பாடம்: 29. நயவஞ்சகத்தனம் குறித்து அஞ்சுதல்
( خ ) وَقَالَ إِبْرَاهِيمُ التَّيْمِيُّ مَا عَرَضْتُ قَوْلِي عَلَى عَمَلِي إِلاَّ خَشِيتُ أَنْ أَكُونَ مُكَذَّبًا. 80
இப்ராஹீம் அத்தய்மீ ரஹிமஹுல்லாஹ் " எனது சொல்லை எனது செயலோடு ஒப்பிட்டபோதெல்லாம் , நான் ஒரு பொய்யனாக இருப்பேனோ என்று நான் அஞ்சாமல் இருந்ததில்லை `` என்றார்கள் . இப்னு அபீமுலைக்கா ( அப்துல்லாஹ் பின் உபைதில்லாஹ் அல்குறஷி - ரஹிமஹுல்லாஹ் ) கூறியதாவது : நான் நபித் தோழர்களுள் முப்பது பேரைச் சந்தித்திருக்கின்றேன் . அவர்கள் ஒவ்வொருவரும் தமக்குள் நயவஞ்சகத்தனம் ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சுபவர்களாகவே இருந்தனர் . அவர்களுள் எவரும் தமக்கு ஜிப்ரீல் , மீக்காயீல் - அலைஹிமஸ்ஸலாம் - ஆகியோரின் ஈமான் இருப்பதாகக் கூறியதில்லை . ஹஸன் அல்பஸரீ ரஹிமஹுல்லாஹ் , “ இறைநம்பிக்கையாளரைத் தவிர வேறெவரும் நயவஞ்சகத்தன்மையை அஞ்சுவதில்லை . நயவஞ்சகனைத் தவிர வேறெவரும் அது விஷயத்தில் அச்சமற்று ( அலட்சியமாக ) இருப்பதில்லை `` என்று கூறியதாக அறிவிக்கப்படுகிறது .