள்.அறிவிப்பாளர் கூறுகிறார் : மேலும் அவர்கள் ஒவ்வொரு சமுதாய மக்களும் தத்தம் அறிஞர்கள் ஒன்றுபட்ட விஷயங்களைக்கொண்டு ( தமக்குள் ) தீர்ப்பளிக்கட்டும் என்று பல்வேறு ஊர்களுக்குக் கடிதம் எழுதினார்கள் .
عَنْ سَعِيدُ بْنُ عَامِرٍ قَالَ كَانَ سَلَّامٌ يَذْكُرُ عَنْ أَيُّوبَ-السَّخْتِيِا نيَّ- قَالَ إِذَا أَرَدْتَ أَنْ تَعْرِفَ خَطَأَ مُعَلِّمِكَ فَجَالِسْ غَيْرَهُ. 377
சயீத் பின் ஆமிர் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : சல்லாம் அவர்கள் , அய்யூப் - அஸ்ஸக்த்தியானீ - அவர்களை நினைவுகூர்ந்து கொண்டிருந்தார்கள் . நீ உன் ஆசிரியரின் தவறுகளைத் தெரிந்துகொள்ள நாடினால் , ( அவர் அல்லாத ) மற்றவர்களிடம் அமர்ந்துகொள் ” என்று கூறினார்கள் .
عَنْ أَبُو بَكْرٍ الْهُذَلِيُّ عَنْ الشَّعْبِيِّ قَالَ شَهِدْتُ شُرَيْحًا وَجَاءَهُ رَجُلٌ مِنْ مُرَادٍ فَقَالَ يَا أَبَا أُمَيَّةَ مَا دِيَةُ الْأَصَابِعِ قَالَ عَشْرٌ عَشْرٌ قَالَ يَا سُبْحَانَ اللَّهِ أَسَوَاءٌ هَاتَانِ جَمَعَ بَيْنَ الْخِنْصِرِ وَالْإِبْهَامِ فَقَالَ شُرَيْحٌ يَا سُبْحَانَ اللَّهِ أَسَوَاءٌ أُذُنُكَ وَيَدُكَ فَإِنَّ الْأُذُنَ يُوَارِيهَا الشَّعْرُ وَالْكُمَّةُ وَالْعِمَامَةُ فِيهَا نِصْفُ الدِّيَةِ وَفِي الْيَدِ نِصْفُ الدِّيَةِ وَيْحَكَ إِنَّ السُّنَّةَ سَبَقَتْ قِيَاسَكُمْ فَاتَّبِعْ وَلَا تَبْتَدِعْ فَإِنَّكَ لَنْ تَضِلَّ مَا أَخَذْتَ بِالْأَثَرِ . 378
ஷஅபீ ரஹிமஹுல்லாஹ் அவர்களிடமிருந்து அபூபக்ர் அல்ஹுதலீ ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : நான் ஜுரைஹ் என்பாரிடம் இருந்தேன் . அப்போது முராத் குலத்திலிருந்து ஒருவர் வந்து , அபூ உமய்யா அவர்களே ! விரல்களுக்கான தியத் ( இழப்பீட்டுத் ) தொகை எவ்வளவு ?” என்று கேட்டார் . அதற்கு அவர்கள் , “( ஒவ்வொரு விரலுக்கும் ) பத்து பத்து ” என்று பதிலளித்தார்கள் . அதற்கவர் , “ சுப்ஹானல்லாஹ் ! இவ்விரண்டும் சமம்தானா ?” என்று கேட்டுக்கொண்டே , தம் சுண்டு விரலையும் கட்டை விரலையும் ஒன்றாகக் காட்டினார் . அதற்கு ஜுரைஹ் அவர்கள் , “ சுப்ஹானல்லாஹ் ! உன் காதும் கையும் சமமா ? திண்ணமாகக் காது-அதனை முடி , தொப்பி , தலைப்பாகை ஆகியவை மறைத்துக்கொள்கின்றன . ( அப்படியிருக்க ) அதில் பாதி இழப்பீடும் , கைக்குப் பாதி இழப்பீடும் ( தானே ) உள்ளது ” என்று எதிர்வினா தொடுத்தார்கள் . “ உனக்குக் கேடுதான் ! நிச்சயமாக சுன்னத் உன் ஒப்பீட்டை ( கியாஸ் ) முந்திவிட்டது . எனவே அந்த சுன்னத்தையே ) பின்பற்று ; புதிதாக உண்டாக்காதே . திண்ணமாக நீ ஹதீஸை எடுத்துக்கொள்ளும் வரை ஒருபோதும் வழிதவற மாட்டாய் ” என்றும் கூறினார்கள் . அபூபக்ர் அல் ஹுதலீ ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : என்னிடம் ஷஅபீ ரஹிமஹுல்லாஹ் , “ ஹுதலீ ! உங்களுடைய அஹ்னஃப் ( பின் கைஸ் என்பவர் ) கொல்லப்பட்டால் - இந்தச் சிறுவன் தன் தொட்டிலில் உள்ள நிலையில் - அப்போது அவ்விரண்டு பேரின் இழப்பீட்டுத் தொகையும் சமமா ?” என்று கேட்டார்கள் . அதற்கு நான் , “ ஆம் ( சமம்தான் )” என்றேன் . அதற்கு அவர்கள் , “( இப்போது ) உங்கள் ஒப்பீடு எங்கே ( போனது )?” என்று கேட்டார்கள் .
عَنْ الشَّعْبِيِّ قَالَ وَاللَّهِ لَئِنْ أَخَذْتُمْ بِالْمَقَايِيسِ لَتُحَرِّمُنَّ الْحَلَالَ وَلَتُحِلُّنَّ الْحَرَامَ . 379
ஷஅபீ ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : அல்லாஹ்வின்மீது ஆணையாக ! ( ஹதீஸ்களை விட்டுவிட்டு ) ஒப்பீடுகள் மூலம் ( சட்டங்களை ) நீங்கள் எடுக்கத் தொடங்கிவிட்டால் , ஆகுமானதைத் தடைசெய்வீர்கள் ; தடை செய்யப்பட்டதை ஆகுமாக்குவீர்கள் . ஷஅபீ ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : நீங்கள் என்ன கருதுகிறீர்கள் ? நீங்கள் என்ன கருதுகிறீர்கள் ? என்று கேட்பதே என்னிடம் மிகவும் சினத்திற்குரியது . ஒருவர் தம் தோழரிடம் , நீர் என்ன கருதுகிறீர் ? என்று கேட்கிறார் . அவர் ஒப்பிட்டுப் பார்க்காதவராக இருந்தார் . ( அதாவது ஹதீஸை மட்டுமே பார்ப்பவராக இருந்தார் ). ஷஅபீ ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : இவர்களெல்லாம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் இருந்திருந்தால் , குர்ஆன் முழுக்க , “ உம்மிடம் கேட்கிறார்கள் ; உம்மிடம் கேட்கிறார்கள் ” என்றே இறங்கியிருக்கும் .
وعنه قَالَ : مَا حَدَّثُوكَ هَؤُلَاءِ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَخُذْ بِهِ وَمَا قَالُوهُ بِرَأْيِهِمْ فَأَلْقِهِ فِي الْحُشِّ . 380
ஷஅபீ ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : இவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து அறிவித்தவற்றை எடுத்துக்கொள் . ( அவற்றைச் செயல்படுத்து ). இவர்கள் தம் சிந்தனையால் ( சிந்தித்துக் ) கூறியவற்றைக் குப்பையில் போட்டுவிடு .
عَنْ الْأَوْزَاعِيِّ قَالَ قَالَ إِبْلِيسُ لِأَوْلِيَائِهِ مِنْ أَيِّ شَيْءٍ تَأْتُونَ بَنِي آدَمَ فَقَالُوا مِنْ كُلِّ شَيْءٍ قَالَ فَهَلْ تَأْتُونَهُمْ مِنْ قِبَلِ الِاسْتِغْفَارِ قَالُوا هَيْهَاتَ ذَاكَ شَيْءٌ قُرِنَ بِالتَّوْحِيدِ قَالَ لَأَبُثَّنَّ فِيهِمْ شَيْئًا لَا يَسْتَغْفِرُونَ اللَّهَ مِنْهُ قَالَ فَبَثَّ فِيهِمْ الْأَهْوَاءَ . 381
அவ்ஸாயீ ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : இப்லீஸ் தன்னுடைய நண்பர்களிடம் , “ நீங்கள் மனிதர்களிடம் எதைக் கொண்டு வருகின்றீர்கள் ?” என்று கேட்டான் . “ எல்லாவற்றையும் கொண்டு வருகிறோம் ” என்றனர் . இஸ்திஃக்ஃபார் - பாவமன்னிப்புத் தேடுதல் ஊடாக அவர்களிடம் வருகின்றீர்களா ?” என்று கேட்டான் . அதற்கு அவர்கள் , “( அதுவோ இயலாத ) தூரமாகிவிட்டது . அதுவோ தவ்ஹீதோடு இணைக்கப்பட்டுள்ளதே ” என்றனர் . “ அவர்கள் அல்லாஹ்விடம் இஸ்திஃக்ஃபார்-பாவமன்னிப்புத் தேட முடியாத வகையிலான விஷயத்தை நிச்சயமாக நான் அவர்களிடம் பரப்பிவிடுவேன் ” என்று கூறினான் . ( பிறகு ) அவர்களிடம் மனவேட்கைகளைப் பரப்பிவிட்டான் .
عَنْ زِيَادِ بْنِ حُدَيْرٍ قَالَ قَالَ لِي عُمَرُ هَلْ تَعْرِفُ مَا يَهْدِمُ الْإِسْلَامَ قَالَ قُلْتُ لَا قَالَ يَهْدِمُهُ زَلَّةُ الْعَالِمِ وَجِدَالُ الْمُنَافِقِ بِالْكِتَابِ وَحُكْمُ الْأَئِمَّةِ الْمُضِلِّينَ . 382
ஸியாத் பின் ஹுதைர் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : “ இஸ்லாமிய மார்க்கத்தை இடித்துத் தள்ளும் விஷயத்தை நீ அறிவாயா ?” என்று உமர் ரளியல்லாஹு அன்ஹு கேட்டார்கள் . அதற்கு நான் , “ தெரியாது ” என்றேன் . அவர்கள் கூறினார்கள் : “ ஓர் ஆலிம் உடைய சருகுதல் , ( திருக்குர்ஆன் எனும் ) வேதத்தைக்கொண்டு நயவஞ்சகனிடம் தர்க்கம் செய்தல் , வழிகெடுக்கக்கூடிய தலைவர்கள் ஆட்சி செய்தல் ஆகியவை அதனை இடித்துத் தள்ளும் .
عَنْ أَبي قِلَابَةَ لَا تُجَالِسُوا أَهْلَ الْأَهْوَاءِ وَلَا تُجَادِلُوهُمْ فَإِنِّي لَا آمَنُ أَنْ يَغْمِسُوكُمْ فِي ضَلَالَتِهِمْ أَوْ يَلْبِسُوا عَلَيْكُمْ مَا كُنْتُمْ تَعْرِفُونَ . 383
அபூகிலாபா ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : மனவேட்கைப்படிச் செயல்படக்கூடியவர்களோடு சேர்ந்து அமராதீர்கள் . அவர்களிடம் தர்க்கம் செய்யாதீர்கள் . ஏனென்றால் நிச்சயமாக அவர்கள் தம்முடைய வழிகேட்டில் உங்களையும் மூழ்கடிக்கச் செய்துவிடுவார்கள் அல்லது நீங்கள் அறிந்துள்ளவை குறித்து அவர்கள் உங்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்திவிடுவார்கள் என்று நான் அஞ்சுகிறேன் .
عَنْ أَسْمَاءَ بْنِ عُبَيْدٍ قَالَ دَخَلَ رَجُلَانِ مِنْ أَصْحَابِ الْأَهْوَاءِ عَلَى ابْنِ سِيرِينَ فَقَالَا يَا أَبَا بَكْرٍ نُحَدِّثُكَ بِحَدِيثٍ قَالَ لَا قَالَا فَنَقْرَأُ عَلَيْكَ آيَةً مِنْ كِتَابِ اللَّهِ قَالَ لَا لِتَقُومَانِ عَنِّي أَوْ لَأَقُومَنَّ قَالَ فَخَرَجَا . 384
அஸ்மா பின் உபைத் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : மனவேட்கைப்படிச் செயல்படக்கூடிய இருவர் இப்னு சீரீன் அவர்களிடம் வந்து , “ அபூபக்ர் அவர்களே ! ஒரு ஹதீஸை நாங்கள் உங்களுக்கு அறிவிக்கட்டுமா ?” என்று வினவினார்கள் . அதற்கு அவர்கள் , “ வேண்டாம் ” என்றார்கள் . “ அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஒரு வசனத்தை நாங்கள் உங்களிடம் ஓதிக் காட்டட்டுமா ?” என்று வினவினார்கள் . அதற்கு அவர்கள் , “ வேண்டாம் ; நீங்கள் இருவரும் என்னிடமிருந்து எழுந்து செல்கின்றீர்களா ? அல்லது நான் எழுந்து செல்லட்டுமா ?” என்று கேட்டார்கள் . ( அதன்பின் ) அவர்கள் இருவரும் புறப்பட்டுவிட்டார்கள் . அதைக் கண்ட மக்கள் சிலர் , அபூபக்ர் அவர்களே ! “ அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஒரு வசனத்தை அவர்கள் உங்களிடம் ஓதிக் காட்டுவதில் உங்களுக்கு என்ன ( சிரமம் ) இருக்கிறது ?” என்று வினவினார்கள் . “ அவர்கள் என்னிடம் ஏதாவது ஓர் இறைவசனத்தை ஓதுவார்கள் . அ( தன் விளக்கத் ) தை மாற்றிக் கூறுவார்கள் . அது என் உள்ளத்தில் பதிந்துவிடும் . ( அது எனக்குச் சிரமத்தை ஏற்படுத்தும் )” என்று பதிலளித்தார்கள் .
عَنْ الْحَسَنِ وَابْنِ سِيرِينَ أَنَّهُمَا قَالَا لَا تُجَالِسُوا أَصْحَابَ الْأَهْوَاءِ وَلَا تُجَادِلُوهُمْ وَلَا تَسْمَعُوا مِنْهُمْ . 385
ஹஸன் , இப்னு சீரீன் ரஹிமஹுமல்லாஹ் இருவரும் கூறியதாவது : மனவேட்கைப்படிச் செயல்படக் கூடியவர்களோடு சேர்ந்து அமராதீர்கள் . அவர்களிடம் தர்க்கம் செய்யாதீர்கள் . அவர்களிடமிருந்து ( எதையும் ) செவியுறாதீர்கள் .
عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ وُجِدَ أَكْثَرُ حَدِيثِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ هَذَا الْحَيِّ مِنْ الْأَنْصَارِ وَاللَّهِ إِنْ كُنْتُ لَآتِي الرَّجُلَ مِنْهُمْ فَيُقَالُ هُوَ نَائِمٌ فَلَوْ شِئْتُ أَنْ يُوقَظَ لِي فَأَدَعُهُ حَتَّى يَخْرُجَ لِأَسْتَطِيبَ بِذَلِكَ حَدِيثَهُ . 386
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மிகுதியான ஹதீஸ்கள் அன்ஸாரிகள் வாழும் இந்தப் பகுதியில்தான் பெற்றுக்கொள்ளப்பட்டன . அல்லாஹ்வின் மீதாணையாக ! அவர்களுள் ஒருவரிடம் நான் ( ஹதீஸை நாடி ) வந்தால் , அவர் உறங்கிக் கொண்டிருக்கிறார் என்று கூறப்படும் . நான் நாடினால் எனக்காக அவர் எழுப்பப்பட்டிருப்பார் . ( எனினும் ) நான் அவர் ( தம் தூக்கத்திலிருந்து விழித்து ) வெளியே வரும் வரை அவரை விட்டுவிடுவேன் . ஏனென்றால் அந்த ஹதீஸை அவரிடமிருந்து நல்ல மனநிலையில் நான் பெறவேண்டுமென்பதற்காக ( அவ்வாறு செய்தேன் ).
عَنْ الزُّهْرِيِّ قَالَ كُنْتُ آتِي بَابَ عُرْوَةَ فَأَجْلِسُ بِالْبَابِ وَلَوْ شِئْتُ أَنْ أَدْخُلَ لَدَخَلْتُ وَلَكِنْ إِجْلَالًا لَهُ . 387
அஸ்ஸுஹ்ரீ ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : நான் உர்வாவின் வீட்டிற்கு வந்துபோய்க்கொண்டிருந்தேன் . ( வீட்டிற்குச் சென்று ) கதவருகே அமர்ந்துவிடுவேன் . நான் உள்ளே செல்ல நாடியிருந்தால் ( வீட்டிற்குள் ) நுழைந்திருப்பேன் . எனினும் அவருக்கு மரியாதை செலுத்தும் பொருட்டு ( அவ்வாறு நான் செய்யவில்லை ).
عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ لَمَّا تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قُلْتُ لِرَجُلٍ مِنْ الْأَنْصَارِ يَا فُلَانُ هَلُمَّ فَلْنَسْأَلْ أَصْحَابَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِنَّهُمْ الْيَوْمَ كَثِيرٌ فَقَالَ وَا عَجَبًا لَكَ يَا ابْنَ عَبَّاسٍ أَتَرَى النَّاسَ يَحْتَاجُونَ إِلَيْكَ وَفِي النَّاسِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَرَى ؟... الحديث وفيه : فَبَقِيَ الرَّجُلُ حَتَّى رَآنِي وَقَدْ اجْتَمَعَ النَّاسُ عَلَيَّ فَقَالَ كَانَ هَذَا الْفَتَى أَعْقَلَ مِنِّي . 388
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வஃபாத் ஆனபோது அன்ஸாரிகளுள் ஒருவரிடம் , “ இன்னாரே ! வாருங்கள் . நபித்தோழர்களிடம் நாம் ( தெரியாததைக் ) கேட்போம் . ஏனென்றால் இன்று அவர்கள் நிறையப் பேர் இருக்கின்றார்கள் ” என்றேன் . அதற்கு அவர் , “ இப்னு அப்பாஸ் அவர்களே ! உம்மைக் கண்டு ஆச்சரியமாக இருக்கிறது . மக்கள் உம்மிடம் தேவையாகுவதை நீர் பார்க்கின்றீரா ? ( இல்லையா ?) நபித்தோழர்களுள் யாரை நீர் காண்கிறீர் ?... ” அதன் தொடரில் உள்ளதாவது : மக்கள் என்னிடம் ஒன்று சேர்ந்துவிட்டதைக் கண்ட அந்த மனிதர் , “ இந்த இளைஞர் என்னைவிட மிகவும் அறிவாளி ” என்று கூறினார் .
عَنْ أَبِي الدَّرْدَاءِ قَالَ لَا تَكُونُ عَالِمًا حَتَّى تَكُونَ مُتَعَلِّمًا وَلَا تَكُونُ بِالْعِلْمِ عَالِمًا حَتَّى تَكُونَ بِهِ عَامِلًا وَكَفَى بِكَ إِثْمًا أَنْ لَا تَزَالَ مُخَاصِمًا وَكَفَى بِكَ إِثْمًا أَنْ لَا تَزَالَ مُمَارِيًا وَكَفَى بِكَ كَاذِبًا أَنْ لَا تَزَالَ مُحَدِّثًا فِي غَيْرِ ذَاتِ اللَّهِ . 389
அபுத்தர்தா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : மாணவனாக ஆகும் வரை அறிஞராக ( ஆலிமாக ) ஆகமாட்டாய் . ( கற்ற கல்விப்படி செயல்படாமல் கல்வியின் மூலம் அறிஞராக ஆக முடியாது . நீ வாதம் செய்பவனாக இருப்பதே பாவியாக இருப்பதற்குப் போதுமானது . நீ வாக்குவாதம் செய்பவனாக இருப்பதே பாவியாக இருப்பதற்குப் போதுமானது . நீ அல்லாஹ்வுடைய உள்ளமை ( தாத் ) அல்லாததைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பதே நீ பொய்யன் என்பதற்குப் போதுமானது .
عَنْ عِمْرَانَ الْمِنْقَرِيِّ قَالَ قُلْتُ لِلْحَسَنِ يَوْمًا فِي شَيْءٍ قَالَهُ يَا أَبَا سَعِيدٍ لَيْسَ هَكَذَا يَقُولُ الْفُقَهَاءُ فَقَالَ وَيْحَكَ وَرَأَيْتَ أَنْتَ فَقِيهًا قَطُّ إِنَّمَا الْفَقِيهُ الزَّاهِدُ فِي الدُّنْيَا الرَّاغِبُ فِي الْآخِرَةِ الْبَصِيرُ بِأَمْرِ دِينِهِ الْمُدَاوِمُ عَلَى عِبَادَةِ رَبِّهِ . 390
இம்ரான் அல்மின்க்கரீ ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : நான் ஹஸன் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் ஒரு நாள் ஒரு விஷயம் குறித்துப் பேசினேன் . அபூசஈத் அவர்களே ! மார்க்கச் சட்ட அறிஞர்கள் ( ஃபுகஹாஉ ) இவ்வாறு கூறவில்லை என்று கூறினேன் . அதற்கு அவர்கள் , “ உனக்கு ஏற்பட்ட கேடே ! மார்க்கச் சட்ட அறிஞர் யாரையேனும் இதுவரை நீ பார்த்திருக்கிறாயா ? மார்க்கச் சட்ட அறிஞர் என்பவர் , உலகில் துறவியாகவும் மறுமையை விரும்புபவராகவும் தம் தீன் சார்ந்த செயல்களில் தீர்க்கமான பார்வையுடையவராகவும் தம் இறைவனை வழிபடுவதில் நீடித்திருப்பவராகவும் இருப்பார் ” என்றார்கள் .
عَنْ كَعْبٍ قَالَ إِنِّي لَأَجِدُ نَعْتَ قَوْمٍ يَتَعَلَّمُونَ لِغَيْرِ الْعَمَلِ وَيَتَفَقَّهُونَ لِغَيْرِ الْعِبَادَةِ وَيَطْلُبُونَ الدُّنْيَا بِعَمَلِ الْآخِرَةِ وَيَلْبَسُونَ جُلُودَ الضَّأْنِ وَقُلُوبُهُمْ أَمَرُّ مِنْ الصَّبْرِ فَبِي يَغْتَرُّونَ أَوْ إِيَّايَ يُخَادِعُونَ فَحَلَفْتُ بِي لَأُتِيحَنَّ لَهُمْ فِتْنَةً تَتْرُكُ الْحَلِيمَ فِيهَا حَيْرَانَ . 391
இம்ரான் அல்மின்க்கரீ ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : நான் ஒரு சமுதாயத்தின் குணநலனை ( இவ்வாறு இருப்பதாக ) க் காண்கிறேன் . அவர்கள் செயல்படுவதற்கன்றிக் கற்றுக்கொள்கின்றார்கள் ; வழிபாட்டுக்கன்றி மார்க்கச் சட்டங்களைக் கற்றுக்கொள்கின்றார்கள் ; மறுமையின் செயல்பாடுகளை வைத்து இம்மையைத் தேடுகின்றார்கள் ; வெள்ளாட்டுத் தோல்களை அணிந்து கொள்கின்றார்கள் . அவர்களின் உள்ளங்கள் கற்றாழையைவிடக் கசப்பானது . என்னைக்கொண்டே பெருமை கொள்கின்றார்களா ? அல்லது என்னையே அவர்கள் ஏமாற்றுகின்றார்களா ? என்னைக் கொண்டே நான் சத்தியம் செய்கிறேன் : ஒரு பொறுமையாளனையே தடுமாற்றத்தில் விட்டுவிடும் வகையிலான குழப்பத்தை அவர்களுக்கு நான் நிச்சயமாகக் கொடுப்பேன் .
الشَّعْبِيَّ يَقُولُ إِنَّمَا كَانَ يَطْلُبُ هَذَا الْعِلْمَ مَنْ اجْتَمَعَتْ فِيهِ خَصْلَتَانِ الْعَقْلُ وَالنُّسُكُ فَإِنْ كَانَ نَاسِكًا وَلَمْ يَكُنْ عَاقِلًا قَالَ هَذَا أَمْرٌ لَا يَنَالُهُ إِلَّا الْعُقَلَاءُ فَلَمْ يَطْلُبْهُ وَإِنْ كَانَ عَاقِلًا وَلَمْ يَكُنْ نَاسِكًا قَالَ هَذَا أَمْرٌ لَا يَنَالُهُ إِلَّا النُّسَّاكُ فَلَمْ يَطْلُبْهُ . 392
ஷஅபீ ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : பகுத்தறிவு , துறவுநிலை ஆகிய இரண்டு பண்புகள் கொண்டவர்கள்தாம் இந்தக் கல்வியைத் தேடிக்கொண்டிருந்தனர் . அவர் துறவியாக இருந்து , பகுத்தறிவாளராக இல்லையென்றால் அவர் அதைத் தேடமாட்டார் . அவர் பகுத்தறிவாளராக இருந்து , துறவியாக இல்லையென்றால் - இது துறவிகள் தவிர மற்றவர்கள் பெறமுடியாத விஷயமாகும் - அவர் அதைத் தேடமாட்டார் . ( ஆனால் ) இன்று அதைத் தேடுபவருக்குப் பகுத்தறிவு , துறவுநிலை ஆகிய இரண்டினுள் எதுவும் இல்லை .
عَنْ الشَّعْبِيَّ قَالَ وَدِدْتُ أَنِّي نَجَوْتُ مِنْ عَمَلِي كَفَافًا لَا لِي وَلَا عَلَيَّ . 393
ஷஅபீ ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : என் கல்வியின்மூலம் எனக்குச் சாதகமாகவோ எனக்கு எதிராகவோ எதுவுமின்றிப் போதுமான அளவு நான் வெற்றிபெற்றுவிட்டேன் என்று சொல்ல ஆசைப்பட்டேன் .
عَنْ الْحَسَنِ قَالَ أَدْرَكْتُ النَّاسَ وَالنَّاسِكُ إِذَا نَسَكَ لَمْ يُعْرَفْ مِنْ قِبَلِ مَنْطِقِهِ وَلَكِنْ يُعْرَفُ مِنْ قِبَلِ عَمَلِهِ فَذَلِكَ الْعِلْمُ النَّافِعُ . 394
ஹஸன் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : மக்களை ( இவ்வாறு ) அடைந்துகொண்டேன் . வழிபாட்டில் ஈடுபடுபவர் வழிபாட்டில் ஈடுபட்டால் , அவர் தம் பேச்சின்மூலம் அறியப்படமாட்டார் . மாறாக அவர் தம் அமல்-செயல்பாடுகள் மூலம் அறியப்படுவார் . அதுதான் பயனுள்ள கல்வியாகும் .
