பாடம்: 6. திருக்குர்ஆனை அழகிய தொனியில் ஓதுதல்
(ق) عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَا أَذِنَ اللَّهُ لِشَيْءٍ مَا أَذِنَ لِنَبِيٍّ حَسَنِ الصَّوْتِ بِالْقُرْآنِ يَجْهَرُ بِهِ . 474
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அல்லாஹ் , தன் தூதர் ஒருவர் இனிய குரலில் குர்ஆனை உரக்க ஓதும்போது அதைச் செவிகொடுத்துக் கேட்டதைப் போன்று வேறு எதையும் அவன் செவிகொடுத்துக் கேட்டதில்லை .
(ق) عَنْ أَبِي مُوسَى رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهُ يَا أَبَا مُوسَى لَقَدْ أُوتِيتَ مِزْمَارًا مِنْ مَزَامِيرِ آلِ دَاوُدَ . 475
அபூமூஸா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “( நான் இனிய குரலில் குர்ஆன் ஓதுவதைப் பாராட்டி ) “ அபூமூஸா ! ( இறைத்தூதர் ) தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த ( சங்கீதம் போன்ற ) இனிய குரல் உங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது `` என என்னிடம் கூறினார்கள் .
عَنْ الْبَرَاءِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زَيِّنُوا الْقُرْآنَ بِأَصْوَاتِكُمْ . 476
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அல்பராஉ பின் ஆஸிப் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : உங்களின் குரல்களால் குர்ஆனை அழகாக்குங்கள் .
عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ أَبْطَأْتُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةً بَعْدَ الْعِشَاءِ ثُمَّ جِئْتُ فَقَالَ أَيْنَ كُنْتِ قُلْتُ كُنْتُ أَسْتَمِعُ قِرَاءَةَ رَجُلٍ مِنْ أَصْحَابِكَ لَمْ أَسْمَعْ مِثْلَ قِرَاءَتِهِ وَصَوْتِهِ مِنْ أَحَدٍ قَالَتْ فَقَامَ وَقُمْتُ مَعَهُ حَتَّى اسْتَمَعَ لَهُ ثُمَّ الْتَفَتَ إِلَيَّ فَقَالَ هَذَا سَالِمٌ مَوْلَى أَبِي حُذَيْفَةَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي جَعَلَ فِي أُمَّتِي مِثْلَ هَذَا . 477
அப்துர் ரஹ்மான் பின் ஸாபித் அல்ஜுமஹீ ரளியல்லாஹு அன்ஹு , நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவி ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடமிருந்து அறிவித்துள்ளதாவது : நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் இஷாவுக்குப்பின் ஓர் இரவில் தாமதமாக வந்தேன் . இவ்வளவு நேரம் எங்கே போயிருந்தாய் ? என்று என்னிடம் நபியவர்கள் வினவினார்கள் . உங்களுடைய தோழர்களுள் ஒருவர் குர்ஆன் ஓதுவதை நான் கேட்டுக்கொண்டிருந்தேன் . அவருடைய ஓதலைப் போன்றும் குரலைப் போன்றும் யாரிடமிருந்தும் நான் ( இதுவரை ) செவியுற்றதில்லை என்று கூறினேன் . எனவே அவர்கள் எழுந்து சென்றார்கள் . நானும் அவர்களுடன் சென்றேன் . அவர் ஓதுவதைச் செவியுற்றார்கள் . பின்னர் என்னைத் திரும்பிப் பார்த்து , “ இவர் அபூஹுதைஃபாவின் முன்னாள் அடிமை சாலிம் ஆவார் . இவரைப் போன்றவரை என் சமுதாயத்தில் ஆக்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் ” என்று கூறினார்கள் .
عَنْ مُحَمَّدٍ قَالَ كَانُوا يَرَوْنَ هَذِهِ الْأَلْحَانَ فِي الْقُرْآنِ مُحْدَثَةً . 478
முஹம்மது பின் சீரீன் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : ( எமது காலத்தில் வாழ்ந்த அறிஞர்கள் ) குர்ஆனை அழகிய தொனியில் ஓதுவதைப் புதுமையான செயலாகக் கருதினார்கள் .
عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ أَبَا مُوسَى رَضِيَ اللَّهُ عَنْهُ كَانَ يَقْرَأُ ذَاتَ لَيْلَةٍ ، فَمَشَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْمَعُ ، فَلَمَّا أَصْبَحَ قِيَلَ لَهُ ، قَالَ : لَوْ عَلِمْتُ لَحَبَّرْتُ لَكَ تَحْبِيرًا وَلَشَوَّقْتُ لَكَ تَشْوِيقًا . 479
அனஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ஒரு நாள் இரவு அபூமூஸா ரளியல்லாஹு அன்ஹு ( திருக்குர்ஆனை ) ஓதிக்கொண்டிருந்தார் . அதைக் கேட்டுக்கொண்டே அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நடந்து சென்றார்கள் . ( நேற்றிரவு உம்முடைய ஓதலை நபியவர்கள் செவியுற்றார்கள் என்ற ) இச்செய்தி அவர்களிடம் காலையில் சொல்லப்பட்டது . “( என்னுடைய ஓதலை நபியவர்கள் செவியுற்றார்கள் என்பது ) எனக்குத் தெரிந்திருந்தால் நான் இன்னும் அழகிய தொனியில் இனிமையாக ஓதியிருப்பேனே ” என்று கூறினார்கள் .
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : إِنَّ لِكُلِّ شَيْءٍ حِلْيَةً ، وَحِلْيَةُ الْقُرْآنِ الصَّوْتُ الْحَسَنُ . 480
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ஒவ்வொரு பொருளுக்கும் ஓர் அழகு உண்டு . குர்ஆனின் அழகு அழகிய குரல்தான் .
عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ : سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّ النَّاسِ أَحْسَنُ قِرَاءَةً ؟ قَالَ : الَّذِي إِذَا سَمِعْتَهُ يَقْرَأُ رَأَيْتَ أَنَّهُ يَخْشَى اللَّهَ عَزَّ وَجَلَّ . 481
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் , “ அழகிய முறையில் ஓதுபவர் யார் ?” என்று கேட்கப்பட்டது . “ அவர் ஓதுவதை நீ செவியுற்றால் , அவர் வல்லமையும் மகத்துவமும் கொண்ட அல்லாஹ்வை அஞ்சு ( ம் நிலையில் ஓது ) கிறார் என நீ கருதுவாய் ” என்று பதிலுரைத்தார்கள் .