பாடம்: 18. மனக்குழப்பமும் மனப்பிரமையும்
(ق) عَنْ أَبِي هُرَيْرَةَ رضى الله عنه عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ اللَّهَ تَجَاوَزَ عَنْ أُمَّتِي مَا حَدَّثَتْ بِهِ أَنْفُسَهَا، مَا لَمْ تَعْمَلْ أَوْ تَتَكَلَّمْ ". قَالَ قَتَادَةُ إِذَا طَلَّقَ فِي نَفْسِهِ فَلَيْسَ بِشَىْءٍ. 51
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : என் சமுதாயத்தாரின் உள்ளங்களில் எழும் தீய எண்ணங்களை அவர்கள் அதன்படி செயல்படாத வரை , அல்லது அதை ( வெளிப்படுத்தி ) ப் பேசாத வரை அல்லாஹ் மன்னித்துவிட்டான் .
(م) عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ جَاءَ نَاسٌ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَسَأَلُوهُ إِنَّا نَجِدُ فِي أَنْفُسِنَا مَا يَتَعَاظَمُ أَحَدُنَا أَنْ يَتَكَلَّمَ بِهِ . قَالَ " وَقَدْ وَجَدْتُمُوهُ " . قَالُوا نَعَمْ . قَالَ " ذَاكَ صَرِيحُ الإِيمَانِ " . 52
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தோழர்களுள் சிலர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து , “ எங்கள் உள்ளத்தில் சில ( குழப்பமான ) விஷயங்கள் எழுகின்றன . அவற்றை ( வெளிப்படுத்தி ) ப் பேசுவதைக்கூட நாங்கள் மிகப் பெரும் ( பாவ ) காரியமாகக் கருதுகிறோம் ( இது பற்றித் தாங்கள் என்ன கூறுகின்றீர்கள் ?)`` என்று கேட்டனர் . அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ உண்மையிலேயே நீங்கள் அத்தகைய உணர்வுகளுக்கு உள்ளாகின்றீர்களா ?`` என்று கேட்டார்கள் . அதற்கு நபித் தோழர்கள் , " ஆம் ` என்று பதிலளித்தார்கள் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ அதுதான் ஒளிவுமறைவற்ற இறைநம்பிக்கை `` என்று கூறினார்கள் .
عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَحَدَنَا يَجِدُ فِي نَفْسِهِ يُعَرِّضُ بِالشَّىْءِ لأَنْ يَكُونَ حُمَمَةً أَحَبُّ إِلَيْهِ مِنْ أَنْ يَتَكَلَّمَ بِهِ فَقَالَ " اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ الْحَمْدُ لِلَّهِ الَّذِي رَدَّ كَيْدَهُ إِلَى الْوَسْوَسَةِ " . قَالَ ابْنُ قُدَامَةَ " رَدَّ أَمْرَهُ " . مَكَانَ " رَدَّ كَيْدَهُ " . 53
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து , “ அல்லாஹ்வின் தூதரே ! எங்களுள் ஒருவர் தம் மனத்தில் ஏதேதோ ( எண்ணங்கள் ) தோன்றக் காண்கிறார் . அவற்றைப் பேசுவதைவிட அடுப்புக் கரி மிக விருப்பமானதாகத் தோன்றுகிறது ” என்றார் . அப்போது நபியவர்கள் , “ அல்லாஹு அக்பர் , அல்லாஹு அக்பர் , அல்லாஹு அக்பர் . அவனுடைய ( ஷைத்தான் உடைய ) சூழ்ச்சியை மனக்குழப்பமாக மாற்றிவிட்ட அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் ” என்று கூறினார்கள் .