பாடம்: 21. சூரியன் மேற்கிலிருந்து உதித்தல்
(ق) عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ مِنْ مَغْرِبِهَا فَإِذَا طَلَعَتْ فَرَآهَا النَّاسُ آمَنُوا أَجْمَعُونَ فَذَلِكَ حِينَ لَا يَنْفَعُ نَفْسًا إِيمَانُهَا لَمْ تَكُنْ آمَنَتْ مِنْ قَبْلُ أَوْ كَسَبَتْ فِي إِيمَانِهَا خَيْرًا وَلَتَقُومَنَّ السَّاعَةُ وَقَدْ نَشَرَ الرَّجُلَانِ ثَوْبَهُمَا بَيْنَهُمَا فَلَا يَتَبَايَعَانِهِ وَلَا يَطْوِيَانِهِ وَلَتَقُومَنَّ السَّاعَةُ وَقَدْ انْصَرَفَ الرَّجُلُ بِلَبَنِ لِقْحَتِهِ فَلَا يَطْعَمُهُ وَلَتَقُومَنَّ السَّاعَةُ وَهُوَ يَلِيطُ حَوْضَهُ فَلَا يَسْقِي فِيهِ وَلَتَقُومَنَّ السَّاعَةُ وَقَدْ رَفَعَ أُكْلَتَهُ إِلَى فِيهِ فَلَا يَطْعَمُهَا . 140
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : மேற்கிலிருந்து சூரியன் உதயமாகாத வரை மறுமை நாள் வராது . அவ்வாறு அது மேற்கிலிருந்து உதயமாகும்போது அதைப் பார்த்துவிட்டு மக்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக இறைநம்பிக்கை கொள்வார்கள் . ஆனால் , முன்பே இறைநம்பிக்கை கொண்டிராத , அல்லது இறைநம்பிக்கை கொண்டிருந்தாலும் நன்மையேதும் செய்திராத எந்த மனிதருக்கும் அந்த நேரத்தில் கொள்ளும் நம்பிக்கை பயனளிக்காது . இரண்டு பேர் ( விற்பனைக்காகத் ) துணிகளை விரித்து ( ப் பார்த்து ) க் கொண்டிருப்பார்கள் . அதனை அவர்கள் விற்பனை செய்திருக்கவுமாட்டார்கள் ; சுருட்டிக்கூட வைத்திருக்கவுமாட்டார்கள் . அதற்குள் மறுமை சம்பவித்துவிடும் . மேலும் , ஒரு மனிதர் மடிகனத்த தமது ஒட்டகத்தி ( ல் பால் கறந்து அப்போது தா ) ன் பாலுடன் ( வீடு ) திரும்பியிருப்பார் ; இன்னும் அதைப் பருகிக்கூட இருக்கமாட்டார் . அதற்குள் மறுமை சம்பவித்துவிடும் . ஒருவர் தமது நீர்த் தொட்டியை ( அப்போதுதான் ) கல்வைத்துப் பூசியிருப்பார் ; இன்னும் அதில் நீர் இறைத்திருக்கமாட்டார் . அதற்குள் மறுமை சம்பவித்துவிடும் . உங்களுள் ஒருவர் தமது உணவை ( அப்போதுதான் ) வாயருகில் கொண்டு சென்றிருப்பார் ; அதை உண்டிருக்க மாட்டார் . அதற்குள் மறுமை சம்பவித்து விடும் .