பாடம்: 12. ஸிராத் (நரகத்தின் மேல் அமைக்கப்பட்ட) பாதையைக் கடந்து செல்லல்
(ق) عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ أُنَاسٌ يَا رَسُولَ اللَّهِ هَلْ نَرَى رَبَّنَا يَوْمَ الْقِيَامَةِ فَقَالَ هَلْ تُضَارُّونَ فِي الشَّمْسِ لَيْسَ دُونَهَا سَحَابٌ قَالُوا لَا يَا رَسُولَ اللَّهِ قَالَ هَلْ تُضَارُّونَ فِي الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ لَيْسَ دُونَهُ سَحَابٌ قَالُوا لَا يَا رَسُولَ اللَّهِ قَالَ فَإِنَّكُمْ تَرَوْنَهُ يَوْمَ الْقِيَامَةِ كَذَلِكَ يَجْمَعُ اللَّهُ النَّاسَ فَيَقُولُ مَنْ كَانَ يَعْبُدُ شَيْئًا فَلْيَتَّبِعْهُ فَيَتْبَعُ مَنْ كَانَ يَعْبُدُ الشَّمْسَ وَيَتْبَعُ مَنْ كَانَ يَعْبُدُ الْقَمَرَ وَيَتْبَعُ مَنْ كَانَ يَعْبُدُ الطَّوَاغِيتَ وَتَبْقَى هَذِهِ الْأُمَّةُ فِيهَا مُنَافِقُوهَا فَيَأْتِيهِمْ اللَّهُ فِي غَيْرِ الصُّورَةِ الَّتِي يَعْرِفُونَ فَيَقُولُ أَنَا رَبُّكُمْ فَيَقُولُونَ نَعُوذُ بِاللَّهِ مِنْكَ هَذَا مَكَانُنَا حَتَّى يَأْتِيَنَا رَبُّنَا فَإِذَا أَتَانَا رَبُّنَا عَرَفْنَاهُ فَيَأْتِيهِمْ اللَّهُ فِي الصُّورَةِ الَّتِي يَعْرِفُونَ فَيَقُولُ أَنَا رَبُّكُمْ فَيَقُولُونَ أَنْتَ رَبُّنَا فَيَتْبَعُونَهُ وَيُضْرَبُ جِسْرُ جَهَنَّمَ . 184
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : மக்களுள் சிலர் “ அல்லாஹ்வின் தூதரே ! மறுமையில் நாங்கள் எங்கள் இறைவனைக் காண்போமா ?`` என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டார்கள் . அப்போது நபி அவர்கள் “ மேகம் மறைக்காத சூரியனைக் காண்பதில் உங்களுக்குச் சிரமம் உண்டா ?`` என்று கேட்டார்கள் . மக்கள் “ இல்லை ; அல்லாஹ்வின் தூதரே !`` என்று பதிலளித்தார்கள் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “ பௌர்ணமி இரவில் மேகம் மறைக்காத முழு நிலவைக் காண்பதில் உங்களுக்குச் சிரமம் உண்டா ?`` என்று கேட்டார்கள் . மக்கள் “( சிரமம் ) இல்லை ; அல்லாஹ்வின் தூதரே !`` என்று பதிலளித்தார்கள் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் : இவ்வாறுதான் மறுமை நாளில் உங்கள் இறைவனை நீங்கள் காண்பீர்கள் . அல்லாஹ் மனிதர்களை ( மறுமை மன்றத்தில் ) ஒன்று கூட்டி “( உலகத்தில் ) யார் எதை வணங்கிக் கொண்டிருந்தார்களோ அதைப் பின் தொடர்ந்து செல்லட்டும் `` என்பான் . ஆகவே , சூரியனை வணங்கிக் கொண்டிருந்தவர்கள் ( சூரியனைப் ) பின்தொடர்ந்து செல்வார்கள் . சந்திரனை வணங்கிக் கொண்டிருந்தவர்கள் ( அதைப் ) பின்தொடர்ந்து செல்வார்கள் . ஷைத்தான்களை வணங்கிக் கொண்டிருந்தவர்கள் ( அவற்றைப் ) பின்பற்றிச் செல்வார்கள் . இறுதியில் இந்தச் சமுதாயத்தார் மட்டும் எஞ்சியிருப்பார்கள் . அவர்களிடையே