عَنْ مَالِكِ بْنِ مِغْوَلٍ قَالَ قَالَ رَجُلٌ لِلشَّعْبِيِّ أَفْتِنِي أَيُّهَا الْعَالِمُ فَقَالَ الْعَالِمُ مَنْ يَخَافُ اللَّهَ . 395
மாலிக் பின் மிஃக்வல் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : ஆலிம் அவர்களே ! எனக்கு மார்க்கத் தீர்ப்பு வழங்குங்கள் என்று ஷஅபீ ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் ஒருவர் கேட்டார் . அதற்கு அவர்கள் , “ ஆலிம் என்பவர் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்பவரே ஆவார் ” என்றார்கள் .
عَنْ الْحَسَنِ قَالَ الْعِلْمُ عِلْمَانِ فَعِلْمٌ فِي الْقَلْبِ فَذَلِكَ الْعِلْمُ النَّافِعُ وَعِلْمٌ عَلَى اللِّسَانِ فَذَلِكَ حُجَّةُ اللَّهِ عَلَى ابْنِ آدَمَ . 396
ஹஸன் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : கல்வி இரண்டு வகை . 1. உள்ளத்தில் பதிந்த கல்வி . அதுவே பயனுள்ள கல்வி . 2. நாவில் உள்ள கல்வி . அது ஆதமுடைய மகனுக்கு எதிராக அல்லாஹ்வுடைய ஆதாரமாகும் .
عَنْ حَبِيبِ بْنِ عُبَيْدٍ قَالَ كَانَ يُقَالُ تَعَلَّمُوا الْعِلْمَ وَانْتَفِعُوا بِهِ وَلَا تَعَلَّمُوهُ لِتَتَجَمَّلُوا بِهِ فَإِنَّهُ يُوشِكُ إِنْ طَالَ بِكُمْ عُمُرٌ أَنْ يَتَجَمَّلَ ذُو الْعِلْمِ بِعِلْمِهِ كَمَا يَتَجَمَّلُ ذُو الْبِزَّةِ بِبِزَّتِهِ . 397
ஹபீப் பின் உபைத் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : கல்வியைக் கற்றுக் கொள்ளுங்கள் . அதன்மூலம் பயன்பெறுங்கள் . ( மாறாக ) அதைக் கொண்டு அழகுபடுத்திக் கொள்வதற்காகக் கற்றுக் கொள்ளாதீர்கள் . ஏனென்றால் உங்களுக்கு வயது நீளமாக இருந்தால் ( நீங்கள் பார்க்கலாம் . அதாவது ) சீருடையாளர் தம் சீருடைமூலம் தம்மை அழகுபடுத்திக் கொள்வதைப்போல் கல்வியாளர் தம் கல்வியின் மூலம் தம்மை அழகுபடுத்திக்கொள்ளும் காலம் நெருங்கிவிட்டது என்று சொல்லப்பட்டு வந்தது .
عَنْ هِشَامٍ عَنْ الْحَسَنِ قَالَ إِنْ كَانَ الرَّجُلُ لَيُصِيبُ الْبَابَ مِنْ الْعِلْمِ فَيَعْمَلُ بِهِ فَيَكُونُ خَيْرًا لَهُ مِنْ الدُّنْيَا وَمَا فِيهَا لَوْ كَانَتْ لَهُ فَجَعَلَهَا فِي الْآخِرَةِ . 398
ஹஸன் அல்பஸ்`ரீ ரஹிமஹுல்லாஹ் கூறியதாக ஹிஷாம் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : ஒரு மனிதர் கல்வியின் வாசலை அடைந்துகொண்டு ( கற்றபடி ) செயல்பட்டால் , அது அவருக்கு இவ்வுலகத்தையும் அதில் உள்ளவற்றையும் விடச் சிறந்ததாக அமையும் . அவருக்கு அது அவ்வாறு ஆகிவிட்டால் அதனை மறுமைக்காக ஆக்கிக்கொள்வார் . ஹஸன் அல்பஸ்`ரீ ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : ஒரு மனிதர் கல்வியைத் தேட முற்பட்டுவிட்டால் அது அவருடைய பார்வையில் , பணிவில் , நாவில் , கையில் , உறவைப் பேணுவதில் , துறவில் காணப்படாமல் இருப்பதில்லை . முஹம்மது-பின் சீரீன் - ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : இந்த ஹதீஸை யாரிடமிருந்து எடுக்கின்றீர்கள் ( பெறுகின்றீர்கள் ) என்பதைக் கூர்ந்து கவனியுங்கள் . ஏனென்றால் அதுதான் உங்களுடைய மார்க்கமாகும் .
عَنْ أَبِي مُسْلِمٍ الْخَوْلَانِيُّ قَالَ : الْعُلَمَاءُ ثَلَاثَةٌ : فَرَجُلٌ عَاشَ فِي عِلْمِهِ وَعَاشَ مَعَهُ النَّاسُ فِيهِ وَرَجُلٌ عَاشَ فِي عِلْمِهِ وَلَمْ يَعِشْ مَعَهُ فِيهِ أَحَدٌ وَرَجُلٌ عَاشَ النَّاسُ فِي عِلْمِهِ وَكَانَ وَبَالًا عَلَيْهِ . 399
அபூமுஸ்லிம் அல்கவ்லானீ ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : அறிஞர்கள் மூவகை . 1. ஒருவர் தம் கல்வியின்படி வாழ்ந்தார் . அவரோடு அதன்படி மக்களும் வாழ்ந்தனர் . 2. ஒருவர் தம் கல்வியின்படி வாழ்ந்தார் . அவரோடு அதன்படி ( மக்களுள் ) எவரும் வாழவில்லை . 3. ஒருவருடைய கல்வியின்படி மக்கள் வாழ்ந்தனர் . ( ஆனால் கல்வியைக் கற்றவர் அதன்படி செயல்படாமல் ) அவர் துர்பாக்கியசாலியாக ஆகிவிட்டார் .
عَنْ أَبِي أُمَامَةَ الْبَاهِلِيِّ قَالَ ذُكِرَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلَانِ أَحَدُهُمَا عَابِدٌ وَالْآخَرُ عَالِمٌ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَضْلُ الْعَالِمِ عَلَى الْعَابِدِ كَفَضْلِي عَلَى أَدْنَاكُمْ ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ وَأَهْلَ السَّمَوَاتِ وَالْأَرَضِينَ حَتَّى النَّمْلَةَ فِي جُحْرِهَا وَحَتَّى الْحُوتَ لَيُصَلُّونَ عَلَى مُعَلِّمِ النَّاسِ الْخَيْ . 400
அபூஉமாமா அல்பாஹிலீ ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் இரண்டு மனிதர்களைப் பற்றிப் பேசப்பட்டது . அவர்களுள் ஒருவர் கல்விமான் ஆவார் . மற்றவர் பக்திமான் ஆவார் . அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , " ஒரு பக்திமானைவிடக் கல்விமானுக்குள்ள சிறப்பு உங்களில் கடைநிலையில் உள்ள ஒருவரைவிட ( இறைத்தூதராகிய ) எனக்குள்ள சிறப்பைப் போன்றதாகும் " என்று கூறிவிட்டு , அல்லாஹ்வும் அவனுடைய வானவர்களும் விண்ணிலும் மண்ணிலும் வசிப்போரும் பொந்துகளில் வாழும் எறும்புகள் , ( தண்ணீரில் வாழும் ) மீன்கள் உட்பட யாவுமே மக்களுக்கு நல்லதைக் கற்பிப்பவருக்காக அருள் வேண்டிப் பிரார்த்தனை செய்கின்றன " என்று கூறினார்கள் .
عَنْ وَهْبِ بْنِ مُنَبِّهٍ قَالَ مَجْلِسٌ يُتَنَازَعُ فِيهِ الْعِلْمُ أَحَبُّ إِلَيَّ مِنْ قَدْرِهِ صَلَاةً لَعَلَّ أَحَدَهُمْ يَسْمَعُ الْكَلِمَةَ فَيَنْتَفِعُ بِهَا سَنَةً أَوْ مَا بَقِيَ مِنْ عُمُرِهِ . 401
வஹ்ப் பின் முநப்பிஹ் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : கல்வி குறித்து விவாதிக்கப்படுகின்ற சபை - அந்த அளவிற்குத் தொழுவதைவிட - எனக்கு மிகவும் விருப்பமானது . ( விவாதிக்கப்படுகின்ற அச்சபையிலிருந்து ) அவர்களுள் ஒருவர் ஒரு வார்த்தையைச் செவியுறலாம் . அதன்மூலம் ஓராண்டுக்காலம் அவர் பயன்பெறலாம் . அல்லது அவர் தம் வாழ்நாளெல்லாம் பயன்பெறலாம் .
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : سَيَأْتِيكُمْ أَقْوَامٌ يَطْلُبُونَ الْعِلْمَ فَإِذَا رَأَيْتُمُوهُمْ فَقُولُوا لَهُمْ مَرْحَبًا مَرْحَبًا بِوَصِيَّةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاقْنُوهُمْ . 402
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூசஈத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது : உங்களிடம் மிக விரைவில் கல்வியைத் தேடுகின்ற சமுதாயத்தார்கள் வரவிருக்கின்றார்கள் . அவர்களை நீங்கள் கண்டால் , அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அறிவுரைப்படி உங்களுக்கு நற்செய்தி , நற்செய்தி என்று கூறுங்கள் . அவர்களுக்குக் ( கல்வியைக் ) கற்பியுங்கள் .
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ أُفْتِيَ بِغَيْرِ عِلْمٍ كَانَ إِثْمُهُ عَلَى مَنْ أَفْتَاهُ . 403
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது : ( மார்க்க ) ஆதாரம் ஏதுமின்றி மார்க்கத் தீர்ப்பு வழங்கப்பட்ட ஒருவர் ( அந்தத் தவறான தீர்ப்பின் படி செயல்பட்டால் ) அதற்குரிய பாவம் அந்தத் தீர்ப்பை வழங்கியவரையே சாரும் .
عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ مَنْ أَفْتَى بِفُتْيَا يُعَمَّى عَلَيْهَا فَإِثْمُهَا عَلَيْهِ . 404
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : யார் சிந்திக்காமல் மார்க்கத் தீர்ப்பு வழங்கினாரோ ( அந்தத் தவறான தீர்ப்பின்படி செயல்பட்டால் ) அதற்குரிய பாவம் அ( ந்தத் தீர்ப்பை வழங்கிய ) வரையே சாரும் .
عَنْ أَبِي سُهَيْلٍ قَالَ كَانَ عَلَى امْرَأَتِي اعْتِكَافُ ثَلَاثَةِ أَيَّامٍ فِي الْمَسْجِدِ الْحَرَامِ فَسَأَلْتُ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ وَعِنْدَهُ ابْنُ شِهَابٍ قَالَ قُلْتُ عَلَيْهَا صِيَامٌ قَالَ ابْنُ شِهَابٍ لَا يَكُونُ اعْتِكَافٌ إِلَّا بِصِيَامٍ فَقَالَ لَهُ عُمَرُ بْنُ عَبْدِ الْعَزِيزِ أَعَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا قَالَ فَعَنْ أَبِي بَكْرٍ قَالَ لَا قَالَ فَعَنْ عُمَرَ قَالَ لَا قَالَ فَعَنْ عُثْمَانَ قَالَ لَا قَالَ عُمَرُ مَا أَرَى عَلَيْهَا صِيَامًا . 405
அபூசுஹைல் நாஃபிஉ பின் மாலிக் அல்அஸ்பஹீ ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : என் மனைவி மஸ்ஜிதுல் ஹராமில் மூன்று நாள்கள் இஉத்திகாஃப் இருக்க வேண்டியது இருந்தது . எனவே நான் உமர் பின் அப்தில் அஸீஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் அது குறித்துக் கேட்டேன் . அப்போது ( அங்கு ) அவர்களுடன் இப்னு ஷிஹாப் ரஹிமஹுல்லாஹ் இருந்தார்கள் . “( அதாவது இஉத்திகாஃப் இருக்கும்போது ) அவர் நோன்பு நோற்க வேண்டுமா ?” என்று கேட்டேன் . அதற்கு இப்னு ஷிஹாப் ரஹிமஹுல்லாஹ் , “ நோன்பின்றி இஉத்திகாஃப் இல்லை ” என்றார்கள் . அப்போது அவரிடம் , உமர் பின் அப்தில் அஸீஸ் ரஹிமஹுல்லாஹ் , “ இதை நீர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாகச் சொல்கின்றீரா ?” என்று வினவ , அவர் “ இல்லை ” என்றார் . “ அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாகச் சொல்கின்றீரா ?” என்று வினவ , அவர் “ இல்லை ” என்றார் . “ உமர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாகச் சொல்கின்றீரா ?” என்று வினவ , அவர் “ இல்லை ” என்றார் . “ உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாகச் சொல்கின்றீரா ?” என்று வினவ , அவர் “ இல்லை ” என்றார் . அப்போது உமர் பின் அப்தில் அஸீஸ் ரஹிமஹுல்லாஹ் , “ அவர்மீது நோன்பு ( கடமை ) இல்லை என்றே நான் கருதுகிறேன் ” என்றார்கள் . நான் ( அங்கிருந்து ) புறப்பட்டுச் சென்றேன் . ( பின்னர் ) தாவூஸ் ரஹிமஹுல்லாஹ் , அதாஉ பின் அபீரபாஹ் ரஹிமஹுல்லாஹ் ஆகிய இருவரையும் பார்த்தேன் . ( இவ்விஷயம் குறித்து ) அவ்விருவரிடம் கேட்டேன் . அதற்கு தாவூஸ் ரஹிமஹுல்லாஹ் , “ இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்மீது நோன்பு - அவர் விருப்பப்பட்டு நோற்றாலே தவிர - இல்லை என்றே கூறிவந்தார்கள் ” என்றார் . ( அப்போது அங்கிருந்த ) அதாஉ ரஹிமஹுல்லாஹ் “ என் கருத்தும் அதுதான் ” என்றார் .
عَنْ مَيْمُونٍ أَبِي حَمْزَةَ قَالَ قَالَ لِي إِبْرَاهِيمُ يَا أَبَا حَمْزَةَ وَاللَّهِ لَقَدْ تَكَلَّمْتُ وَلَوْ وَجَدْتُ بُدًّا مَا تَكَلَّمْتُ وَإِنَّ زَمَانًا أَكُونُ فِيهِ فَقِيهَ أَهْلِ الْكُوفَةِ زَمَانُ سُوءٍ . 406
மைமூன் அபீஹம்ஸா ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : என்னிடம் இப்ராஹீம் அந்நகயீ ரஹிமஹுல்லாஹ் , “ அல்லாஹ்வின்மீதாணையாக நான் ( நிறையப் ) பேசிவிட்டேன் . அவசியம் ஏற்படவில்லையானால் நான் பேசியிருக்க மாட்டேன் . நான் கூஃபா வாழ் மக்களுக்கு மார்க்கத் தீர்ப்பு வழங்கும் அறிஞராக இருக்கும் காலம் கெட்ட காலமாகவே இருக்கும் ” என்று கூறினார்கள் .
عَنْ عُمَيْرِ بْنِ إِسْحَقَ قَالَ لَمَنْ أَدْرَكْتُ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكْثَرُ مِمَّنْ سَبَقَنِي مِنْهُمْ فَمَا رَأَيْتُ قَوْمًا أَيْسَرَ سِيرَةً وَلَا أَقَلَّ تَشْدِيدًا مِنْهُمْ . 407
உமர் பின் இஸ்ஹாக் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தோழர்களுள் நான் சந்தித்த பலர் என்னைவிட ( வயதில் ) முந்தியோராகவே இருந்தனர் . உடலமைப்பில் அவர்களைவிட மென்மையானவர்களையோ அவர்களைவிட மிகக் குறைந்த வன்மை உடையவர்களையோ நான் காணவில்லை .
عَنْ جَعْفَرِ بْنِ إِيَاسٍ قَالَ قُلْتُ لِسَعِيدِ بْنِ جُبَيْرٍ مَا لَكَ لَا تَقُولُ فِي الطَّلَاقِ شَيْئًا قَالَ مَا مِنْهُ شَيْءٌ إِلَّا قَدْ سَأَلْتُ عَنْهُ وَلَكِنِّي أَكْرَهُ أَنْ أُحِلَّ حَرَامًا أَوْ أُحَرِّمَ حَلَالًا . 408
ஜஅஃபர் பின் இயாஸ் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : நான் சஈத் பின் ஜுபுபைர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் , “ தாங்கள் ஏன் தலாக் குறித்து எதுவும் சொல்வதில்லை ?” என்று கேட்டேன் . அதற்கு அவர்கள் , அது குறித்து நான் கேட்டுத் தெரிந்துகொள்ளாதது எதுவும் இல்லை . எனினும் தடைசெய்யப்பட்டதை ஆகுமானதாகவோ ஆகுமானதைத் தடை செய்யப்பட்டதாகவோ ஆக்குவதை நான் விரும்பவில்லை ” என்று கூறினார்கள் .
عَنْ عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي لَيْلَى يَقُولُ لَقَدْ أَدْرَكْتُ فِي هَذَا الْمَسْجِدِ عِشْرِينَ وَمِائَةً مِنْ الْأَنْصَارِ وَمَا مِنْهُمْ مِنْ أَحَدٍ يُحَدِّثُ بِحَدِيثٍ إِلَّا وَدَّ أَنَّ أَخَاهُ كَفَاهُ الْحَدِيثَ وَلَا يُسْأَلُ عَنْ فُتْيَا إِلَّا وَدَّ أَنَّ أَخَاهُ كَفَاهُ الْفُتْيَا . 409
அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : நான் இந்த மஸ்ஜிதில் நூற்று இருபது அன்ஸாரித் தோழர்களைப் பார்த்துள்ளேன் . அவர்களுள் ஒருவர் ஹதீஸை அறிவித்தால் , அவர் முன் உள்ள சகோதரர் அந்த ஹதீஸ் தமக்குப் போதுமென எண்ணுமளவிற்கு அறிவிப்பார் . அவர்களுள் ஒருவரிடம் மார்க்கத் தீர்ப்பு ஏதேனும் கேட்டால் அவர் முன் உள்ள சகோதரர் அந்த மார்க்கத் தீர்ப்பு தமக்குப் போதுமென எண்ணுமளவிற்குச் சொல்வார் .
عَنْ ابْنِ الْمُنْكَدِرِ قَالَ إِنَّ الْعَالِمَ يَدْخُلُ فِيمَا بَيْنَ اللَّهِ وَبَيْنَ عِبَادِهِ فَلْيَطْلُبْ لِنَفْسِهِ الْمَخْرَجَ . 410
இப்னுல் முன்கதிர் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : திண்ணமாக ஓர் ( இஸ்லாமிய ) அறிஞர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய அடியார்களுக்கும் இடையே நுழை ( ந்து இறைவனை அடைவதற்கான வழியைக் காட்டு ) கிறார் . எனவே ( உங்களுள் ஒவ்வொருவரும் ) தமக்காக ( நரகத்திலிருந்து ) வெளியேறுகின்ற வழியைத் தேடிக்கொள்ளட்டும் .
عَنْ الصَّلْتُ بْنُ رَاشِدٍ قَالَ سَأَلْتُ طَاوُسًا عَنْ مَسْأَلَةٍ فَقَالَ لِي كَانَ هَذَا قُلْتُ نَعَمْ قَالَ آللَّهِ قُلْتُ آللَّهِ ثُمَّ قَالَ إِنَّ أَصْحَابَنَا أَخْبَرُونَا عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ أَنَّهُ قَالَ يَا أَيُّهَا النَّاسُ لَا تَعْجَلُوا بِالْبَلَاءِ قَبْلَ نُزُولِهِ فَيُذْهَبُ بِكُمْ هَا هُنَا وَهَا هُنَا فَإِنَّكُمْ إِنْ لَمْ تَعْجَلُوا بِالْبَلَاءِ قَبْلَ نُزُولِهِ لَمْ يَنْفَكَّ الْمُسْلِمُونَ أَنْ يَكُونَ فِيهِمْ مَنْ إِذَا سُئِلَ سَدَّدَ وَإِذَا قَالَ : وُفِّقَ . 411
ஸல்த் பின் ராஷித் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : நான் தாவூஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் ஒரு பிரச்சனை ( முஸ்அலா ) குறித்துக் கேட்டேன் . அதற்கு அவர்கள் , “ இது நடந்ததா ?” என்று கேட்டார்கள் . அதற்கு நான் , “ ஆம் !” என்றேன் . “ அல்லாஹ்வின் மீது ஆணையாகவா ?” என்று கேட்டார்கள் . அதற்கு நான் , “ அல்லாஹ்வின்மீது ஆணையாக !” என்றேன் . பிறகு அவர்கள் சொன்னார்கள் : முஆத் பின் ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடமிருந்து நம்முடைய தோழர்கள் நமக்கு அறிவித்தார்கள் . மக்களே ! சோதனை இறங்குவதற்கு முன்னரே , அது இறங்க வேண்டுமென அவசரப்படாதீர்கள் . அப்படிச் செய்தால் இங்குமங்கும் உங்களை அது கொண்டு சென்றுவிடும் . நீங்கள் சோதனை இறங்குவதற்குமுன் , அது இறங்க வேண்டுமென அவசரப்படவில்லையானால் , முஸ்லிம்களுள் யாரேனும் ஒருவர் வினாத் தொடுக்கப்பட்டால் அதைச் சீராகச் சொல் ( லி வழிகாட்டு ) வார் . அவர் ஏதேனும் கூறினால் , அதற்கு நல்வாய்ப்பு வழங்கப்படுவார் .
عَنْ أَبِي نَضْرَةَ قَالَ لَمَّا قَدِمَ أَبُو سَلَمَةَ الْبَصْرَةَ أَتَيْتُهُ أَنَا وَالْحَسَنُ فَقَالَ لِلْحَسَنِ أَنْتَ الْحَسَنُ مَا كَانَ أَحَدٌ بِالْبَصْرَةِ أَحَبَّ إِلَيَّ لِقَاءً مِنْكَ وَذَلِكَ أَنَّهُ بَلَغَنِي أَنَّكَ تُفْتِي بِرَأْيِكَ فَلَا تُفْتِ بِرَأْيِكَ إِلَّا أَنْ تَكُونَ سُنَّةٌ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْ كِتَابٌ مُنْزَلٌ . 412
அபூநள்ரா ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : அபூசலமா ரளியல்லாஹு அன்ஹு பஸ்ரா வந்திருந்தபோது , நானும் ஹஸன் பஸ்`ரீ ரஹிமஹுல்லாஹ் அவர்களும் அவர்களிடம் வந்தோம் . அப்போது அவர்கள் , ஹஸன் பஸ்`ரீ அவர்களிடம் , “ நீங்கள்தாம் ஹஸனா ? இந்த பஸ்ராவில் உம்மைச் சந்திப்பதைவிட எனக்குப் பிரியமானவர் யாருமில்லை . ஏனென்றால் தாங்கள் உங்களின் ( சொந்தக் ) கருத்தின்மூலம் மார்க்கத் தீர்ப்பு வழங்குவதாக எனக்குச் செய்தி கிடைத்தது . அவ்வாறு தாங்கள் உங்களின் ( சொந்தக் ) கருத்தின்மூலம் மார்க்கத் தீர்ப்பு வழங்காதீர் . ( மாறாக ) அ( ந்தத் தீர்ப்பான ) து அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து வந்துள்ள சுன்னத்தாக இருக்க வேண்டும் . அல்லது இறக்கியருளப்பட்ட வேதமாக இருக்க வேண்டும் ” என்று கூறினார்கள் .
عَنْ الْحَسَنِ أَنَّهُ دَخَلَ السُّوقَ فَسَاوَمَ رَجُلًا بِثَوْبٍ فَقَالَ هُوَ لَكَ بِكَذَا وَكَذَا وَاللَّهِ لَوْ كَانَ غَيْرَكَ مَا أَعْطَيْتُهُ فَقَالَ فَعَلْتُمُوهَا فَمَا رُئِيَ بَعْدَهَا مُشْتَرِيًا مِنْ السُّوقِ وَلَا بَائِعًا حَتَّى لَحِقَ بِاللَّهِ . 413
அப்துல் அஃலா ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : ஹஸன் அல்பஸ்`ரீ ரஹிமஹுல்லாஹ் ( ஒரு நாள் ) கடைவீதிக்குச் சென்று ஒருவரிடம் துணியை விலைபேசி வாங்கினார்கள் . அந்த வியாபாரி , “ இது உமக்காக இன்னின்ன விலை . அல்லாஹ்வின் மீதாணையாக . மற்றவராக இருந்திருந்தால் இதை நான் ( இன்ன விலைக்குக் ) கொடுத்திருக்க மாட்டேன் ; ( தங்களின் கல்வியின் காரணமாக ) இதை ( எந்தவிதப் பேரமும் பேசாமல் விற்க ) ச் செய்துவிட்டீர்கள் ” என்றார் . ( அதைக் கேட்ட இமாம் அவர்கள் ) அதன்பிறகு அல்லாஹ்வோடு சேர்கின்ற ( மரணம் ) வரை வாங்கவோ விற்கவோ கடைவீதிக்கு வந்ததே இல்லை .
عَنْ عُبَيْدِ بْنِ الْحَسَنِ قَالَ قَسَمَ مُصْعَبُ بْنُ الزُّبَيْرِ مَالًا فِي قُرَّاءِ أَهْلِ الْكُوفَةِ حِينَ دَخَلَ شَهْرُ رَمَضَانَ فَبَعَثَ إِلَى عَبْدِ الرَّحْمَنِ بْنِ مَعْقِلٍ بِأَلْفَيْ دِرْهَمٍ فَقَالَ لَهُ اسْتَعِنْ بِهَا فِي شَهْرِكَ هَذَا فَرَدَّهَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَعْقِلٍ وَقَالَ لَمْ نَقْرَأْ الْقُرْآنَ لِهَذَا . 414
உபைத் பின் ஹஸன் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : முஸ்அப் பின் அஸ்ஸுபைர் ரஹிமஹுல்லாஹ் , ரமளான் மாதம் தொடங்கும்போது கூஃபாவாழ் காரீகளுக்கு ( குர்ஆன் ஓதுவோர் ) பொருளைக் கொடுப்பதாகச் சத்தியம் செய்தார் . எனவே அவர் அப்துர் ரஹ்மான் பின் மஅகில் என்பாருக்கு ஈராயிரம் திர்ஹம்களை அனுப்பிவைத்து , “ உம்முடைய இந்த மாதத்தில் இதைக்கொண்டு உதவிபெற்றுக்கொள்வீராக ” என்று சொல்லியனுப்பினார் . ( ஆனால் ) அப்துர் ரஹ்மான் பின் மஅகில் , “ இந்த அன்பளிப்புக்காக நாங்கள் குர்ஆன் ஓதுவதில்லை ” என்று கூறி , அதைத் திருப்பி அனுப்பிவிட்டார் .
