பாடம்: 27. தமக்கு விரும்புவதை …
(ق) عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى يُحِبَّ لأَخِيهِ مَا يُحِبُّ لِنَفْسِهِ ". 73
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : உங்களுள் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பாத வரை ( முழுமையான ) இறைநம்பிக்கை கொண்டவர் ஆக மாட்டார் .
سَمِعْتُ أَنَسًا يُحَدِّثُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ : " لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى يُحِبَّ لِلنَّاسِ مَا يُحِبُّ لِنَفْسِهِ، وَحَتَّى يُحِبَّ الْمَرْءَ لَا يُحِبُّهُ إِلَّا لِلَّهِ ". 74
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : உங்களுள் ஒருவர் தமக்கு விரும்புவதையே மக்களுக்கும் விரும்பாத வரை ( முழுமையான ) இறைநம்பிக்கை கொண்டவர் ஆக மாட்டார் . ( உங்களுள் ஒருவர் ) அல்லாஹ்வுக்காகவே தவிர ஒரு மனிதரை விரும்பாத வரை அவர் ( இறைநம்பிக்கை கொண்டவராக ) விரும்பியவராக ஆக மாட்டார் .
عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : لَا يَبْلُغُ عَبْدٌ حَقِيقَةَ الْإِيمَانِ حَتَّى يُحِبَّ لِلنَّاسِ مَا يُحِبُّ لِنَفْسِهِ مِنَ الْخَيْرِ . 75
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ஓர் அடியார் தமக்கு விரும்புகிற நன்மையையே மக்களுக்கும் விரும்பாத வரை இறைநம்பிக்கையின் உண்மை நிலையை அடைந்துகொள்ள மாட்டார் .