23- باب : الدين يسر
பாடம் 23

பாடம்: 23. மார்க்கம் எளிதானது

ஹதீஸ் 62 அத்தியாயம் 1 பாடம் 23

(خ) عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ إِنَّ الدِّينَ يُسْرٌ، وَلَنْ يُشَادَّ الدِّينَ أَحَدٌ إِلاَّ غَلَبَهُ، فَسَدِّدُوا وَقَارِبُوا وَأَبْشِرُوا، وَاسْتَعِينُوا بِالْغَدْوَةِ وَالرَّوْحَةِ وَشَىْءٍ مِنَ الدُّلْجَةِ ‏"‏‏.‏ 62

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது : இந்த மார்க்கம் எளிதானது . இந்த மார்க்கத்தை எவரேனும் ( தம்மீது ) சிரமமானதாக ஆக்கிக்கொண்டால் , அது அவரை மிகைத்துவிடும் . எனவே , ( கூடுதலான வணக்கங்கள் உட்பட அனைத்துக் காரியங்களிலும் ) நடுநிலையையே கடைப்பிடியுங்கள் . இயன்றவற்றைச் செய்யுங்கள் ; நற்செய்தியையே சொல்லுங்கள் ; ( கூடுதல் வணக்கங்களை உற்சாகத்துடனும் நிரந்தரமாகவும் நிறைவேற்றிட ) காலையையும் மாலையையும் இரவில் சிறிது நேரத்தையும் ஒத்தாசையாக்கிக் கொள்ளுங்கள் .

Reference: ( புகாரீ : 39)
ஹதீஸ் 63 அத்தியாயம் 1 பாடம் 23

(خ) عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا أَمَرَهُمْ أَمَرَهُمْ مِنَ الأَعْمَالِ بِمَا يُطِيقُونَ قَالُوا إِنَّا لَسْنَا كَهَيْئَتِكَ يَا رَسُولَ اللَّهِ، إِنَّ اللَّهَ قَدْ غَفَرَ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ‏.‏ فَيَغْضَبُ حَتَّى يُعْرَفَ الْغَضَبُ فِي وَجْهِهِ ثُمَّ يَقُولُ ‏ "‏ إِنَّ أَتْقَاكُمْ وَأَعْلَمَكُمْ بِاللَّهِ أَنَا ‏"‏‏.‏ 63

ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நல்லவற்றை ( ச் செய்யுமாறு ) மக்களுக்குக் கட்டளையிட்டால் , அவர்களால் இயன்ற செயல்களையே கட்டளையிடுவார்கள் . மக்கள் , “ அல்லாஹ்வின் தூதரே ! அல்லாஹ் உங்கள் முன் பின் பாவங்களை மன்னித்துவிட்டான் . ( ஆனால் ) எங்கள் நிலையோ உங்கள் நிலையைப் போன்றதன்று ( நாங்கள் குறைந்த அளவில் நல்லறங்கள் புரிந்தால் போதாது ; அதிகமாகச் செய்ய வேண்டிய நிலையிலுள்ளோம் )`` என்று கூறினார்கள் . ( இதைக் கேட்ட ) உடன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கோபமடைந்தார்கள் . எந்த அளவிற்கென்றால் கோபத்தின் அறிகுறி அவர்களது முகத்தில் காணப்பட்டது . பிறகு “ உங்கள் அனைவரைவிட நான் ( அல்லாஹ்வை ) நன்கு அஞ்சி நடப்பவனும் அல்லாஹ்வைப் பற்றி அறிந்தவனும் ஆவேன் `` என்று கூறினார்கள் .

Reference: ( புகாரீ : 20)
ஹதீஸ் 64 அத்தியாயம் 1 பாடம் 23

عَنِ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ يُحِبُّ أَنْ تُؤْتَى رُخَصُهُ كَمَا يَكْرَهُ أَنْ تُؤْتَى مَعْصِيَتُهُ 64

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : நிச்சயமாக அல்லாஹ் வாய்ப்புகள் கொடுக்கப்படுவதை விரும்புகிறான் . மேலும் அவனுக்கு ( அடியானால் ) மாறு செய்யப்படுவதை வெறுக்கிறான் .

