பாடம்: 22. குர்ஆனைத் தூய்மையாளரே தொடுவார்
عَنْ أَبِي بَكْرِ بْنِ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ ، عَنْ أَبِيهِ ، عَنْ جَدِّهِ ، عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - أَنَّهُ كَتَبَ إِلَى أَهْلِ الْيَمَنِ بِكِتَابٍ فِيهِ الْفَرَائِضُ وَالسُّنَنُ وَالدِّيَاتُ ، وَبَعَثَ بِهِ مَعَ عَمْرِو بْنِ حَزْمٍ . فَذَكَرَ الْحَدِيثَ وَفِيهِ قَالِ : وَلَا يَمَسُّ الْقُرْآنَ إِلَّا طَاهِرٌ . 513
அபூபக்ர் பின் முஹம்மத் பின் அம்ர் பின் ஹஸ்ம் ரஹிமஹுல்லாஹ் அறிவிப்பதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் யமன்வாழ் மக்களுக்கு ஒரு கடிதம் எழுதினார்கள் . அதில் வாரிசுரிமைச் சட்டங்கள் , சுன்னத்தான நடைமுறைகள் , உயிர் இழப்பீட்டுச் சட்டங்கள் ஆகியவை இருந்தன . அதை அம்ர் பின் ஹஸ்ம் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கொடுத்து அனுப்பினார்கள் . அது ஒரு நீண்ட ஹதீஸ் . அதில் “ குர்ஆனைத் தூய்மையாளரே தவிர ( மற்றவர் ) தொட மாட்டார் ” என்று ( எழுதப்பட்டு ) இருந்தது .
عَنْ عَبدِ اللهِ بْنِ عُمَرَ قَالَ : قَالَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : وَلَا يَمَسُّ الْقُرْآنَ إِلَّا طَاهِرٌ . 514
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : “ குர்ஆனைத் தூய்மையாளரே தவிர ( மற்றவர் ) தொட மாட்டார் .”
عَنْ مُصْعَبِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ أَنَّهُ قَالَ كُنْتُ أُمْسِكُ الْمُصْحَفَ عَلَى سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ فَاحْتَكَكْتُ فَقَالَ سَعْدٌ لَعَلَّكَ مَسِسْتَ ذَكَرَكَ قَالَ فَقُلْتُ نَعَمْ فَقَالَ قُمْ فَتَوَضَّأْ فَقُمْتُ فَتَوَضَّأْتُ ثُمَّ رَجَعْتُ . 515
முஸ்அப் பின் சஅத் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : ( என் தந்தை ) சஅத் பின் அபீவக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் நான் குர்ஆன் பிரதியைப் பிடித்துக்கொண்டிருந்தேன் . அப்போது நான் அதை ( நேரடியாகத் தொடாமல் ) என் கீழாடை மூலம் பிடித்தேன் . அச்சமயத்தில் சஅத் அவர்கள் , “ நீ உன்னுடைய ( கையால் ) ஆணுறுப்பைத் தொட்டுவிட்டாயோ ?” என்று கேட்டார்கள் . அதற்கு நான் “ ஆம் ” என்றேன் . “( அப்படியானால் ) எழுந்து சென்று உளூ செய்துவிட்டு வா ” என்றார்கள் . எனவே நான் எழுந்து சென்று உளூ செய்துவிட்டுத் திரும்பி வந்தேன் .
عَنْ حَكِيمِ بْنِ حِزَامٍ ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ لَمَّا بَعَثَهُ وَالِيًا إِلَى الْيَمَنِ قَالَ لَا تَمَسَّ الْقُرْآنَ إِلَّا وَأَنْتَ طَاهِرٌ . 516
ஹகீம் பின் ஹிஸாம் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்னை யமன் நாட்டிற்கு ஆளுநராக அனுப்பியபோது , “ நீ தூய்மையாளராக இருக்கும் நிலையில் தவிர குர்ஆனைத் தொடவேண்டாம் ” என்று அறிவுறுத்தினார்கள் .