10- باب : فكاك المسلمين بعدتهم من غيرهم
பாடம்
10
பாடம்: 10. முஸ்லிம்களை அவர்களின் எண்ணிக்கைக்கேற்ப மற்றவர்களிடமிருந்து விடுவித்தல்
ஹதீஸ் 174
அத்தியாயம் 3
பாடம் 10
(م) عَنْ أَبِي مُوسَى قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ دَفَعَ اللَّهُ عَزَّ وَجَلَّ إِلَى كُلِّ مُسْلِمٍ يَهُودِيًّا أَوْ نَصْرَانِيًّا فَيَقُولُ هَذَا فِكَاكُكَ مِنْ النَّارِ . 174
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூமூசா அல்அஷ்அரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில் ஒவ்வொரு முஸ்லிமிடமும் ஒரு யூதரை அல்லது கிறிஸ்தவரை ஒப்படைத்து , " இவன்தான் உன்னை நரகத்திலிருந்து விடுவித்தான் `` என்று சொல்வான் .
Reference: ( முஸ்லிம் : 2767)
ஹதீஸ் 175
அத்தியாயம் 3
பாடம் 10
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ هَذِهِ الْأُمَّةَ مَرْحُومَةٌ عَذَابُهَا بِأَيْدِيهَا فَإِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ دُفِعَ إِلَى كُلِّ رَجُلٍ مِنْ الْمُسْلِمِينَ رَجُلٌ مِنْ الْمُشْرِكِينَ فَيُقَالُ هَذَا فِدَاؤُكَ مِنْ النَّارِ . 175
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : திண்ணமாக இந்தச் சமுதாயம் அருள்புரியப்பட்ட சமுதாயம் . ( இவ்வுலகில் ) அதனுடைய வேதனை அதன் கைகளில் உள்ளது . மறுமை நாளில் , ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இணைவைப்பாளர்களிலிருந்து ஓர் ஆள் கொடுக்கப்படும் . இவன்தான் நரகத்திலிருந்து உனக்கான பிணை என்று கூறப்படும் .
Reference: ( இப்னுமாஜா : 4282). இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .