பாடம்: 20. குர்ஆனின் வசனங்களை ஓதுவதில் அதன் எண்ணிக்கைக்கேற்ற சிறப்பு
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ مَنْ قَرَأَ فِي لَيْلَةٍ عَشْرَ آيَاتٍ كُتِبَ مِنْ الذَّاكِرِينَ وَمَنْ قَرَأَ بِمِائَةِ آيَةٍ كُتِبَ مِنْ الْقَانِتِينَ وَمَنْ قَرَأَ بِخَمْسِ مِائَةِ آيَةٍ إِلَى الْأَلْفِ أَصْبَحَ وَلَهُ قِنْطَارٌ مِنْ الْأَجْرِ قِيلَ وَمَا الْقِنْطَارُ قَالَ مِلْءُ مَسْكِ الثَّوْرِ ذَهَبًا . 507
அபூசஈத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : யார் ஓர் இரவில் பத்து வசனங்களை ஓதுகிறாரோ அவர் ( அல்லாஹ்வை ) நினைவுகூருவோருள் ஒருவராக எழுதப்படுவார் . யார் ( ஓர் இரவில் ) நூறு வசனங்களை ஓதுகிறாரோ அவர் ( அல்லாஹ்வின் கட்டளைகளுக்குக் ) கீழ்ப்படிந்து வாழ்வோருள் ஒருவராக எழுதப்படுவார் . யார் ( ஓர் இரவில் ) ஐந்நூறு முதல் ஆயிரம் வசனங்களை ஓதுகிறாரோ அவருக்கான கூலியாக ஒரு ‘ கின்த்தார் ’ உண்டு என்று கூறினார்கள் . ‘ கின்த்தார் ’ என்றால் எவ்வளவு என்று கேட்கப்பட்டது . அதற்கவர்கள் , “ ஒரு காளை மாட்டின் தோல் நிறையத் தங்கம் ஆகும் ” என்று விடையளித்தார்கள் .
عَنْ عَبْدِ اللَّهِ قَالَ مَنْ قَرَأَ فِي لَيْلَةٍ بِخَمْسِينَ آيَةً لَمْ يُكْتَبْ مِنْ الْغَافِلِينَ . 508
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : யார் ஓர் இரவில் ஐம்பது வசனங்களை ஓதுகிறாரோ அவர் ( அல்லாஹ்வின் நினைவைவிட்டுக் ) கவனக்குறைவானவர்களுள் ஒருவராக எழுதப்படமாட்டார் .
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : مَنْ حَافَظَ عَلَى هَؤُلَاءِ الصَّلَوَاتِ الْمَكْتُوبَاتِ لَمْ يُكْتَبْ مِنَ الْغَافِلِينَ ، وَمَنْ قَرَأَ فِي لَيْلَةٍ مِائَةَ آيَّةٍ لَمْ يُكْتَبْ مِنَ الْغَافِلِينَ ، أَوْ كُتِبَ مِنَ الْقَانِتِينَ . 509
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : யார் கடமையான தொழுகைகளைப் பேணிவருகின்றாரோ அவர் ( அல்லாஹ்வின் நினைவைவிட்டுக் ) கவனக்குறைவானவர்களுள் ஒருவராக எழுதப்படமாட்டார் . யார் ஓர் இரவில் நூறு வசனங்களை ஓதுகிறாரோ அவர் ( அல்லாஹ்வின் நினைவைவிட்டுக் ) கவனக்குறைவானவர்களுள் ஒருவராக எழுதப்படமாட்டார் . அல்லது ( அல்லாஹ்வின் கட்டளைகளுக்குக் ) கீழ்ப்படிந்து வாழ்வோருள் ஒருவராக எழுதப்படுவார் .
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ : مَنْ قَرَأَ عَشْرَ آيَاتٍ فِي لَيْلَةٍ لَمْ يُكْتَبْ مِنَ الْغَافِلِينَ . 510
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : யார் ஓர் இரவில் பத்து வசனங்களை ஓதுகிறாரோ அவர் ( அல்லாஹ்வின் நினைவைவிட்டுக் ) கவனக்குறைவானவர்களுள் ஒருவராக எழுதப்படமாட்டார் .