Reference: ( முஸ்னது அஹ்மத் : 5866). இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 65 அத்தியாயம் 1 பாடம் 23

عَنِ ابْنِ عَبَّاسٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : إِنَّ اللَّهَ يُحِبُّ أَنْ تُؤْتَى رُخَصُهُ ، كَمَا يُحِبُّ أَنْ تُؤْتَى عَزَائِمُهُ . 65

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : நிச்சயமாக அல்லாஹ் வாய்ப்புகள் கொடுக்கப்படுவதை விரும்புகிறான் . மேலும் ( அடியார்கள் ) உறுதியான தன்மைகள் கொடுக்கப்படுவதை விரும்புகிறான் .

Reference: ( அல்அஹாதீஸுல் முக்தாரா : 12/304, இப்னு ஹிப்பான் : 354)/ இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 66 அத்தியாயம் 1 பாடம் 23

عَنْ بُرَيْدَةَ الْأَسْلَمِيِّ ، قَالَ : خَرَجْتُ ذَاتَ يَوْمٍ لِحَاجَةٍ، فَإِذَا أَنَا بِالنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْشِي بَيْنَ يَدَيَّ، فَأَخَذَ بِيَدِي، فَانْطَلَقْنَا نَمْشِي جَمِيعًا، فَإِذَا نَحْنُ بَيْنَ أَيْدِينَا بِرَجُلٍ يُصَلِّي، يُكْثِرُ الرُّكُوعَ وَالسُّجُودَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " أَتُرَاهُ يُرَائِي ؟ " فَقُلْتُ : اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، فَتَرَكَ يَدِي مِنْ يَدِهِ، ثُمَّ جَمَعَ بَيْنَ يَدَيْهِ، فَجَعَلَ يُصَوِّبُهُمَا وَيَرْفَعُهُمَا، وَيَقُولُ : " عَلَيْكُمْ هَدْيًا قَاصِدًا ، عَلَيْكُمْ هَدْيًا قَاصِدًا، عَلَيْكُمْ هَدْيًا قَاصِدًا، فَإِنَّهُ مَنْ يُشَادَّ هَذَا الدِّينَ يَغْلِبْهُ ". 66

புரைதா அல்அஸ்லமீ ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நான் ஒரு நாள் ஏதோ ஒரு தேவைக்காக வெளியே புறப்பட்டேன் . வழியில் எனக்கு முன்னால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நடந்து சென்றார்கள் . அப்போது அவர்கள் என் கையைப் பிடித்துக்கொண்டார்கள் . நாங்கள் இருவரும் நடந்துசென்றோம் . அப்போது எங்களுக்கு முன்னால் ஒரு மனிதர் தென்பட்டார் . அவர் ருகூஉவையும் சஜ்தாவையும் மிகுதியாகச் செய்தவாறு தொழுது கொண்டிருந்தார் . அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்னிடம் , “ அவர் பிறருக்குக் காட்டுவதாக நீ கருதுகிறாயா ?” என்று கேட்டார்கள் . “ அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே அறிவார்கள் ” என்றேன் . அப்போது அவர்கள் என் கையை விட்டுவிட்டு , பிறகு தம் இரண்டு கைகளையும் ஒன்றாகச் சேர்த்து , அவ்விரண்டையும் சமமாகச் சீராக்கி , உயர்த்தி , நடுநிலையான வழியைக் கடைப்பிடியுங்கள் ; நடுநிலையான வழியைக் கடைப்பிடியுங்கள் ; நடுநிலையான வழியைக் கடைப்பிடியுங்கள் . ஏனென்றால் யார் இந்த மார்க்கத்தைக் கடுமையாக்கிக் கொள்கிறாரோ அவரை அது மிகைத்துவிடும் ” என்று கூறினார்கள் .

Reference: ( முஸ்னது அஹ்மத் : 22963). இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .