பாடம்: 16. நன்மையை ஏவலும் தீமையைத் தடுத்தலும்
( خ ) عن النُّعْمَانَ بْنَ بَشِيرٍ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَثَلُ الْقَائِمِ عَلَى حُدُودِ اللَّهِ وَالْوَاقِعِ فِيهَا كَمَثَلِ قَوْمٍ اسْتَهَمُوا عَلَى سَفِينَةٍ، فَأَصَابَ بَعْضُهُمْ أَعْلاَهَا وَبَعْضُهُمْ أَسْفَلَهَا، فَكَانَ الَّذِينَ فِي أَسْفَلِهَا إِذَا اسْتَقَوْا مِنَ الْمَاءِ مَرُّوا عَلَى مَنْ فَوْقَهُمْ فَقَالُوا لَوْ أَنَّا خَرَقْنَا فِي نَصِيبِنَا خَرْقًا، وَلَمْ نُؤْذِ مَنْ فَوْقَنَا. فَإِنْ يَتْرُكُوهُمْ وَمَا أَرَادُوا هَلَكُوا جَمِيعًا، وَإِنْ أَخَذُوا عَلَى أَيْدِيهِمْ نَجَوْا وَنَجَوْا جَمِيعًا ". 44
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக நுஅமான் பின் பஷீர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அல்லாஹ்வின் ( சட்ட ) வரம்புகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பவனுக்கும் அவற்றை மீறி நடப்பவனுக்கும் உவமை ஒரு சமுதாயத்தைப் போன்றதாகும் . அவர்கள் கப்பலில் ( தங்களுக்கு இடம் பிடிப்பதற்காகச் ) சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள் . ( அதன்படி ) அவர்களுள் சிலருக்குக் கப்பலின் மேல் தளத்திலும் சிலருக்குக் கீழ்த்தளத்திலும் இடம் கிடைத்தது . கீழ்த்தளத்தில் இருந்தவர்களுக்குத் தண்ணீர் தேவைப்பட்டபோது ( அதைக் கொண்டு வர ) அவர்கள் மேல் தளத்தில் இருப்பவர்களைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது . ( அதனால் மேலே இருந்தவர்களுக்குச் சிரமம் ஏற்பட்டது ). அப்போது , கீழ்த் தளத்தில் இருந்தவர்கள் ( தமக்குள் ) “ நாம் ( தண்ணீருக்காக ) நமது பங்கில் ( கீழ்த் தளத்தில் ) ஓட்டையிட்டுக் கொள்வோம் ; நமக்கு மேலே இருப்பவர்களைத் தொந்தரவு செய்யாமலிருப்போம் ” என்று பேசிக் கொண்டார்கள் . அவர்கள் விரும்பியபடி செய்துகொள்ள அவர்களை மேல் தளத்தில் உள்ளவர்கள் விட்டுவிட்டால் ( கப்பலில் இருப்பவர்கள் ) அனைவரும் அழிந்து போவார்கள் . ( ஓட்டையிட விடாமல் ) அவர்களுடைய கரத்தைப் பிடித்துக் கொள்வார்களாயின் அவர்களும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள் ; ( அவர்களுடன் மற்ற ) அனைவரும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள் .
(م) عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ، قَالَ : أَوَّلُ مَنْ بَدَأَ بِالْخُطْبَةِ يَوْمَ الْعِيدِ قَبْلَ الصَّلاَةِ مَرْوَانُ فَقَامَ إِلَيْهِ رَجُلٌ فَقَالَ الصَّلاَةُ قَبْلَ الْخُطْبَةِ . فَقَالَ قَدْ تُرِكَ مَا هُنَالِكَ . 45
தாரிக் பின் ஷிஹாப் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : முதன் முதலில் பெருநாள் தினத்தில் தொழுகைக்கு முன் சொற்பொழிவு ( குத்பா ) நிகழ்த்தியவர் மர்வான் பின் ஹகம் ஆவார் . ( அவ்வாறு அவர் சொற்பொழிவு நிகழ்த்திக்கொண்டிருந்தார் .) அப்போது அவரை நோக்கி ஒருவர் எழுந்து நின்று , “ சொற்பொழிவுக்கு முன்பே ( பெருநாள் தொழுகை ) தொழ வேண்டும் `` என்று கூறினார் . அதற்கு மர்வான் “ முன்பு நடைபெற்றது கைவிடப்பட்டுவிட்டது ( இப்போது அது நடைமுறையில் இல்லை )`` என்று கூறினார் . ( அப்போது அங்கிருந்த ) அபூசயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு , " இதோ இந்த மனிதர் தமது கடமையை நிறைவேற்றிவிட்டார் . அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ( பின்வருமாறு ) கூற நான் கேட்டுள்ளேன் : உங்களுள் ஒருவர் ஒரு தீமையை ( மார்க்கத்திற்கு முரணான ஒரு செயலை ) க் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும் . முடியாவிட்டால் தமது நாவால் ( சொல்லித் தடுக்கட்டும் ). அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் ( அதை வெறுத்து ஒதுக்கட்டும் ). இந்த ( இறுதி ) நிலையானது இறைநம்பிக்கையின் பலவீனமா ( ன நிலையா ) கும் .
( م) عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَا مِنْ نَبِيٍّ بَعَثَهُ اللَّهُ فِي أُمَّةٍ قَبْلِي إِلاَّ كَانَ لَهُ مِنْ أُمَّتِهِ حَوَارِيُّونَ وَأَصْحَابٌ يَأْخُذُونَ بِسُنَّتِهِ وَيَقْتَدُونَ بِأَمْرِهِ ثُمَّ إِنَّهَا تَخْلُفُ مِنْ بَعْدِهِمْ خُلُوفٌ يَقُولُونَ مَا لاَ يَفْعَلُونَ وَيَفْعَلُونَ مَا لاَ يُؤْمَرُونَ فَمَنْ جَاهَدَهُمْ بِيَدِهِ فَهُوَ مُؤْمِنٌ وَمَنْ جَاهَدَهُمْ بِلِسَانِهِ فَهُوَ مُؤْمِنٌ وَمَنْ جَاهَدَهُمْ بِقَلْبِهِ فَهُوَ مُؤْمِنٌ وَلَيْسَ وَرَاءَ ذَلِكَ مِنَ الإِيمَانِ حَبَّةُ خَرْدَلٍ " . 46
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது : எனக்கு முந்தைய சமுதாயத்தார் மத்தியில் அல்லாஹ் அனுப்பிய ஒவ்வோர் இறைத் தூதருக்கும் அவருடைய சமுதாயத்திலேயே சிறப்பு உதவியாளர்களும் நண்பர்களும் இல்லாமல் இருந்ததில்லை . அவர்கள் அந்த இறைத்தூதரின் வழிமுறையைக் கடைப்பிடிப்பார்கள் ; அவரது உத்தரவைப் பின்பற்றி நடப்பார்கள் . அந்தத் தோழர்களுக்குப் பிறகு சிலர் வருவார்கள் . அவர்கள் தாம் செய்யாதவற்றைச் சொல்வார்கள் . தமக்குக் கட்டளையிடப்படாதவற்றைச் செய்வார்கள் . ஆகவே , யார் இ( த்தகைய ) வர்களுடன் தமது கரத்தால் போராடுவாரோ அவர் இறைநம்பிக்கையாளர் ஆவார் . யார் இவர்களுடன் தமது நாவால் போராடுவாரோ அவரும் இறைநம்பிக்கையாளர் ஆவார் . யார் இவர்களுடன் தமது உள்ளத்தால் போராடுவாரோ அவரும் இறைநம்பிக்கையாளர்தாம் . இவற்றுக்கப்பால் இறைநம்பிக்கை என்பது கடுகளவுகூடக் கிடையாது .
