பாடம்: 8. குர்ஆனை ஓதும்போது அழுதல்
(ق) عَنْ عَبْدِ اللَّهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اقْرَأْ عَلَيَّ قَالَ قُلْتُ أَقْرَأُ عَلَيْكَ وَعَلَيْكَ أُنْزِلَ قَالَ إِنِّي أَشْتَهِي أَنْ أَسْمَعَهُ مِنْ غَيْرِي قَالَ فَقَرَأْتُ النِّسَاءَ حَتَّى إِذَا بَلَغْتُ فَكَيْفَ إِذَا جِئْنَا مِنْ كُلِّ أُمَّةٍ بِشَهِيدٍ وَجِئْنَا بِكَ عَلَى هَؤُلَاءِ شَهِيدًا قَالَ لِي كُفَّ أَوْ أَمْسِكْ فَرَأَيْتُ عَيْنَيْهِ تَذْرِفَانِ . 484
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : “ எனக்குக் குர்ஆனை ஓதிக் காட்டுக !`` என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ( என்னிடம் ) கூறினார்கள் . அதற்கு நான் , “ தங்கள் மீதே குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்க , தங்களுக்கே நான் ஓதிக் காட்டுவதா ?`` என்று கேட்டேன் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ பிறரிடமிருந்து அதைக் கேட்க நான் பெரிதும் ஆசைப்படுகிறேன் `` என்று சொன்னார்கள் . நான் " அந்நிஸா ` எனும் (4ஆம்) அத்தியாயத்தை ஓதினேன் . “ ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் ( அவர்களுடைய நபியாகிய ) சாட்சியை நாம் ( மறுமையில் ) கொண்டுவரும்போதும் , ( நபியே !) உங்களை இவர்களுக்கெதிரான சாட்சியாக நாம் கொண்டுவரும்போதும் ( இவர்களின் நிலை ) எப்படியிருக்கும் ?`` எனும் (4:41ஆம்) வசனத்தை நான் அடைந்தபோது " நிறுத்துங்கள் ` என்று சொன்னார்கள் அப்போது அவர்களின் கண்கள் கண்ணீரைச் சொரிவதை நான் கண்டேன் .