நயவஞ்சகர்களும் இருப்பார்கள் . அப்போது இறைவன் , அவர்கள் அறிந்து கொள்ள முடியாத தோற்றத்தில் அவர்களிடம் வந்து “ நான்தான் உங்கள் இறைவன் `` என்பான் . உடனே அவர்கள் “ உன்னிடமிருந்து அல்லாஹ்விடம் நாங்கள் பாதுகாப்புக் கோருகிறோம் . எங்கள் இறைவன் எங்களிடம் வரும் வரை நாங்கள் இங்கேயே இருப்போம் . எங்கள் இறைவன் எங்களிடம் வந்தால் அவனை நாங்கள் அறிந்து கொள்வோம் `` என்பர் . அப்போது இறைவன் அவர்கள் அறிந்து கொள்ளும் விதத்திலான தோற்றத்தில் அவர்களிடம் வந்து “ நானே உங்கள் இறைவன் `` என்பான் . அதற்கு அவர்கள் “ நீயே எங்கள் இறைவன் `` என்று கூறிவிட்டு அவனைப் பின்தொடர்ந்து செல்வார்கள் . அங்கு நரகத்தின் மீது பாலம் அமைக்கப்படும் . அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் : நானே ( அந்தப் பாலத்தைக் ) கடப்பவர்களுள் முதல் ஆளாக இருப்பேன் . அப்போதைய நிலையில் இறைத்தூதர்கள் . அனைவரின் பிரார்த்தனையும் “ அல்லாஹ்வே ! காப்பாற்று காப்பாற்று ” என்பதாகவே இருக்கும் . அந்தப் பாலத்தில் கொக்கிகள் மாட்டப்பட்டிருக்கும் . அவை கருவேல மரத்தின் முற்களைப் போன்றிருக்கும் . “ கருவேல மர முள்ளை நீங்கள் பார்த்த தில்லையா ?`` என்று கேட்டார்கள் . மக்கள் “ ஆம் ( பார்த்திருக்கிறோம் ) அல்லாஹ்வின் தூதரே !`` என்று பதிலளித்தார்கள் . ( தொடர்ந்து ) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் : அந்தக் கொக்கிகள் கருவேல மரத்தின் முள்ளைப் போன்று இருக்கும் . ஆயினும் , அதன் பருமனை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள் . அப்போது அந்தக் கொக்கிகள் மக்களை அவர்களின் செயல்களுக்கேற்பக் கவ்விப் பிடிக்கும் . அவர்களுள் ( இறைமறுப்பு உள்ளிட்ட ) தன் ( தீய ) செயல்களால் அழிந்துபோனவரும் இருப்பார் . ( இறைநம்பிக்கை இருந்தாலும் பாவம் செய்த காரணத்தால் ) மூர்ச்சையாகிப் பிறகு பிழைத்துக் கொள்பவரும் இருப்பார் . இறுதியாக இறைவன் , தன் அடியார்களிடையே தீர்ப்பு வழங்கி முடித்தபின் , வணக்கத்திற்குரியவர் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்று உறுதி கூறியவர்களில் தான் நாடிய சிலரை நரகத்திலிருந்து வெளியேற்ற விரும்புவான் . அப்போது அவர்களை வெளியேற்றுமாறு வானவர்களுக்கு ஆணையிடுவான் . வானவர்கள் அவர்களை சஜ்தாவின் ( சிரவணக்கத்தின் ) அடையாளங்களை வைத்து இனம் கண்டுகொள்வார்கள் . ( ஏனெனில் ,) அல்லாஹ் நரகத்திற்கு , மனிதனை அவனிலுள்ள சஜ்தாவின் அடையாளத்தில் தீண்டக் கூடாதெனத் தடை விதித்துள்ளான் . ஆகவே , வானவர்கள் அவர்களை ( நரகத்திலிருந்து ) வெளியேற்றுவார்கள் . அப்போது அவர்கள் ( நரக நெருப்பில் ) கரிக்கப்பட்டிருப்பார்கள் . எனவே , அவர்கள் மீது " மாஉல் ஹயாத் ` எனப்படும் ( ஜீவ ) நீர் ஊற்றப்படும் . உடனே அவர்கள் சேற்று