பாடம்: 8. யூதர்களுடனும் துருக்கியர்களுடனும் போர்புரிதல்
(ق) عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تُقَاتِلُوا الْيَهُودَ حَتَّى يَقُولَ الْحَجَرُ وَرَاءَهُ الْيَهُودِيُّ يَا مُسْلِمُ هَذَا يَهُودِيٌّ وَرَائِي فَاقْتُلْهُ. 116
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : நீங்கள் யூதர்களுடன் போர்புரியாத வரை இறுதி நாள் வராது . எந்த அளவிற்கென்றால் கல்லின் பின்னால் யூதன் ஒருவன் ( ஒளிந்து கொண்டு ) இருப்பான் . அந்தக் கல் , “ முஸ்லிமே ! இதோ , என் பின்னே ஒரு யூதன் ( ஒளிந்துகொண்டு ) இருக்கின்றான் . அவனை நீ கொன்றுவிடு `` என்று கூறும் .
(ق) أَبُو هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تُقَاتِلُوا التُّرْكَ صِغَارَ الْأَعْيُنِ حُمْرَ الْوُجُوهِ ذُلْفَ الْأُنُوفِ كَأَنَّ وُجُوهَهُمْ الْمَجَانُّ الْمُطْرَقَةُ وَلَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تُقَاتِلُوا قَوْمًا نِعَالُهُمْ الشَّعَرُ. 117
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : சிறிய கண்களும் சிவந்த முகங்களும் குட்டையான ( சப்பை ) மூக்குகளும் கொண்ட துருக்கியர்களுடன் நீங்கள் போர் புரியாத வரை இறுதிநாள் ஏற்படாது . அவர்களுடைய முகங்கள் தோலால் மூடப்பட்ட கேடயங்களைப் போன்று இருக்கும் . முடியாலான செருப்புகளை அணிந்திருக்கும் ஒரு சமுதாயத்தினருடன் நீங்கள் போர் புரியாத வரை இறுதி நாள் ஏற்படாது .