عَنْ عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ قَالَ لِعَبْدِ اللَّهِ بْنِ سَلَامٍ مَنْ أَرْبَابُ الْعِلْمِ قَالَ الَّذِينَ يَعْمَلُونَ بِمَا يَعْلَمُونَ قَالَ فَمَا يَنْفِي الْعِلْمَ مِنْ صُدُورِ الرِّجَالِ قَالَ الطَّمَعُ . 415
உபைதுல்லாஹ் பின் உமர் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : உமர் பின் அல்கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு , அப்துல்லாஹ் பின் ஸலாம் அவர்களிடம் , “ கல்வியாளர்கள் யார் ?” என்று கேட்டார்கள் . அதற்கு அவர்கள் , “ தாம் அறிந்ததைக்கொண்டு செயல்படுபவர்களே ஆவர் ” என்று கூறினார்கள் . “( கல்விக்கேற்ற செயல்பாடு இல்லையானால் ) ஆண்களின் உள்ளங்களிலிருந்து கல்வியை ( இல்ம் ) இல்லாமல் அழித்துவிடுமா ?” என்று மறுவினாத் தொடுத்தார்கள் . அதற்கு அவர்கள் , “( கல்வியைத் தேட வேண்டுமென்ற ) தேட்டம் ( அழிந்துவிடும் )” என்று விடையளித்தார்கள் .
عَنْ عَلِيٌّ تَعَلَّمُوا الْعِلْمَ فَإِذَا عَلِمْتُمُوهُ فَاكْظِمُوا عَلَيْهِ وَلَا تَشُوبُوهُ بِضَحِكٍ وَلَا بِلَعِبٍ فَتَمُجَّهُ الْقُلُوبُ . 416
அலீ ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : கல்வியைக் கற்றுக்கொள்ளுங்கள் . அதைக் கற்றுக்கொண்டால் அதனோடு அடக்கமாக இருங்கள் . அதனைச் சிரிப்போடும் விளையாட்டோடும் கலந்துவிடாதீர்கள் . ( அவ்வாறு செய்தால் கற்ற ) அந்த உள்ளம் அதனைத் துப்பிவிடும் .
عَنْ سُلَيْمِ بْنِ حَنْظَلَةَ قَالَ أَتَيْنَا أُبَيَّ بْنَ كَعْبٍ لِنَتَحَدَّثَ إِلَيْهِ فَلَمَّا قَامَ قُمْنَا وَنَحْنُ نَمْشِي خَلْفَهُ فَرَهَقَنَا عُمَرُ فَتَبِعَهُ فَضَرَبَهُ عُمَرُ بِالدِّرَّةِ قَالَ فَاتَّقَاهُ بِذِرَاعَيْهِ فَقَالَ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ مَا نَصْنَعُ قَالَ أَوَ مَا تَرَى فِتْنَةً لِلْمَتْبُوعِ مَذَلَّةً لِلتَّابِعِ. 417
சுலைம் பின் ஹன்ழலா ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : உபை பின் கஅப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் பேசிக்கொண்டிருப்பதற்காக வந்தோம் . ( பேச்சு முடிந்து ) அவர் எழுந்தபோது நாங்களும் எழுந்து , அவருக்குப் பின்னால் நடந்துசென்றோம் . அதைக் கண்ட உமர் ரளியல்லாஹு அன்ஹு , அவரைப் பின்பற்றி வந்து அவரைச் சாட்டையால் அடித்தார்கள் . அவருக்குப் பின்னால் செல்வதை நீங்கள் தவிர்த்துக் கொள்ளுங்கள் ” என்று கூறினார்கள் . “ அமீருல் முஃமினீன் அவர்களே ! ( அப்படியானால் ) நாங்கள் என்ன செய்ய வேண்டும் ?” என்று வினவினார் . பின்பற்றிச் செல்பவருக்கு அது இழிவு என்றும் , பின்பற்றிச் செல்லப்படுபவருக்கு ஏதாவது குழப்பம் ஏற்படும் என்பதை நீர் கவனிக்க மாட்டீரா ?” என்று கேட்டார்கள் .
عَنْ إِبْرَاهِيمَ قَالَ : كَانُوا يَكْرَهُونَ أَنْ تُوطَأَ أَعْقَابُهُمْ . 418
இப்ராஹீம் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : ( அறிஞர்களாகிய ) அவர்கள் தமக்குப் பின்னால் காலடித் தடங்கள் மிதிக்கப்படுவதை ( மனிதர்கள் நடந்துவருவதை ) வெறுப்பவர்களாக இருந்தார்கள் .
عَنْ سُفْيَانُ عَنْ أُمَيٍّ قَالَ مَشَوْا خَلْفَ عَلِيٍّ فَقَالَ عَنِّي خَفْقَ نِعَالِكُمْ فَإِنَّهَا مُفْسِدَةٌ لِقُلُوبِ نَوْكَى الرِّجَالِ . 419
உமய்யு என்ற இப்னு ரபீஆ அல்முராதீ என்பாரிடமிருந்து சுஃப்யான் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்குப் பின்னால் ( மக்கள் சிலர் ) நடந்தார்கள் . அப்போது அவர்கள் , “ உங்களுடைய காலணி ஓசையை என்னைவிட்டு விலக்கிக் கொள்ளுங்கள் . ஏனென்றால் இ( வ்வாறு நீங்கள் நடந்துவருவ ) து அறிவிலிகளின் நெஞ்சங்களில் குழப்பத்தை ஏற்படுத்தும் ” என்று கூறினார்கள் .
عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ قَالَ عَلَّمْتُ نَاسًا مِنْ أَهْلِ الصُّفَّةِ الْكِتَابَ وَالْقُرْآنَ فَأَهْدَى إِلَيَّ رَجُلٌ مِنْهُمْ قَوْسًا فَقُلْتُ لَيْسَتْ بِمَالٍ وَأَرْمِي عَنْهَا فِي سَبِيلِ اللَّهِ عَزَّ وَجَلَّ لَآتِيَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَأَسْأَلَنَّهُ فَأَتَيْتُهُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ رَجُلٌ أَهْدَى إِلَيَّ قَوْسًا مِمَّنْ كُنْتُ أُعَلِّمُهُ الْكِتَابَ وَالْقُرْآنَ وَلَيْسَتْ بِمَالٍ وَأَرْمِي عَنْهَا فِي سَبِيلِ اللَّهِ قَالَ إِنْ كُنْتَ تُحِبُّ أَنْ تُطَوَّقَ طَوْقًا مِنْ نَارٍ فَاقْبَلْهَا . 420
உபாதா பின் அஸ்ஸாமித் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது : திண்ணைத் தோழர்களுக்கு எழுத்துப் பயிற்சியையும் குர்ஆனையும் கற்றுக்கொடுத்தேன் . ஆகவே அவர்களுள் ஒருவர் எனக்கொரு வில்லை அன்பளிப்பாகக் கொடுத்தார் . இது ( பணம் சார்ந்த ) பொருள் இல்லை . மேலும் நான் இதை அல்லாஹ்வின் பாதையில் எய்யப் பயன்படுத்துவேன் ; ( இருந்தாலும் ) நான் அல்லாஹ்வின் தூதரிடம் சென்று , ( இதற்கான விளக்கத்தைக் ) கேட்பேன் என்று நான் கூறிக்கொண்டேன் . எனவே நான் அவர்களிடம் வந்து , “ அல்லாஹ்வின் தூதரே ! எழுத்துப் பயிற்சியையும் குர்ஆனையும் கற்றுக்கொடுத்தவர்களுள் ஒருவர் , எனக்கொரு வில்லை அன்பளிப்பாகக் கொடுத்தார் . இது ( பணம் சார்ந்த ) பொருள் இல்லை . நான் இதை அல்லாஹ்வின் பாதையில் எய்ய ( ப் பயன்படுத்த ) லாமா ?” என்று கேட்டேன் . அதற்கவர்கள் , “ அதன் மூலம் ( உமக்கு ) நெருப்பு மாலை போடப்படுவது உமக்கு மகிழ்ச்சியளித்தால் , அதை நீர் ஏற்றுக்கொள்வீர் ” என்று கூறினார்கள் .
عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ قَالَ عَلَّمْتُ رَجُلًا الْقُرْآنَ فَأَهْدَى إِلَيَّ قَوْسًا فَذَكَرْتُ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ إِنْ أَخَذْتَهَا أَخَذْتَ قَوْسًا مِنْ نَارٍ فَرَدَدْتُهَا . 421
உபை பின் கஅப் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது : நான் ஒருவருக்குக் குர்ஆனைக் கற்றுக்கொடுத்தேன் . ஆகவே அவர் எனக்கொரு வில்லை அன்பளிப்பாகக் கொடுத்தார் . நான் அதை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கூறினேன் . அதற்கவர்கள் , “ அதை நீர் எடுத்துக்கொண்டால் நரகத்திலிருந்து ஒரு வில்லை எடுத்துக்கொண்டுவிட்டீர் ” என்று கூறினார்கள் . ஆகவே நான் அதைத் திருப்பிக்கொடுத்துவிட்டேன் .
عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ أَنَّهُ كَانَ يَجْمَعُ بَنِيهِ فَيَقُولُ يَا بَنِيَّ تَعَلَّمُوا فَإِنْ تَكُونُوا صِغَارَ قَوْمٍ فَعَسَى أَنْ تَكُونُوا كِبَارَ آخَرِينَ وَمَا أَقْبَحَ عَلَى شَيْخٍ يُسْأَلُ لَيْسَ عِنْدَهُ عِلْمٌ. 422
ஹிஷாம் பின் உர்வா ரஹிமஹுல்லாஹ் அறிவித்துள்ளதாவது : ( என் தந்தை ) உர்வா பின் அஸ்ஸுபைர் ரளியல்லாஹு அன்ஹு தம் பிள்ளைகளை ஒருங்கிணைத்து , “ என் அருமைப் பிள்ளைகளே ! கல்வியைக் கற்றுக்கொள்ளுங்கள் . நீங்கள் ( இப்போது ) மக்களுள் சிறுவர்களாக இருந்தாலும் ( எதிர்காலத்தில் ) பின்னோருக்குப் பெரியவர்களாக ஆகலாம் . கல்வியறிவில்லாத ஒரு முதியவரிடம் ( கல்வி குறித்துக் ) கேட்கப்படுவதைவிட மிக மோசமானது எதுவுமில்லை ” என்று கூறினார்கள் .
(ق) عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مِنْ الْأَنْبِيَاءِ نَبِيٌّ إِلَّا أُعْطِيَ مَا مِثْلهُ آمَنَ عَلَيْهِ الْبَشَرُ وَإِنَّمَا كَانَ الَّذِي أُوتِيتُ وَحْيًا أَوْحَاهُ اللَّهُ إِلَيَّ فَأَرْجُو أَنْ أَكُونَ أَكْثَرَهُمْ تَابِعًا يَوْمَ الْقِيَامَةِ . 423
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ஒவ்வோர் இறைத்தூதருக்கும் சில அற்புதங்கள் வழங்கப்பட்டே இருந்தன . அவற்றைக் காணும் மக்கள் நம்பித்தான் ஆகவேண்டிய நிலை இருந்தது . எனக்கு வழங்கப்பெற்ற அற்புதமெல்லாம் , அல்லாஹ் எனக்கு அருளிய வேத அறிவிப்பு ( வஹீ ) தான் . ஆகவே , நபிமார்களிலேயே மறுமை நாளில் , பின்பற்றுவோர் அதிகம் உள்ள நபியாக நான் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன் .
(ق) عَنْ أَنَسُ بْنُ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ اللَّهَ تَعَالَى تَابَعَ عَلَى رَسُولِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْوَحْيَ قَبْلَ وَفَاتِهِ حَتَّى تَوَفَّاهُ أَكْثَرَ مَا كَانَ الْوَحْيُ ثُمَّ تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدُ. 424
அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அல்லாஹ் , தன் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இறக்கும் வரையிலும் அவர்களுக்குத் தொடர்ந்து " வஹீ ` ( வேத அறிவிப்பை ) அருளினான் . அவர்கள் இறப்பதற்குச் சற்று முன்பு அருளப்பெற்ற வேத அறிவிப்பு ( மற்ற காலங்களில் அருளப்பெற்றதைவிட ) அதிகமாக இருந்தது . அதற்குப் பின்னரே , அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இறந்தார்கள் .
(ق) عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ مَكَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَكَّةَ ثَلَاثَ عَشْرَةَ وَتُوُفِّيَ وَهُوَ ابْنُ ثَلَاثٍ وَسِتِّينَ . 425
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ( நபியாக்கப்பட்ட பின் ) மக்காவில் பதின் மூன்றாண்டுகள் தங்கியிருந்தார்கள் . தம் அறுபத்து மூன்றாம் வயதில் இறப்பெய்தினார்கள் .
(خ) عَنْ عَائِشَةَ وَابْنِ عَبَّاسِ رَضِيَ اللَّهُ عَنْهُمْ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَبِثَ بِمَكَّةَ عَشْرَ سِنِينَ يُنْزَلُ عَلَيْهِ الْقُرْآنُ وَبِالْمَدِينَةِ عَشْرًا . 426
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களும் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் கூறியதாவது : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தம்மீது குர்ஆன் அருளப்பட்டுக்கொண்டிருந்த நிலையில் ( தம் பிறந்தகமான ) மக்காவில் பத்தாண்டுகள் தங்கி இருந்தார்கள் ; ( ஹிஜ்ரத்துக்குப் பின் ) மதீனாவில் பத்தாண்டுகள் இருந்தார்கள் .
عَنِ ابْنِ عَبَّاسٍ - رَضِيَ اللَّهُ عَنْهُمَا - ، فِي قَوْلِهِ - تَعَالَى - : إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ قَالَ : أُنْزِلَ الْقُرْآنُ جُمْلَةً وَاحِدَةً فِي لَيْلَةِ الْقَدْرِ إِلَى السَّمَاءِ الدُّنْيَا ، وَكَانَ بِمَوْقِعِ النُّجُومِ ، وَكَانَ اللَّهُ يُنَزِّلُهُ عَلَى رَسُولِ اللَّهِ - صَلَى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ - بَعْضَهُ فِي أَثَرِ بَعْضٍ ، قَالَ : وَقَالُوا : لَوْلَا نُزِّلَ عَلَيْهِ الْقُرْآنُ جُمْلَةً وَاحِدَةً كَذَلِكَ لِنُثَبِّتَ بِهِ فُؤَادَكَ وَرَتَّلْنَاهُ تَرْتِيلًا . 427
சஈத் பின் ஜுபைர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நிச்சயமாக , நாம் அதை ( குர்ஆனை ) கண்ணியமிக்க ( லைலத்துல் கத்ர் ) இரவில் இறக்கினோம் (97: 1) என்று அல்லாஹ் கூறுவது குறித்து இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள் : கண்ணியமிக்க ( லைலத்துல் கத்ர் ) இரவில் ஒரே மொத்தமாக உலக வானிற்கு அருளப்பட்டது . ( பின்னர் ) அது நட்சத்திரங்கள் விழுமிடத்தில் இருந்தது . அல்லாஹ் அதனைத் தன் தூதருக்கு ( அவ்வப்போது ) கொஞ்சம் கொஞ்சமாக இறக்கினான் . ( நபியே !) எவர்கள் ( உங்களை ) நிராகரிக்கிறார்களோ அவர்கள் , “ இந்த வேதம் முழுவதும் ஒரே தடவையில் இறக்கப்படவேண்டாமா ?`` என்று கூறுகின்றனர் . ( இதனை ) இவ்வாறு நாம் கொஞ்சம் கொஞ்சமாக இறக்கி ( வரிசை முறைப்படி ) ஒழுங்குபடுத்துவதெல்லாம் உங்கள் உள்ளத்தைத் திடப்படுத்துவதற்காகவே ! ( அல்ஃபுர்கான் : 32) என்ற வசனத்தை ஓதிக்காட்டினார்கள் .
(خ) عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ رُفَيْعٍ قَالَ دَخَلْتُ أَنَا وَشَدَّادُ بْنُ مَعْقِلٍ عَلَى ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا فَقَالَ لَهُ شَدَّادُ بْنُ مَعْقِلٍ أَتَرَكَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ شَيْءٍ قَالَ مَا تَرَكَ إِلَّا مَا بَيْنَ الدَّفَّتَيْنِ . 428
அப்துல் அஸீஸ் பின் ருஃபைஉ ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : நானும் ஷத்தாத் பின் மஅகில் ரஹிமஹுல்லாஹ் அவர்களும் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்றோம் . அப்போது இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ஷத்தாத் ரஹிமஹுல்லாஹ் , “ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ( உலகைப் பிரிந்தபோது , இந்தக் குர்ஆனில் இடம் பெறாத ) வேறு ( இறைவசனங்கள் ) எதையும் ( நம்மிடையே ) விட்டுச் சென்றார்களா ?`` என்று கேட்டார்கள் . இப்னு அப்பாஸ் ரஹிமஹுல்லாஹ் , “( இந்தக் குர்ஆனின் ) இரு அட்டைகளுக்கிடையேயுள்ள வசனங்களைத்தான் ( இறை வேதமாக ) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் விட்டுச்சென்றார்கள் `` என்று பதிலளித்தார்கள் . நாங்கள் அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடைய புதல்வரான முஹம்மது பின் ஹனஃபிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் சென்று , இது குறித்துக் கேட்டோம் . அதற்கு அவர்கள் “ இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு பதிலளித்தது போன்றே “( இந்தக் குர்ஆனின் ) இரண்டு அட்டைகளுக்கிடையேயுள்ள வசனங்களைத்தான் ( இறை வேதமாக ) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் விட்டுச் சென்றார்கள் `` என்று பதிலளித்தார்கள் .
(ق) عَنْ الْبَرَاءِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ آخِرُ سُورَةٍ نَزَلَتْ كَامِلَةً بَرَاءَةٌ وَآخِرُ سُورَةٍ نَزَلَتْ خَاتِمَةُ سُورَةِ النِّسَاءِ يَسْتَفْتُونَكَ قُلْ اللَّهُ يُفْتِيكُمْ فِي الْكَلَالَةِ . 429
பராஉ ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : முழுமையான வடிவில் அருளப்பெற்ற கடைசி அத்தியாயம் , " பராஅத் ` (" அத்தவ்பா ` என்னும் 9-ஆம்) அத்தியாயம் ஆகும் . கடைசியாக அருளப்பெற்ற அத்தியாயப் பகுதி " அந்நிஸா`வின் இறுதிப் பகுதியாகும் . அந்த வசனம் வருமாறு : ( நபியே !) மக்கள் உங்களிடம் " கலாலா ` பற்றித் தீர்ப்பு வழங்குமாறு கேட்கிறார்கள் . நீங்கள் கூறுங்கள் : அல்லாஹ் உங்களுக்கு " கலாலா ` பற்றி இவ்வாறு தீர்ப்பளிக்கின்றான் .... (4: 176)
(م) عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، قَالَ قَالَ لِيَ ابْنُ عَبَّاسٍ تَعْلَمُ وَقَالَ هَارُونُ تَدْرِي آخِرَ سُورَةٍ نَزَلَتْ مِنَ الْقُرْآنِ نَزَلَتْ جَمِيعًا قُلْتُ نَعَمْ إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ قَالَ صَدَقْتَ . 430
உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : என்னிடம் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு , “ குர்ஆனில் இறுதியாக அருளப்பெற்ற முழு அத்தியாயம் எதுவென உங்களுக்குத் தெரியுமா ?`` என்று கேட்டார்கள் . நான் , “ ஆம் ; " அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வந்துவிட்டால் ...` என்று தொடங்கும் (110ஆம்) அத்தியாயமே அது `` என்று பதிலளித்தேன் . அதற்கு அவர்கள் ,” உண்மைதான் `` என்றார்கள் .
عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ قَالَ دَخَلْتُ عَلَى عَائِشَةَ فَقَالَتْ هَلْ تَقْرَأُ سُورَةَ الْمَائِدَةِ قَالَ قُلْتُ نَعَمْ قَالَتْ فَإِنَّهَا آخِرُ سُورَةٍ نَزَلَتْ فَمَا وَجَدْتُمْ فِيهَا مِنْ حَلَالٍ فَاسْتَحِلُّوهُ وَمَا وَجَدْتُمْ فِيهَا مِنْ حَرَامٍ فَحَرِّمُوهُ وَسَأَلْتُهَا عَنْ خُلُقِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ الْقُرْآنُ . 431
ஜுபைர் பின் நுஃபைர் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : நான் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் சென்றேன் . அப்போது அவர்கள் , “ நீ அல்மாயிதா அத்தியாயத்தை ஓதுகிறாயா ?” என்று கேட்டார்கள் . “ ஆம் ” என்றேன் . “ அதுதான் கடைசியாக இறங்கிய அத்தியாயமாகும் . அதில் நீங்கள் ஆகுமானதெனக் கண்டதை ஆகுமாக்குங்கள் . தடைசெய்யப்பட்டதெனக் கண்டதைத் தடைசெய்துவிடுங்கள் ” என்று கூறினார்கள் . அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குணத்தைக் குறித்து நான் அவர்களிடம் கேட்டேன் . அதற்கு அவர்கள் , “ குர்ஆன் ( ஆக இருந்தது )” என்று கூறினார்கள் .
عَنْ عَائِشَةَ قَالَتْ : إِنَّ أَوَّلَ مَا نَزَلَ مِنَ الْقُرْآنِ اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ. 432
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறியதாவது : இக்ரஃ பிஸ்மி ரப்பிகல்லதீ கலக் ( பொருள் : - உம்மைப்-படைத்த உம் இறைவனின் பெயரால் ஓதுவீராக . - அல்அலக் ) என்று தொடங்கும் அத்தியாயமே முதன் முதலில் இறங்கியது .
عَنْ أَبِي رَجَاءٍ الْعُطَارِدِيِّ ، عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : " تَعَلَّمْنَا الْقُرْآنَ فِي هَذَا الْمَسْجِدِ يَعْنِي مَسْجِدَ الْبَصْرَةِ وَكُنَّا نَجْلِسُ حِلَقًا حِلَقًا وَكَأَنَّمَا أَنْظُرُ إِلَيْهِ بَيْنَ ثَوْبَيْنِ أَبْيَضَيْنِ وَعَنْهُ أَخَذْتُ هَذِهِ السُّورَةَ:اقْرَأْ بِاسْمِ رَبِّكِ الَّذِي خَلَقَ 433
அபூரஜா அல்உத்தாரிதீ ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : அபூமூஸா அல்அஷ்அரீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் நாங்கள் பஸ்ராவின் மஸ்ஜிதில் வைத்து குர்ஆனைக் கற்றோம் . நாங்கள் வட்ட வட்டமாக அமர்ந்துகொண்டிருந்தோம் . ( அவர்கள் உடுத்தியிருந்த ) இரண்டு வெண்ணிற ஆடைகளில் அவர்களை ( இப்போதும் ) காண்பதைப் போன்று உள்ளது . அவர்களிடமிருந்துதான் இக்ரஃ பிஸ்மி ரப்பிகல்லதீ கலக் ( பொருள் : - உம்மைப்-படைத்த உம் இறைவனின் பெயரால் ஓதுவீராக ) என்று தொடங்கும் அத்தியாயத்தைக் கற்றேன் . ( அப்போது ) “ முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அருளப்பெற்ற அத்தியாயங்களுள் இதுவே முதலாவது ஆகும் ” என்று கூறினார்கள் .
عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : آخِرُ مَا نَزَلَ مِنَ الْقُرْآنِ : لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِنْ أَنْفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِينَ رَءُوفٌ رَحِيمٌ . 434
உபை பின் கஅப் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : குர்ஆனில் கடைசியாக இறங்கியது இதுதான் : ( இறைநம்பிக்கை கொண்டோரே ! நம்முடைய ) ஒரு தூதர் நிச்சயமாக உங்களிடம் வந்திருக்கின்றார் ; அவர் உங்களிலுள்ளவர்தாம் . ( உங்களுக்கு யாதொரு துன்பம் ஏற்பட்டு ) நீங்கள் சிரமத்திற்குள்ளாகிவிட்டால் , அது அவருக்கு மிக்க வருத்தமாகவே இருக்கும் . ( அந்த அளவிற்கு உங்கள்மீது அன்புடையவர் .) மேலும் உங்களுடைய நன்மையையே பெரிதும் விரும்புகின்றவராகவும் , நம்பிக்கையாளர் ( களாகிய உங் ) கள்மீது மிக்க கருணையும் அன்பும் உடையவராகவும் இருக்கின்றார் . (9: 128)
(خ) عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ، قَالَ بَعَثَ إِلَىَّ أَبُو بَكْرٍ لِمَقْتَلِ أَهْلِ الْيَمَامَةِ وَعِنْدَهُ عُمَرُ فَقَالَ أَبُو بَكْرٍ إِنَّ عُمَرَ أَتَانِي فَقَالَ إِنَّ الْقَتْلَ قَدِ اسْتَحَرَّ يَوْمَ الْيَمَامَةِ بِقُرَّاءِ الْقُرْآنِ، وَإِنِّي أَخْشَى أَنْ يَسْتَحِرَّ الْقَتْلُ بِقُرَّاءِ الْقُرْآنِ فِي الْمَوَاطِنِ كُلِّهَا، فَيَذْهَبَ قُرْآنٌ كَثِيرٌ، وَإِنِّي أَرَى أَنْ تَأْمُرَ بِجَمْعِ الْقُرْآنِ. قُلْتُ كَيْفَ أَفْعَلُ شَيْئًا لَمْ يَفْعَلْهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ عُمَرُ هُوَ وَاللَّهِ خَيْرٌ. فَلَمْ يَزَلْ عُمَرُ يُرَاجِعُنِي فِي ذَلِكَ حَتَّى شَرَحَ اللَّهُ صَدْرِي لِلَّذِي شَرَحَ لَهُ صَدْرَ عُمَرَ، وَرَأَيْتُ فِي ذَلِكَ الَّذِي رَأَى عُمَرُ. 435
( வேத அறிவிப்பை எழுதியோருள் ஒருவரான ) ஸைத் பின் ஸாபித் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : யமாமா ( போரில் ) வீரர்கள் கொல்லப் பட்டபோது அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு ( என்னை அழைத்து வரும்படி ) ஆளனுப்பினார்கள் . ( நான் சென்றேன் .) அங்கே அவர்களுடன் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் இருந்தார்கள் . அப்போது அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள் : உமர் ரளியல்லாஹு அன்ஹு என்னிடம் வந்து , இந்த யமாமா போர் , குர்ஆன் அறிஞர்கள் பலரைப் பலிகொண்டு விட்டது . ( இறைமறுப்பாளர்களுடன் போர் நடக்கும் ) எல்லா இடங்களிலும் குர்ஆன் அறிஞர்கள் பலர் கொல்லப்பட்டு அதனால் குர்ஆனில் பெரும்பகுதி ( அந்த நெஞ்சங்களுடன் அழிந்து ) போய்விடுமோ என்று நான் அஞ்சுகின்றேன் . ஆகவே , ( கலீஃபாவான ) நீங்கள் குர்ஆனைத் திரட்டுமாறு ஆணையிட வேண்டுமென நான் கருதுகின்றேன் `` என்று கூறினார்கள் . அதற்கு நான் , “ அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் செய்யாத ஒன்றை நான் எப்படிச் செய்ய முடியும் ?`` என்று - உமர் அவர்களிடம் - கேட்டேன் . அதற்கு உமர் ரளியல்லாஹு அன்ஹு , “ அல்லாஹ்வின் மீதாணையாக ! இது நன்மை ( யான பணி ) தான் `` என்று கூறினார்கள் . இது விஷயமாக தொடர்ந்து உமர் ரளியல்லாஹு அன்ஹு என்னிடம் வலியுறுத்திக் கொண்டேயிருந்தார்கள் . முடிவில் , உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் மனத்தை அல்லாஹ் எதற்காக விரிவாக்கினானோ அதற்காக என் மனத்தையும் அவன் விரிவாக்கினான் ; இது விஷயத்தில் உமர் ரளியல்லாஹு அன்ஹு கருதியதையே நானும் ( உசிதமானதாகக் ) கண்டேன் . பிறகு அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு ( என்னிடம் ), “ நீங்கள் புத்திசாலியான இளைஞர் ; உங்களை நாங்கள் ( எந்த விதத்திலும் ) சந்தேகப்பட்டதில்லை . நீங்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்காக வஹீ ( வேத அறிவிப்பை ) எழுதக்கூடியவராக இருந்தீர்கள் . எனவே , ( தனித்தனிப் பிரதிகளில் பல்வேறு நபித்தோழர்களிடம் உள்ள ) குர்ஆன் வசனங்களைத் தேடி ( ஒரே பிரதியில் ) ஒன்றுதிரட்டுங்கள் `` என்று சொன்னார்கள் . அல்லாஹ்வின் மீதாணையாக ! மலைகளுள் ஒன்றை நகர்த்த வேண்டுமென என்னை அவர்கள் பணித்திருந்தாலும்கூட அது எனக்குப் பளுவாக இருந்திருக்காது . குர்ஆனை ஒன்று திரட்டும்படி எனக்கு அவர்கள் கட்டளையிட்டது அதைவிட எனக்குப் பளுவாக இருந்தது . நான் , “ அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் செய்யாத ஒன்றை நீங்கள் இருவரும் எப்படிச் செய்யப் போகிறீர்கள் ?`` என்று கேட்டேன் . அதற்கு அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு , “ அல்லாஹ்வின் மீதாணையாக ! இது நன்மை ( யான பணி ) தான் `` என்று சொன்னார்கள் . இதையே என்னிடம் அன்னார் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருந்தார்கள் . முடிவில் எதற்காக அபூபக்ர் , உமர் ரளியல்லாஹு அன்ஹுமா ஆகியோரின் மனத்தை அல்லாஹ் விரிவாக்கினானோ அதற்காக என் மனத்தையும் அல்லாஹ் விரிவாக்கினான் . அவர்கள் இருவரும் கருதியதையே நானும் ( உசிதமானதாகக் ) கருதினேன் . ஆகவே , நான் ( மக்களின் கரங்களிலிருந்த ) குர்ஆன் ( சுவடிகளைத் ) தேடினேன் . அகலமான பேரீச்சமட்டைகள் , துண்டுத் தோல்கள் , ஓடுகள் மற்றும் ( குர்ஆனை மனனம் செய்திருந்த ) மனிதர்களின் நெஞ்சங்கள் ஆகியவற்றிலிருந்து குர்ஆன் வசனங்களைத் திரட்டினேன் . அப்போது நான் அத்தவ்பா எனும் (9ஆம்) அத்தியாயத்தின் இறுதி வசனம் " குஸைமா ` ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் அல்லது " அபூகுஸைமா ` ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் இருக்கக் கண்டேன் . அதை நான் அதற்குரிய அத்தியாயத்தில் சேர்த்தேன் . “ உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கிறார் `` என்று தொடங்கும் (9:128ஆம்) வசனமே அந்த வசனமாகும் . ( என் வாயிலாகத் திரட்டித் தொகுக்கப்பெற்ற ) குர்ஆன் பிரதிகள் ( கலீஃபா ) அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் , அவர்களை அல்லாஹ் மரணிக்கச் செய்யும் வரை அவர்களது வாழ்நாள் முழுக்க இருந்து வந்தது . பிறகு ( கலீஃபா ) உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் அவர்களை அல்லாஹ் மரணிக்கச் செய்யும் வரை அவர்களது வாழ்நாள் முழுக்க இருந்து வந்தது . பிறகு ( நபிகளாரின் துணைவியாரான ) ஹஃப்ஸா பின்த் உமர் ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் இருந்துவந்தது .
(خ) عَنْ أَنَسَ بْنَ مَالِكٍ: أَنَّ حُذَيْفَةَ بْنَ الْيَمَانِ قَدِمَ عَلَى عُثْمَانَ وَكَانَ يُغَازِي أَهْلَ الشَّأْمِ فِي فَتْحِ إِرْمِينِيَةَ وَأَذْرَبِيجَانَ مَعَ أَهْلِ الْعِرَاقِ فَأَفْزَعَ حُذَيْفَةَ اخْتِلاَفُهُمْ فِي الْقِرَاءَةِ فَقَالَ حُذَيْفَةُ لِعُثْمَانَ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ أَدْرِكْ هَذِهِ الأُمَّةَ قَبْلَ أَنْ يَخْتَلِفُوا فِي الْكِتَابِ اخْتِلاَفَ الْيَهُودِ وَالنَّصَارَى فَأَرْسَلَ عُثْمَانُ إِلَى حَفْصَةَ أَنْ أَرْسِلِي إِلَيْنَا بِالصُّحُفِ نَنْسَخُهَا فِي الْمَصَاحِفِ ثُمَّ نَرُدُّهَا إِلَيْكِ فَأَرْسَلَتْ بِهَا حَفْصَةُ إِلَى عُثْمَانَ فَأَمَرَ زَيْدَ بْنَ ثَابِتٍ وَعَبْدَ اللَّهِ بْنَ الزُّبَيْرِ وَسَعِيدَ بْنَ الْعَاصِ وَعَبْدَ الرَّحْمَنِ بْنَ الْحَارِثِ بْنِ هِشَامٍ فَنَسَخُوهَا فِي الْمَصَاحِفِ وَقَالَ عُثْمَانُ لِلرَّهْطِ الْقُرَشِيِّينَ الثَّلاَثَةِ إِذَا اخْتَلَفْتُمْ أَنْتُمْ وَزَيْدُ بْنُ ثَابِتٍ فِي شَىْءٍ مِنَ الْقُرْآنِ فَاكْتُبُوهُ بِلِسَانِ قُرَيْشٍ فَإِنَّمَا نَزَلَ بِلِسَانِهِمْ فَفَعَلُوا حَتَّى إِذَا نَسَخُوا الصُّحُفَ فِي الْمَصَاحِفِ رَدَّ عُثْمَانُ الصُّحُفَ إِلَى حَفْصَةَ وَأَرْسَلَ إِلَى كُلِّ أُفُقٍ بِمُصْحَفٍ مِمَّا نَسَخُوا وَأَمَرَ بِمَا سِوَاهُ مِنَ الْقُرْآنِ فِي كُلِّ صَحِيفَةٍ أَوْ مُصْحَفٍ أَنْ يُحْرَقَ. 436
அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ஹுதைஃபா பின் யமான் ரளியல்லாஹு அன்ஹு உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ( அவர்களது ஆட்சிக் காலத்தின்போது மதீனாவிற்கு ) வருகை புரிந்தார்கள் . ( அப்போது ) உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு , அர்மீனியா , அஃதர் பைஜான் ஆகிய நாடுகளை இராக்கியருடன் சேர்ந்து வெற்றி கொள்வதற்கான போரில் கலந்து கொள்ளுமாறு சிரியாவாழ் மக்களுக்கு ஆணை பிறப்பித்திருந்தார்கள் . ஹுதைஃபா ரளியல்லாஹு அன்ஹு அவர்களை , ( இராக் , சிரியா நாட்டு ) முஸ்லிம்கள் குர்ஆனை ஓதும் முறையில் கருத்து வேறுபாடுகொண்டது அதிர்ச்சிக்குள்ளாக்கியது . ஆகவே , ஹுதைஃபா ரளியல்லாஹு அன்ஹு உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் , “ யூதர்களும் கிறிஸ்தவர்களும் ( தங்களுடைய வேதங்களில் ) கருத்து வேறுபாடுகொண்டது போல் இந்தச் சமுதாயமும் இந்த ( த் திருக் குர்ஆன் ) வேதத்தில் கருத்து வேறுபாடு கொள்வதற்கு முன்பே இவர்களைக் காப்பாற்றுங்கள் , இறைநம்பிக்கையாளர்களின் தலைவர் அவர்களே !`` என்று கூறினார்கள் . ஆகவே , உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு ( அன்னை ) ஹஃப்ஸா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் ஆளனுப்பி " தங்களிடமுள்ள குர்ஆன் பதிவை எங்களிடம் கொடுத்து அனுப்புங்கள் ! நாங்கள் அதனைப் பல பிரதிகள் படியெடுத்துவிட்டுத் திருப்பித் தந்து விடுகிறோம் `` என்று தெரிவித்தார்கள் . எனவே , ஹஃப்ஸா ரளியல்லாஹு அன்ஹா தம்மிடமிருந்த குர்ஆன் பதிவை உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கொடுத்தனுப்பினார்கள் . ஸைத் பின் ஸாபித் , அப்துல்லாஹ் பின் ஸுபைர் , சயீத் பின் ஆஸ் , அப்துர் ரஹ்மான் பின் ஹாரிஸ் பின் ஹிஷாம் ரளியல்லாஹு அன்ஹும் ஆகியோரிடம் அவற்றைப் பல பிரதிகளில் படியெடுக்கும்படி உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு உத்தரவிட்டார்கள் . மேலும் , உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு ( அந்த நால்வரில் ) குறைஷிக் குழுவினரான மூவரை நோக்கி , “ நீங்களும் ( அன்ஸாரியான ) ஸைத் பின் ஸாபித் அவர்களும் குர்ஆனில் ஏதேனும் ஒரு ( எழுத்திலக்கண ) விஷயத்தில் கருத்து வேறுபாடு கொண்டால் குறைஷியரின் ( வட்டார ) மொழிவழக்குப்படியே பதிவு செய்யுங்கள் . ஏனெனில் , குர்ஆன் குறைஷியரின் மொழிவழக்குப்படியே இறங்கிற்று `` என்று கூறினார்கள் . அந்த நால்வரும் அவ்வாறே செயல்பட்டார்கள் . ஹஃப்ஸா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடமிருந்த அந்தக் குர்ஆன் பதிவை பல பிரதிகளில் படியெடுத்தார்கள் . பிறகு உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அந்தப் பிரதியை ஹஃப்ஸா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள் . பிறகு அவர்கள் படியெடுத்த பிரதிகளில் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு பகுதிக்கு அனுப்பிவைத்தார்கள் . இதுவல்லாமல் ( புழக்கத்திலிருந்த ) இதர பிரதிகளை , அல்லது ஏடுகளை எரித்து விடும்படி உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு உத்தரவிட்டார்கள் .
عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَعْرِفُ فَصْلَ السُّورَةِ حَتَّى تَنَزَّلَ عَلَيْهِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ . 437
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது : பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம் எனும் வசனம் அருளப்படுகின்ற வரை அத்தியாயங்களுக்கு இடையே பிரித்தல் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அறிந்திருக்கவில்லை .
(ق) عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَقْرَأَنِي جِبْرِيلُ عَلَى حَرْفٍ فَلَمْ أَزَلْ أَسْتَزِيدُهُ حَتَّى انْتَهَى إِلَى سَبْعَةِ أَحْرُفٍ . 438
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது : ஒரேயரு ( வட்டார ) மொழிவழக்குப் படி ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் ( குர்ஆனை ) எனக்கு ஓதக் கற்றுத்தந்தார்கள் . அதை இன்னும் பல ( வட்டார ) மொழிவழக்குகளின்படி எனக்கு ஓதக் கற்றுத்தருமாறு அவர்களிடம் நான் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டேயிருந்தேன் . ( நான் கேட்கக் கேட்க ) எனக்கு அவர்கள் அதிகப்படுத்திக் கொண்டே வந்து இறுதியில் ஏழு ( வட்டார ) மொழி வழக்குகள் அளவிற்கு வந்து நின்றது .
(ق ) عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ سَمِعْتُ هِشَامَ بْنَ حَكِيمِ بْنِ حِزَامٍ يَقْرَأُ سُورَةَ الْفُرْقَانِ عَلَى غَيْرِ مَا أَقْرَؤُهَا وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقْرَأَنِيهَا وَكِدْتُ أَنْ أَعْجَلَ عَلَيْهِ ثُمَّ أَمْهَلْتُهُ حَتَّى انْصَرَفَ ثُمَّ لَبَّبْتُهُ بِرِدَائِهِ فَجِئْتُ بِهِ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ إِنِّي سَمِعْتُ هَذَا يَقْرَأُ عَلَى غَيْرِ مَا أَقْرَأْتَنِيهَا فَقَالَ لِي أَرْسِلْهُ ثُمَّ قَالَ لَهُ اقْرَأْ فَقَرَأَ قَالَ هَكَذَا أُنْزِلَتْ ثُمَّ قَالَ لِي اقْرَأْ فَقَرَأْتُ فَقَالَ هَكَذَا أُنْزِلَتْ إِنَّ الْقُرْآنَ أُنْزِلَ عَلَى سَبْعَةِ أَحْرُفٍ فَاقْرَءُوا مِنْهُ مَا تَيَسَّ . 439
உமர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ஹிஷாம் பின் ஹகீம் பின் ஹிஸாம் ரளியல்லாஹு அன்ஹு ( திருக்குர்ஆனின் 25ஆம்) அத்தியாயம் அல்ஃபுர்கானை நான் ஓதுகின்ற முறைக்கு மாற்றமாக ஓதுவதைச் செவியுற்றேன் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஏற்கெனவே அந்த அத்தியாயத்தை எனக்கு ஓதிக் காட்டியிருந்தார்கள் . நான் , உடனே ஹிஷாம் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைக் கண்டிக்க முற்பட்டேன் . பிறகு ( சற்று யோசித்து ) அவர்கள் தொழுகையை முடிக்கும் வரை அவர்களுக்கு அவகாசம் அளித் ( துக் காத்திருந் ) தேன் . ( அவர்கள் தொழுது முடித்த ) பிறகு , அவர்களின் போர்வை ( போன்ற அங்கி ) யை அவர்களுடைய கழுத்தில் போட்டு இழுத்து , அல்லாஹ்வின் தூதரிடம் கொண்டு சென்று , "( நபியவர்களே !) நீங்கள் எனக்கு ஓதிக் கொடுத்ததற்கு மாற்றமாக இவர் ஓதுவதை நான் கேட்டேன் `` என்று கூறினேன் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ அவரை விட்டு விடுங்கள் `` என்று கூறினார்கள் . பிறகு ஹிஷாம் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை நோக்கி , “ நீங்கள் ஓதுங்கள் `` என்று கூறினார்கள் . அவர் ஓத , அதைக் கேட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ இப்படித்தான் ( இந்த அத்தியாயம் ) இறங்கிற்று `` என்று கூறினார்கள் . பிறகு என்னை நோக்கி , “ நீங்கள் ஓதுங்கள் `` என்று கூறினார்கள் . நான் ஓதினேன் . ( அதைக் கேட்ட ) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ இப்படித்தான் ( இந்த அத்தியாயம் ) இறங்கிற்று . நிச்சயமாக , குர்ஆன் , ( ஓதுவதற்கான ) ஏழு முறைகளின்படி இறக்கியருளப்பட்டிருக்கின்றது . ஆகவே , உங்களுக்கு இலேசானதை அதிலிருந்து ஓதிக் கொள்ளுங்கள் `` என்று கூறினார்கள் .
(م) عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ قَالَ كُنْتُ فِي الْمَسْجِدِ فَدَخَلَ رَجُلٌ يُصَلِّي فَقَرَأَ قِرَاءَةً أَنْكَرْتُهَا عَلَيْهِ ثُمَّ دَخَلَ آخَرُ فَقَرَأَ قِرَاءَةً سِوَى قَرَاءَةِ صَاحِبِهِ فَلَمَّا قَضَيْنَا الصَّلَاةَ دَخَلْنَا جَمِيعًا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ إِنَّ هَذَا قَرَأَ قِرَاءَةً أَنْكَرْتُهَا عَلَيْهِ وَدَخَلَ آخَرُ فَقَرَأَ سِوَى قِرَاءَةِ صَاحِبِهِ فَأَمَرَهُمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَرَآ فَحَسَّنَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَأْنَهُمَا فَسَقَطَ فِي نَفْسِي مِنْ التَّكْذِيبِ وَلَا إِذْ كُنْتُ فِي الْجَاهِلِيَّةِ فَلَمَّا رَأَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا قَدْ غَشِيَنِي ضَرَبَ فِي صَدْرِي فَفِضْتُ عَرَقًا وَكَأَنَّمَا أَنْظُرُ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ فَرَقًا فَقَالَ لِي يَا أُبَيُّ أُرْسِلَ إِلَيَّ أَنْ اقْرَأْ الْقُرْآنَ عَلَى حَرْفٍ فَرَدَدْتُ إِلَيْهِ أَنْ هَوِّنْ عَلَى أُمَّتِي فَرَدَّ إِلَيَّ الثَّانِيَةَ اقْرَأْهُ عَلَى حَرْفَيْنِ فَرَدَدْتُ إِلَيْهِ أَنْ هَوِّنْ عَلَى أُمَّتِي فَرَدَّ إِلَيَّ الثَّالِثَةَ اقْرَأْهُ عَلَى سَبْعَةِ أَحْرُفٍ فَلَكَ بِكُلِّ رَدَّةٍ رَدَدْتُكَهَا مَسْأَلَةٌ تَسْأَلُنِيهَا فَقُلْتُ اللَّهُمَّ اغْفِرْ لِأُمَّتِي اللَّهُمَّ اغْفِرْ لِأُمَّتِي وَأَخَّرْتُ الثَّالِثَةَ لِيَوْمٍ يَرْغَبُ إِلَيَّ الْخَلْقُ كُلُّهُمْ حَتَّى إِبْرَاهِيمُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ . 440
உபை பின் கஅப் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ( ஒரு முறை ) நான் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தேன் . அப்போது ஒரு மனிதர் ( பள்ளிவாசலுக்குள் ) வந்து தொழலானார் ; ( தொழுகையில் குர்ஆன் வசனங்களை ) ஒரு விதமாக ஓதினார் . அதை நான் அறிந்திருக்கவில்லை . பிறகு மற்றொருவர் வந்து ( அதே வசனங்களை ) முதலாமவர் ஓதியதற்கு மாற்றமாக ஓதித் தொழலானார் . தொழுகை முடிந்ததும் நாங்கள் அனைவரும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்றோம் . நான் " இவர் குர்ஆனை நான் அறிந்திராத ( ஓதல் ) முறையில் ஓதினார் . பின்னர் மற்றவர் வந்து முதலாமவர் ஓதியதற்கு மாறாக ( அதையே ) வேறு முறையில் ஓதினார் `` என்றேன் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவ்விருவரையும் ஓதிக் காட்டும்படி பணித்தார்கள் . அவ்விருவரும் ஓதினர் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவ்விருவரும் சரியாகவே ஓதினர் எனக் கூறினார்கள் . ( இதைக் கேட்டவுடன் ) என் உள்ளத்தில் நபியவர்கள் பொய்யுரைக்கிறார்கள் என்ற எண்ணம் விழுந்தது . அறியாமைக் காலத்தில்கூட இத்தகைய எண்ணம் எனக்கு ஏற்பட்டதில்லை . என்னை ஆட்கொண்டிருந்த ( அந்த எண்ணத் ) தை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கண்டபோது என் நெஞ்சில் ஓர் அடி அடித்தார்கள் . ( அடி விழுந்ததும் ) எனக்கு வியர்த்துக் கொட்டியது . அச்சத்தால் எனக்கு அல்லாஹ்வே காட்சியளிப்பதைப் போன்றிருந்தது . அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்னிடம் " உபை , குர்ஆனை ஓர் ஓதல் முறைப்படி ஓதுவீராக ` என எனக்கு ( இறைவனிடமிருந்து ) செய்தி அறிவிக்கப்பட்டது . உடனே நான் என் சமுதாயத்தாருக்கு இன்னும் எளிதாக்கும்படி ( இறைவனிடம் ) கோரினேன் . அப்போது " குர்ஆனை இரண்டு ஓதல் முறைப்படி ஓதுவீராக !` என எனக்கு இரண்டாவது முறையாக இறைவன் அறிவித்தான் . உடனே நான் இன்னும் என் சமுதாயத்தாருக்கு எளிதாக்கும்படி கோரினேன் . மூன்றாவது முறை குர்ஆனை ஏழு ஓதல் முறைகளின்படி ஓதுமாறு எனக்கு இறைவன் அறிவித்தான் . மேலும் , " நீர் கோரிய ( மூன்று கோரிக்கைகளில் ) ஒவ்வொரு கோரிக்கைக்கும் பகரமாக என்னிடம் உமக்கு ஓர் ( அங்கீகரிக்கப்பட்ட ) பிரார்த்தனை உண்டு ` என்றும் ( இறைவன் ) கூறினான் . எனவே நான் ‘ இறைவா ! என் சமுதாயத்தாரை மன்னிப்பாயாக ! இறைவா ! என் சமுதாயத்தாரின் குற்றங்குறைகளை மறைப்பாயாக !` என ( இரண்டு ) பிரார்த்தனை செய்தேன் . ( இவ்விரு பிரார்த்தனைகள் அல்லாமல் ) மூன்றாவது பிரார்த்தனையை நான் ஒரு நாளைக்காகத் தாமதப்படுத்தி ( பத்திரப்படுத்தி ) வைத்துள்ளேன் . அந்நாளில் படைப்பினங்கள் அனைத்தும் என்னிடம் ( பரிந்துரைக்கும்படி ) ஆவலுடன் வருவார்கள் ; இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் உட்பட `` எனக் கூறினார்கள் .
عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ قَالَ لَقِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جِبْرِيلَ فَقَالَ يَا جِبْرِيلُ إِنِّي بُعِثْتُ إِلَى أُمَّةٍ أُمِّيِّينَ مِنْهُمْ الْعَجُوزُ وَالشَّيْخُ الْكَبِيرُ وَالْغُلَامُ وَالْجَارِيَةُ وَالرَّجُلُ الَّذِي لَمْ يَقْرَأْ كِتَابًا قَطُّ قَالَ يَا مُحَمَّدُ إِنَّ الْقُرْآنَ أُنْزِلَ عَلَى سَبْعَةِ أَحْرُفٍ . 441
உபை பின் கஅப் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ( வானவத் தூதர் ) ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களைச் சந்தித்தபோது , " ஷிப்ரீலே ! நான் எழுத்தறிவற்ற சமுதாயத்தாருக்கு ( த் தூதராக ) அனுப்பப்பட்டுள்ளேன் . அவர்களில் இயலாதவர்களும் , முதிய வயதுடையவர்களும் , சிறுவர் சிறுமியரும் , எந்த ஒரு நூலையும் அறவே வாசிக்கத் தெரியாதவர்களும் உள்ளனர் ( இவர்களெல்லாம் எந்த முறையில் குர்ஆனை ஓதுவர் ?)" என்று கூறினார்கள் . அதற்கு ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் , " இந்தக் குர்ஆன் ( ஓதுவதற்கான ) ஏழு முறைகளில் அருளப்பட்டிருக்கின்றது ( அவற்றில் எளிதானதை அவர்கள் ஓதிக்கொள்ளட்டும் )" என்று கூறினார்கள் .
أَبُو جُهَيْمٍ أَنَّ رَجُلَيْنِ اخْتَلَفَا فِي آيَةٍ مِنْ الْقُرْآنِ فَقَالَ هَذَا تَلَقَّيْتُهَا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ الْآخَرُ تَلَقَّيْتُهَا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَا النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ الْقُرْآنُ يُقْرَأُ عَلَى سَبْعَةِ أَحْرُفٍ فَلَا يُمَارُوا فِي الْقُرْآنِ فَإِنَّ مِرَاءً فِي الْقُرْآنِ كُفْرٌ . 442
அபூஜுஹைம் பின் ஹாரிஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : திருக்குர்ஆனின் ஒரு வசனத்தில் இருவர் கருத்துவேறுபாடு கொண்டார்கள் . ( அவர்களுள் ) ஒருவர் , “ நான் இதை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து கற்றேன் ” என்றார் . ( அவ்விருவருள் ) மற்றவர் , “ நான் இதை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து கற்றேன் ” என்றார் . எனவே அவ்விருவரும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று ( விஷயத்தைச் சொல்லி விளக்கம் ) கேட்டார்கள் . அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , " இந்தக் குர்ஆன் ( ஓதுவதற்கான ) ஏழு முறைகளில் அருளப்பட்டிருக்கின்றது ( அவற்றில் எளிதானதை அவர்கள் ஓதிக்கொள்ளுங்கள் ); குர்ஆனில் ( சந்தேகம் கொண்டு ) தர்க்கம் செய்யாதீர்கள் . குர்ஆனில் ( சந்தேகம் கொண்டு ) தர்க்கம் செய்வது இறைமறுப்பாகும் " என்று கூறினார்கள் .
عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُمَا قَالَ قَرَأْتُ آيَةً وَقَرَأَ ابْنُ مَسْعُودٍ خِلَافَهَا فَأَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ أَلَمْ تُقْرِئْنِي آيَةَ كَذَا وَكَذَا قَالَ بَلَى فَقَالَ ابْنُ مَسْعُودٍ أَلَمْ تُقْرِئْنِيهَا كَذَا وَكَذَا فَقَالَ بَلَى كِلَاكُمَا مُحْسِنٌ مُجْمِلٌ قَالَ فَقُلْتُ لَهُ فَضَرَبَ صَدْرِي فَقَالَ يَا أُبَيُّ بْنَ كَعْبٍ إِنِّي أُقْرِئْتُ الْقُرْآنَ فَقِيلَ لِي عَلَى حَرْفٍ أَوْ عَلَى حَرْفَيْنِ قَالَ فَقَالَ الْمَلَكُ الَّذِي مَعِي عَلَى حَرْفَيْنِ فَقُلْتُ عَلَى حَرْفَيْنِ فَقَالَ عَلَى حَرْفَيْنِ أَوْ ثَلَاثَةٍ فَقَالَ الْمَلَكُ الَّذِي مَعِي عَلَى ثَلَاثَةٍ فَقُلْتُ عَلَى ثَلَاثَةٍ حَتَّى بَلَغَ سَبْعَةَ أَحْرُفٍ لَيْسَ مِنْهَا إِلَّا شَافٍ كَافٍ إِنْ قُلْتَ غَفُورًا رَحِيمًا أَوْ قُلْتَ سَمِيعًا عَلِيمًا أَوْ عَلِيمًا سَمِيعًا فَاللَّهُ كَذَلِكَ مَا لَمْ تَخْتِمْ آيَةَ عَذَابٍ بِرَحْمَةٍ أَوْ آيَةَ رَحْمَةٍ بِعَذَابٍ . 443
உபை பின் கஅப் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது:நான் ( குர்ஆனிலிருந்து ) ஒரு வசனத்தை ஓதினேன் . இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அதற்கு மாற்றமாக ( அந்த வசனத்தை ) ஓதினார் . எனவே நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து , “ இந்த வசனத்தை இன்னின்னவாறு நீங்கள் என்னிடம் ஓதவில்லையா ?” என்று கேட்டேன் . அதற்கு அவர்கள் , “ ஆம் !” என்றார்கள் . இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு “ இந்த வசனத்தை இன்னின்னவாறு நீங்கள் என்னிடம் ஓதவில்லையா ?” என்று கேட்டார்கள் . அதற்கு அவர்கள் , “ ஆம் ! நீங்கள் இருவரும் சரியாகவும் அழகாகவும் ஓதியுள்ளீர்கள் ” என்றார்கள் . பிறகு நான் அவர்களிடம் ( என் மனத்தில் ஏற்பட்ட சந்தேகத்தைக் ) கூறினேன் . எனவே அவர்கள் என் நெஞ்சத்தின்மீது ( ஓர் அடி ) அடித்தார்கள் . பின்பு அவர்கள் , “ உபை பின் கஅபே ! நிச்சயமாக என்னிடம் குர்ஆன் ஓதிக்காட்டப்பட்டது . அப்போது என்னிடம் , ஓர் ஓதல் முறையா , இரண்டு ஓதல் முறையா ?” என்று கேட்கப்பட்டது . என்னுடன் இருந்த வானவர் , “ இரண்டு ஓதல் முறை ” என்று கூறினார் . எனவே நான் , “ இரண்டு ஓதல் முறை ” என்று கூறினேன் . பிறகு “ இரண்டு ஓதல் முறையா , மூன்று ஓதல் முறையா ?” என்று கேட்டார் . என்னுடன் இருந்த வானவர் , “ மூன்று ஓதல் முறை ” என்று கூறினார் . எனவே நான் , “ மூன்று ஓதல் முறை ” என்று கூறினேன் . இவ்வாறே ( கேள்வியும் பதிலும் தொடர்ந்து ) ஏழு ஓதல் முறைகள் வரை அடைந்தது . அவற்றில் தெளிவான போதுமான ஓதல் முறைகள் இல்லாமலில்லை . ஃகஃபூரர் ரஹீமா ( மன்னிக்கக்கூடியவன் , அன்பாளன் ) என்று நீ சொன்னாலும் அல்லது சமீஅன் அலீமா ( செவியுறுபவன் , நன்கறிந்தவன் ) என்றோ அலீமன் சமீஆ ( நன்கறிந்தவன் , செவியுறுபவன் ) என்றோ நீ சொன்னாலும் அல்லாஹ் அவ்வாறே உள்ளான் . வேதனை குறித்துப் பேசுகின்ற வசனத்தில் நீ ரஹ்மத் எனும் அருளைக்கொண்டு முடிக்கக் கூடாது . ரஹ்மத் குறித்துப் பேசுகின்ற வசனத்தில் அதாப் எனும் வேதனையைக்கொண்டு முடிக்கக் கூடாது என்று கூறினார்கள் .
عَنْ أَبِي هُرَيْرَةَ ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : أُنْزِلَ الْقُرْآنُ عَلَى سَبْعَةِ أَحْرُفٍ ، وَالْمِرَاءُ فِي الْقُرْآنِ كُفْرٌ ثَلَاثًا ، مَا عَرَفْتُمْ مِنْهُ فَاعْمَلُوا بِهِ ، وَمَا جَهِلْتُمْ مِنْهُ فَرُدُّوهُ إِلَى عَالِمِهِ . 444
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : இந்தக் குர்ஆன் ( ஓதுவதற்கான ) ஏழு முறைகளில் அருளப்பட்டிருக்கின்றது ( அவற்றில் எளிதானதை அவர்கள் ஓதிக்கொள்ளுங்கள் ); குர்ஆனில் ( சந்தேகம் கொண்டு ) தர்க்கம் செய்வது இறைமறுப்பாகும் என்று - மும்முறை - கூறினார்கள் . அதில் நீங்கள் அறிந்ததைச் செயல்படுத்துங்கள் . அதில் நீங்கள் அறியாததை அறிந்தவரிடம் ( அவரது கவனத்திற்குத் ) திருப்புங்கள் .
(خ ) يُوسُفُ بْنُ مَاهَكٍ قَالَ إِنِّي عِنْدَ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ رَضِيَ اللَّهُ عَنْهَا إِذْ جَاءَهَا عِرَاقِيٌّ فَقَالَ أَيُّ الْكَفَنِ خَيْرٌ قَالَتْ وَيْحَكَ وَمَا يَضُرُّكَ قَالَ يَا أُمَّ الْمُؤْمِنِينَ أَرِينِي مُصْحَفَكِ قَالَتْ لِمَ قَالَ لَعَلِّي أُوَلِّفُ الْقُرْآنَ عَلَيْهِ فَإِنَّهُ يُقْرَأُ غَيْرَ مُؤَلَّفٍ قَالَتْ وَمَا يَضُرُّكَ أَيَّهُ قَرَأْتَ قَبْلُ إِنَّمَا نَزَلَ أَوَّلَ مَا نَزَلَ مِنْهُ سُورَةٌ مِنْ الْمُفَصَّلِ فِيهَا ذِكْرُ الْجَنَّةِ وَالنَّارِ حَتَّى إِذَا ثَابَ النَّاسُ إِلَى الْإِسْلَامِ نَزَلَ الْحَلَالُ وَالْحَرَامُ وَلَوْ نَزَلَ أَوَّلَ شَيْءٍ لَا تَشْرَبُوا الْخَمْرَ لَقَالُوا لَا نَدَعُ الْخَمْرَ أَبَدًا وَلَوْ نَزَلَ لَا تَزْنُوا لَقَالُوا لَا نَدَعُ الزِّنَا أَبَدًا لَقَدْ نَزَلَ بِمَكَّةَ عَلَى مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَإِنِّي لَجَارِيَةٌ أَلْعَبُ بَلْ السَّاعَةُ مَوْعِدُهُمْ وَالسَّاعَةُ أَدْهَى وَأَمَرُّ وَمَا نَزَلَتْ سُورَةُ الْبَقَرَةِ وَالنِّسَاءِ إِلَّا وَأَنَا عِنْدَهُ قَالَ فَأَخْرَجَتْ لَهُ الْمُصْحَفَ فَأَمْلَتْ عَلَيْهِ آيَ السُّوَرِ . 445
யூசுப் பின் மாஹக் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் நான் இருந்து கொண்டிருந்தேன் . அப்போது இராக் நாட்டைச் சேர்ந்த ஒருவர் வந்து , “( இறந்தவருக்கு அணிவிக்கப்படும் ) " கஃபன் ` துணியில் சிறந்தது எது ? ( வெள்ளை நிறமா ? மற்ற நிறமா ?)`` என்று கேட்டார் . ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா , “ அடப்பாவமே ! ( நீங்கள் இறந்ததற்குப் பின்னால் எந்தக் கஃபன் துணியால் அடக்கம் செய்யப்பட்டாலும் ) உங்களுக்கு என்ன கஷ்டம் வந்துவிடப்போகிறது ?`` என்று கேட்டார்கள் . அதற்கவர் , “ இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே ! தங்களிடமுள்ள குர்ஆன் பிரதியை எனக்குக் காட்டுங்கள் ?`` என்று கூறினார் . ( அன்னை ) அவர்கள் , “ ஏன் ?`` என்று கேட்டார்கள் . அதற்கவர் , " அதனை ( முன்மாதிரியாக ) க்கொண்டு நான் குர்ஆனை ( வரிசைக்கிரமமாக ) த் தொகுக்க வேண்டும் . ஏனெனில் , ( தற்சமயம் ) வரிசைப்படி தொகுக்கப்படாமல் தான் குர்ஆன் ஓதப்பட்டு வருகிறது `` என்று சொன்னார் . ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா , “( வரிசைப்படுத்தப்படாமல் உள்ள குர்ஆன் அத்தியாயங்களில் ) எதை நீங்கள் முதலில் ஓதினால் ( என்ன ? எதை அடுத்து ஓதினால் ) என்ன கஷ்டம் ( ஏற்பட்டு விடப்போகிறது )?`` என்று கேட்டார்கள் . " முஃபஸ்ஸல் ` ( எனும் ஓரளவு சிறிய ) அத்தியாயங்களில் உள்ள ஒன்றுதான் முதன் முதலில் அருளப்பட்டது ; அதில் சொர்க்கம் நரகம் பற்றிக் கூறப்பட்டது . அடுத்து மக்கள் இஸ்லாத்தை நோக்கித் திரும்பி ( அதன் நம்பிக்கைகள் மீது திருப்தியடையத் தொடங்கி ) யபோது ஹலால் ( அனுமதிக்கப்பட்டவை ) ஹராம் ( விலக்கப்பட்டவை ) குறித்த வசனங்கள் அருளப்பட்டன . எடுத்த எடுப்பிலேயே “ நீங்கள் மது அருந்தாதீர்கள் `` என்று வசனம் அருளப்பட்டிருந்தால் அவர்கள் , “ நாங்கள் ஒருபோதும் மதுவைக் கைவிடமாட்டோம் `` என்று கூறியிருப்பார்கள் . அல்லது , “ விபச்சாரம் செய்யாதீர்கள் `` என்று ( முதன் முதலில் ) வசனம் அருளப்பட்டிருக்குமானால் , நிச்சயம் அவர்கள் , “ நாங்கள் ஒருபோதும் விபச்சாரத்தைக் கைவிடமாட்டோம் `` என்று கூறியிருப்பார்கள் . ( ஆகவேதான் அல்லாஹ் , படிப்படியாகச் சட்ட விதிகளைக் கூறும் வசனங்களை அருளினான் .) நான் விளையாடும் சிறுமியாக இருந்தபோதுதான் மக்காவில் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு “( இவர்களின் கணக்கைத் தீர்ப்பதற்காக உண்மையில் ) வாக்களிக்கப்பட்ட நேரம் மறுமை நாளாகும் . மேலும் , அந்த நேரம் மிகவும் அதிர்ச்சியளிக்கக் கூடியதும் , கசப்பானதுமாகும் `` எனும் (54:46ஆம்) வசனம் அருளப்பட்டது . ( சட்டங்கள் சம்பந்தமான வசனங்கள் இடம் பெற்றுள்ள ) அல்பகரா (2ஆம்) அத்தியாயமும் , அந்நிஸா (4ஆம்) அத்தியாயமும் நான் ( மதீனாவில் ) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ( அவர்களுடைய மனைவியாக ) இருந்தபோதுதான் இறங்கின என்று கூறிவிட்டு , ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா தம்மிடமிருந்த அந்தக் குர்ஆன் பிரதியை ( இராக் நாட்டவரான ) அந்த மனிதருக்காகக் கொண்டுவந்து அவருக்காக ஒவ்வோர் அத்தியாயத்தின் வசனங்களையும் எழுதச் செய்தார்கள் .
(ق) عَنْ مَسْرُوقٍ قَالَ ذُكِرَ عَبْدُ اللَّهِ عِنْدَ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو فَقَالَ ذَاكَ رَجُلٌ لَا أَزَالُ أُحِبُّهُ بَعْدَ مَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ اسْتَقْرِئُوا الْقُرْآنَ مِنْ أَرْبَعَةٍ مِنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ فَبَدَأَ بِهِ وَسَالِمٍ مَوْلَى أَبِي حُذَيْفَةَ وَأُبَيِّ بْنِ كَعْبٍ وَمُعَاذِ بْنِ جَبَلٍ قَالَ لَا أَدْرِي بَدَأَ بِأُبَيٍّ أَوْ بِمُعَاذِ بْنِ جَبَلٍ . 446
மஸ்ரூக் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைப் பற்றிய பேச்சு வந்தது . அப்போது அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு , “ அவர் எத்தகைய மனிதரென்றால் , அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , " அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் , அபூ ஹுதைஃபாவின் ( முன்னாள் ) அடிமையான சாலிம் , உபை பின் கஅப் , முஆத் பின் ஜபல் ஆகிய நால்வரிடமிருந்தும் குர்ஆனை ஓதக் கற்றுக் கொள்ளுங்கள் ` என்று சொல்லி அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் அவர்களை முதலாவதாகக் குறிப்பிட்டதைக் கேட்ட பிறகு அவரை நிரந்தரமாக நான் நேசிக்கலானேன் `` என்று சொன்னார்கள் . அறிவிப்பாளர்களுள் ஒருவரான அம்ர் பின் முர்ரா ரஹிமஹுல்லாஹ் , “ அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் , உபை பின் கஅப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை முதலாவதாகச் சொன்னாரா , முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை முதலாவதாகச் சொன்னாரா ( இவர்கள் இருவருள் யாரை முதலில் குறிப்பிட்டார் ) என்று எனக்குத் தெரியாது `` எனக் கூறுகிறார்கள் .
(ق) عَنْ قَتَادَةَ عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ جَمَعَ الْقُرْآنَ عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْبَعَةٌ كُلُّهُمْ مِنْ الْأَنْصَارِ أُبَيٌّ وَمُعَاذُ بْنُ جَبَلٍ وَأَبُو زَيْدٍ وَزَيْدُ بْنُ ثَابِتٍ . 447
கதாதா ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்தில் நான்கு பேர் ( கொண்ட குழுவினர் ) குர்ஆனை ( மனனம் செய்து ) திரட்டினார்கள் . அவர்கள் அனைவருமே அன்ஸாரிகள் ஆவர் . 1. உபை பின் கஅப் . 2. முஆத் பின் ஜபல் . 3. அபூஸைத் . 4. ஸைத் பின் ஸாபித் ரளியல்லாஹு அன்ஹும் ஆகியோர்தாம் அவர்கள் `` என்று அனஸ் ரளியல்லாஹு அன்ஹு சொன்னார்கள் . நான் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் , “ அபூஸைத் என்பவர் யார் ?`` என்று கேட்டேன் . அதற்கு அவர்கள் , “ என் தந்தையின் சகோதரர்களுள் ஒருவர் `` என்று பதிலளித்தார்கள் .
(ق) عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأُبَيٍّ إِنَّ اللَّهَ أَمَرَنِي أَنْ أَقْرَأَ عَلَيْكَ لَمْ يَكُنْ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ قَالَ وَسَمَّانِي قَالَ نَعَمْ فَبَكَى. 448
அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , உபை பின் கஅப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடத்தில் அல்லாஹ் உங்களுக்கு , “ வேதம் அருளப்பட்டவர்களிலும் இணை வைப்பவர்களிலும் உள்ள இறை நிராகரிப்பாளர்கள் தெளிவான சான்று தங்களிடம் வரும் வரை தங்களுடைய நிராகரிப்பிலிருந்து விலகிக் கொள்வோராய் இருக்கவில்லை ...`` என்னும் ( திருக்குர்ஆனின் 98ஆம்) அத்தியாயத்தை ஓதிக் காட்டும்படி எனக்குக் கட்டளையிட்டான் `` என்று சொன்னார்கள் . அதற்கு உபை பின் கஅப் ரளியல்லாஹு அன்ஹு , “ என் பெயரைக் குறிப்பிட்டா ( அப்படிச் ) சொன்னான் ?`` என்று கேட்க , நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ ஆம் `` என்று பதிலளித்தார்கள் . அதைக் கேட்டு உபை பின் கஅப் அவர்கள் ( ஆனந்தம் மேலிட்டு ) அழுதார்கள் .
(خ) عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ كَانَ يَعْرِضُ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْقُرْآنَ كُلَّ عَامٍ مَرَّةً فَعَرَضَ عَلَيْهِ مَرَّتَيْنِ فِي الْعَامِ الَّذِي قُبِضَ فِيهِ وَكَانَ يَعْتَكِفُ كُلَّ عَامٍ عَشْرًا فَاعْتَكَفَ عِشْرِينَ فِي الْعَام الَّذِي قُبِضَ فِيهِ . 449
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ஒவ்வோர் ஆண்டும் ஒரு முறை ( வானவர் ஜிப்ரீல் அதுவரை அருளப்பெற்ற ) குர்ஆன் வசனங்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ( மொத்தமாக ) ஓதிக் காட்டுவது வழக்கம் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இறந்துபோன ஆண்டில் இரண்டு முறை அவர்களுக்கு ( ஜிப்ரீல் ) ஓதிக் காட்டினார்கள் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒவ்வோர் ஆண்டும் ( ரமளான் மாதத்தின் இறுதிப் ) பத்து நாட்கள் " இஃதிகாஃப் ` மேற்கொள்வது வழக்கம் . அவர்கள் இறந்த ஆண்டு , ( ரமளானில் ) இருபது நாட்கள் " இஃதிகாஃப் ` மேற்கொண்டார்கள் .
عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ أَيُّ الْقِرَاءَتَيْنِ كَانَتْ أَخِيرًا قِرَاءَةُ عَبْدِ اللَّهِ أَوْ قِرَاءَةُ زَيْدٍ ؟ قَالَ: قُلْنَا قِرَاءَةُ زَيْدٍ قَالَ : لَا إِلَّا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَعْرِضُ الْقُرْآنَ عَلَى جَبْرَائِيلَ كُلَّ عَامٍ مَرَّةً فَلَمَّا كَانَ فِي الْعَامِ الَّذِي قُبِضَ فِيهِ عَرَضَهُ عَلَيْهِ مَرَّتَيْنِ وَكَانَتْ آخِرَ الْقِرَاءَةِ قِرَاءَةُ عَبْدِ اللَّهِ . 450
முஜாஹித் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு , “ இரண்டு ஓதல்களில் எது கடைசியாக இருந்தது ? அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் அவர்களின் ஓதலா ? ஸைத் பின் ஸாபித் அவர்களின் ஓதலா ?” என்று கேட்டார்கள் . “ ஸைத் பின் ஸாபித் அவர்களின் ஓதல்தான் ” என்று நாங்கள் கூறினோம் . அதற்கு அவர்கள் , “ இல்லை . மாறாக , ஒவ்வோர் ஆண்டும் ஒரு முறை வானவர் ஜிப்ரீல் அவர்களிடம் ( அதுவரை அருளப்பெற்ற ) குர்ஆன் வசனங்களை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ( மொத்தமாக ) ஓதிக் காட்டுவது வழக்கம் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இறந்துபோன ஆண்டில் இரண்டு முறை அவர்கள் அவரிடம் ( ஜிப்ரீலிடம் ) ஓதிக் காட்டினார்கள் . மேலும் ஓதலில் கடைசியானது அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் அவர்களின் ஓதல்தான் ” என்று கூறினார்கள் .
عَنْ سَمُرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : عُرِضَ الْقُرْآنُ عَلَى رَسُولِ اللَّهِ - صَلَى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ - عَرَضَاتٍ فَيَقُولُونَ : إِنَّ قِرَاءَتَنَا هَذِهِ هِيَ الْعَرْضَةُ الْأَخِيرَةُ. 451
சமுரா பின் ஜுன்துப் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : குர்ஆன் வசனங்கள் பல தடவை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ( மொத்தமாக ) ஓதிக் காட்டப்பட்டது . எனவே மக்களாகிய அவர்கள் , ( முன்னிலையில் ஓதிக்காட்டப்படும்போது ) நிச்சயமாக நம்முடைய இந்த ஓதல் முறைதான் ( நபியவர்களுக்குக் ) கடைசியாக ஓதிக்காட்டப்பட்டது என்று கூறுவார்கள் .
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ : كَانَ جِبْرِيلُ يَعْرِضُ الْقُرْآنَ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلَّ عَامٍ مَرَّةً فِي رَمَضَانَ ، فَلَمَّا كَانَ الْعَامُ الَّذِي قُبِضَ فِيهِ عَرَضَهُ مَرَّتَيْنِ . 452
அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ஒவ்வோர் ஆண்டும் ரமளானில் ஒரு முறை ( அதுவரை அருளப்பெற்ற ) குர்ஆன் வசனங்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வானவர் ஜிப்ரீல் ( மொத்தமாக ) ஓதிக் காட்டுவது வழக்கம் . நபியவர்களின் உயிர் கைப்பற்றப்பட்ட ஆண்டில் அதை இரண்டு முறை ஓதிக்காட்டினார் .
(خ) عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ أَقْرَؤُنَا أُبَيٌّ وَأَقْضَانَا عَلِيٌّ وَإِنَّا لَنَدَعُ مِنْ قَوْلِ أُبَيٍّ وَذَاكَ أَنَّ أُبَيًّا يَقُولُ لَا أَدَعُ شَيْئًا سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ قَالَ اللَّهُ تَعَالَى مَا نَنْسَخْ مِنْ آيَةٍ أَوْ نُنْسِهَا . 453
உமர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : எங்களுள் ( குர்ஆனை ) நன்கு ஓதத் தெரிந்தவர் உபை பின் கஅப் ரளியல்லாஹு அன்ஹு ஆவார் . எங்களுள் நன்கு தீர்ப்பு வழங்கும் ஞானமுடையவர் அலீ ரளியல்லாஹு அன்ஹு ஆவார் . நாங்கள் உபை அவர்களின் சொற்களில் சிலவற்றை விட்டுவிடுவோம் . ஏனெனில் அவர் , “ அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து நான் செவிமடுத்த எதையும் கைவிடமாட்டேன் `` என்று சொல்வார் . ஆனால் , அல்லாஹ்வோ , “ எந்த ஒரு வசனத்தையாவது நாம் மாற்றிவிட்டால் , அல்லது அகற்றிவிட்டால் ( அதற்குப் பதிலாக ) அதனினும் சிறந்த , அல்லது அதைப் போன்ற வேறு வசனத்தை நாம் கொண்டு வருகிறோம் `` (2: 106) என்று கூறியுள்ளான் .
عَنْ زِرٍّ قَالَ قَالَ لِي أُبَيُّ بْنُ كَعْبٍ كَأَيِّنْ تَقْرَأُ سُورَةَ الْأَحْزَابِ أَوْ كَأَيِّنْ تَعُدُّهَا قَالَ قُلْتُ لَهُ ثَلَاثًا وَسَبْعِينَ آيَةً فَقَالَ قَطُّ لَقَدْ رَأَيْتُهَا وَإِنَّهَا لَتُعَادِلُ سُورَةَ الْبَقَرَةِ وَلَقَدْ قَرَأْنَا فِيهَا الشَّيْخُ وَالشَّيْخَةُ إِذَا زَنَيَا فَارْجُمُوهُمَا الْبَتَّةَ نَكَالًا مِنْ اللَّهِ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ . 454
ஸிர்ரு ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : உபை பின் கஅப் ரளியல்லாஹு அன்ஹு என்னிடம் , “ நீர் அல்அஹ்ஸாப் அத்தியாயத்தை ஓதுவதைப்போல் தெரிகிறதே ? அல்லது அதை எண்ணுவதைப் போல் தெரிகிறதே ? என்று கேட்டார்கள் . அதற்கு நான் , “( ஆம் ! அதில் ) எழுபத்து மூன்று வசனங்கள் உள்ளன ” என்று கூறினேன் . அதற்கு அவர்கள் , நிச்சயமாக ! நான் அதைப் பார்த்திருக்கிறேன் . திண்ணமாக அது அல்பகரா அத்தியாயத்திற்குச் சமமானது . அதில் நாங்கள் ( இவ்வாறு ) படித்திருக்கிறோம் : முதியவரும் மூதாட்டியும் விபச்சாரம் செய்துவிட்டால் கண்டிப்பாக அல்லாஹ்விடமிருந்துள்ள தண்டனையாக அவ்விருவரையும் ( மரணம் வரை ) கல்லால் அடியுங்கள் . அல்லாஹ் நன்கறிந்தோனும் நுட்பமானவனும் ஆவான் .
عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : مَا كَانَ : يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أُنْزِلَ بِالْمَدِينَةِ ، وَمَا كَانَ : يَا أَيُّهَا النَّاسُ فَي مَكَّةَ . 455
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : எதுவெல்லாம் யாஅய் யுஹல்லதீன ஆமனூ ( இறைநம்பிக்கைகொண்டோரே ) என்று தொடங்குகிறதோ அதுவெல்லாம் மதீனாவில் அருளப்பட்டது . எதுவெல்லாம் யாஅய்யுஹன்னாஸ் ( மக்களே ) என்று தொடங்குகிறதோ அதுவெல்லாம் மக்காவில் அருளப்பட்டது .
(ق) عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَثَلُ الْمُؤْمِنِ الَّذِي يَقْرَأُ الْقُرْآنَ كَمَثَلِ الْأُتْرُجَّةِ رِيحُهَا طَيِّبٌ وَطَعْمُهَا طَيِّبٌ وَمَثَلُ الْمُؤْمِنِ الَّذِي لَا يَقْرَأُ الْقُرْآنَ كَمَثَلِ التَّمْرَةِ لَا رِيحَ لَهَا وَطَعْمُهَا حُلْوٌ وَمَثَلُ الْمُنَافِقِ الَّذِي يَقْرَأُ الْقُرْآنَ مَثَلُ الرَّيْحَانَةِ رِيحُهَا طَيِّبٌ وَطَعْمُهَا مُرٌّ وَمَثَلُ الْمُنَافِقِ الَّذِي لَا يَقْرَأُ الْقُرْآنَ كَمَثَلِ الْحَنْظَلَةِ لَيْسَ لَهَا رِيحٌ وَطَعْمُهَا مُرٌّ. 456
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூமூஸா அல்அஷ்அரீ ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : குர்ஆனை ஓதும் இறைநம்பிக்கையாளரின் நிலையானது , நாரத்தைப் பழம் போன்றதாகும் . அதன் மணமும் நன்று ; சுவையும் நன்று . குர்ஆனை ஓதாத இறைநம்பிக்கையாளரின் நிலையானது பேரீச்சம் பழத்தைப் போன்றதாகும் . அதற்கு மணம் கிடையாது ; ( ஆனால் ,) அதன் சுவை இனிமையானது . குர்ஆனை ஓதுகின்ற நயவஞ்சகனின் நிலையானது , துளசிச் செடியின் நிலைக்கு ஒத்திருக்கிறது . அதன் மணம் நன்று . அதன் சுவையோ கசப்பானது . குர்ஆனை ஓதாத நயவஞ்சகனின் நிலையானது , குமட்டிக்காயின் நிலைக்கு ஒத்திருக்கிறது . அதற்கு மணமும் கிடையாது ; அதன் சுவையும் கசப்பானதாகும் .
(ق) عَنْ عبد الله بن عمر , عَنْ أَبِيهِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : لَا حَسَدَ إِلَّا فِي اثْنَتَيْنِ رَجُلٌ آتَاهُ اللَّهُ الْقُرْآنَ فَهُوَ يَقُومُ بِهِ آنَاءَ اللَّيْلِ وَآنَاءَ النَّهَارِ وَرَجُلٌ آتَاهُ اللَّهُ مَالًا فَهُوَ يُنْفِقُهُ آنَاءَ اللَّيْلِ وَآنَاءَ النَّهَارِ . 457
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : இரண்டில் தவிர வேறெதிலும் பொறாமை கூடாது . 1. ஒரு மனிதருக்கு அல்லாஹ் குர்ஆன் ஞானத்தை அருள , அவர் அதை அல்லும் பகலும் ஓதி ( அதன்படி செயல்பட்டு ) வருகிறார் . 2. இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்க , அவர் அதை அல்லும் பகலும் தானம் செய்கிறார் .
