12- باب : انحسار الفرات عن جبل من ذهب
பாடம் 12

பாடம்: 12. யூப்ரட்டீஸ் நதியானது தங்க மலை ஒன்றை வெளிப்படுத்தும்

ஹதீஸ் 122 அத்தியாயம் 2 பாடம் 12

( ق ) عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُوشِكُ الْفُرَاتُ أَنْ يَحْسِرَ عَنْ كَنْزٍ مِنْ ذَهَبٍ فَمَنْ حَضَرَهُ فَلَا يَأْخُذْ مِنْهُ شَيْئًا. 122

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ( மேற்காசியாவில் பாயும் ) யூப்ரட்டீஸ் நதியானது தங்கப் புதையல் ஒன்றை வெளிப்படுத்த உள்ளது . அப்போது அங்கிருப்பவர்கள் அதிலிருந்து எதையும் எடுத்துவிட வேண்டாம் .

Reference: ( புகாரீ : 7119, முஸ்லிம் : 2894)
ஹதீஸ் 123 அத்தியாயம் 2 பாடம் 12

(م) عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ قَالَ : إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ يُوشِكُ الْفُرَاتُ أَنْ يَحْسِرَ عَنْ جَبَلٍ مِنْ ذَهَبٍ فَإِذَا سَمِعَ بِهِ النَّاسُ سَارُوا إِلَيْهِ فَيَقُولُ مَنْ عِنْدَهُ لَئِنْ تَرَكْنَا النَّاسَ يَأْخُذُونَ مِنْهُ لَيُذْهَبَنَّ بِهِ كُلِّهِ قَالَ فَيَقْتَتِلُونَ عَلَيْهِ فَيُقْتَلُ مِنْ كُلِّ مِائَةٍ تِسْعَةٌ وَتِسْعُونَ . 123

உபை பின் கஅப் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள் : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பின்வருமாறு கூறியதை நான் கேட்டுள்ளேன் : யூப்ரடீஸ் நதியானது வற்றி , தங்க மலை ஒன்றை வெளிப்படுத்தப் போகிறது . அதைப் பற்றி மக்கள் கேள்விப்படும்போது , அதை நோக்கிச் செல்வார்கள் . அப்போது அந்த மலை அருகில் இருப்பவர் , “ அதிலிருந்து சிறிதளவை எடுத்துக்கொள்ளட்டும் என மக்களை நாம் விட்டுவிட்டால் , முழுவதுமாகக் கொண்டு போய் விடுவார்கள் `` என்று கூறுவார் . எனவே , அதற்காகச் சண்டையிட்டுக் கொள்வார்கள் . அப்போது ஒவ்வொரு நூறு பேரிலிருந்தும் தொண்ணூற்றொன்பது பேர் கொல்லப்படுவார்கள் .

Reference: ( முஸ்லிம் : 2895 / 5551)