பாடம்: 2. தூய எண்ணம்
( ق) عَنْ عُمَرَ بْنَ الخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَخْطُبُ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «يَا أَيُّهَا النَّاسُ، إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّةِ، وَإِنَّمَا لِامْرِئٍ مَا نَوَى، فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى اللَّهِ وَرَسُولِهِ، فَهِجْرَتُهُ إِلَى اللَّهِ وَرَسُولِهِ، وَمَنْ هَاجَرَ إِلَى دُنْيَا يُصِيبُهَا [ص:23] أَوِ امْرَأَةٍ يَتَزَوَّجُهَا، فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ» 4
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக உமர் பின் அல்கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது : எண்ணத்தைப் பொருத்தே செயல்கள் அமைகின்றன . ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதுதான் கிடைக்கிறது . எனவே , எவரது ஹிஜ்ரத் ( நாடு துறத்தல் ) அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நோக்கமாகக் கொண்டு அமைகிறதோ , அவரது ஹிஜ்ரத் ( தின் பலனும் அவ்வாறே ) அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் அமையும் . எவரது ஹிஜ்ரத் அவர் அடைய விரும்பும் உலக ( ஆதாய ) த்தை , அல்லது அவர் மணக்க விரும்பும் பெண்ணை நோக்கமாகக் கொண்டுள்ளதோ , அவரது ஹிஜ்ரத் ( தின் பலனும் ) அதுவாகத்தான் இருக்கும் .
(م) عَنْ أَبِي هُرَيْرَةَ، فَقَالَ لَهُ نَاتِلُ أَهْلِ الشَّامِ: أَيُّهَا الشَّيْخُ، حَدِّثْنَا حَدِيثًا سَمِعْتَهُ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: نَعَمْ، سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " إِنَّ أَوَّلَ النَّاسِ يُقْضَى يَوْمَ الْقِيَامَةِ عَلَيْهِ رَجُلٌ اسْتُشْهِدَ، فَأُتِيَ بِهِ فَعَرَّفَهُ نِعَمَهُ فَعَرَفَهَا، قَالَ: فَمَا عَمِلْتَ فِيهَا؟ قَالَ: قَاتَلْتُ فِيكَ حَتَّى اسْتُشْهِدْتُ، قَالَ: كَذَبْتَ، وَلَكِنَّكَ قَاتَلْتَ لِأَنْ يُقَالَ: جَرِيءٌ، فَقَدْ قِيلَ، ثُمَّ أُمِرَ بِهِ فَسُحِبَ عَلَى وَجْهِهِ حَتَّى أُلْقِيَ فِي النَّارِ، وَرَجُلٌ تَعَلَّمَ الْعِلْمَ، وَعَلَّمَهُ وَقَرَأَ الْقُرْآنَ، فَأُتِيَ بِهِ فَعَرَّفَهُ نِعَمَهُ فَعَرَفَهَا، قَالَ: فَمَا عَمِلْتَ فِيهَا؟ قَالَ: تَعَلَّمْتُ الْعِلْمَ، وَعَلَّمْتُهُ وَقَرَأْتُ فِيكَ الْقُرْآنَ، قَالَ: كَذَبْتَ، وَلَكِنَّكَ تَعَلَّمْتَ الْعِلْمَ لِيُقَالَ: عَالِمٌ، وَقَرَأْتَ الْقُرْآنَ لِيُقَالَ: هُوَ قَارِئٌ، فَقَدْ قِيلَ، ثُمَّ أُمِرَ بِهِ فَسُحِبَ عَلَى وَجْهِهِ حَتَّى أُلْقِيَ فِي النَّارِ، وَرَجُلٌ وَسَّعَ اللهُ عَلَيْهِ، وَأَعْطَاهُ مِنْ أَصْنَافِ الْمَالِ كُلِّهِ، فَأُتِيَ بِهِ فَعَرَّفَهُ نِعَمَهُ فَعَرَفَهَا، قَالَ: فَمَا عَمِلْتَ فِيهَا؟ قَالَ: مَا تَرَكْتُ مِنْ سَبِيلٍ تُحِبُّ أَنْ يُنْفَقَ فِيهَا إِلَّا أَنْفَقْتُ فِيهَا لَكَ، قَالَ: كَذَبْتَ، وَلَكِنَّكَ فَعَلْتَ لِيُقَالَ: هُوَ جَوَادٌ، فَقَدْ قِيلَ، ثُمَّ أُمِرَ بِهِ فَسُحِبَ عَلَى وَجْهِهِ، ثُمَّ أُلْقِيَ فِي النَّارِ 5