(م) عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُحِبُّ أَحَدُكُمْ إِذَا رَجَعَ إِلَى أَهْلِهِ أَنْ يَجِدَ فِيهِ ثَلَاثَ خَلِفَاتٍ عِظَامٍ سِمَانٍ ؟ قُلْنَا : نَعَمْ قَالَ : فَثَلَاثُ آيَاتٍ يَقْرَأُ بِهِنَّ أَحَدُكُمْ فِي صَلَاتِهِ خَيْرٌ لَهُ مِنْ ثَلَاثِ خَلِفَاتٍ عِظَامٍ سِمَانٍ . 458
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ உங்களுள் ஒருவர் தம் வீட்டாரிடம் செல்கையில் வீட்டில் மூன்று பெரிய கொழுத்த சினை ஒட்டகங்கள் காணப்படுவதை விரும்புவாரா ?`` என்று கேட்டார்கள் . நாங்கள் " ஆம் ` என்று பதிலளித்தோம் . அப்போது அவர்கள் , “ உங்களுள் ஒருவர் தமது தொழுகையில் மூன்று வசனங்களை ஓதுவது மூன்று பெரிய கொழுத்த சினை ஒட்டகங்களைவிடச் சிறந்ததாகும் `` என்று கூறினார்கள் .
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يُقَالُ لِصَاحِبِ الْقُرْآنِ اقْرَأْ وَارْتَقِ وَرَتِّلْ كَمَا كُنْتَ تُرَتِّلُ فِي الدُّنْيَا فَإِنَّ مَنْزِلَتَكَ عِنْدَ آخِرِ آيَةٍ تَقْرَأُ بِهَا . 459
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ( மறுமை நாளில் ) குர்ஆன் உடையவரிடம் ( மனனம் செய்தவரிடம் ) “ உலகில் அதை நீர் நிறுத்தி நிறுத்தித் தெளிவாக ஓதிக்கொண்டிருந்ததைப்போல் ஓதிக்கொண்டே முன்னேறிச் செல்வீராக . நீர் ஓதுகின்ற கடைசி வசனத்தின் இடத்தில் உம்முடைய தங்குமிடம் உள்ளது ” என்று சொல்லப்படும் .
عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ قَرَأَ حَرْفًا مِنْ كِتَابِ اللَّهِ فَلَهُ بِهِ حَسَنَةٌ وَالْحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا لَا أَقُولُ الم حَرْفٌ وَلَكِنْ أَلِفٌ حَرْفٌ وَلَامٌ حَرْفٌ وَمِيمٌ حَرْفٌ . 460
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அல்லாஹ்வின் வேதத்தில் ( குர்ஆனில் ) ஓர் எழுத்தை ஓதியவருக்கு ஒரு நன்மை உண்டு . ஒரு நன்மைக்கு அதைப் போன்ற பத்து மடங்கு நன்மை ( என்ற அடிப்படையில் அவருக்கு ) உண்டு . ` அலிஃப் லாம் மீம் ` என்பது ஓர் எழுத்தாகும் என்று நான் கூறமாட்டேன் . மாறாக , அலிஃப் என்பது ஓர் எழுத்தாகும் ; லாம் என்பது ஓர் எழுத்தாகும் ; மீம் என்பது ஓர் எழுத்தாகும் .
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ لِلَّهِ أَهْلِينَ مِنْ النَّاسِ قَالُوا يَا رَسُولَ اللَّهِ مَنْ هُمْ قَالَ هُمْ أَهْلُ الْقُرْآنِ أَهْلُ اللَّهِ وَخَاصَّتُهُ . 461
அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : “ திண்ணமாக அல்லாஹ்வுக்கு மக்களிலிருந்து குடும்பத்தினர் உள்ளனர் ” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் . அப்போது , “ அல்லாஹ்வின் தூதரே ! அவர்கள் யாவர் ?” என்று ( தோழர்கள் ) வினவினர் . “ அவர்கள்தாம் குர்ஆனை உடையவர்கள் ; அல்லாஹ்வின் குடும்பத்தினர் ; அவனோடு நெருங்கிய தொடர்புடையவர்கள் ” என்று விடையளித்தார்கள் .
عَنْ أَبِي أُمَامَةَ أَنَّهُ كَانَ يَقُولُ اقْرَءُوا الْقُرْآنَ وَلَا يَغُرَّنَّكُمْ هَذِهِ الْمَصَاحِفُ الْمُعَلَّقَةُ فَإِنَّ اللَّهَ لَنْ يُعَذِّبَ قَلْبًا وَعَى الْقُرْآنَ . 462
அபூஉமாமா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : குர்ஆனை ஓதுங்கள் . ( இங்கு ஆணியில் ) மாட்டப்பட்டுள்ள இந்தக் குர்ஆன் பிரதிகள் உங்களை ஏமாற்றிவிட வேண்டாம் . ஏனென்றால் திண்ணமாக அல்லாஹ் இந்தக் குர்ஆனைப் பாதுகாத்த உள்ளத்தை ஒருபோதும் வேதனைப்படுத்த மாட்டான் .
عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ مَا يَمْنَعُ أَحَدَكُمْ إِذَا رَجَعَ مِنْ سُوقِهِ أَوْ مِنْ حَاجَتِهِ فَاتَّكَأَ عَلَى فِرَاشِهِ أَنْ يَقْرَأَ ثَلَاثَ آيَاتٍ مِنْ الْقُرْآنِ . 463
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : உங்களுள் ஒருவர் கடைவீதியிலிருந்து அல்லது தம் தேவையிலிருந்து திரும்பி , ( உறங்குவதற்காகத் ) தம் விரிப்பில் சாய்ந்தால் , குர்ஆனிலிருந்து மூன்று வசனங்களை ( யேனும் ) ஓதுவதிலிருந்து தடுத்துவிட வேண்டாம் .
(ق) عَنْ عَائِشَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَثَلُ الَّذِي يَقْرَأُ الْقُرْآنَ وَهُوَ حَافِظٌ لَهُ مَعَ السَّفَرَةِ الْكِرَامِ الْبَرَرَةِ وَمَثَلُ الَّذِي يَقْرَأُ وَهُوَ يَتَعَاهَدُهُ وَهُوَ عَلَيْهِ شَدِيدٌ فَلَهُ أَجْرَانِ . 464
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிப்பதாவது : குர்ஆனை மனனமிட்டு ( ச் சிரமமின்றி ) ஓதிவருபவர் கண்ணியம் நிறைந்த தூதர்க ( ளான வானவர்க ) ளைப் போன்றவராவார் . குர்ஆனை ( மனனம் செய்திராவிட்டாலும் அதனைச் ) சிரமத்துடன் தொடர்ந்து ஓதி வருகின்றவருக்கு இரு மடங்கு நன்மைகள் உண்டு .
(ق) عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّمَا مَثَلُ صَاحِبِ الْقُرْآنِ كَمَثَلِ صَاحِبِ الْإِبِلِ الْمُعَقَّلَةِ إِنْ عَاهَدَ عَلَيْهَا أَمْسَكَهَا وَإِنْ أَطْلَقَهَا ذَهَبَتْ . 465
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : குர்ஆனை ( ப் பார்த்தோ மனப்பாடமாகவோ ) ஓதுகின்றவரின் நிலையெல்லாம் , கயிற்றால் கட்டிவைக்கப்பட்டுள்ள ஒட்டக உரிமையாளரின் நிலையை ஒத்திருக்கிறது . அதனை அவர் கண்காணித்து வந்தால் தம்மிடமே அதை அவர் தக்கவைத்துக் கொள்ளலாம் . அதை அவிழ்த்துவிட்டு விட்டாலோ அது ஓடிப்போய்விடும் .
(ق) عَنْ عَبْدِ اللَّهِ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِئْسَ مَا لِأَحَدِهِمْ أَنْ يَقُولَ نَسِيتُ آيَةَ كَيْتَ وَكَيْتَ بَلْ نُسِّيَ وَاسْتَذْكِرُوا الْقُرْآنَ فَإِنَّهُ أَشَدُّ تَفَصِّيًا مِنْ صُدُورِ الرِّجَالِ مِنْ النَّعَمِ . 466
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : “ இன்ன இன்ன குர்ஆன் வசனங்களை நான் மறந்துவிட்டேன் `` என்று ஒருவர் கூறுவதுதான் அவரின் வார்த்தைகளிலேயே மிகவும் மோசமான வார்த்தையாகும் . வேண்டுமானால் , " மறக்க வைக்கப்பட்டு விட்டது ` என்று அவர் கூறட்டும் ! குர்ஆனைத் தொடர்ந்து ( ஓதி ) நினைவுபடுத்தி வாருங்கள் . ஏனெனில் , ஒட்டகங்களைவிட வேகமாக மனிதர்களின் நெஞ்சங்களிலிருந்து குர்ஆன் தப்பக்கூடியதாகும் .
عَنْ السَّائِبُ بْنُ يَزِيدَ : أَنَّ شُرَيْحًا الْحَضْرَمِيَّ ذُكِرَ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَتَوَسَّدُ الْقُرْآنَ . 467
சாயிப் பின் யஸீத் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஜுரைஹ் அல்ஹள்ரமீ என்பாரைக் குறித்துக் கூறப்பட்டது . அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ குர்ஆனைத் தலையணையாக ஆக்கிக்கொள்ள வேண்டாம் ” என்று கூறினார்கள் .
(خ ) عَنْ عُثْمَانَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ . 468
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : குர்ஆனைத் தாமும் கற்று , பிறருக்கும் அதனைக் கற்பித்தவரே உங்களுள் சிறந்தவர் .
(خ) عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا جَمَعْتُ الْمُحْكَمَ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ لَهُ وَمَا الْمُحْكَمُ قَالَ الْمُفَصَّلُ . 469
சஈத் பின் ஜுபைர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : “ நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ( வாழ்ந்த ) காலத்திலேயே " அல் முஹ்கம் ` அத்தியாயங்களை மனனம் செய்திருந்தேன் `` என்று இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள் . நான் அவர்களிடம் , “ அல்முஹ்கம் என்றால் என்ன ?`` என்று கேட்டேன் . அவர்கள் “ அல்முஃபஸ்ஸல்`தான் (" அல்முஹ்கம் `)`` என்று ( பதில் ) சொன்னார்கள் .
(ق) شُعْبَةُ عَنْ مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ الْمُزَنِيِّ قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الْفَتْحِ عَلَى نَاقَةٍ لَهُ يَقْرَأُ سُورَةَ الْفَتْحِ أَوْ مِنْ سُورَةِ الْفَتْحِ قَالَ فَرَجَّعَ فِيهَا . 470
ஷுஅபா பின் அல்ஹஜ்ஜாஜ் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : முஆவியா பின் குர்ரா ரஹிமஹுல்லாஹ் , " அப்துல்லாஹ் பின் முகஃப்பல் அல்முஸனீ ரளியல்லாஹு அன்ஹு மக்கா வெற்றி நாளில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தமது ஒட்டகம் ஒன்றின்மீது இருந்தபடி " அல் ஃபத்ஹ் எனும் (48ஆம்) அத்தியாயத்தை ` அல்லது " அல்ஃபத்ஹ் அத்தியாயத்தில் ஒரு பகுதியை ` ஓதிக்கொண்டிருக்கக் கண்டேன் . அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் " தர்ஜீஉ ` எனும் ஓசை நயத்துடன் ( இழுத்து ) ஓதிக்கொண்டிருந்தார்கள் என்று எனக்கு அறிவித்தார்கள் `` எனக் கூறிவிட்டு , இப்னு முகஃப்பல் ரளியல்லாஹு அன்ஹு ஓதியதைப் போன்று அப்படியே ஓதிக் காட்டினார்கள் . பிறகு , “ உங்களைச் சுற்றி மக்கள் கூடி விடுவார்கள் எனும் அச்சம் எனக்கில்லாவிட்டால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஓதிய விதத்தை இப்னு முகஃப்பல் ரளியல்லாஹு அன்ஹு ஓசை நயத்துடன் ( இழுத்து ) ஓதிக் காட்டியதைப் போன்றே நானும் ஓதிக் காட்டியிருப்பேன் `` என்று சொன்னார்கள் . நான் , முஆவியா ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் , “ அவர்கள் ஓசை நயத்துடன் ஓதிய முறை எப்படி ?`` என்று கேட்க ("ஆ` எனும் இடத்தில் ) ‘ஆ...ஆ...ஆ...` என்று மும்முறை ( இழுத்து ) அவர்கள் ஓதினார்கள் `` எனச் சொன்னார்கள் .
(خ) عَنْ قَتَادَةَ قَالَ سُئِلَ أَنَسٌ كَيْفَ كَانَتْ قِرَاءَةُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ كَانَتْ مَدًّا ثُمَّ قَرَأَ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ يَمُدُّ بِبِسْمِ اللَّهِ وَيَمُدُّ بِالرَّحْمَنِ وَيَمُدُّ بِالرَّحِيمِ . 471
கத்தாதா ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : “ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஓதல் முறை எப்படியிருந்தது ?`` என அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வினவப்பட்டது . அதற்கவர்கள் , “ நீட்டி ஓதலே அவர்களின் வழக்கம் என்று கூறிவிட்டு , " பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் ` என்பதில் " பிஸ்மில்லா ... ஹ் ` என நீட்டுவார்கள் ; " அர்ரஹ்மா ... ன் ` என்றும் நீட்டுவார்கள் ; " அர்ரஹீ ... ம் ` என்றும் நீட்டுவார்கள் `` என்று பதிலளித்தார்கள் .
(ق) عَنْ أَبِي وَائِلٍ قَالَ : جَاءَ رَجُلٌ إِلَى ابْنِ مَسْعُودٍ فَقَالَ قَرَأْتُ الْمُفَصَّلَ اللَّيْلَةَ فِي رَكْعَةٍ فَقَالَ هَذًّا كَهَذِّ الشِّعْرِ؟! لَقَدْ عَرَفْتُ النَّظَائِرَ الَّتِي كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرُنُ بَيْنَهُنَّ فَذَكَرَ عِشْرِينَ سُورَةً مِنْ الْمُفَصَّلِ سُورَتَيْنِ فِي كُلِّ رَكْعَةٍ . 472
அபூவாயில் ஷகீக் பின் சலமா ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ஒரு மனிதர் வந்து , “ நான் நேற்றிரவு " அல்முஃபஸ்ஸல் ` அத்தியாயங்களை ஒரு ரக்அத்தில் ஓதி முடித்தேன் `` என்று கூறினார் . அதற்கு இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு , “ பாட்டுப் பாடுவதைப் போன்று அவசர அவசரமாக ஓதினீரா ? நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தமது தொழுகையில் ஒவ்வொரு ரக்அத்திலும் இரண்டிரண்டாக ஓதிவந்த ஒத்த ( பொருள் கொண்ட ) அத்தியாயங்களை நான் அறிந்துள்ளேன் `` என்று கூறிவிட்டு , அல்முஃபஸ்ஸல் அத்தியாயங்களில் இருபது அத்தியாயங்களைக் குறிப்பிட்டார்கள் .
عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ عَنْ بَعْضِ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَبُو عَامِرٍ قَالَ نَافِعٌ أُرَاهَا حَفْصَةَ أَنَّهَا سُئِلَتْ عَنْ قِرَاءَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ إِنَّكُمْ لَا تَسْتَطِيعُونَهَا قَالَ فَقِيلَ لَهَا أَخْبِرِينَا بِهَا قَالَ فَقَرَأَتْ قِرَاءَةً تَرَسَّلَتْ فِيهَا قَالَ أَبُو عَامِرٍ قَالَ نَافِعٌ فَحَكَى لَنَا ابْنُ أَبِي مُلَيْكَةَ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ ثُمَّ قَطَّعَ الرَّحْمَنِ الرَّحِيمِ ثُمَّ قَطَّعَ مَالِكِ يَوْمِ الدِّينِ . 473
இப்னு அபீமுலைகா ரஹிமஹுல்லாஹ் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துணைவியருள் ஒருவரிடமிருந்து அறிவித்துள்ளதாவது : நாஃபிஉ ரஹிமஹுல்லாஹ் கூறியதாக அபூஆமிர் ரஹிமஹுல்லாஹ் சொன்னார் : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ( தொழுகையில் குர்ஆன் ) ஓதிய விதம் குறித்து ( அவர்களின் துணைவியார் ) ஹஃப்ஸா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் வினவப்பட்டபோது , “ அ( வ்வாறு ஓதுவ ) து உங்களால் இயலாது ” எனக் கூறினார்கள் . “ அதை நீங்கள் எங்களுக்கு அறிவியுங்கள் ” என்று அவர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது . அப்போது அவர்கள் , நிறுத்தி நிதானமாக ஓதிக்காட்டினார்கள் . இப்னு அபீமுலைகா எங்களுக்குக் கூறியதாக நாஃபி கூறினார் என்று அபூஆமிர் சொன்னதாவது : அல்ம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் என்று ( ஓதி ) நிறுத்தினார் . அர்ரஹ்மான் னிர்ரஹீம் என்று ( ஓதி ) நிறுத்தினார் . பிறகு மாலிகி யவ்மித்தீன் என்று ஓதி ( நிறுத்தி ) னார் .
(ق) عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَا أَذِنَ اللَّهُ لِشَيْءٍ مَا أَذِنَ لِنَبِيٍّ حَسَنِ الصَّوْتِ بِالْقُرْآنِ يَجْهَرُ بِهِ . 474
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அல்லாஹ் , தன் தூதர் ஒருவர் இனிய குரலில் குர்ஆனை உரக்க ஓதும்போது அதைச் செவிகொடுத்துக் கேட்டதைப் போன்று வேறு எதையும் அவன் செவிகொடுத்துக் கேட்டதில்லை .
(ق) عَنْ أَبِي مُوسَى رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهُ يَا أَبَا مُوسَى لَقَدْ أُوتِيتَ مِزْمَارًا مِنْ مَزَامِيرِ آلِ دَاوُدَ . 475
அபூமூஸா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “( நான் இனிய குரலில் குர்ஆன் ஓதுவதைப் பாராட்டி ) “ அபூமூஸா ! ( இறைத்தூதர் ) தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த ( சங்கீதம் போன்ற ) இனிய குரல் உங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது `` என என்னிடம் கூறினார்கள் .
عَنْ الْبَرَاءِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زَيِّنُوا الْقُرْآنَ بِأَصْوَاتِكُمْ . 476
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அல்பராஉ பின் ஆஸிப் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : உங்களின் குரல்களால் குர்ஆனை அழகாக்குங்கள் .
عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ أَبْطَأْتُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةً بَعْدَ الْعِشَاءِ ثُمَّ جِئْتُ فَقَالَ أَيْنَ كُنْتِ قُلْتُ كُنْتُ أَسْتَمِعُ قِرَاءَةَ رَجُلٍ مِنْ أَصْحَابِكَ لَمْ أَسْمَعْ مِثْلَ قِرَاءَتِهِ وَصَوْتِهِ مِنْ أَحَدٍ قَالَتْ فَقَامَ وَقُمْتُ مَعَهُ حَتَّى اسْتَمَعَ لَهُ ثُمَّ الْتَفَتَ إِلَيَّ فَقَالَ هَذَا سَالِمٌ مَوْلَى أَبِي حُذَيْفَةَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي جَعَلَ فِي أُمَّتِي مِثْلَ هَذَا . 477
அப்துர் ரஹ்மான் பின் ஸாபித் அல்ஜுமஹீ ரளியல்லாஹு அன்ஹு , நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவி ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடமிருந்து அறிவித்துள்ளதாவது : நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் இஷாவுக்குப்பின் ஓர் இரவில் தாமதமாக வந்தேன் . இவ்வளவு நேரம் எங்கே போயிருந்தாய் ? என்று என்னிடம் நபியவர்கள் வினவினார்கள் . உங்களுடைய தோழர்களுள் ஒருவர் குர்ஆன் ஓதுவதை நான் கேட்டுக்கொண்டிருந்தேன் . அவருடைய ஓதலைப் போன்றும் குரலைப் போன்றும் யாரிடமிருந்தும் நான் ( இதுவரை ) செவியுற்றதில்லை என்று கூறினேன் . எனவே அவர்கள் எழுந்து சென்றார்கள் . நானும் அவர்களுடன் சென்றேன் . அவர் ஓதுவதைச் செவியுற்றார்கள் . பின்னர் என்னைத் திரும்பிப் பார்த்து , “ இவர் அபூஹுதைஃபாவின் முன்னாள் அடிமை சாலிம் ஆவார் . இவரைப் போன்றவரை என் சமுதாயத்தில் ஆக்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் ” என்று கூறினார்கள் .
عَنْ مُحَمَّدٍ قَالَ كَانُوا يَرَوْنَ هَذِهِ الْأَلْحَانَ فِي الْقُرْآنِ مُحْدَثَةً . 478
முஹம்மது பின் சீரீன் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : ( எமது காலத்தில் வாழ்ந்த அறிஞர்கள் ) குர்ஆனை அழகிய தொனியில் ஓதுவதைப் புதுமையான செயலாகக் கருதினார்கள் .
عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ أَبَا مُوسَى رَضِيَ اللَّهُ عَنْهُ كَانَ يَقْرَأُ ذَاتَ لَيْلَةٍ ، فَمَشَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْمَعُ ، فَلَمَّا أَصْبَحَ قِيَلَ لَهُ ، قَالَ : لَوْ عَلِمْتُ لَحَبَّرْتُ لَكَ تَحْبِيرًا وَلَشَوَّقْتُ لَكَ تَشْوِيقًا . 479
அனஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ஒரு நாள் இரவு அபூமூஸா ரளியல்லாஹு அன்ஹு ( திருக்குர்ஆனை ) ஓதிக்கொண்டிருந்தார் . அதைக் கேட்டுக்கொண்டே அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நடந்து சென்றார்கள் . ( நேற்றிரவு உம்முடைய ஓதலை நபியவர்கள் செவியுற்றார்கள் என்ற ) இச்செய்தி அவர்களிடம் காலையில் சொல்லப்பட்டது . “( என்னுடைய ஓதலை நபியவர்கள் செவியுற்றார்கள் என்பது ) எனக்குத் தெரிந்திருந்தால் நான் இன்னும் அழகிய தொனியில் இனிமையாக ஓதியிருப்பேனே ” என்று கூறினார்கள் .
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : إِنَّ لِكُلِّ شَيْءٍ حِلْيَةً ، وَحِلْيَةُ الْقُرْآنِ الصَّوْتُ الْحَسَنُ . 480
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ஒவ்வொரு பொருளுக்கும் ஓர் அழகு உண்டு . குர்ஆனின் அழகு அழகிய குரல்தான் .
عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ : سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّ النَّاسِ أَحْسَنُ قِرَاءَةً ؟ قَالَ : الَّذِي إِذَا سَمِعْتَهُ يَقْرَأُ رَأَيْتَ أَنَّهُ يَخْشَى اللَّهَ عَزَّ وَجَلَّ . 481
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் , “ அழகிய முறையில் ஓதுபவர் யார் ?” என்று கேட்கப்பட்டது . “ அவர் ஓதுவதை நீ செவியுற்றால் , அவர் வல்லமையும் மகத்துவமும் கொண்ட அல்லாஹ்வை அஞ்சு ( ம் நிலையில் ஓது ) கிறார் என நீ கருதுவாய் ” என்று பதிலுரைத்தார்கள் .
(ق) عَنْ جُنْدُبِ بْنِ عَبْدِ اللَّهِ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : اقْرَؤُوا الْقُرْآنَ مَا ائْتَلَفَتْ قُلُوبُكُمْ ، فَإِذَا اخْتَلَفْتُمْ فَقُومُوا عَنْهُ . 482
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக ஜுன்துப் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : உங்கள் உள்ளங்கள் ஒன்றுபட்டிருக்கும் வரை குர்ஆனை ஓதுங்கள் . ( அதன் கருத்தை அறிவதில் ) உங்கள் மத்தியில் கருத்து வேறுபாடு எழுந்தால் அ( ந்த இடத் ) தைவிட்டு எழுந்து ( சென்று ) விடுங்கள் .
(خ) عَنْ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ سَمِعْتُ رَجُلًا قَرَأَ آيَةً وَسَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ خِلَافَهَا فَجِئْتُ بِهِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرْتُهُ فَعَرَفْتُ فِي وَجْهِهِ الْكَرَاهِيَةَ وَقَالَ كِلَاكُمَا مُحْسِنٌ وَلَا تَخْتَلِفُوا فَإِنَّ مَنْ كَانَ قَبْلَكُمْ اخْتَلَفُوا فَهَلَكُوا . 483
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ஒரு மனிதர் திருக்குர்ஆனின் ஒரு வசனத்தை ஓத நான் கேட்டேன் . அவர் ஓதிய முறைக்கு மாற்றமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஓத நான் கேட்டிருந்தேன் . ஆகவே , அவரை அழைத்துக் கொண்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து விவரத்தைத் தெரிவித்தேன் . அப்போது அவர்களின் முகத்தில் அதிருப்தி ( யின் சாயல் ) படிந்திருப்பதை உணர்ந்தேன் . அவர்கள் , “ நீங்கள் இருவருமே சரியாகத்தான் ஓதியிருக்கிறீர்கள் . ( எல்லா விஷயங்களிலும் ) கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள் . ஏனெனில் , உங்களுக்கு முன்னிருந்தவர்கள் ( ஒவ்வொரு விஷயத்திலும் ) கருத்து வேறுபாடு கொண்டு அதனால்தான் அழிந்து போனார்கள் `` என்று சொன்னார்கள்
(ق) عَنْ عَبْدِ اللَّهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اقْرَأْ عَلَيَّ قَالَ قُلْتُ أَقْرَأُ عَلَيْكَ وَعَلَيْكَ أُنْزِلَ قَالَ إِنِّي أَشْتَهِي أَنْ أَسْمَعَهُ مِنْ غَيْرِي قَالَ فَقَرَأْتُ النِّسَاءَ حَتَّى إِذَا بَلَغْتُ فَكَيْفَ إِذَا جِئْنَا مِنْ كُلِّ أُمَّةٍ بِشَهِيدٍ وَجِئْنَا بِكَ عَلَى هَؤُلَاءِ شَهِيدًا قَالَ لِي كُفَّ أَوْ أَمْسِكْ فَرَأَيْتُ عَيْنَيْهِ تَذْرِفَانِ . 484
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : “ எனக்குக் குர்ஆனை ஓதிக் காட்டுக !`` என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ( என்னிடம் ) கூறினார்கள் . அதற்கு நான் , “ தங்கள் மீதே குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்க , தங்களுக்கே நான் ஓதிக் காட்டுவதா ?`` என்று கேட்டேன் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ பிறரிடமிருந்து அதைக் கேட்க நான் பெரிதும் ஆசைப்படுகிறேன் `` என்று சொன்னார்கள் . நான் " அந்நிஸா ` எனும் (4ஆம்) அத்தியாயத்தை ஓதினேன் . “ ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் ( அவர்களுடைய நபியாகிய ) சாட்சியை நாம் ( மறுமையில் ) கொண்டுவரும்போதும் , ( நபியே !) உங்களை இவர்களுக்கெதிரான சாட்சியாக நாம் கொண்டுவரும்போதும் ( இவர்களின் நிலை ) எப்படியிருக்கும் ?`` எனும் (4:41ஆம்) வசனத்தை நான் அடைந்தபோது " நிறுத்துங்கள் ` என்று சொன்னார்கள் அப்போது அவர்களின் கண்கள் கண்ணீரைச் சொரிவதை நான் கண்டேன் .
