பாடம்: 6. இறைமறுப்பிலேயே மரணித்தவர் நரகத்தில் நுழைவார்
( م ) عَنْ عَائِشَةَ، قَالَتْ: قُلْتُ: " يَا رَسُولَ اللَّهِ، ابْنُ جُدْعَانَ، كَانَ فِي الْجَاهِلِيَّةِ يَصِلُ الرَّحِمَ، وَيُطْعِمُ الْمِسْكِينَ، فَهَلْ ذَاكَ نَافِعُهُ؟ قَالَ: لَا يَنْفَعُهُ، إِنَّهُ لَمْ يَقُلْ يَوْمًا: رَبِّ اغْفِرْ لِي خَطِيئَتِي يَوْمَ الدِّينِ " 20
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறியதாவது : நான் , “ அல்லாஹ்வின் தூதரே ! இப்னு ஜுத்ஆன் அறியாமைக் காலத்தில் உறவுகளைப் பேணி நடப்பவராகவும் ஏழைகளுக்கு உணவளிப்பவராகவும் இருந்தாரே ! இவை அவருக்கு ( மறுமை நாளில் ) பயனளிக்குமா ?`` என்று கேட்டேன் . அதற்கு அவர்கள் , “ அவருக்குப் பயனளிக்கா ; அவர் ஒரு நாள்கூட " இறைவா ! விசாரணை நாளில் என் பாவத்தை மன்னித்தருள்வாயாக !` எனக் கேட்டதேயில்லை `` என்று பதிலளித்தார்கள் .
سَمِعْتُ مُعَاوِيَةَ يَخْطُبُ - وَكَانَ قَلِيلَ الْحَدِيثِ -، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: سَمِعْتُهُ يَخْطُبُ يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «كُلُّ ذَنْبٍ عَسَى اللَّهُ أَنْ يَغْفِرَهُ، إِلَّا الرَّجُلُ يَقْتُلُ الْمُؤْمِنَ مُتَعَمِّدًا، أَوِ الرَّجُلُ يَمُوتُ كَافِرًا» 21
அபூஇத்ரீஸ் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : முஆவியா ரளியல்லாஹு அன்ஹு உரையாற்றியபோது கூறியதை நான் செவியுற்றேன் . அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து மிகக் குறைவாகவே ஹதீஸை அறிவித்துள்ளார்கள் . அவர்கள் உரையாற்றியபோது நான் செவியுற்றதாவது : ஓர் இறைநம்பிக்கையாளரை வேண்டுமென்றே கொலை செய்தவனையும் , காஃபிராகவே மரணித்துவிடுபவனையும் தவிர எல்லாப் பாவங்களையும் அல்லாஹ் மன்னித்துவிடலாம் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் .