சுலைமான் பின் யஸார் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : ( ஒரு முறை ) அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் மக்கள் ( கூடி , அவை ) கலைந்தபோது , சிரியாவாசியான நாத்தில் பின் கைஸ் என்பவர் , “ பெரியவரே ! அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து நீங்கள் செவியுற்ற ஹதீஸ் எதையேனும் எங்களுக்குத் தெரிவியுங்கள் `` என்று கேட்டார் . அதற்கு அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு , " ஆம் ( தெரிவிக்கிறேன் ). அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ( பின்வருமாறு ) கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள் : மறுமை நாளில் மக்களில் முதல் முதலில் தீர்ப்பு வழங்கப்படுபவர் யாரெனில் , இறைவழியில் உயிர்த் தியாகம் செய்தவரே ஆவார் . அவர் இறைவனிடம் கொண்டுவரப்படும்போது , அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான் . அவற்றை அவர் அறிந்துகொள்வார் . பிறகு , “ அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய் ?`` என்று இறைவன் கேட்பான் . அவர் , “( இறைவா !) உனக்காக நான் அறப்போரில் ஈடுபட்டு என் உயிரையே தியாகம் செய்தேன் `` என்று பதிலளிப்பார் . இறைவன் , “( இல்லை ) நீ பொய் சொல்கிறாய் . ( நீ எனக்காக உயிர்த்தியாகம் செய்யவில்லை .) மாறாக , " மாவீரன் ` என்று ( மக்கள் மத்தியில் ) பேசப்படுவதற்காகவே நீ போரிட்டாய் . அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது . ( உனது நோக்கம் நிறைவேறிவிட்டது )`` என்று கூறுவான் . பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு , அவர் நரகத்தில் எறியப்படுவார் . பிறகு கல்வியைத் தாமும் கற்று அதைப் பிறருக்குக் கற்பித்தவரும் குர்ஆனைக் கற்றுணர்ந்தவருமான ( மார்க்க அறிஞர் ) ஒருவர் ( இறைவனிடம் ) கொண்டுவரப்படுவார் . அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான் . அவற்றை அவர் அறிந்து கொள்வார் . பிறகு “ அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய் ?`` என்று இறைவன் கேட்பான் . அவர் , “( இறைவா !) கல்வியை நானும் கற்று , பிறருக்கும் அதை நான் கற்பித்தேன் . உனக்காகவே குர்ஆனை ஓதினேன் `` என்று பதிலளிப்பார் . அதற்கு இறைவன் , “( இல்லை ) நீ பொய் சொல்கிறாய் . ( எனக்காக நீ கல்வியைக் கற்கவுமில்லை ; கற்பிக்கவுமில்லை .) " அறிஞர் ` என்று சொல்லப்பட வேண்டும் என்பதற்காகவே நீ கல்வி கற்றாய் ; " குர்ஆன் அறிஞர் ` என ( மக்கள் மத்தியில் ) பேசப்படுவதற்காகவே நீ குர்ஆனை ஓதினாய் . அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது ( உனது நோக்கம் நிறைவேறிவிட்டது )`` என்று கூறுவான் . பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு , அவர் நரகத்தில் எறியப்படுவார் . பிறகு இறைவன் தாராளமான வாழ்க்கை வசதிகளும் அனைத்து விதமான செல்வங்களும் வழங்கியிருந்த பெரிய செல்வர் ஒருவர் இறைவனிடம் கொண்டுவரப்படுவார் . அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான் . அவற்றை அவர் அறிந்துகொள்வார் . பிறகு , “ அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய் ?`` என்று இறைவன் கேட்பான் . அதற்கு அவர் , “ நீ எந்தெந்த வழிகளில் எல்லாம் பொருள் செலவழிக்கப்படுவதை விரும்புகிறாயோ , அந்த வழிகளில் எதையும் விட்டுவிடாமல் அனைத்திலும் நான் உனக்காக எனது பொருளைச் செலவிட்டேன் `` என்று பதிலளிப்பார் . அதற்கு இறைவன் , “( இல்லை ) நீ பொய் சொல்கிறாய் " இவர் ஒரு புரவலர் ` என ( மக்கள் மத்தியில் ) பேசப்படுவதற்காகவே நீ இவ்வாறு ( செலவு ) செய்தாய் . ( உன் எண்ணப்படி ) அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது . ( உனது எண்ணம் நிறைவேறிவிட்டது )`` என்று கூறிவிடுவான் . பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு , அவர் நரகத்தில் எறியப்படுவார் .
عَنْ أَبِي كَبْشَةَ الْأَنْمَارِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " مَثَلُ هَذِهِ الْأُمَّةِ، كَمَثَلِ أَرْبَعَةِ نَفَرٍ، رَجُلٌ آتَاهُ اللَّهُ مَالًا وَعِلْمًا، فَهُوَ يَعْمَلُ بِعِلْمِهِ فِي مَالِهِ، يُنْفِقُهُ فِي حَقِّهِ، وَرَجُلٌ آتَاهُ اللَّهُ عِلْمًا، وَلَمْ يُؤْتِهِ مَالًا، فَهُوَ يَقُولُ: لَوْ كَانَ لِي مِثْلُ هَذَا عَمِلْتُ فِيهِ مِثْلَ الَّذِي يَعْمَلُ "، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " فَهُمَا فِي الْأَجْرِ سَوَاءٌ، وَرَجُلٌ آتَاهُ اللَّهُ مَالًا، وَلَمْ يُؤْتِهِ عِلْمًا، فَهُوَ يَخْبِطُ فِي مَالِهِ يُنْفِقُهُ فِي غَيْرِ حَقِّهِ، وَرَجُلٌ لَمْ يُؤْتِهِ اللَّهُ عِلْمًا، وَلَا مَالًا، فَهُوَ يَقُولُ: لَوْ كَانَ لِي مِثْلُ هَذَا، عَمِلْتُ فِيهِ مِثْلَ الَّذِي يَعْمَلُ "، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَهُمَا فِي الْوِزْرِ سَوَاءٌ» 6
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூகப்ஜா அல்அன்மாரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது : நான் அறுதியிட்டு மூன்று விஜயங்களை உங்களுக்குச் சொல்கிறேன் . மேலும் ( மற்றொரு ) செய்தியையும் உங்களுக்கு நான் தெரிவிப்பேன் . அதை நீங்கள் நினைவிலிருத்திக் கொள்ளுங்கள் . ( அந்த மூன்று விஜயங்கள் வருமாறு ) 1. தானம் செய்வதால் ஓர் அடியாரின் செல்வம் குறைந்துவிடுவதில்லை . 2. ஓர் அடியார் அநீதிக்குள்ளாகும்போது அதைப் பொறுமையுடன் சகித்துக்கொள்வாரானால் அவருக்கு அல்லாஹ் கண்ணியத்தை அதிகமாக்காமல் இருப்பதில்லை . 