(ق ) عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اقْرَإِ الْقُرْآنَ فِي شَهْرٍ قُلْتُ إِنِّي أَجِدُ قُوَّةً حَتَّى قَالَ فَاقْرَأْهُ فِي سَبْعٍ وَلَا تَزِدْ عَلَى ذَلِكَ . 485
அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : என்னிடம் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ ஒவ்வொரு மாதமும் ( ஒரு முறை குர்ஆனை ) ஓதி நிறைவுசெய் !`` என்று கூறினார்கள் . அப்போது நான் , “( அதைவிடக் குறைந்த நாட்களில் குர்ஆனை முழுமையாக ஓதி முடிக்கும் ) சக்தி எனக்கு உள்ளது `` என்று கூறினேன் . அப்படியானால் , ஏழு நாட்களில் ( ஒரு முறை ) ஓதி நிறைவுசெய் ; அதைவிட ( ஓதுவதை ) அதிகமாக்கிவிடாதே `` என்று சொன்னார்கள் .
(م ) عَنْ عُمَرَ بْنَ الْخَطَّابِ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ نَامَ عَنْ حِزْبِهِ أَوْ عَنْ شَيْءٍ مِنْهُ فَقَرَأَهُ فِيمَا بَيْنَ صَلَاةِ الْفَجْرِ وَصَلَاةِ الظُّهْرِ كُتِبَ لَهُ كَأَنَّمَا قَرَأَهُ مِنْ اللَّيْلِ . 486
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக உமர் பின் அல்கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ஒருவர் இரவில் வாடிக்கையாக ஓதி வருபவற்றை , அல்லது அதில் ஒரு பகுதியை ஓதாமல் உறங்கிவிட்டால் அதை அவர் ஃபஜ்ர் தொழுகைக்கும் லுஹ்ர் தொழுகைக்கும் இடையே ஓதினால் இரவில் ஓதியதைப் போன்றே அவருக்கு ( நன்மை ) எழுதப்படுகிறது .
(م) عَنْ عَامِرِ بْنِ وَاثِلَةَ أَنَّ نَافِعَ بْنَ عَبْدِ الْحَارِثِ لَقِيَ عُمَرَ بِعُسْفَانَ وَكَانَ عُمَرُ يَسْتَعْمِلُهُ عَلَى مَكَّةَ فَقَالَ مَنْ اسْتَعْمَلْتَ عَلَى أَهْلِ الْوَادِي فَقَالَ ابْنَ أَبْزَى قَالَ وَمَنْ ابْنُ أَبْزَى قَالَ مَوْلًى مِنْ مَوَالِينَا قَالَ فَاسْتَخْلَفْتَ عَلَيْهِمْ مَوْلًى قَالَ إِنَّهُ قَارِئٌ لِكِتَابِ اللَّهِ عَزَّ وَجَلَّ وَإِنَّهُ عَالِمٌ بِالْفَرَائِضِ قَالَ عُمَرُ أَمَا إِنَّ نَبِيَّكُمْ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ قَالَ إِنَّ اللَّهَ يَرْفَعُ بِهَذَا الْكِتَابِ أَقْوَامًا وَيَضَعُ بِهِ آخَرِينَ . 487
ஆமிர் பின் வாஸிலா ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : நாஃபிஉ பின் அப்தில் ஹாரிஸ் ரளியல்லாஹு அன்ஹு , ( கலீஃபா ) உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை உஸ்ஃபான் எனுமிடத்தில் சந்தித்தார்கள் . ( இக்காலக் கட்டத்தில் ) உமர் ரளியல்லாஹு அன்ஹு நாஃபிஉ ரளியல்லாஹு அன்ஹு அவர்களை மக்காவின் ஆளுநராக நியமித்திருந்தார்கள் . உமர் ரளியல்லாஹு அன்ஹு ( நாஃபிஉ ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ) “ நீங்கள் இந்தப் பள்ளத்தாக்கு ( மக்கா ) வாசிகளுக்கு எவரை ஆளுநராக ஆக்கினீர்கள் ?`` என்று கேட்டார்கள் . அதற்கு நாஃபிஉ ரளியல்லாஹு அன்ஹு , “( அப்துர் ரஹ்மான் ) இப்னு அப்ஸா ரளியல்லாஹு அன்ஹு அவர்களை `` என்று பதிலளித்தார்கள் . உமர் ரளியல்லாஹு அன்ஹு , “ இப்னு அப்ஸா யார் ?`` எனக் கேட்டார்கள் . நாஃபிஉ ரளியல்லாஹு அன்ஹு , “ எங்களால் விடுதலை செய்யப்பட்ட எங்கள் ( முன்னாள் ) அடிமைகளுள் ஒருவர் `` எனப் பதிலளித்தார்கள் . அதற்கு உமர் ரளியல்லாஹு அன்ஹு , “ அவர்களுக்கு ஒரு முன்னாள் அடிமையையா ஆட்சித் தலைவராக்கினீர் ?`` என்று கேட்டார்கள் . அதற்கு நாஃபிஉ ரளியல்லாஹு அன்ஹு , “ அவர் (- இப்னு அப்ஸா ) இறை வேதத்தை அறிந்தவர் ; பாகப் பிரிவினைச் சட்டங்களை அறிந்தவர் `` என்று கூறினார்கள் . ( இதைக் கேட்ட ) உமர் ரளியல்லாஹு அன்ஹு “ அறிந்துகொள்க ! அல்லாஹ் இந்த வேதத்தின் மூலம் சிலரை உயர்த்துகிறான் ; வேறு சிலரைத் தாழ்த்துகிறான் `` என்று உங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள் . ( இப்னு அப்ஸா வேத அறிவால் மேன்மை பெற்றுவிட்டார் )`` என்று சொன்னார்கள் .
(ق) عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى أَنْ يُسَافَرَ بِالْقُرْآنِ إِلَى أَرْضِ الْعَدُوِّ . 488
இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் திருக்குர்ஆனுடன் ( திருக்குர்ஆன் பிரதியுடன் ) எதிரி நாட்டிற்குப் பயணம் செய்வதைத் தடை செய்தார்கள் .
عَنْ الْحَارِثِ عَنْ عَلِيٍّ قَالَ قِيلَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أُمَّتَكَ سَتُفْتَتَنُ مِنْ بَعْدِكَ قَالَ فَسَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْ سُئِلَ مَا الْمَخْرَجُ مِنْهَا قَالَ الْكِتَابُ الْعَزِيزُ الَّذِي لَا يَأْتِيهِ الْبَاطِلُ مِنْ بَيْنِ يَدَيْهِ وَلَا مِنْ خَلْفِهِ تَنْزِيلٌ مِنْ حَكِيمٍ حَمِيدٍ مَنْ ابْتَغَى الْهُدَى فِي غَيْرِهِ أَضَلَّهُ اللَّهُ وَمَنْ وَلِيَ هَذَا الْأَمْرَ مِنْ جَبَّارٍ فَحَكَمَ بِغَيْرِهِ قَصَمَهُ اللَّهُ هُوَ الذِّكْرُ الْحَكِيمُ وَالنُّورُ الْمُبِينُ وَالصِّرَاطُ الْمُسْتَقِيمُ فِيهِ خَبَرُ مَنْ قَبْلَكُمْ وَنَبَأُ مَا بَعْدَكُمْ وَحُكْمُ مَا بَيْنَكُمْ وَهُوَ الْفَصْلُ لَيْسَ بِالْهَزْلِ وَهُوَ الَّذِي سَمِعَتْهُ الْجِنُّ فَلَمْ تَتَنَاهَى أَنْ قَالُوا إِنَّا سَمِعْنَا قُرْآنًا عَجَبًا يَهْدِي إِلَى الرُّشْدِ وَلَا يَخْلَقُ عَنْ كَثْرَةِ الرَّدِّ وَلَا تَنْقَضِي عِبَرُهُ وَلَا تَفْنَى عَجَائِبُهُ . 489
அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடமிருந்து ஹாரிஸ் அல்அஃவர் கூறியதாவது : " அல்லாஹ்வின் தூதரே ! நிச்சயமாக உங்களுடைய சமுதாயம் உங்களுக்குப் பிறகு சோதனைக்கு உள்ளாக்கப்படுமா ? என்று கேட்கப்பட்டது . ( அதற்கு அவர்கள் ஆம் என்றதும் ) உடனே நான் , " அதிலிருந்து விடுபட வழி என்ன ?" என்று கேட்டேன் . அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ அல்லாஹ்வின் வேதம் ( குர்ஆனைக் கடைப்பிடிப்பதுதான் வழி ). ‘ இதற்கு முன்னும் சரி , இதற்குப் பின்னும் சரி உண்மைக்கு மாறான யாதொரு விஷயமும் ( திருக்குர்ஆனாகிய ) இதனை ( அணுகவே ) அணுகாது . மிக்க புகழும் ஞானமும் உடையவனால் ( இது ) இறக்கப்பட்டது .’ (41: 42) என்று அல்லாஹ் கூறுகின்றான் . அதை விட்டுவிட்டு மற்றவற்றில் யார் நல்வழியைத் தேடுகிறாரோ அவரை அல்லாஹ் வழிதவறச் செய்துவிடுவான் . அதை யார் அகம்பாவத்துடன் புறக்கணித்துச் சென்று , அது அல்லாத மற்றதைக் கொண்டு தீர்ப்பளித்தாரோ அவரை ( அவரது கழுத்தை ) அல்லாஹ் முறித்துவிடுவான் . அதுதான் ஞானமிக்க அறிவுரை ; தெளிவான ஒளி ; நேரிய வழி . அதில் உங்களுக்கு முந்தையவர்கள் பற்றிய வரலாறும் , உங்களுக்குப் பின்னால் நிகழவிருப்பது பற்றிய செய்தியும் , உங்கள் மத்தியில் நிகழும் விவகாரங்களுக்குத் தீர்ப்புகளும் உள்ளன . அதுதான் ( சத்தியத்தையும் அசத்தியத்தையும் பகுத்துக்காட்டும் ) தெளிவாகும் ; அது கேலிக்குரியதன்று . அதைச் செவியுற்ற ஜின்களைக்கூட , ` நாங்கள் ஆச்சரியமான குர்ஆனைச் செவியுற்றோம் . அது நேர்வழியைக் காட்டுகிறது ` (72:1-2) என்று இறுதியில் கூறவைத்தது . ஒன்றுக்குப் பலமுறை திரும்பத் திரும்ப அதைக் கையாண்டாலும் அது இற்றுப் போய்விடாது . அதன் படிப்பினைகள் முடிவுறா ; அதன் ஆச்சரியங்கள் முற்றுப் பெறா . பிறகு அலீ ரளியல்லாஹு அன்ஹு ஹாரிஸிடம் , " அஃவரே ! இந்த அறிவுரையைப் பெற்று உம்மிடம் ( மனனமாக ) வைத்துக்கொள் " என்றார்கள் .
عَنْ كَعْبٍ قَالَ عَلَيْكُمْ بِالْقُرْآنِ فَإِنَّهُ فَهْمُ الْعَقْلِ وَنُورُ الْحِكْمَةِ وَيَنَابِيعُ الْعِلْمِ وَأَحْدَثُ الْكُتُبِ بِالرَّحْمَنِ عَهْدًا وَقَالَ فِي التَّوْرَاةِ يَا مُحَمَّدُ إِنِّي مُنَزِّلٌ عَلَيْكَ تَوْرَاةً حَدِيثَةً تَفْتَحُ فِيهَا أَعْيُنًا عُمْيًا وَآذَانًا صُمًّا وَقُلُوبًا غُلْفًا . 490
கஅபுல் அஹ்பார் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : குர்ஆனைப் பற்றிக்கொள்ளுங்கள் . ஏனென்றால் அது அறிவின் விளக்கம் ; ஞானத்தின் ஒளி ; கல்வியின் ஊற்றுகள் . ரஹ்மானாகிய அல்லாஹ்விடமிருந்து வந்த வேதங்களில் புதியது . அல்லாஹ் தவ்ராத்தில் சொல்லியுள்ளான் : முஹம்மதே ! நிச்சயமாக நான் உமக்கு புதியதொரு தவ்ராத்தை இறக்கியருளப்போகின்றேன் . அது குருட்டுக் கண்களையும் செவிட்டுக் காதுகளையும் திரையிடப்பெற்ற உள்ளங்களையும் திறக்கும் .
عَنْ عَبْدِ اللَّهِ قَالَ إِنَّ هَذَا الْقُرْآنَ مَأْدُبَةُ اللَّهِ فَخُذُوا مِنْهُ مَا اسْتَطَعْتُمْ فَإِنِّي لَا أَعْلَمُ شَيْئًا أَصْفَرَ مِنْ خَيْرٍ مِنْ بَيْتٍ لَيْسَ فِيهِ مِنْ كِتَابِ اللَّهِ شَيْءٌ وَإِنَّ الْقَلْبَ الَّذِي لَيْسَ فِيهِ مِنْ كِتَابِ اللَّهِ شَيْءٌ خَرِبٌ كَخَرَابِ الْبَيْتِ الَّذِي لَا سَاكِنَ لَهُ . 491
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : திண்ணமாக இந்தக் குர்ஆன் அல்லாஹ்வுடைய விருந்தாகும் . எனவே அதிலிருந்து உங்களால் இயன்ற வரை எடுத்துக்கொள்ளுங்கள் . அல்லாஹ்வுடைய வேதத்திலிருந்து எந்த ஒன்றும் ( மனனமாக ) இல்லாத வீட்டைவிட நன்மை அறவே இல்லாத எதையும் நான் அறியேன் . அல்லாஹ்வுடைய வேதத்திலிருந்து எந்த ஒன்றும் ( மனனமாக ) இல்லாத உள்ளம் , குடியிருப்பவர் யாருமில்லாத பாழடைந்த வீட்டைப் போன்றதாகும் .
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ قَالَ : " مَنْ قَرَأَ الْقُرْآنَ فَقَدِ اسْتَدَرَجَ النُّبُوَّةَ بَيْنَ جَنْبَيْهِ غَيْرَ أَنَّهُ لَا يُوحَى إِلَيْهِ ، لَا يَنْبَغِي لِصَاحِبِ الْقُرْآنِ أَنْ يَحِدَّ مَعَ مَنْ حَدَّ ، وَلَا يَجْهَلَ مَعَ مَنْ جَهِلَ وَفِي جَوْفِهِ كَلَامُ اللَّهِ تَعَالَ . 492
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : யார் குர்ஆனை ஓதினாரோ அவர் நபித்துவத்தைத் தம் இரு புறங்களிலும் கொஞ்சம் கொஞ்சமாகப் பெற்றுக்கொண்டுவிட்டார் ( என்று பொருள் ). எனினும் அவருக்கு வஹீ அறிவிக்கப்படுவதில்லை . குர்ஆனை உடையவர் ( மனனம் செய்தவர் ) தம்முடன் கோபப்படுபவர் மீது கோபப்படக்கூடாது . தம்மோடு அறிவற்ற நிலையில் நடந்து கொள்பவரோடு அறிவற்ற நிலையில் நடந்துகொள்ளக்கூடாது . ( ஏனென்றால் ) அவருடைய உள்ளத்தில் உயர்ந்தோன் அல்லாஹ்வின் கலாம் ( பேச்சு ) உள்ளது .
عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ قَالَ : أَدْرَكْتُ النَّاسَ مُنْذُ سَبْعِينَ سَنَةٍ ، يَقُولُونَ : اللَّهُ الْخَالِقُ ، وَمَا سِوَاهُ مَخْلُوقٌ ، وَالْقُرْآنُ كَلَامُ اللَّهِ . 493
அம்ர் பின் தீனார் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : அல்லாஹ் படைப்பாளன் ; அவன் அல்லாதவை யாவும் படைக்கப்பட்டவை ; குர்ஆன் மகத்துவமும் வல்லமையும் மிக்க அல்லாஹ்வின் கலாம் ( பேச்சு ) என்று சொல்லக்கூடிய மக்களையே எழுபது ஆண்டுகளாக நான் கண்டுவருகிறேன் .
عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَضْلُ كَلَامِ اللَّهِ عَلَى كَلَامِ خَلْقِهِ كَفَضْلِ اللَّهِ عَلَى خَلْقِهِ . 494
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக ஷஹ்ர் பின் ஹவ்ஷப் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : மக்களுடைய பேச்சைவிட அல்லாஹ்வுடைய பேச்சின் சிறப்பு அல்லாஹ்வுடைய படைப்புகளைவிட அவனுடைய சிறப்பைப் போன்றது .
عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ مَنْ اسْتَمَعَ إِلَى آيَةٍ مِنْ كِتَابِ اللَّهِ كَانَتْ لَهُ نُورًا . 495
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : அல்லாஹ்வின் வேதத்திலிருந்து யார் ஒரு வசனத்தைச் செவியுற்றாரோ அது அவருக்கு ஒளியாக ஆகிவிடும் .
عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ قَالَ إِنَّ الَّذِي يَقْرَأُ الْقُرْآنَ لَهُ أَجْرٌ وَإِنَّ الَّذِي يَسْتَمِعُ لَهُ أَجْرَانِ . 496
காலித் பின் மஅதான் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : குர்ஆனை ஓதுபவருக்கு ஒரு கூலி உண்டு . அதைச் செவியுறுபவருக்கு இரண்டு கூலி உண்டு .
عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ كَانَتْ قِرَاءَةُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى قَدْرِ مَا يَسْمَعُهُ مَنْ فِي الْحُجْرَةِ وَهُوَ فِي الْبَيْتِ . 497
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய கிராஅத் அவர்கள் வீட்டிலிருந்து ஓதும்போது அறையில் உள்ளவர்கள் செவியுறும் அளவிற்கு ( ச் சத்தமாக ) அமைந்திருந்தது .
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّهُ قَالَ كَانَتْ قِرَاءَةُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِاللَّيْلِ يَرْفَعُ طَوْرًا وَيَخْفِضُ طَوْرًا . 498
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய கிராஅத் இரவில் சிலவேளை உயர்ந்தும் சிலவேளை தாழ்ந்தும் அமைந்திருந்தது .
عَنْ أَبِي قَتَادَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ لَيْلَةً فَإِذَا هُوَ بِأَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ يُصَلِّي يَخْفِضُ مِنْ صَوْتِهِ قَالَ وَمَرَّ بِعُمَرَ بْنِ الْخَطَّابِ وَهُوَ يُصَلِّي رَافِعًا صَوْتَهُ قَالَ فَلَمَّا اجْتَمَعَا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَا أَبَا بَكْرٍ مَرَرْتُ بِكَ وَأَنْتَ تُصَلِّي تَخْفِضُ صَوْتَكَ قَالَ قَدْ أَسْمَعْتُ مَنْ نَاجَيْتُ يَا رَسُولَ اللَّهِ قَالَ وَقَالَ لِعُمَرَ مَرَرْتُ بِكَ وَأَنْتَ تُصَلِّي رَافِعًا صَوْتَكَ قَالَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أُوقِظُ الْوَسْنَانَ وَأَطْرُدُ الشَّيْطَانَ زَادَ الْحَسَنُ فِي حَدِيثِهِ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا أَبَا بَكْرٍ ارْفَعْ مِنْ صَوْتِكَ شَيْئًا وَقَالَ لِعُمَرَ اخْفِضْ مِنْ صَوْتِكَ شَيْئًا . 499
அபூகத்தாதா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஓர் இரவு வெளியே சென்றார்கள் . அப்போது அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு தமது சத்தத்தைத் தாழ்த்தித் தொழுது கொண்டிருந்தார்கள் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உமர் பின் கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு அருகில் சென்றபோது அவர்கள் தமது சத்தத்தை உயர்த்தித் தொழுது கொண்டிருந்தார்கள் . அவ்விருவரும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒன்று கூடியதும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ அபூபக்ரே ! நான் உங்களுக்கு அருகில் வந்தபோது நீங்கள் சத்தத்தைத் தாழ்த்தித் தொழுது கொண்டிருந்தீர்கள் ” என்று சொன்னார்கள் . “ அல்லாஹ்வின் தூதரே ! நான் யாருடன் இரகசியமாக உரையாடினேனோ அ( ந்த இறை ) வனுக்குச் செவியுறச் செய்துவிட்டேன் ” என்று அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் , “ நான் உங்களுக்கு அருகில் வந்தேன் . நீங்கள் உங்கள் சத்தத்தை உயர்த்தித் தொழுது கொண்டிருந்தீர்கள் ” என்று கூறியதும் “ அல்லாஹ்வின் தூதரே ! அரைகுறையான தூக்கத்திலிருப்பவர்களை விழிக்கச் செய்கின்றேன் ; ஷைத்தானை விரட்டிவிடுகின்றேன் ” என்று உமர் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள் . “ அபூபக்ரே ! உங்கள் சத்தத்தைச் சற்று உயர்த்திக் கொள்ளுங்கள் ” என்றும் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் “ உங்கள் சத்தத்தைச் சற்றுத் தாழ்த்திக் கொள்ளுங்கள் ” என்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் என ஹஸன் ரஹிமஹுல்லாஹ் தமது அறிவிப்பில் கூடுதலாக அறிவித்துள்ளார் .
عَنْ أَبِي سَعِيدٍ قَالَ اعْتَكَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَسْجِدِ فَسَمِعَهُمْ يَجْهَرُونَ بِالْقِرَاءَةِ فَكَشَفَ السِّتْرَ وَقَالَ أَلَا إِنَّ كُلَّكُمْ مُنَاجٍ رَبَّهُ فَلَا يُؤْذِيَنَّ بَعْضُكُمْ بَعْضًا وَلَا يَرْفَعْ بَعْضُكُمْ عَلَى بَعْضٍ فِي الْقِرَاءَةِ أَوْ قَالَ فِي الصَّلَاةِ . 500
அபூசயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பள்ளியில் இஃதிகாஃப் இருந்தபோது மக்கள் சத்தமிட்டு ( குர்ஆன் ) ஓதுவதைச் செவியுற்றார்கள் . உடனே , அவர்கள் திரையை நீக்கி “ அறிந்து கொள்ளுங்கள் ! நீங்கள் அனைவரும் உங்களுடைய இறைவனிடம் உரையாடுகின்றீர்கள் . எனவே உங்களுள் ஒருவர் இன்னொருவருக்கு இடையூறு செய்ய வேண்டாம் . உங்களுள் ஒருவர் ( குர்ஆன் ) ஓதும்போது அல்லது ( அறிவிப்பாளருக்கு ஐயம் ஏற்பட்டுள்ளது ) தொழும்போது இன்னொருவரைவிட ( ச் சத்தத்தை ) உயர்த்த வேண்டாம் ” என்று கூறினார்கள் .
عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ الْجُهَنِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْجَاهِرُ بِالْقُرْآنِ كَالْجَاهِرِ بِالصَّدَقَةِ وَالْمُسِرُّ بِالْقُرْآنِ كَالْمُسِرِّ بِالصَّدَقَةِ . 501
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக உக்பா பின் ஆமிர் அல்ஜுஹனி ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : குர்ஆனைச் சத்தமிட்டு ஓதுபவர் தர்மத்தைப் பகிரங்கமாக வழங்கியவர் போலாவார் . குர்ஆனை இரகசியமாக ஓதுபவர் தர்மத்தை இரகசியமாக வழங்கியவர் போலாவார் .
عَنْ ابْنِ الْهَادِ قَالَ سَأَلَنِي نَافِعُ بْنُ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ فَقَالَ لِي فِي كَمْ تَقْرَأُ الْقُرْآنَ ؟ فَقُلْتُ : مَا أُحَزِّبُهُ فَقَالَ لِي نَافِعٌ لَا تَقُلْ مَا أُحَزِّبُهُ فَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ قَرَأْتُ جُزْءًا مِنْ الْقُرْآنِ قَالَ حَسِبْتُ أَنَّهُ ذَكَرَهُ عَنْ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ . 502
யஸீத் பின் அப்தில்லாஹ் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : நாஃபிஉ பின் ஜுபைர் பின் முத்இம் அவர்கள் என்னிடம் , “ நீங்கள் எத்தனை நாள்களில் குர்ஆனை ( முழுமையாக ) ஓதுவீர்கள் ” என்று கேட்டார்கள் . “ நான் குறிப்பிட்ட அளவை வழமையாக்கி ஓதுவதில்லை ” என்று பதிலளித்தேன் . அதற்கு அவர்கள் “ குறிப்பிட்ட ‘ அளவை ( ஹிஸ்பு ) வழமையாக்கி ஓதுவதில்லை ’ என்று கூறாதீர்கள் . ஏனென்றால் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நான் குர்ஆனில் ஒரு ( குறிப்பிட்ட ) பகுதியை ( ஜுஸ்வு ) ஓதினேன் என்று கூறியிருக்கிறார்கள் ” எனச் சொன்னார்கள் .
عَنْ أَنَسٍ قَالَ : وَجَدَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ ذَاتَ لَيْلَةٍ شَيْئًا ، فَلَمَّا أَصْبَحَ قِيلَ : يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَثَرَ الْوَجَعِ عَلَيْكَ يَتَبَيَّنُ ، قَالَ : إِنِّي إِنَّمَا عَلَى مَا تَرَوْنَ بِحَمْدِ اللَّهِ ، قَدْ قَرَأْتُ السَّبْعَ الطِّوَالَ . 503
அனஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒரு நாள் இரவு சிறிதளவு வலியை உணர்ந்தார்கள் . காலையில் அவர்களிடம் , “ அல்லாஹ்வின் தூதரே ! நிச்சயமாக உங்களுக்கு வலி மிகவும் வெளிப்படையானதுதான் ” என்று சொல்லப்பட்டது . அதற்கு அவர்கள் , “ அறிந்து கொள்க ! நீங்கள் பார்ப்பதைப் போன்று ( சாதாரணமானவன் ) தான் நான் . அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் . ( அந்த வலியோடு ) நேற்றிரவு நீண்ட நெடிய ஏழு அத்தியாயங்களை ஓதியிருக்கிறேன் ” என்றார்கள் .