عَنِ ابْنِ عُمَرَ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " أَيُّهَا النَّاسُ ، مُرُوا بِالْمَعْرُوفِ ، وَانْهَوْا عَنِ الْمُنْكَرِ ، قَبْلَ أَنْ تَدْعُوا اللَّهَ فَلا يَسْتَجِيبَ لَكُمْ ، وَقَبْلَ أَنْ تَسْتَغْفِرُوهُ فَلا يَغْفِرَ لَكُمْ ، إِنَّ الأَمْرَ بِالْمَعْرُوفِ وَالنَّهْيَ عَنِ الْمُنْكَرِ لا يَدْفَعُ رِزْقًا ، وَلا يُقَرِّبُ أَجَلا ، وَإِنَّ الأَحْبَارَ مِنَ الْيَهُودِ ، وَالرُّهْبَانَ مِنَ النَّصَارَى لَمَّا تَرَكُوا الأَمْرَ بِالْمَعْرُوفِ وَالنَّهْيَ عَنِ الْمُنْكَرِ لَعَنَهُمُ اللَّهُ عَلَى لِسَانِ أَنْبِيَائِهِمْ ، ثُمَّ عُمُّوا بِالْبَلاءِ " . 47
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது : மக்களே ! நீங்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தும் உங்களுக்குப் பதிலளிக்கப்படாமல் ஆவதற்கு முன்னரே , நீங்கள் பாவமன்னிப்புத் தேடியும் உங்களை அவன் மன்னிக்காதிருக்கும் முன்னரே நீங்கள் நன்மையை ஏவுங்கள் ; தீமையைத் தடுங்கள் . திண்ணமாக நன்மையை ஏவுவதும் தீமையைத் தடுப்பதும் வாழ்வாதாரத்தை நீக்கிவிடாது ; தவணையை நெருக்கமாக்காது . ( துரித மரணத்தைத் தடுக்கும் .) யூத மதத் தலைவர்களும் கிறிஸ்தவ மதத் துறவிகளும் நன்மையை ஏவுவதையும் தீமையைத் தடுப்பதையும் விட்டுவிட்டபோது அல்லாஹ் அவர்களை அவர்களின் நபிமார்கள் மூலம் சபித்தான் . பிறகு அவர்கள் அனைவர் மீதும் சோதனை பொதுவானதாக ஆக்கப்பட்டது .
( ق) عن أسامة بن زيد قال : سَمِعْتُهُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم. يَقُولُ " يُجَاءُ بِالرَّجُلِ يَوْمَ الْقِيَامَةِ فَيُلْقَى فِي النَّارِ، فَتَنْدَلِقُ أَقْتَابُهُ فِي النَّارِ، فَيَدُورُ كَمَا يَدُورُ الْحِمَارُ بِرَحَاهُ، فَيَجْتَمِعُ أَهْلُ النَّارِ عَلَيْهِ، فَيَقُولُونَ أَىْ فُلاَنُ، مَا شَأْنُكَ أَلَيْسَ كُنْتَ تَأْمُرُنَا بِالْمَعْرُوفِ وَتَنْهَى عَنِ الْمُنْكَرِ قَالَ كُنْتُ آمُرُكُمْ بِالْمَعْرُوفِ وَلاَ آتِيهِ، وَأَنْهَاكُمْ عَنِ الْمُنْكَرِ وَآتِيهِ ". 48
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து செவியுற்றதாக உஸாமா பின் ஸைத் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது : மறுமை நாளில் ஒரு மனிதர் கொண்டு வரப்பட்டு நரகத்தில் போடப்படுவார் . அப்போது அவருடைய குடல்கள் வேகமாக நரகத்தில் வந்து விழும் . கழுதை செக்கைச் சுற்றி வருவதைப் போல் அவர் சுற்றி வருவார் . அப்போது நரகவாசிகள் அவரைச் சுற்றி ஒன்றுகூடி , “ இன்னாரே ! உமக்கேன் இந்த நிலை ? நீர் ( உலக வாழ்வின்போது ) நற்செயல் புரியும்படி எங்களுக்குக் கட்டளையிட்டு , தீமை புரிய வேண்டாமென்று எங்களைத் தடுக்கவில்லையா ?`` என்று கேட்பார்கள் . அதற்கு அவர் , “ நற்செயல் புரியும்படி உங்களுக்கு நான் கட்டளையிட்டேன் ; ஆனால் , அந்த நற்செயலை நான் செய்யவில்லை . தீமை புரிய வேண்டாமென்று உங்களை நான் தடுத்து வந்தேன் ; ஆனால் , அந்தத் தீமையை நானே செய்து வந்தேன் `` என்று கூறுவார் .