11- باب : ريح تكون قرب القيامة
பாடம்
11
பாடம்: 11. மறுமை நாளின் அண்மையில் காற்று விசும்
ஹதீஸ் 121
அத்தியாயம் 2
பாடம் 11
( م) عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : إِنَّ اللَّهَ يَبْعَثُ رِيحًا مِنْ الْيَمَنِ أَلْيَنَ مِنْ الْحَرِيرِ فَلَا تَدَعُ أَحَدًا فِي قَلْبِهِ قَالَ أَبُو عَلْقَمَةَ : مِثْقَالُ حَبَّةٍ وَقَالَ عَبْدُ الْعَزِيزِ مِثْقَالُ ذَرَّةٍ مِنْ إِيمَانٍ إِلَّا قَبَضَتْهُ. 121
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ( மறுமை நாள் நெருங்கும்போது ) யமன் நாட்டி ( ன் திசையி ) லிருந்து பட்டைவிட மென்மையான ஒரு காற்றை அல்லாஹ் அனுப்புவான் . எவரது உள்ளத்தில் " கடுகளவு ` அல்லது " அணுவளவு ` இறைநம்பிக்கை உள்ளதோ அவ ( ரது உயி ) ரை அது கைப்பற்றிக்கொள்ளும் .
Reference: ( முஸ்லிம் : 117 / 185) இந்த ஹதீஸ் இரண்டு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது . அவற்றில் , அபூஅல்கமா அல்ஃபர்வீ ரஹிமஹுல்லாஹ் அவர்களது அறிவிப்பில் " கடுகளவு ` என்றும் அப்துல் அஸீஸ் பின் முஹம்மத் ரஹிமஹுல்லாஹ் அவர்களது அறிவிப்பில் " அணுவளவு ` என்றும் இடம்பெற்றுள்ளது .