18-باب: من نسي شيئاً من القرآن
பாடம் 18

பாடம்: 18. குர்ஆனிலிருந்து சிறிதளவு மறந்துவிட்டவன்

ஹதீஸ் 504 அத்தியாயம் 10 பாடம் 18

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عُرِضَتْ عَلَيَّ أُجُورُ أُمَّتِي حَتَّى الْقَذَاةُ يُخْرِجُهَا الرَّجُلُ مِنْ الْمَسْجِدِ وَعُرِضَتْ عَلَيَّ ذُنُوبُ أُمَّتِي فَلَمْ أَرَ ذَنْبًا أَعْظَمَ مِنْ سُورَةٍ مِنْ الْقُرْآنِ أَوْ آيَةٍ أُوتِيَهَا رَجُلٌ ثُمَّ نَسِيَهَا . 504

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : என் சமுதாயத்தார் செய்த ( நல்லறங்களுக்கான ) நற்பலன்கள் எனக்கு எடுத்துக் காட்டப்பட்டன . எந்த அளவிற்கென்றால் ஒரு மனிதர் பள்ளிவாசலிலிருந்து அகற்றும் அசுத்தம்கூட ( அந்த நற்பலன்களின் பட்டியலில் இடம்பெற்றிருந்தன ). என் சமுதாயத்தாரின் பாவங்களும் எனக்கு எடுத்துக் காட்டப்பட்டன . ( அதில் ) குர்ஆனிலிருந்து ஓர் அத்தியாயம் அல்லது ஒரு வசனம் வழங்கப்பட்டு , பின்னர் அதை மறந்துவிட்ட மனிதர் புரிந்த பாவத்தைவிடப் பெரும் பாவம் எதையும் நான் காணவில்லை .

Reference: ( அபூதாவூத் : 461 / திர்மிதீ : 2840) இந்த ஹதீஸ் ‘ ளஈஃப் ’ தரத்தில் உள்ளது .