7- باب : حتى يقولوا لا إله إلا الله
பாடம் 7

பாடம்: 7. லாயிலாஹ இல்லல்லாஹ் சொல்லும் வரை …

ஹதீஸ் 22 அத்தியாயம் 1 பாடம் 7

(ق) عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَشْهَدُوا أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، وَيُقِيمُوا الصَّلاَةَ، وَيُؤْتُوا الزَّكَاةَ، فَإِذَا فَعَلُوا ذَلِكَ عَصَمُوا مِنِّي دِمَاءَهُمْ وَأَمْوَالَهُمْ إِلَّا بِحَقِّ الإِسْلاَمِ، وَحِسَابُهُمْ عَلَى اللَّهِ» 22

அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : “ அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை ; முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்வின் தூதர் என உறுதிமொழிந்து , ( கடமையான ) தொழுகையை நிலைநிறுத்தி , ஸகாத் ( எனும் ஏழைகளின் உரிமையை ) வழங்காத வரை ( இணைவைக்கும் ) மக்களுடன் போரிடும்படி நான் கட்டளையிடப்பட்டேன் . இவற்றை அவர்கள் செய்துவிடுவார்களானால் தம் உயிரையும் உடைமைகளையும் என்னிடமிருந்து அவர்கள் பாதுகாத்துக்கொள்ள முடியும் . ( மரண தண்டனைக்குரிய ) இஸ்லாத்தின் இதர உரிமைகளில் ( அவர்கள் வரம்பு மீறினாலே ) தவிர ! மேலும் ( இரகசியமாகக் குற்றமிழைத்தால் ) அவர்களின் விசாரணை அல்லாஹ்வின் பொறுப்பிலுள்ளது ” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் .

Reference: ( புகாரீ : 25, முஸ்லிம் : 22)