பாடம்: 13. அல்லாஹ்வை நம்பிக்கைகொண்டு, நட்சத்திரங்களை மறுப்பவர்
(ق) عن زيد بن خالد رضي الله عنه قال: صلى بنا رسول الله صلى الله عليه وسلم صلاة الصبح بالحديبية في إثر سماء كانت من الليل فلما انصرف أقبل على الناس فقال هل تدرون ماذا قال ربكم قالوا الله ورسوله أعلم قال قال أصبح من عبادي مؤمن بي وكافر فأما من قال مطرنا بفضل الله ورحمته فذلك مؤمن بي كافر بالكوكب وأما من قال مطرنا بنوء كذا وكذا فذلك كافر بي مؤمن بالكوكب. 36
ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் " ஹுதைபியா ` எனுமிடத்தில் எங்களுக்கு ஸுப்ஹு தொழுகை தொழுவித்தார்கள் . அன்றிரவு மழை பெய்திருந்தது . தொழுது முடித்ததும் மக்களை நோக்கி நேராகத் திரும்பி , “ உங்கள் இறைவன் என்ன கூறினான் என்பதை நீங்கள் அறிவீர்களா ?`` என்று கேட்டார்கள் . அதற்கு மக்கள் , “ அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள் `` என்று கூறினர் . அப்போது “ என்னை நம்பக் கூடியவர்களும் ( என்னை ) மறுக்கக்கூடியவர்களுமாக என் அடியார்கள் ( இரு பிரிவினராக ) உள்ளனர் . ‘ அல்லாஹ்வின் தயவாலும் அவன் கருணையாலும்தான் நமக்கு மழை பொழிந்தது ` எனக் கூறியவர்களோ என்னை நம்பி , நட்சத்திரத்தை மறுத்தவர்களாவர் . இன்ன இன்ன நட்சத்திரத்தால்தான் ( எங்களுக்கு மழை பொழிந்தது ) எனக் கூறியவர்களோ என்னை மறுத்து , நட்சத்திரத்தை நம்பியவர்களாவர் ` என இறைவன் கூறினான் `` என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் .