பாடம்: 24. மார்க்கம் (தீன்) என்பது நலம் நாடுவதே
(ق) عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ بَايَعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى إِقَامِ الصَّلاَةِ، وَإِيتَاءِ الزَّكَاةِ، وَالنُّصْحِ لِكُلِّ مُسْلِمٍ. 67
ஷரீர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் தொழுகையை நிலை நாட்டுவதாகவும் , ஸகாத் வழங்குவதாகவும் , ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நலம் நாடுவதாகவும் உறுதிமொழி ( பைஅத் ) அளித்தேன் .
(م) عَنْ تَمِيمٍ الدَّارِيِّ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " الدِّينُ النَّصِيحَةُ " قُلْنَا لِمَنْ قَالَ " لِلَّهِ وَلِكِتَابِهِ وَلِرَسُولِهِ وَلأَئِمَّةِ الْمُسْلِمِينَ وَعَامَّتِهِمْ " . 68
தமீமுத் தாரீ ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ மார்க்கம் ( தீன் ) என்பதே " நலம் நாடுவது`தான் `` என்று கூறினார்கள் . நாங்கள் , “ யாருக்கு ( நலம் நாடுவது )?`` என்று கேட்டோம் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ அல்லாஹ்வுக்கும் , அவனுடைய வேதத்துக்கும் , அவனுடைய தூதருக்கும் , முஸ்லிம்களின் தலைவர்களுக்கும் , அவர்களில் பொதுமக்களுக்கும் `` என்று பதிலளித்தார்கள் .