பாடம்: 16. குர்ஆனை உரத்த தொனியில் ஓதுவதற்கான அளவு
عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ كَانَتْ قِرَاءَةُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى قَدْرِ مَا يَسْمَعُهُ مَنْ فِي الْحُجْرَةِ وَهُوَ فِي الْبَيْتِ . 497
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய கிராஅத் அவர்கள் வீட்டிலிருந்து ஓதும்போது அறையில் உள்ளவர்கள் செவியுறும் அளவிற்கு ( ச் சத்தமாக ) அமைந்திருந்தது .
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّهُ قَالَ كَانَتْ قِرَاءَةُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِاللَّيْلِ يَرْفَعُ طَوْرًا وَيَخْفِضُ طَوْرًا . 498
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய கிராஅத் இரவில் சிலவேளை உயர்ந்தும் சிலவேளை தாழ்ந்தும் அமைந்திருந்தது .
عَنْ أَبِي قَتَادَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ لَيْلَةً فَإِذَا هُوَ بِأَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ يُصَلِّي يَخْفِضُ مِنْ صَوْتِهِ قَالَ وَمَرَّ بِعُمَرَ بْنِ الْخَطَّابِ وَهُوَ يُصَلِّي رَافِعًا صَوْتَهُ قَالَ فَلَمَّا اجْتَمَعَا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَا أَبَا بَكْرٍ مَرَرْتُ بِكَ وَأَنْتَ تُصَلِّي تَخْفِضُ صَوْتَكَ قَالَ قَدْ أَسْمَعْتُ مَنْ نَاجَيْتُ يَا رَسُولَ اللَّهِ قَالَ وَقَالَ لِعُمَرَ مَرَرْتُ بِكَ وَأَنْتَ تُصَلِّي رَافِعًا صَوْتَكَ قَالَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أُوقِظُ الْوَسْنَانَ وَأَطْرُدُ الشَّيْطَانَ زَادَ الْحَسَنُ فِي حَدِيثِهِ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا أَبَا بَكْرٍ ارْفَعْ مِنْ صَوْتِكَ شَيْئًا وَقَالَ لِعُمَرَ اخْفِضْ مِنْ صَوْتِكَ شَيْئًا . 499
அபூகத்தாதா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஓர் இரவு வெளியே சென்றார்கள் . அப்போது அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு தமது சத்தத்தைத் தாழ்த்தித் தொழுது கொண்டிருந்தார்கள் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உமர் பின் கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு அருகில் சென்றபோது அவர்கள் தமது சத்தத்தை உயர்த்தித் தொழுது கொண்டிருந்தார்கள் . அவ்விருவரும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒன்று கூடியதும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ அபூபக்ரே ! நான் உங்களுக்கு அருகில் வந்தபோது நீங்கள் சத்தத்தைத் தாழ்த்தித் தொழுது கொண்டிருந்தீர்கள் ” என்று சொன்னார்கள் . “ அல்லாஹ்வின் தூதரே ! நான் யாருடன் இரகசியமாக உரையாடினேனோ அ( ந்த இறை ) வனுக்குச் செவியுறச் செய்துவிட்டேன் ” என்று அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் , “ நான் உங்களுக்கு அருகில் வந்தேன் . நீங்கள் உங்கள் சத்தத்தை உயர்த்தித் தொழுது கொண்டிருந்தீர்கள் ” என்று கூறியதும் “ அல்லாஹ்வின் தூதரே ! அரைகுறையான தூக்கத்திலிருப்பவர்களை விழிக்கச் செய்கின்றேன் ; ஷைத்தானை விரட்டிவிடுகின்றேன் ” என்று உமர் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள் . “ அபூபக்ரே ! உங்கள் சத்தத்தைச் சற்று உயர்த்திக் கொள்ளுங்கள் ” என்றும் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் “ உங்கள் சத்தத்தைச் சற்றுத் தாழ்த்திக் கொள்ளுங்கள் ” என்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் என ஹஸன் ரஹிமஹுல்லாஹ் தமது அறிவிப்பில் கூடுதலாக அறிவித்துள்ளார் .
عَنْ أَبِي سَعِيدٍ قَالَ اعْتَكَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَسْجِدِ فَسَمِعَهُمْ يَجْهَرُونَ بِالْقِرَاءَةِ فَكَشَفَ السِّتْرَ وَقَالَ أَلَا إِنَّ كُلَّكُمْ مُنَاجٍ رَبَّهُ فَلَا يُؤْذِيَنَّ بَعْضُكُمْ بَعْضًا وَلَا يَرْفَعْ بَعْضُكُمْ عَلَى بَعْضٍ فِي الْقِرَاءَةِ أَوْ قَالَ فِي الصَّلَاةِ . 500
அபூசயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பள்ளியில் இஃதிகாஃப் இருந்தபோது மக்கள் சத்தமிட்டு ( குர்ஆன் ) ஓதுவதைச் செவியுற்றார்கள் . உடனே , அவர்கள் திரையை நீக்கி “ அறிந்து கொள்ளுங்கள் ! நீங்கள் அனைவரும் உங்களுடைய இறைவனிடம் உரையாடுகின்றீர்கள் . எனவே உங்களுள் ஒருவர் இன்னொருவருக்கு இடையூறு செய்ய வேண்டாம் . உங்களுள் ஒருவர் ( குர்ஆன் ) ஓதும்போது அல்லது ( அறிவிப்பாளருக்கு ஐயம் ஏற்பட்டுள்ளது ) தொழும்போது இன்னொருவரைவிட ( ச் சத்தத்தை ) உயர்த்த வேண்டாம் ” என்று கூறினார்கள் .
عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ الْجُهَنِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْجَاهِرُ بِالْقُرْآنِ كَالْجَاهِرِ بِالصَّدَقَةِ وَالْمُسِرُّ بِالْقُرْآنِ كَالْمُسِرِّ بِالصَّدَقَةِ . 501
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக உக்பா பின் ஆமிர் அல்ஜுஹனி ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : குர்ஆனைச் சத்தமிட்டு ஓதுபவர் தர்மத்தைப் பகிரங்கமாக வழங்கியவர் போலாவார் . குர்ஆனை இரகசியமாக ஓதுபவர் தர்மத்தை இரகசியமாக வழங்கியவர் போலாவார் .