வெள்ளத்தில் விதைபயிர் முளைப்பதைப் போன்று ( புதுப் பொலிவுடன் ) நிறம் மாறி விடுவார்கள் . அவர்களுள் தமது முகத்தால் நரகத்தை முன்னோக்கிக் கொண்டிருக்கும் ஒரு மனிதர் மட்டும் எஞ்சுவார் . அவர் “ என் இறைவா ! நரகத்தின் ( வெப்பக் ) காற்றால் எனக்கு மூச்சடைக்கிறது . அதன் ஜுவாலை என்னைக் கரித்துவிட்டது . ஆகவே , நரகத்தை விட்டு என் முகத்தை ( வேறு பக்கம் ) திருப்பி விடுவாயாக !`` என்று அல்லாஹ்விடம் பிரார்த்தித்துக் கொண்டேயிருப்பார் . அப்போது அல்லாஹ் “( உன் கோரிக்கையை ஏற்று ) இதை நான் உனக்கு வழங்கிவிட்டால் வேறொரு கோரிக்கையையும் நீ முன்வைக்கலாம் அல்லவா ?`` என்று கேட்பான் . அதற்கு அவர் “ இல்லை ; உன் கண்ணியத்தின் மீதாணையாக ! வேறெதையும் உன்னிடம் நான் கேட்க மாட்டேன் `` என்பார் . ஆகவே , இறைவன் அவரது முகத்தை நரகத்தைவிட்டு ( வேறு பக்கம் ) திருப்பிவிடுவான் . அதற்குப் பிறகு “ என் இறைவா ! சொர்க்கத்தின் வாசல் அருகே என்னைக் கொண்டு செல்வாயாக !`` என்பார் அவர் . அதற்கு இறைவன் “ வேறெதையும் உன்னிடம் கேட்கமாட்டேன் என்று நீ கூறவில்லையா ? மனிதா ! உனக்குக் கேடுதான் . உன்னுடைய ஏமாற்று வேலைதான் என்ன !`` என்பான் . ஆனால் , அவர் தொடர்ந்து வேண்டிக்கொண்டே இருப்பார் . அப்போது இறைவன் “ நீ கேட்டதை உனக்கு நான் கொடுத்தால் இன்னொன்றையும் நீ என்னிடம் கேட்கக்கூடும் `` என்பான் . அதற்கு அவர் “ இல்லை ; உன் கண்ணியத்தின் மீதாணையாக ! இதுவல்லாத வேறெதையும் உன்னிடம் கேட்கமாட்டேன் `` என்று சொல்லிவிட்டு , வாக்குறுதிகளையும் உறுதிமொழிகளையும் அவர் இறைவனிடம் வழங்குவார் . இதையடுத்து இறைவன் அவரைச் சொர்க்கத்தின் வாசல் அருகே கொண்டு செல்வான் . சொர்க்கத்திற்குள் இருப்பவற்றைக் காணும்போது அல்லாஹ் நாடிய நேரம் வரை மௌனமாக இருப்பார் . பிறகு “ இறைவா ! என்னைச் சொர்க்கத்திற்கு அனுப்புவாயாக !`` என்று கூறுவார் . பின்னர் இறைவன் “ வேறெதையும் உன்னிடம் கேட்கமாட்டேன் என்று நீ சொல்லவில்லையா ? மனிதா ! உனக்குக் கேடுதான் . உனது ஏமாற்று வேலைதான் என்ன !`` என்று கேட்பான் . அதற்கு “ என் இறைவா ! என்னை உன் படைப்புகளிலேயே நற்கதியற்றவனாக ஆக்கிவிடாதே !`` என்று இறைவன் சிரிக்கும் வரை பிரார்த்தனை செய்துகொண்டே இருப்பார் . அவரைக் கண்டு இறைவன் சிரித்துவிடும்போது சொர்க்கத்தில் நுழைய அவருக்கு இறைவன் அனுமதி வழங்கிடுவான் . சொர்க்கத்திற்குள் அவர் நுழைந்த பின் , “ நீ ( விரும்பிய ) இன்னதை ஆசைப்படலாம் `` என்று சொல்லப்படும் . அவ்வாறே அவரும் ஆசைப்படுவார் . பிறகு ( மீண்டும் ) “ நீ ( விரும்பிய ) இன்னதை ஆசைப்படலாம் `` என்று சொல்லப்படும் . அவ்வாறே அவரும் ஆசைகள் முழுதும் முற்றுப் பெறும்வரை ஆசைப்பட்டு ( தன் விருப்பங்களைத் தெரிவித்து ) க்கொண்டே இருப்பார் . அப்போது இறைவன் “ இது உனக்குக் கிடைக்கும் ; இதைப் போன்று இன்னொரு மடங்கும் உனக்குக் கிடைக்கும் `` என்பான் . அறிவிப்பாளர் அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள் : இந்த மனிதர்தாம் சொர்க்கத்தில் நுழையும் இறுதி மனிதராவார் . அதாஉ பின் யஸீத் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : ( மேற்கண்ட ஹதீஸை ) அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு ( அறிவித்தபோது , அவர்கள் ) உடன் அபூசயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் அமர்ந்திருந்தார்கள் . அன்னார் இந்த ஹதீஸ் தொடர்பாக எந்த மாற்றத்தையும் தெரிவிக்கவில்லை . ஆனால் , “ இது உனக்குக் கிடைக்கும் ; இதைப் போன்று இன்னொரு மடங்கும் உனக்குக் கிடைக்கும் `` என்று கூறியபோதுதான் , அபூசயீத் ரளியல்லாஹு அன்ஹு , “ இதுவும் இதைப் போன்று பத்து மடங்கும் உனக்குக் கிடைக்கும் `` என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறக் கேட்டேன் `` என்றார்கள் . அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு , “ இதைப் போன்று இன்னொரு மடங்கு `` என்றே நான் மனனமிட்டுள்ளேன் என்று கூறினார்கள் .
عَن أَنَسِ قَالَ : سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَشْفَعَ لِي يَوْمَ الْقِيَامَةِ فَقَالَ أَنَا فَاعِلٌ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ فَأَيْنَ أَطْلُبُكَ قَالَ اطْلُبْنِي أَوَّلَ مَا تَطْلُبُنِي عَلَى الصِّرَاطِ قَالَ قُلْتُ فَإِنْ لَمْ أَلْقَكَ عَلَى الصِّرَاطِ قَالَ فَاطْلُبْنِي عِنْدَ الْمِيزَانِ قُلْتُ فَإِنْ لَمْ أَلْقَكَ عِنْدَ الْمِيزَانِ قَالَ فَاطْلُبْنِي عِنْدَ الْحَوْضِ فَإِنِّي لَا أُخْطِئُ هَذِهِ الثَّلَاثَ الْمَوَاطِنَ 185
அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் , “ மறுமை நாளில் எனக்காக நீங்கள் பரிந்துரை செய்வீர்களா ?” என்று கேட்டேன் . அதற்கு நபி ஸல் அவர்கள் , “ அவ்வாறே செய்கிறேன் ” என்று கூறினார்கள் . “ அல்லாஹ்வின் தூதரே ! அப்போது உங்களை நான் எங்கே தேடுவேன் ?” என்று வினவினேன் . அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “ என்னை நீ தேடுவதிலேயே முதலாவதாக அஸ்ஸிராத் பாலத்தின்மீது தேடு ” என்றார்கள் . “ அந்தப் பாலத்தின்மீது தங்களை நான் சந்திக்க முடியாவிட்டால் ?” என்று கேட்டேன் . “ அப்போது ( மனிதர்களின் நன்மை தீமைகள் நிறுக்கப்படும் ) தராசு அருகில் தேடு ” என்றார்கள் . “ தராசின் அருகிலும் நான் தங்களைச் சந்திக்க முடியாவிட்டால் ?” என்று கேட்டேன் . அதற்கு அவர்கள் , “ அப்போது என்னை நீ ( அல்கவ்ஸர் எனும் ) தடாகத்தின் அருகில் தேடு ; ஏனெனில் இம்மூன்று இடங்களில் ( ஒன்றிலிருந்து ) நான் தவறிப்போக மாட்டேன் ” என்று கூறினார்கள் .
