19- باب : قول الشيطان : من خلق ربك ؟
பாடம் 19

பாடம்: 19. உன் இறைவனைப் படைத்தவன் யார் என்று ஜைத்தான் கேட்டல்

ஹதீஸ் 54 அத்தியாயம் 1 பாடம் 19

(ق) عَنْ أَبُو هُرَيْرَةَ رضى الله عنه قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ يَأْتِي الشَّيْطَانُ أَحَدَكُمْ فَيَقُولُ مَنْ خَلَقَ كَذَا مَنْ خَلَقَ كَذَا حَتَّى يَقُولَ مَنْ خَلَقَ رَبَّكَ فَإِذَا بَلَغَهُ فَلْيَسْتَعِذْ بِاللَّهِ، وَلْيَنْتَهِ ‏"‏‏. 54

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : உங்களுள் ஒருவரிடம் ( அவர் மனத்திற்குள் ) ஷைத்தான் வந்து , “ இதைப் படைத்தவர் யார் ? இதைப் படைத்தவர் யார் ?`` என்று கேட்டுக்கொண்டே வந்து , இறுதியில் , “ உன் இறைவனைப் படைத்தவர் யார் ?`` என்று கேட்கின்றான் . இந்தக் ( கேள்வி கேட்கும் ) கட்டத்தை அவன் அடையும்போது அவர் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடட்டும் . ( இத்தகைய சிந்தனையிலிருந்து ) விலகிக்கொள்ளட்டும் .

Reference: ( புகாரீ : 3276, முஸ்லிம் : 134) ( முஸ்லிம் : 212) மற்றோர் அறிவிப்பில் அதிகப்படியாக இடம்பெற்றுள்ளதாவது : ( இத்தகைய எண்ணங்கள் ஏற்பட்டால் " நான் அல்லாஹ்வையும் ) அவனுடைய தூதர்களையும் நம்பிக்கை கொண்டேன் ` என்று கூறட்டும்