பாடம்: 4. மறுமைநாளில் பூமி
(ق ) عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَقْبِضُ اللَّهُ الْأَرْضَ يَوْمَ الْقِيَامَةِ وَيَطْوِي السَّمَاءَ بِيَمِينِهِ ثُمَّ يَقُولُ أَنَا الْمَلِكُ أَيْنَ مُلُوكُ الْأَرْضِ . 161
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அல்லாஹ் , மறுமை நாளில் பூமியைத் தனது கைப்பிடிக்குள் அடக்கிக்கொள்வான் ; வானத்தைத் தனது வலக்கரத்தில் சுருட்டிக் கொள்வான் ; பிறகு “ நானே அரசன் ; பூமியின் அரசர்கள் எங்கே ?`` என்று கேட்பான் .
(م) عَنْ عَائِشَةَ قَالَتْ : سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ قَوْلِهِ عَزَّ وَجَلَّ يَوْمَ تُبَدَّلُ الْأَرْضُ غَيْرَ الْأَرْضِ وَالسَّمَاوَاتُ فَأَيْنَ يَكُونُ النَّاسُ يَوْمَئِذٍ يَا رَسُولَ اللَّهِ فَقَالَ عَلَى الصِّرَاطِ . 162
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறியதாவது : நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் , “ அந்நாளில் பூமி , வேறு பூமியாகவும் வானங்களும் ( வேறு வானங்களாகவும் ) மாற்றப்படும் `` (14:48) எனும் இறைவசனத்தை ஓதிக்காட்டி , “ அல்லாஹ்வின் தூதரே ! அன்றைய நாளில் மக்கள் அனைவரும் எங்கே இருப்பார்கள் ?`` என்று கேட்டேன் . அதற்கு அவர்கள் , “ அஸ்ஸிராத் ( எனும் நரகப் பாலத்தின் ) மீது `` என்று பதிலளித்தார்கள் .