عن أَبي سَعِيدٍ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ يُوضَعُ الصِّرَاطُ بَيْنَ ظَهْرَانَيْ جَهَنَّمَ عَلَى حَسَكٍ كَحَسَكِ السَّعْدَانِ ثُمَّ يَسْتَجِيزُ النَّاسُ فَنَاجٍ مُسَلَّمٌ وَمَخْدُوجٌ بِهِ ثُمَّ نَاجٍ وَمُحْتَبَسٌ بِهِ وَمَنْكُوسٌ فِيهَا . 186
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூசஈத் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ஸிராத் ( கடக்கும் பாதை ) சஅதான் மர முள்களைப் போன்ற முள்கள்மீது , நரகத்தின் இருபுறங்களுக்கிடையே அமைக்கப்படும் . பின்னர் மக்கள் அதைக் கடந்து செல்வார்கள் . ( அப்போது அவர்களுள் சிலர் ) நல்ல முறையில் கடந்து சென்றுவிடுவார்கள் . பின்னர் ( அவர்களுள் சிலர் ) கடந்து சென்று இடையில் நிற்பார்கள் . ( அவர்களுள் சிலர் அதனுள் ) தலைகீழாக விழுவார்கள் .
عَنْ أَبِي ذَرٍّ قَالَ : وَإِنَّ خَلِيلِي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَهِدَ إِلَيَّ أَنَّ دُونَ جِسْرِ جَهَنَّمَ طَرِيقًا ذَا دَحْضٍ وَمَزَلَّةٍ ، وَإِنَّا نَأْتِي عَلَيْهِ وَفِي أَحْمَالِنَا اقْتِدَارٌ. 187
அபூதர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : என்னுடைய உற்ற தோழர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்னிடம் உறுதி கூறினார்கள் . நிச்சயமாக நரகத்தின் பாலத்தையன்றி ( வேறு ஒரு ) பாதை உள்ளது . அது வழுக்குப் பாதையாகும் . நிச்சயமாக நாம் - நம்முடைய சுமைகளில் நடுநிலையாக உள்ள நிலையில் - அதன்மீது வருவோம் . ( மற்றோர் அறிவிப்பில் , “ நம்முடைய சுமைகள் மென்மையாக உள்ள நிலையில் ” என்று உள்ளது ) நாம் கண்ணியவான்களாக உள்ள நிலையில் , அதன்மீது வருவதிலிருந்து தப்பிக்க நான் அதிகமாக முயற்சி செய்வேன் .
عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ ، فِي قَوْلِهِ عَزَّ وَجَلَّ : يَسْعَى نُورُهُمْ بَيْنَ أَيْدِيهِمْ قَالَ : " يُؤْتَوْنَ نُورَهُمْ عَلَى قَدْرِ أَعْمَالِهِمْ مِنْهُمْ مَنْ نُورُهُ مِثْلُ الْجَبَلِ وَأَدْنَاهُمْ نُورًا مَنْ نُورُهُ عَلَى إِبْهَامِهِ يُطْفِي مَرَّةً وَيَقِدُ أُخْرَى . 188
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அவர்களுடைய ஒளி அவர்களின் முன்னிலையில் ஓடும் . (57: 12) எனும் இறைவசனத்தை ஓதிவிட்டுச் சொன்னார்கள் : அவர்கள் தத்தம் நல்லறங்களுக்கு ஏற்ப ஒளி கொடுக்கப்படுவார்கள் . அவர்களுள் ஒருவருக்கு மலையளவு ஒளி இருக்கும் . அவர்களுள் மிகக் குறைவான ஒளியைப் பெறுபவருடைய ஒளி கட்டைவிரல் அளவு இருக்கும் . அது ஒரு தடவை அணையும் ; மறு தடவை ஒளிரும் .