பாடம்: 4. இஸ்லாம் அதற்கு முந்தைய மார்க்கங்களைக் காலாவதியாக்கிவிட்டது
( م) عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ، لَا يَسْمَعُ بِي أَحَدٌ مِنْ هَذِهِ الْأُمَّةِ يَهُودِيٌّ، وَلَا نَصْرَانِيٌّ، ثُمَّ يَمُوتُ وَلَمْ يُؤْمِنْ بِالَّذِي أُرْسِلْتُ بِهِ، إِلَّا كَانَ مِنْ أَصْحَابِ النَّارِ» 12
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது : முஹம்மதின் உயிர் யாருடைய கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக ! இந்த ( இறுதி ) ச் சமுதாயத்திலுள்ள யூதரோ கிறிஸ்தவரோ யாரேனும் ஒருவர் என் ( மார்க்கத்தி ) னைப் பற்றிக் கேள்விப்பட்ட பிறகும்கூட நான் கொண்டுவந்த ( மார்க்கத் ) தை நம்பிக்கை கொள்ளாமல் இறந்து விட்டால் , அவர் நரகவாசிகளுள் ஒருவராகவே இருப்பார் .
عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قِيلَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّ الْأَدْيَانِ أَحَبُّ إِلَى اللَّهِ؟ قَالَ: «الْحَنِيفِيَّةُ السَّمْحَةُ» 13
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : மார்க்கங்களில் எது அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்கப்பட்டது . அதற்கவர்கள் , “ அசத்தியத்தை விட்டுச் சத்தியத்தில் நிலைத்து நிற்கின்ற இலகுவான ( இஸ்லாமிய ) மார்க்கமே ” எனக் கூறினார்கள் .