3. ஓர் அடியான் யாசகத்தின் வாசலைத் திறந்தால் அவனுக்கு அல்லாஹ் வறுமையின் வாசலைத் திறக்காமல் இருப்பதில்லை . ( இவ்வாறுதான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் . அல்லது இதைப் போன்று வேறொரு வார்த்தையைக் கூறினார்கள் .) மேலும் மற்றொரு செய்தியையும் உங்களுக்கு நான் தெரிவிப்பேன் . அதை நீங்கள் நினைவிலிருத்திக் கொள்ளுங்கள் என்று நான் கூறினேன் அல்லவா ? அந்தச் செய்தி வருமாறு : இந்தச் சமுதாயத்தின் உதாரணம் நான்கு நபர்களின் உதாரணத்தைப் போன்று உள்ளது . 1. ஒருவருக்கு அல்லாஹ் செல்வத்தையும் கல்வியையும் ( ஒருசேரக் ) கொடுத்தான் . அவர் தம் கல்விக்கேற்பத் தம் செல்வத்தைச் செலவு செய்கிறார் . அதை அதற்குரிய முறையில் செலவிடுகிறார் . 2. ஒருவருக்கு அல்லாஹ் கல்வியைக் கொடுத்தான் . அவருக்குச் செல்வத்தைக் கொடுக்கவில்லை . அப்போது அவர் , இவருக்கு இருப்பதைப் போன்று எனக்கு இருந்திருந்தால் , அதை இவர் செலவு செய்வதைப் போன்றே நான் செய்திருப்பேன் என்று கூறுகிறார் . ( எனவே ) இருவரும் சமமான கூலியைப் பெறுபவர்கள் ஆவர் 3. ஒருவருக்கு அல்லாஹ் செல்வத்தைக் கொடுத்தான் . கல்வியைக் கொடுக்கவில்லை . அவர் தம் செல்வத்தைக் கண்டபடி செலவு செய்கிறார் . தேவையில்லாதவற்றில் அதைச் செலவிடுகிறார் . 4. ஒருவருக்கு அல்லாஹ் கல்வியையும் செல்வத்தையும் கொடுக்கவில்லை . அப்போது அவர் , இவரிடம் இருப்பதைப் போன்று எனக்கு வழங்கப்பட்டிருந்தால் இவர் செய்வதைப் போன்று நானும் செய்திருப்பேன் என்று கூறுகிறார் . ( எனவே ) இவ்விருவரும் பாவத்தில் சமமானவர்கள் ஆவர் .
عَنْ أَبِي أُمَامَةَ الْبَاهِلِيِّ، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: أَرَأَيْتَ رَجُلًا غَزَا يَلْتَمِسُ الْأَجْرَ وَالذِّكْرَ، مَالَهُ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا شَيْءَ لَهُ» فَأَعَادَهَا ثَلَاثَ مَرَّاتٍ، يَقُولُ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا شَيْءَ لَهُ» ثُمَّ قَالَ: «إِنَّ اللَّهَ لَا يَقْبَلُ مِنَ الْعَمَلِ إِلَّا مَا كَانَ لَهُ خَالِصًا، وَابْتُغِيَ بِهِ وَجْهُهُ» 7
அபூஉமாமா அல்பாஹிலீ ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து , நன்மையையும் புகழையும் எதிர்பார்த்துப் போராடிய மனிதருக்கு என்ன ( நன்மை அல்லாஹ்விடம் ) உண்டு ? என்று வினவினார் . அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ அவருக்கு ( அல்லாஹ்விடம் ) ஒன்றும் இல்லை ” எனக் கூறினார்கள் . அவர் அதை மூன்று முறை திரும்பத் திரும்பக் கேட்டார் . அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ அவருக்கு ( அல்லாஹ்விடம் ) ஒன்றும் இல்லை ” எனக் கூறிவிட்டு , பிறகு “ திண்ணமாக அல்லாஹ் , அவனுடைய திருப்தியை நாடி அவனுக்காகவே செய்யப்பட்ட ( நல்ல ) செயல்பாட்டைத்தான் ஏற்றுக்கொள்வான் ” என்று கூறினார்கள் .
