பாடம்: 21. குர்ஆனை ஓதி முடிப்பது குறித்து வந்துள்ளவை
عَنْ الْحَكَمِ عَنْ مُجَاهِدٍ قَالَ بَعَثَ إِلَيَّ قَالَ إِنَّمَا دَعَوْنَاكَ أَنَّا أَرَدْنَا أَنْ نَخْتِمَ الْقُرْآنَ وَإِنَّهُ بَلَغَنَا أَنَّ الدُّعَاءَ يُسْتَجَابُ عِنْدَ خَتْمِ الْقُرْآنِ قَالَ فَدَعَوْا بِدَعَوَاتٍ . 511
ஹகம் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : முஜாஹித் ரஹிமஹுல்லாஹ் என்னிடம் ஆள் அனுப்பினார்கள் . ( நான் அவர்களிடம் சென்றேன் ). “ நாங்கள் குர்ஆனை ( ஓதி ) முடிக்க நாடியுள்ளோம் ; எனவேதான் உங்களை நாங்கள் அழைத்தோம் . ( ஏனென்றால் ) குர்ஆனை முடிக்கின்றபோது ( கேட்கப்படுகின்ற ) பிரார்த்தனை ஏற்கப்படுகிறது என எங்களுக்குச் செய்தி கிடைத்தது ” என்றார்கள் . ( அதன்பிறகு ) அவர்கள் நீண்ட பிரார்த்தனைகளைச் செய்தார்கள் .
عَنْ إِبْرَاهِيمَ قَالَ إِذَا قَرَأَ الرَّجُلُ الْقُرْآنَ نَهَارًا صَلَّتْ عَلَيْهِ الْمَلَائِكَةُ حَتَّى يُمْسِيَ وَإِنْ قَرَأَهُ لَيْلًا صَلَّتْ عَلَيْهِ الْمَلَائِكَةُ حَتَّى يُصْبِحَ . 512
இப்ராஹீம் அந்நகஈ ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : ஒரு மனிதர் பகலில் குர்ஆனை ஓதினால் வானவர்கள் அவர்மீது மாலை வரை அருள்வேண்டிப் பிரார்த்தனை செய்கிறார்கள் . அதை அவர் இரவில் ஓதினால் வானவர்கள் அவர்மீது காலை வரை அருள்வேண்டிப் பிரார்த்தனை செய்கிறார்கள் . மற்றோர் அறிவிப்பில் உள்ளதாவது : சுலைமான் அல்அஉமஷ் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள் : நம்முடைய தோழர்கள் பகலின் தொடக்கத்திலும் ( காலை ) இரவின் தொடக்கத்திலும் ( மாலை ) குர்ஆனை முடிக்க விரும்புவதை நான் கண்டேன் . ( அதாவது குர்ஆனை முடிக்கின்ற துஆவைக் காலையில் அல்லது மாலையில் ஆக்கிக்கொள்ள விரும்புகிறார்கள் .)