பாடம்: 32. அல்லாஹ்வை (மனதில்) பாதுகாத்துக்கொள், அவன் உன்னைப் பாதுகாப்பான்
عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ كُنْتُ خَلْفَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمًا فَقَالَ " يَا غُلاَمُ إِنِّي أُعَلِّمُكَ كَلِمَاتٍ احْفَظِ اللَّهَ يَحْفَظْكَ احْفَظِ اللَّهَ تَجِدْهُ تُجَاهَكَ إِذَا سَأَلْتَ فَاسْأَلِ اللَّهَ وَإِذَا اسْتَعَنْتَ فَاسْتَعِنْ بِاللَّهِ وَاعْلَمْ أَنَّ الأُمَّةَ لَوِ اجْتَمَعَتْ عَلَى أَنْ يَنْفَعُوكَ بِشَيْءٍ لَمْ يَنْفَعُوكَ إِلاَّ بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللَّهُ لَكَ وَلَوِ اجْتَمَعُوا عَلَى أَنْ يَضُرُّوكَ بِشَيْءٍ لَمْ يَضُرُّوكَ إِلاَّ بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللَّهُ عَلَيْكَ رُفِعَتِ الأَقْلاَمُ وَجَفَّتِ الصُّحُفُ " . 85
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நான் ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பின்னால் ( வாகனத்தில் அமர்ந்து ) இருந்தேன் . அப்போது அவர்கள் , “ பையா ! நான் உனக்குச் சில விஷயங்களைக் கற்றுத் தருகிறேன் . ( அவற்றை நீ நினைவில் வைத்துக்கொள் .) நீ அல்லாஹ் ( வின் உத்தர ) வைப் பேணிக்காத்திடு ! அவன் உன்னைப் பேணிக்காப்பான் . நீ அல்லாஹ்வை ( அவனுடைய கடமைகளை ) ப் பேணி நடந்துகொள் ! அவனை உனக்கு முன்பாக நீ காண்பாய் . நீ யாசித்தால் அல்லாஹ்விடமே யாசிப்பாயாக ! உதவி கோரினால் அல்லாஹ்விடமே உதவி கோருவாயாக . அறிந்துகொள் ! உனக்கு ஏதேனும் நன்மை செய்ய ஒட்டுமொத்தச் சமுதாயமும் ஒன்று சேர்ந்தாலும் உனக்கென அல்லாஹ் எதை எழுதிவிட்டானோ அதைத் தவிர வேறெந்த நன்மையையும் அவர்களால் உனக்குச் செய்ய இயலாது . ( அவ்வாறே ) உனக்கு ஏதேனும் தீங்கிழைக்க அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் உனக்கெதிராக அல்லாஹ் எதை எழுதிவிட்டானோ அதைத் தவிர வேறெந்தத் தீங்கும் அவர்களால் உனக்கு இழைத்திட இயலாது . ( விதி எழுதிய பேனாக்கள் உயர்த்தப்பட்டுவிட்டன ; ( விதி எழுதப் பெற்ற ) ஏடுகள் உலர்ந்து விட்டன ” என்று கூறினார்கள் .