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا يُبْعَثُ النَّاسُ عَلَى نِيَّاتِهِمْ» 8
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது : மக்கள் அவர்கள் தம் எண்ணப்படியே ( மறுமையில் ) எழுப்பப்படுவார்கள் .
عَنِ الضَّحَّاكِ بْنِ قَيْسٍ، رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:" إِنَّ اللَّهَ تَعَالَى يَقُولُ: أَنَا خَيْر شَرِيكٍ، مَنْ أَشْرَكَ بِي فَهُوَ لِشَرِيكِي، يَأَيُّهَا النَّاسُ أَخْلِصُوا أَعْمَالَكُمْ للَّهِ، فَإِنَّ اللَّهَ لا يَقْبَلُ مِنَ الْعَمَلِ إِلا مَا خَلُصَ، وَلا تَقُولُوا: هَذَا للَّهِ وَالرَّحِمِ، فَإِنَّهُ لِلرَّحِمِ وَلَيْسَ للَّهِ مِنْهُ شَيْءٌ، وَلا تَقُولُوا: هَذَا للَّهِ وَلِوُجُوهِكُمْ، فَإِنَّمَا هُوَ لِوُجُوهِكُمْ، وَلَيْسَ للَّهِ فِيهِ شَيْءٌ " 9
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக ளஹ்ஹாக் பின் கைஸ் அல்ஃபிஹ்ரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது : மகத்துவமும் மாண்பும் உடைய அல்லாஹ் சொல்கிறான் : நானே சிறந்த கூட்டாளி ( தோழன் ). யார் என்னுடன் ஒரு கூட்டாளியைச் சேர்த்தானோ , அவன் என்னுடைய கூட்டாளிக்கு உரியவனாவான் . ( எனக்கு உரியவன் அன்று ). “ மக்களே ! மகத்துவமும் மாண்பும் உடைய அல்லாஹ்வுக்காக உங்களுடைய செயல்களை ஆக்கிக்கொள்ளுங்கள் . ஏனென்றால் திண்ணமாக அல்லாஹ் , அவனுக்காகவே செய்யப்பட்டதைத் தவிர ( மற்றவற்றை ) ஏற்றுக்கொள்ள மாட்டான் . ‘ இது அல்லாஹ்வுக்காகவும் உறவுக்காகவும் ’ என்று சொல்லாதீர்கள் . ஏனென்றால் அது உறவுக்காக ( ச் செய்யப்பட்டதாக ) த்தான் ஆகும் . அதிலிருந்து அல்லாஹ்வுக்காக எதுவும் இல்லை . ‘ இது அல்லாஹ்வுக்காகவும் உங்களின் முகங்களுக்காகவும் ’ என்றும் சொல்லாதீர்கள் . ஏனென்றால் அது உங்களின் முகங்களுக்காக ( ச் செய்யப்பட்டதாக ) த்தான் ஆகும் . அதிலிருந்து அல்லாஹ்வுக்காக எதுவும் இல்லை .
( م ) عَنِ ابْنِ شِمَاسَةَ الْمَهْرِيِّ، قَالَ: حَضَرْنَا عَمْرَو بْنَ الْعَاصِ، وَهُوَ فِي سِيَاقَةِ الْمَوْتِ، يَبَكِي طَوِيلًا، وَحَوَّلَ وَجْهَهُ إِلَى الْجِدَارِ، فَجَعَلَ ابْنُهُ يَقُولُ: يَا أَبَتَاهُ، أَمَا بَشَّرَكَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِكَذَا؟ أَمَا بَشَّرَكَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِكَذَا؟ قَالَ: فَأَقْبَلَ بِوَجْهِهِ، فَقَالَ: إِنَّ أَفْضَلَ مَا نُعِدُّ شَهَادَةُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ، وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللهِ، إِنِّي قَدْ كُنْتُ عَلَى أَطْبَاقٍ ثَلَاثٍ، لَقَدْ رَأَيْتُنِي وَمَا أَحَدٌ أَشَدَّ بُغْضًا لِرَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنِّي، وَلَا أَحَبَّ إِلَيَّ أَنْ أَكُونَ قَدِ اسْتَمْكَنْتُ مِنْهُ، فَقَتَلْتُهُ، فَلَوْ مُتُّ عَلَى تِلْكَ الْحَالِ لَكُنْتُ مِنْ أَهْلِ النَّارِ، فَلَمَّا جَعَلَ اللهُ الْإِسْلَامَ فِي قَلْبِي أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: ابْسُطْ يَمِينَكَ فَلْأُبَايِعْكَ، فَبَسَطَ يَمِينَهُ، قَالَ: فَقَبَضْتُ يَدِي، قَالَ: «مَا لَكَ يَا عَمْرُو؟» قَالَ: قُلْتُ: أَرَدْتُ أَنْ أَشْتَرِطَ، قَالَ: «تَشْتَرِطُ بِمَاذَا؟» قُلْتُ: أَنْ يُغْفَرَ لِي، 10
அப்துர் ரஹ்மான் பின் ஜுமாஸா அல்மஹ்ரீ ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : இறப்பின் நெருக்கத்தில் இருந்த அம்ர் பின் அல்ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் நாங்கள் சென்றோம் . அவர்கள் நீண்ட நேரம் அழுதார்கள் . பிறகு அவர்கள் சுவரை நோக்கித் தமது முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள் . அப்போது அவர்களுடைய புதல்வர் , “ அருமைத் தந்தையே ! தங்களுக்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இன்னின்ன நற்செய்திகளைக் கூறவில்லையா ?`` என்று கேட்டார் . உடனே அம்ர் பின் அல்ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு தமது முகத்தை ( தம் புதல்வரை நோக்கி ) த் திருப்பி ( பின்வருமாறு ) கூறினார்கள் : " அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள் ` என்றும் உறுதி கூறியதே நமது சேமிப்புகளில் சிறந்தது ஆகும் . நான் ( என் வாழ்நாளில் ) மூன்று கட்டங்களைக் கடந்து வந்திருக்கிறேன் . ( முதலாவது கட்டத்தில் ) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்மீது கடுமையான வெறுப்புக் கொண்டவர் என்னைவிட வேறெவரும் இருக்கவில்லை என்றே நான் கருதினேன் . என்னால் இயன்றால் அவர்களைக் கொன்றுவிட வேண்டும் என்பதே எனக்கு மிகவும் விருப்பமான விஷயமாக இருந்தது . அந்தக் காலகட்டத்தில் மட்டும் நான் இறந்துவிட்டிருந்தால் நான் நரகவாசிகளில் ஒருவனாக ஆகியிருப்பேன் . ( இரண்டாவது கட்டத்தில் ) அல்லாஹ் என் உள்ளத்தில் இஸ்லாத்தை ஊட்டினான் . அப்போது நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று “ உங்கள் வலக் கரத்தை நீட்டுங்கள் . நான் உங்களிடம் உறுதிப் பிரமாணம் ( பைஅத் ) அளிக்கிறேன் `` என்று கூறினேன் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தமது வலக்கரத்தை நீட்டினார்கள் . உடனே நான் எனது கையை இழுத்துக்கொண்டேன் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ அம்ரே ! உமக்கு என்ன ஆயிற்று ?`` என்று கேட்டார்கள் . நான் , “ சில நிபந்தனைகளை விதிக்க விரும்புகிறேன் `` என்று கூறினேன் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ என்ன நிபந்தனை விதிக்கப்போகிறீர் ?`` என்று கேட்டார்கள் . “ என் ( முந்தைய ) பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும் `` என்று கூறினேன் . அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ முந்தைய பாவங்களை இஸ்லாம் அழித்துவிடும் ; ஹிஜ்ரத்தும் (- மார்க்கத்திற்காக நாடுதுறத்தல் ) முந்தைய பாவங்களை அழித்துவிடும் ; ஹஜ்ஜும் முந்தைய பாவங்களை அழித்துவிடும் என்று உமக்குத் தெரியாதா ?`` என்று கேட்டார்கள் . ( பிறகு நான் இஸ்லாத்தைத் தழுவினேன் .) அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைவிட மிகவும் பிரியமானவர் வேறெவரும் எனக்கு இருக்கவில்லை ; எனது பார்வைக்கு அவர்களைவிட மிகவும் கண்ணியமானவர் வேறெவரும் இருக்கவில்லை . அப்போது அவர்கள்மீது நான் வைத்திருந்த மரியாதையால் என் கண்கள் நிரம்ப அவர்களைப் பார்க்கக்கூட என்னால் முடியவில்லை . அவர்களை வர்ணித்துக் கூறும்படி நான் கேட்டுக்கொள்ளப்பட்டால் அதற்கும் என்னால் இயலாது . ஏனெனில் , நான் அவர்கள்மீது வைத்திருந்த மரியாதையின் காரணத்தால் என் கண்கள் நிரம்ப அவர்களை நான் பார்த்திருக்கவில்லை . அந்த நிலையில் நான் இறந்திருந்தால் சொர்க்கவாசிகளுள் ஒருவனாக ஆகியிருப்பேன் என்றே எதிர் பார்க்கிறேன் . பிறகு ( மூன்றாவது கட்டத்தில் ) பல்வேறு பொறுப்புகளை நாம் வகித்தோம் . அவற்றில் எனது நிலையென்ன என்பது எனக்குத் தெரியாது . எனவே , நான் இறந்துவிட்டால் ஒப்பாரி வைப்பவரோ நெருப்போ என் சடலத்தோடு இருக்கலாகாது . என்னை ( க் குழிக்குள் வைத்து ) நீங்கள் அடக்கம் செய்யும்போது என்மீது மண்ணைத் தள்ளுங்கள் . பிறகு ஓர் ஒட்டகத்தை அறுத்து அதன் இறைச்சியைப் பங்கிடும் நேரம் அளவுக்கு நீங்கள் அடக்கத்தலத்தைச் சுற்றி நில்லுங்கள் . உங்களால் நான் ஆசுவாசமடைவேன் ; என் இறைவனின் தூதர்க ( ளான வானவர்க ) ளிடம் நான் என்ன பதிலளிப்பது என்பதையும் கண்டுகொள்வேன் .
عَنْ أَنَسٍ، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، مَا تَرَكْتُ حَاجَةً، وَلا دَاجَةً إِلا قَدْ أَتَيْتُ، قَالَ: " أَلَيْسَ تَشْهَدُ أَنْ لا إِلَهَ إِلا اللَّهُ، وَأَنَّ مُحَمَّدًا رَسُولَ اللَّهِ، ثَلاث مَرَّاتٍ؟ "، قَالَ: نَعَمْ، قَالَ: " فَإِنَّ ذَلِكَ يَأْتِي عَلَى ذَلِكَ 11
அனஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து , அல்லாஹ்வின் தூதரே ! நான் சிறிய , பெரிய எந்தப் பாவத்தையும் செய்யாமல் விடவில்லை . ( என்னுடைய பாவங்கள் மன்னிக்கப்படுமா ) என்று கேட்டார் . “ அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள் என்றும் நீ சாட்சி சொல்லவில்லையா ?” என்று கேட்டார்கள் . இவ்வாறு மூன்று முறை கேட்டார்கள் . அதற்கு அவர் , ஆம் ( நான் சாட்சி சொல்லியுள்ளேன் ) என்று கூறினார் . ( அப்படியானால் ) அது அவ்வாறே ( பாவங்களை அழித்துவிட்டு ) வரும் .