3- باب : كثرة القتل
பாடம் 3

பாடம்: 3. கொலை மிகுந்து போதல்

ஹதீஸ் 109 அத்தியாயம் 2 பாடம் 3

(م) عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَيَأْتِيَنَّ عَلَى النَّاسِ زَمَانٌ لَا يَدْرِي الْقَاتِلُ فِي أَيِّ شَيْءٍ قَتَلَ وَلَا يَدْرِي الْمَقْتُولُ عَلَى أَيِّ شَيْءٍ قُتِلَ؟ . 109

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : என் உயிர் எவன் கையிலுள்ளதோ அ( ந்த இறை ) வன்மீது சத்தியமாக ! மக்களுக்கு ஒரு காலம் நிச்சயமாக வரும் . ( அப்போது ) கொலை செய்தவனுக்குத் தான் எதற்காகக் கொன்றோம் என்பது தெரியாது . கொல்லப்பட்டவனுக்குத் தான் எதற்காகக் கொல்லப்பட்டோம் என்பது தெரியாது .

Reference: ( முஸ்லிம் : 2908 / 5574).
ஹதீஸ் 110 அத்தியாயம் 2 பாடம் 3

(م) عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَكْثُرَ الْهَرْجُ قَالُوا وَمَا الْهَرْجُ يَا رَسُولَ اللَّهِ قَالَ الْقَتْلُ الْقَتْلُ . 110

அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ ஹர்ஜ் பெருகாத வரை யுக முடிவு நாள் வராது `` என்று கூறினார்கள் . மக்கள் , “ ஹர்ஜ் என்றால் என்ன , அல்லாஹ்வின் தூதரே ?`` என்று கேட்டார்கள் . அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ கொலை ; கொலை `` என்று பதிலளித்தார்கள் .

Reference: ( முஸ்லிம் : 157 / 5537).