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عُرِضَتْ عَلَيَّ أُجُورُ أُمَّتِي حَتَّى الْقَذَاةُ يُخْرِجُهَا الرَّجُلُ مِنْ الْمَسْجِدِ وَعُرِضَتْ عَلَيَّ ذُنُوبُ أُمَّتِي فَلَمْ أَرَ ذَنْبًا أَعْظَمَ مِنْ سُورَةٍ مِنْ الْقُرْآنِ أَوْ آيَةٍ أُوتِيَهَا رَجُلٌ ثُمَّ نَسِيَهَا . 504
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : என் சமுதாயத்தார் செய்த ( நல்லறங்களுக்கான ) நற்பலன்கள் எனக்கு எடுத்துக் காட்டப்பட்டன . எந்த அளவிற்கென்றால் ஒரு மனிதர் பள்ளிவாசலிலிருந்து அகற்றும் அசுத்தம்கூட ( அந்த நற்பலன்களின் பட்டியலில் இடம்பெற்றிருந்தன ). என் சமுதாயத்தாரின் பாவங்களும் எனக்கு எடுத்துக் காட்டப்பட்டன . ( அதில் ) குர்ஆனிலிருந்து ஓர் அத்தியாயம் அல்லது ஒரு வசனம் வழங்கப்பட்டு , பின்னர் அதை மறந்துவிட்ட மனிதர் புரிந்த பாவத்தைவிடப் பெரும் பாவம் எதையும் நான் காணவில்லை .
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ نَقْرَأُ الْقُرْآنَ وَفِينَا الْأَعْرَابِيُّ وَالْأَعْجَمِيُّ فَقَالَ اقْرَءُوا فَكُلٌّ حَسَنٌ وَسَيَجِيءُ أَقْوَامٌ يُقِيمُونَهُ كَمَا يُقَامُ الْقِدْحُ يَتَعَجَّلُونَهُ وَلَا يَتَأَجَّلُونَهُ . 505
ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : நாங்கள் குர்ஆன் ஓதிக்கொண்டிருக்கும்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எங்களிடம் வந்தார்கள் . எங்களில் அரபியர்களும் அரபியர்கள் அல்லாதோரும் இருந்தனர் . நீங்கள் ஓதுங்கள் , அனைத்தும் அழகாகத்தான் இருக்கின்றது . அம்பைச் சீர்செய்வதைப் போன்று குர்ஆனைச் சீராக ஓதக்கூடிய கூட்டங்கள் பின்னால் தோன்றும் . அவர்கள் இதன்மூலம் ( உலகத்திலேயே கூலியை ) விரைவாக எதிர்பார்ப்பார்கள் . ( அதன் கூலியை மறுமையில் பெறுவதற்காகக் ) காத்திருக்க மாட்டார்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் .
عَنْ عَبْدُ الرَّحْمَنِ بْنُ شِبْلٍ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ اقْرَءُوا الْقُرْآنَ وَلَا تَغْلُوا فِيهِ وَلَا تَجْفُوا عَنْهُ وَلَا تَأْكُلُوا بِهِ وَلَا تَسْتَكْثِرُوا بِهِ . 506
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து தாம் செவியுற்றதாக அப்துர் ரஹ்மான் பின் ஷிப்ல் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : குர்ஆனை ஓதுங்கள் ; அதில் வரம்பு மீறாதீர்கள் ; அதைப் புறக்கணிக்காதீர்கள் ; அதை வைத்துக்கொண்டு ( ஆதாயம் தேடிச் ) சாப்பிடாதீர்கள் ; அதைக் கொண்டு ( பொருளாதாரத்தை ) அதிகப்படுத்திக் கொள்ளாதீர்கள் .
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ مَنْ قَرَأَ فِي لَيْلَةٍ عَشْرَ آيَاتٍ كُتِبَ مِنْ الذَّاكِرِينَ وَمَنْ قَرَأَ بِمِائَةِ آيَةٍ كُتِبَ مِنْ الْقَانِتِينَ وَمَنْ قَرَأَ بِخَمْسِ مِائَةِ آيَةٍ إِلَى الْأَلْفِ أَصْبَحَ وَلَهُ قِنْطَارٌ مِنْ الْأَجْرِ قِيلَ وَمَا الْقِنْطَارُ قَالَ مِلْءُ مَسْكِ الثَّوْرِ ذَهَبًا . 507
அபூசஈத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : யார் ஓர் இரவில் பத்து வசனங்களை ஓதுகிறாரோ அவர் ( அல்லாஹ்வை ) நினைவுகூருவோருள் ஒருவராக எழுதப்படுவார் . யார் ( ஓர் இரவில் ) நூறு வசனங்களை ஓதுகிறாரோ அவர் ( அல்லாஹ்வின் கட்டளைகளுக்குக் ) கீழ்ப்படிந்து வாழ்வோருள் ஒருவராக எழுதப்படுவார் . யார் ( ஓர் இரவில் ) ஐந்நூறு முதல் ஆயிரம் வசனங்களை ஓதுகிறாரோ அவருக்கான கூலியாக ஒரு ‘ கின்த்தார் ’ உண்டு என்று கூறினார்கள் . ‘ கின்த்தார் ’ என்றால் எவ்வளவு என்று கேட்கப்பட்டது . அதற்கவர்கள் , “ ஒரு காளை மாட்டின் தோல் நிறையத் தங்கம் ஆகும் ” என்று விடையளித்தார்கள் .
عَنْ عَبْدِ اللَّهِ قَالَ مَنْ قَرَأَ فِي لَيْلَةٍ بِخَمْسِينَ آيَةً لَمْ يُكْتَبْ مِنْ الْغَافِلِينَ . 508
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : யார் ஓர் இரவில் ஐம்பது வசனங்களை ஓதுகிறாரோ அவர் ( அல்லாஹ்வின் நினைவைவிட்டுக் ) கவனக்குறைவானவர்களுள் ஒருவராக எழுதப்படமாட்டார் .
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : مَنْ حَافَظَ عَلَى هَؤُلَاءِ الصَّلَوَاتِ الْمَكْتُوبَاتِ لَمْ يُكْتَبْ مِنَ الْغَافِلِينَ ، وَمَنْ قَرَأَ فِي لَيْلَةٍ مِائَةَ آيَّةٍ لَمْ يُكْتَبْ مِنَ الْغَافِلِينَ ، أَوْ كُتِبَ مِنَ الْقَانِتِينَ . 509
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : யார் கடமையான தொழுகைகளைப் பேணிவருகின்றாரோ அவர் ( அல்லாஹ்வின் நினைவைவிட்டுக் ) கவனக்குறைவானவர்களுள் ஒருவராக எழுதப்படமாட்டார் . யார் ஓர் இரவில் நூறு வசனங்களை ஓதுகிறாரோ அவர் ( அல்லாஹ்வின் நினைவைவிட்டுக் ) கவனக்குறைவானவர்களுள் ஒருவராக எழுதப்படமாட்டார் . அல்லது ( அல்லாஹ்வின் கட்டளைகளுக்குக் ) கீழ்ப்படிந்து வாழ்வோருள் ஒருவராக எழுதப்படுவார் .
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ : مَنْ قَرَأَ عَشْرَ آيَاتٍ فِي لَيْلَةٍ لَمْ يُكْتَبْ مِنَ الْغَافِلِينَ . 510
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : யார் ஓர் இரவில் பத்து வசனங்களை ஓதுகிறாரோ அவர் ( அல்லாஹ்வின் நினைவைவிட்டுக் ) கவனக்குறைவானவர்களுள் ஒருவராக எழுதப்படமாட்டார் .
عَنْ الْحَكَمِ عَنْ مُجَاهِدٍ قَالَ بَعَثَ إِلَيَّ قَالَ إِنَّمَا دَعَوْنَاكَ أَنَّا أَرَدْنَا أَنْ نَخْتِمَ الْقُرْآنَ وَإِنَّهُ بَلَغَنَا أَنَّ الدُّعَاءَ يُسْتَجَابُ عِنْدَ خَتْمِ الْقُرْآنِ قَالَ فَدَعَوْا بِدَعَوَاتٍ . 511
ஹகம் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : முஜாஹித் ரஹிமஹுல்லாஹ் என்னிடம் ஆள் அனுப்பினார்கள் . ( நான் அவர்களிடம் சென்றேன் ). “ நாங்கள் குர்ஆனை ( ஓதி ) முடிக்க நாடியுள்ளோம் ; எனவேதான் உங்களை நாங்கள் அழைத்தோம் . ( ஏனென்றால் ) குர்ஆனை முடிக்கின்றபோது ( கேட்கப்படுகின்ற ) பிரார்த்தனை ஏற்கப்படுகிறது என எங்களுக்குச் செய்தி கிடைத்தது ” என்றார்கள் . ( அதன்பிறகு ) அவர்கள் நீண்ட பிரார்த்தனைகளைச் செய்தார்கள் .
عَنْ إِبْرَاهِيمَ قَالَ إِذَا قَرَأَ الرَّجُلُ الْقُرْآنَ نَهَارًا صَلَّتْ عَلَيْهِ الْمَلَائِكَةُ حَتَّى يُمْسِيَ وَإِنْ قَرَأَهُ لَيْلًا صَلَّتْ عَلَيْهِ الْمَلَائِكَةُ حَتَّى يُصْبِحَ . 512
இப்ராஹீம் அந்நகஈ ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : ஒரு மனிதர் பகலில் குர்ஆனை ஓதினால் வானவர்கள் அவர்மீது மாலை வரை அருள்வேண்டிப் பிரார்த்தனை செய்கிறார்கள் . அதை அவர் இரவில் ஓதினால் வானவர்கள் அவர்மீது காலை வரை அருள்வேண்டிப் பிரார்த்தனை செய்கிறார்கள் . மற்றோர் அறிவிப்பில் உள்ளதாவது : சுலைமான் அல்அஉமஷ் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள் : நம்முடைய தோழர்கள் பகலின் தொடக்கத்திலும் ( காலை ) இரவின் தொடக்கத்திலும் ( மாலை ) குர்ஆனை முடிக்க விரும்புவதை நான் கண்டேன் . ( அதாவது குர்ஆனை முடிக்கின்ற துஆவைக் காலையில் அல்லது மாலையில் ஆக்கிக்கொள்ள விரும்புகிறார்கள் .)
عَنْ أَبِي بَكْرِ بْنِ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ ، عَنْ أَبِيهِ ، عَنْ جَدِّهِ ، عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - أَنَّهُ كَتَبَ إِلَى أَهْلِ الْيَمَنِ بِكِتَابٍ فِيهِ الْفَرَائِضُ وَالسُّنَنُ وَالدِّيَاتُ ، وَبَعَثَ بِهِ مَعَ عَمْرِو بْنِ حَزْمٍ . فَذَكَرَ الْحَدِيثَ وَفِيهِ قَالِ : وَلَا يَمَسُّ الْقُرْآنَ إِلَّا طَاهِرٌ . 513
அபூபக்ர் பின் முஹம்மத் பின் அம்ர் பின் ஹஸ்ம் ரஹிமஹுல்லாஹ் அறிவிப்பதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் யமன்வாழ் மக்களுக்கு ஒரு கடிதம் எழுதினார்கள் . அதில் வாரிசுரிமைச் சட்டங்கள் , சுன்னத்தான நடைமுறைகள் , உயிர் இழப்பீட்டுச் சட்டங்கள் ஆகியவை இருந்தன . அதை அம்ர் பின் ஹஸ்ம் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கொடுத்து அனுப்பினார்கள் . அது ஒரு நீண்ட ஹதீஸ் . அதில் “ குர்ஆனைத் தூய்மையாளரே தவிர ( மற்றவர் ) தொட மாட்டார் ” என்று ( எழுதப்பட்டு ) இருந்தது .
عَنْ عَبدِ اللهِ بْنِ عُمَرَ قَالَ : قَالَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : وَلَا يَمَسُّ الْقُرْآنَ إِلَّا طَاهِرٌ . 514
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : “ குர்ஆனைத் தூய்மையாளரே தவிர ( மற்றவர் ) தொட மாட்டார் .”
عَنْ مُصْعَبِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ أَنَّهُ قَالَ كُنْتُ أُمْسِكُ الْمُصْحَفَ عَلَى سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ فَاحْتَكَكْتُ فَقَالَ سَعْدٌ لَعَلَّكَ مَسِسْتَ ذَكَرَكَ قَالَ فَقُلْتُ نَعَمْ فَقَالَ قُمْ فَتَوَضَّأْ فَقُمْتُ فَتَوَضَّأْتُ ثُمَّ رَجَعْتُ . 515
முஸ்அப் பின் சஅத் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : ( என் தந்தை ) சஅத் பின் அபீவக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் நான் குர்ஆன் பிரதியைப் பிடித்துக்கொண்டிருந்தேன் . அப்போது நான் அதை ( நேரடியாகத் தொடாமல் ) என் கீழாடை மூலம் பிடித்தேன் . அச்சமயத்தில் சஅத் அவர்கள் , “ நீ உன்னுடைய ( கையால் ) ஆணுறுப்பைத் தொட்டுவிட்டாயோ ?” என்று கேட்டார்கள் . அதற்கு நான் “ ஆம் ” என்றேன் . “( அப்படியானால் ) எழுந்து சென்று உளூ செய்துவிட்டு வா ” என்றார்கள் . எனவே நான் எழுந்து சென்று உளூ செய்துவிட்டுத் திரும்பி வந்தேன் .
عَنْ حَكِيمِ بْنِ حِزَامٍ ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ لَمَّا بَعَثَهُ وَالِيًا إِلَى الْيَمَنِ قَالَ لَا تَمَسَّ الْقُرْآنَ إِلَّا وَأَنْتَ طَاهِرٌ . 516
ஹகீம் பின் ஹிஸாம் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்னை யமன் நாட்டிற்கு ஆளுநராக அனுப்பியபோது , “ நீ தூய்மையாளராக இருக்கும் நிலையில் தவிர குர்ஆனைத் தொடவேண்டாம் ” என்று அறிவுறுத்தினார்கள் .
عَنْ أَبِي الْغَرِيفِ قَالَ أُتِيَ عَلِيٌّ رَضِيَ اللَّهُ عَنْهُ بِوَضُوءٍ فَمَضْمَضَ وَاسْتَنْشَقَ ثَلَاثًا وَغَسَلَ وَجْهَهُ ثَلَاثًا وَغَسَلَ يَدَيْهِ وَذِرَاعَيْهِ ثَلَاثًا ثَلَاثًا ثُمَّ مَسَحَ بِرَأْسِهِ ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ ثُمَّ قَالَ هَكَذَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ ثُمَّ قَرَأَ شَيْئًا مِنْ الْقُرْآنِ ثُمَّ قَالَ هَذَا لِمَنْ لَيْسَ بِجُنُبٍ فَأَمَّا الْجُنُبُ فَلَا وَلَا آيَةَ . 517
அபுல் ஃகரீப் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : உளூ செய்வதற்காக அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்குத் தண்ணீர் கொண்டு வரப்பட்டது . அவர்கள் மூன்று தடவை வாய்கொப்பளித்து , நாசிக்குத் தண்ணீர் செலுத்தினார்கள் . மூன்று தடவை தம் முகத்தைக் கழுவினார்கள் . தம் இரு கைகளையும் முழங்கைகளையும் மும்மூன்று தடவை கழுவினார்கள் . பின்னர் தம் தலையைத் ( ஈரக்கையால் ) தடவினார்கள் . பிறகு தம் இரண்டு கால்களையும் கழுவினார்கள் . பின்னர் , “ இவ்வாறுதான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உளூ செய்வதை நான் பார்த்தேன் என்று கூறினார்கள் . பிறகு குர்ஆனிலிருந்து கொஞ்சத்தை ஓதினார்கள் . பிறகு , இ( வ்வாறு உளூ செய்வதான ) து குளியல் கடமையில்லாதவருக்குத்தான் . குளியல் கடமையானவரோ ( குர்ஆனை ) ஓதக்கூடாது ; ஒரு வசனத்தைக்கூட ( ஓதக்கூடாது )” என்றார்கள் .
عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ ، قَالَ : " كُنَّا مَعَ سَلْمَانَ ، فَخَرَجَ فَقَضَى حَاجَتَهُ ، ثُمَّ جَاءَ ، فَقُلْتُ : يَا أَبَا عَبْدِ اللَّهِ ، لَوْ تَوَضَّأْتَ ؛ لَعَلَّنَا أَنْ نَسْأَلَكَ عَنْ آيَاتٍ . فَقَالَ : إِنِّي لَسْتُ أَمَسُّهُ ، إِنَّمَا ( لَا يَمَسُّهُ إِلَّا الْمُطَهَّرُونَ ) فَقَرَأَ عَلَيْنَا مَا يَشَاءُ . 518
அப்துர் ரஹ்மான் பின் யஸீத் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : நாங்கள் சல்மான் அவர்களுடன் இருந்தோம் . ( அப்போது ) அவர்கள் வெளியே சென்று தம்முடைய சுயதேவையை நிறைவேற்றிவிட்டு , பிறகு வந்தார்கள் . ( அதன்பின் ) நான் அவர்களிடம் , “ அபூஅப்துல்லாஹ் அவர்களே ! நீங்கள் உளூ செய்துவிட்டால் நாங்கள் ( திருக்குர்ஆன் ) வசனங்களைப் பற்றி உங்களிடம் கேட்கலாம் ” என்று கூறினேன் . அதற்கு அவர்கள் , “ நான் அதை ( உளூ இன்றி ) த் தொடுவதில்லை . ( ஏனென்றால் ) ‘ தூய்மையானவர்களே அன்றி அதை ( மற்றவர்கள் ) தொடுவதில்லை ’ (56: 79 என்று அல்லாஹ் கூறியிருக்கிறான் ) என்பதுதான் காரணம் எனக் கூறிவிட்டு ( அதனைத் தொடாமலேயே ) நாங்கள் விரும்பிய அளவிற்கு எங்களுக்கு அவர்கள் ஓதிக் காட்டினார்கள் .
عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ كَانَ فِي قَوْمٍ وَهُمْ يَقْرَءُونَ الْقُرْآنَ فَذَهَبَ لِحَاجَتِهِ ثُمَّ رَجَعَ وَهُوَ يَقْرَأُ الْقُرْآنَ فَقَالَ لَهُ رَجُلٌ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ أَتَقْرَأُ الْقُرْآنَ وَلَسْتَ عَلَى وُضُوءٍ فَقَالَ لَهُ عُمَرُ مَنْ أَفْتَاكَ بِهَذَا أَمُسَيْلِمَةُ . 519
முஹம்மத் பின் சீரீன் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : உமர் ரளியல்லாஹு அன்ஹு ஒரு சமுதாய மக்கள் குர்ஆனை ஓதிக்கொண்டிருந்த நிலையில் அவர்களுடன் இருந்தார்கள் . ( பின்னர் சற்று நேரம் கழித்துத் ) தம் சுயதேவைக்காகச் சென்றுவிட்டு , பின்னர் வந்தார்கள் . ( பிறகு ) அவர்கள் குர்ஆனை ஓதினார்கள் . அப்போது அவர்களிடம் ஒரு மனிதர் , “ இறைநம்பிக்கையாளர்களின் தலைவர் அவர்களே ! உளூ இன்றிக் குர்ஆனை ஓதுகிறீர்களா ?” என்று கேட்டார் . அதற்கு உமர் ரளியல்லாஹு அன்ஹு , “ முசைலிமா ! ( உளூ இன்றிக் குர்ஆனை ஓதக்கூடாது எனும் ) இ( ச்சட்டத் ) தை யார் உமக்கு மார்க்கத் தீர்ப்பு வழங்கினார் ?” எனக் கேட்டார்கள் .
عَنْ عَطَاءٍ عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ قَالَ حَدَّثَنَا مَنْ كَانَ يُقْرِئُنَا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَنَّهُمْ كَانُوا يَقْتَرِئُونَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَشْرَ آيَاتٍ فَلَا يَأْخُذُونَ فِي الْعَشْرِ الْأُخْرَى حَتَّى يَعْلَمُوا مَا فِي هَذِهِ مِنْ الْعِلْمِ وَالْعَمَلِ قَالُوا: فَعَلِمْنَا الْعِلْمَ وَالْعَمَلَ . 520
அபூஅப்திர் ரஹ்மான் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்களிடமிருந்து ஓதிக்காட்டியவர்கள் எங்களுக்கு அறிவித்தார்கள் . அத்தோழர்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து பத்து வசனங்களை ஓதக் கேட்பார்கள் . ( பின்னர் ) அந்தப் பத்து வசனங்களிலும் உள்ள கல்வியை அறிந்து அவற்றைச் செயல்படுத்துகிற வரை வேறு பத்து வசனங்களைச் செவியுற மாட்டார்கள் . எனவே அவர்கள் ( இவற்றிலிருந்து ) கல்வியையும் செயல்பாட்டையும் நாங்கள் அறிந்து கொண்டோம் என்று கூறிவந்தார்கள் .
عَنْ شَرِيكٌ ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ ، عَنْ عَبْدِ اللَّهِ - رَضِيَ اللَّهُ عَنْهُ - قَالَ : " كُنَّا إِذَا تَعَلَّمْنَا مِنَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ عَشْرَ آيَاتٍ مِنَ الْقُرْآنِ ، لَمْ نَتَعَلَّمْ مِنَ الْعَشْرِ الَّذِي نَزَلَتْ بَعْدَهَا حَتَّى نَعْلَمَ مَا فِيهِ " . قِيلَ لِشَرِيكٍ مِنَ الْعَمَلِ ؟ قَالَ : نَعَمْ . 521
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் குர்ஆனிலிருந்து பத்து வசனங்களைக் கற்றுக்கொண்டால் , அவற்றில் உள்ளதை நாங்கள் அறிந்து கொள்கின்ற வரை அதன் பிறகு இறங்கிய பத்து வசனங்களைக் கற்றுக்கொள்ள மாட்டோம் . அப்போது ஷரீக் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் , “( எதைக் கற்றுக்கொள்கிற வரை ? அவற்றின்படி ) செயல்படுவதையா ?” என்று கேட்கப்பட்டது . அதற்கு அவர்கள் , “ ஆம் ” என்று விடையளித்தார்கள் .
عَنْ ابْنِ عُمَرَ قَالَ : لَقَدْ عِشْتُ بُرْهَةً مِنْ دَهْرٍ وَإِنَّ أَحَدَنَا يُؤْتَى الْإِيمَانَ قَبْلَ الْقُرْآنِ ، وَتَنْزِلُ السُّورَةُ عَلَى مُحَمَّدٍ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيَتَعَلَّمُ حَلَالَهَا وَحَرَامَهَا وَمَا يَنْبَغِي أَنْ يَقِفَ عِنْدَهُ مِنْهَا كَمَا تَعَلَّمُونَ أَنْتُمُ الْقُرْآنَ ، ثُمَّ لَقَدْ رَأَيْتُ رِجَالًا يُؤْتَى أَحَدُهُمُ الْقُرْآنَ قَبْلَ الْإِيمَانِ ، فَيَقْرَأُ مَا بَيْنَ فَاتِحَةِ الْكِتَابِ إِلَى خَاتِمَتِهِ مَا يَدْرِي مَا آمِرُهُ وَلَا زَاجِرُهُ ، وَمَا يَنْبَغِي أَنْ يَقِفَ عِنْدَهُ مِنْهُ ، وَيَنْثُرَهُ نَثْرَ الدَّقَلِ . 522
அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நாங்கள் எங்கள் காலத்தில் சற்று நிம்மதியாக வாழ்ந்திருக்கிறோம் . எங்களுள் ஒருவர் குர்ஆனுக்கு முன்பே இறைநம்பிக்கை ( ஈமான் ) வழங்கப்பட்டார் . முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஓர் அத்தியாயம் இறங்கும் . ( அதன்பின் ) அவர் அது ஆகுமாக்குவதையும் தடைசெய்வதையும் அது கட்டளையிடுவதையும் எச்சரிக்கை செய்வதையும் அதிலிருந்து எதை விளங்கிக்கொள்வது அவசியமோ அவற்றையெல்லாம் - இன்று நீங்கள் குர்ஆனைக் கற்றுக்கொள்வதைப் போன்று - கற்றுக்கொள்வார் . பிறகு இன்றைய ஆண்களைப் பார்க்கிறேன் . அவர்களுள் ஒருவர் இறைநம்பிக்கைக்கு முன்னரே குர்ஆன் கொடுக்கப்பட்டுள்ளார் . எனவே அவர் அதனை ஃபாத்திஹா அத்தியாயத்திலிருந்து அதன் கடைசி ( அத்தியாயம் ) வரை ஓதுகிறார் . ( ஆனால் ) அது கட்டளையிடுவதையும் எச்சரிக்கை செய்வதையும் ( என்னவென்று ) அறியமாட்டார் . அதிலிருந்து எதை விளங்கிக்கொள்வது அவசியமோ அதையும் அறியமாட்டார் . ( மாறாக பேரீச்ச மரம் ) காய்ந்த மட்டமான பேரீச்சம் பழங்களை உதிர்ப்பதைப் போன்று உதிர்ப்பார் .
عَنْ عِكْرِمَةَ بْنَ سُلَيْمَانَ ، يَقُولُ : قَرَأْتُ عَلَى إِسْمَاعِيلَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ قُسْطَنْطِينَ ، فَلَمَّا بَلَغْتُ وَالضُّحَى ، قَالَ لِي : " كَبِّرْ كَبِّرْ عِنْدَ خَاتِمَةِ كُلِّ سُورَةٍ ، حَتَّى تَخَتِمَ " وَأَخْبَرَهُ عَبْدُ اللَّهِ بْنُ كَثِيرٍ أَنَّهُ قَرَأَ عَلَى مُجَاهِدٍ فَأَمَرَهُ بِذَلِكَ ، وَأَخْبَرَهُ مُجَاهِدٌ أَنَّ ابْنَ عَبَّاسٍ أَمَرَهُ بِذَلِكَ ، وَأَخْبَرَهُ ابْنُ عَبَّاسٍ أَنَّ أُبَيَّ بْنَ كَعْبٍ أَمَرَهُ بِذَلِكَ وَأَخْبَرَهُ أُبَيُّ بْنُ كَعْبٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ أَمَرَهُ بِذَلِكَ . 523
இக்ரிமா பின் சுலைமான் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : நான் ( குர்ஆனை முழுவதுமாக ) இஸ்மாயீல் பின் அப்தில்லாஹ் பின் கிஸ்த்தன்தீன் அவர்களிடம் ஓதிக்காட்டினேன் . நான் வள்ளுஹா அத்தியாயத்தை அடைந்தபோது , அவர்கள் என்னிடம் , “( இதன்பிறகு ) ஒவ்வோர் அத்தியாயத்தின் முடிவிலும் ( அதன் ) கடைசி ( அத்தியாயம் ) வரை தக்பீர் கூறுவீராக ” என்று சொன்னார்கள் . இச்செய்தியை அவருக்கு அப்துல்லாஹ் பின் கஸீர் ரஹிமஹுல்லாஹ் அறிவித்தார்கள் . அவர்கள் முஜாஹித் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் ஓதிக்காட்டியபோது , அதனை அவருக்குக் கட்டளையிட்டார்கள் . இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு தமக்கு அவ்வாறு கட்டளையிட்டதாக முஜாஹித் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள் . இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் , உபை பின் கஅப் ரளியல்லாஹு அன்ஹு தமக்கு அதனைக் கட்டளையிட்டதாகக் கூறினார்கள் . உபை பின் கஅப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் , நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தமக்கு அதனைக் கட்டளையிட்டதாகக் கூறினார்கள் .