35- باب : افتراق هذه الأمة
பாடம் 35

பாடம்: 35. இந்தச் சமுதாயம் பிரிவுகளாகப் பிரிந்துபோதல்

ஹதீஸ் 88 அத்தியாயம் 1 பாடம் 35

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ افْتَرَقَتِ الْيَهُودُ عَلَى إِحْدَى أَوْ ثِنْتَيْنِ وَسَبْعِينَ فِرْقَةً وَتَفَرَّقَتِ النَّصَارَى عَلَى إِحْدَى أَوْ ثِنْتَيْنِ وَسَبْعِينَ فِرْقَةً وَتَفْتَرِقُ أُمَّتِي عَلَى ثَلاَثٍ وَسَبْعِينَ فِرْقَةً ‏"‏ ‏.‏ 88

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : யூதர்கள் எழுபத்தொன்று அல்லது எழுபத்திரண்டு பிரிவுகளாகப் பிரிந்தார்கள் . கிறிஸ்தவர்கள் எழுபத்தொன்று அல்லது எழுபத்திரண்டு பிரிவுகளாகப் பிரிந்தார்கள் . என் சமுதாயம் எழுபத்து மூன்று பிரிவுகளாகப் பிரியும் .

Reference: ( அபூதாவூத் : 4596, திர்மிதீ : 2640, இப்னுமாஷா : 3991). இது ` ஹஸன் ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 89 அத்தியாயம் 1 பாடம் 35

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ لَتَتَّبِعُنَّ سُنَّةَ مَنْ كَانَ قَبْلَكُمْ بَاعًا بِبَاعٍ وَذِرَاعًا بِذِرَاعٍ وَشِبْرًا بِشِبْرٍ حَتَّى لَوْ دَخَلُوا فِي جُحْرِ ضَبٍّ لَدَخَلْتُمْ فِيهِ ‏"‏ ‏.‏ قَالُوا يَا رَسُولَ اللَّهِ الْيَهُودُ وَالنَّصَارَى قَالَ ‏"‏ فَمَنْ إِذًا ‏"‏ ‏. 89

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : உங்களுக்கு முன் இருந்தோரின் வழிமுறையை நீங்கள் அடி அடியாக , முழம் முழமாக , சாண் சாணாகப் பின்பற்றுவீர்கள் . இறுதியில் அவர்கள் ஓர் உடும்புப் பொந்தில் நுழைந்தால் , நீங்களும் அதில் நுழைந்து விடுவீர்கள் . அப்போது , “ அல்லாஹ்வின் தூதரே ! யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா ( நீங்கள் குறிப்பிடுகின்றீர்கள் )?” என்று வினவப்பட்டது . அதற்கவர்கள் , “ பிறகு யாரை ?” என்று மறுவினாத் தொடுத்தார்கள் .

Reference: ( இப்னுமாஜா : 3994). இது ` ஹஸன் ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 90 அத்தியாயம் 1 பாடம் 35

عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ افْتَرَقَتِ الْيَهُودُ عَلَى إِحْدَى وَسَبْعِينَ فِرْقَةً فَوَاحِدَةٌ فِي الْجَنَّةِ وَسَبْعُونَ فِي النَّارِ وَافْتَرَقَتِ النَّصَارَى عَلَى ثِنْتَيْنِ وَسَبْعِينَ فِرْقَةً فَإِحْدَى وَسَبْعُونَ فِي النَّارِ وَوَاحِدَةٌ فِي الْجَنَّةِ وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَتَفْتَرِقَنَّ أُمَّتِي عَلَى ثَلاَثٍ وَسَبْعِينَ فِرْقَةً فَوَاحِدَةٌ فِي الْجَنَّةِ وَثِنْتَانِ وَسَبْعُونَ فِي النَّارِ ‏"‏ ‏.‏ قِيلَ يَا رَسُولَ اللَّهِ مَنْ هُمْ قَالَ ‏"‏ الْجَمَاعَةُ ‏"‏ ‏.‏ 90

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அவ்ஃப் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : யூதர்கள் எழுபத்தொரு பிரிவுகளாகப் பிரிந்தார்கள் . ( அவர்களுள் ) ஒரு பிரிவினர் சொர்க்கத்தில் ( நுழைவார்கள் ). எழுபது பிரிவினர் நரகத்தில் இருப்பர் . கிறிஸ்தவர்கள் எழுபத்து இரண்டு பிரிவுகளாகப் பிரிந்தார்கள் . ( அவர்களுள் ) எழுபத்தொரு பிரிவினர் நரகத்தில் ( நுழைவார்கள் ). ஒரு பிரிவினர் சொர்க்கத்தில் இருப்பர் . யாருடைய கையில் முஹம்மதுடைய ஆன்மா உள்ளதோ அவன் மீதாணையாக ! திண்ணமாக என் சமுதாயம் எழுபத்து மூன்று பிரிவுகளாகப் பிரியும் . ( அவர்களுள் ) ஒரு பிரிவினர் சொர்க்கத்தில் ( நுழைவார்கள் ). எழுபத்து இரண்டு பிரிவினர் நரகத்தில் இருப்பர் . “ அல்லாஹ்வின் தூதரே ! அவர்கள் யாவர் ?” என்று வினவப்பட்டது . அதற்கவர்கள் , “ சமுதாயக் கூட்டமைப்பு ” என்று விடையளித்தார்கள் .

Reference: ( இப்னுமாஜா : 3992). இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .