பாடம்: 23. உளூ இன்றிக் குர்ஆனை ஓதுதல்
عَنْ أَبِي الْغَرِيفِ قَالَ أُتِيَ عَلِيٌّ رَضِيَ اللَّهُ عَنْهُ بِوَضُوءٍ فَمَضْمَضَ وَاسْتَنْشَقَ ثَلَاثًا وَغَسَلَ وَجْهَهُ ثَلَاثًا وَغَسَلَ يَدَيْهِ وَذِرَاعَيْهِ ثَلَاثًا ثَلَاثًا ثُمَّ مَسَحَ بِرَأْسِهِ ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ ثُمَّ قَالَ هَكَذَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ ثُمَّ قَرَأَ شَيْئًا مِنْ الْقُرْآنِ ثُمَّ قَالَ هَذَا لِمَنْ لَيْسَ بِجُنُبٍ فَأَمَّا الْجُنُبُ فَلَا وَلَا آيَةَ . 517
அபுல் ஃகரீப் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : உளூ செய்வதற்காக அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்குத் தண்ணீர் கொண்டு வரப்பட்டது . அவர்கள் மூன்று தடவை வாய்கொப்பளித்து , நாசிக்குத் தண்ணீர் செலுத்தினார்கள் . மூன்று தடவை தம் முகத்தைக் கழுவினார்கள் . தம் இரு கைகளையும் முழங்கைகளையும் மும்மூன்று தடவை கழுவினார்கள் . பின்னர் தம் தலையைத் ( ஈரக்கையால் ) தடவினார்கள் . பிறகு தம் இரண்டு கால்களையும் கழுவினார்கள் . பின்னர் , “ இவ்வாறுதான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உளூ செய்வதை நான் பார்த்தேன் என்று கூறினார்கள் . பிறகு குர்ஆனிலிருந்து கொஞ்சத்தை ஓதினார்கள் . பிறகு , இ( வ்வாறு உளூ செய்வதான ) து குளியல் கடமையில்லாதவருக்குத்தான் . குளியல் கடமையானவரோ ( குர்ஆனை ) ஓதக்கூடாது ; ஒரு வசனத்தைக்கூட ( ஓதக்கூடாது )” என்றார்கள் .
عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ ، قَالَ : " كُنَّا مَعَ سَلْمَانَ ، فَخَرَجَ فَقَضَى حَاجَتَهُ ، ثُمَّ جَاءَ ، فَقُلْتُ : يَا أَبَا عَبْدِ اللَّهِ ، لَوْ تَوَضَّأْتَ ؛ لَعَلَّنَا أَنْ نَسْأَلَكَ عَنْ آيَاتٍ . فَقَالَ : إِنِّي لَسْتُ أَمَسُّهُ ، إِنَّمَا ( لَا يَمَسُّهُ إِلَّا الْمُطَهَّرُونَ ) فَقَرَأَ عَلَيْنَا مَا يَشَاءُ . 518
அப்துர் ரஹ்மான் பின் யஸீத் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : நாங்கள் சல்மான் அவர்களுடன் இருந்தோம் . ( அப்போது ) அவர்கள் வெளியே சென்று தம்முடைய சுயதேவையை நிறைவேற்றிவிட்டு , பிறகு வந்தார்கள் . ( அதன்பின் ) நான் அவர்களிடம் , “ அபூஅப்துல்லாஹ் அவர்களே ! நீங்கள் உளூ செய்துவிட்டால் நாங்கள் ( திருக்குர்ஆன் ) வசனங்களைப் பற்றி உங்களிடம் கேட்கலாம் ” என்று கூறினேன் . அதற்கு அவர்கள் , “ நான் அதை ( உளூ இன்றி ) த் தொடுவதில்லை . ( ஏனென்றால் ) ‘ தூய்மையானவர்களே அன்றி அதை ( மற்றவர்கள் ) தொடுவதில்லை ’ (56: 79 என்று அல்லாஹ் கூறியிருக்கிறான் ) என்பதுதான் காரணம் எனக் கூறிவிட்டு ( அதனைத் தொடாமலேயே ) நாங்கள் விரும்பிய அளவிற்கு எங்களுக்கு அவர்கள் ஓதிக் காட்டினார்கள் .
عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ كَانَ فِي قَوْمٍ وَهُمْ يَقْرَءُونَ الْقُرْآنَ فَذَهَبَ لِحَاجَتِهِ ثُمَّ رَجَعَ وَهُوَ يَقْرَأُ الْقُرْآنَ فَقَالَ لَهُ رَجُلٌ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ أَتَقْرَأُ الْقُرْآنَ وَلَسْتَ عَلَى وُضُوءٍ فَقَالَ لَهُ عُمَرُ مَنْ أَفْتَاكَ بِهَذَا أَمُسَيْلِمَةُ . 519
முஹம்மத் பின் சீரீன் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : உமர் ரளியல்லாஹு அன்ஹு ஒரு சமுதாய மக்கள் குர்ஆனை ஓதிக்கொண்டிருந்த நிலையில் அவர்களுடன் இருந்தார்கள் . ( பின்னர் சற்று நேரம் கழித்துத் ) தம் சுயதேவைக்காகச் சென்றுவிட்டு , பின்னர் வந்தார்கள் . ( பிறகு ) அவர்கள் குர்ஆனை ஓதினார்கள் . அப்போது அவர்களிடம் ஒரு மனிதர் , “ இறைநம்பிக்கையாளர்களின் தலைவர் அவர்களே ! உளூ இன்றிக் குர்ஆனை ஓதுகிறீர்களா ?” என்று கேட்டார் . அதற்கு உமர் ரளியல்லாஹு அன்ஹு , “ முசைலிமா ! ( உளூ இன்றிக் குர்ஆனை ஓதக்கூடாது எனும் ) இ( ச்சட்டத் ) தை யார் உமக்கு மார்க்கத் தீர்ப்பு வழங்கினார் ?” எனக் கேட்டார்கள் .