14- باب : ما جاء في العرض
பாடம்
14
பாடம்: 14. (அல்லாஹ்வின் முன்னால்) முன்னிலைப் படுத்தப்படுதல் குறித்து வந்துள்ளதாவது
ஹதீஸ் 193
அத்தியாயம் 3
பாடம் 14
عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعْرَضُ النَّاسُ يَوْمَ الْقِيَامَةِ ثَلَاثَ عَرَضَاتٍ فَأَمَّا عَرْضَتَانِ فَجِدَالٌ وَمَعَاذِيرُ وَأَمَّا الثَّالِثَةُ فَعِنْدَ ذَلِكَ تَطِيرُ الصُّحُفُ فِي الْأَيْدِي فَآخِذٌ بِيَمِينِهِ وَآخِذٌ بِشِمَالِهِ . 193
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : மறுமை நாளில் மக்கள் ( அல்லாஹ்வின் முன்னால் ) மூன்று ( தடவைகள் ) கட்டங்களில் முன்னிலைப் படுத்தப்படுவார்கள் . இரண்டு கட்டங்களில் முன்னிலைப்படுத்தப்படும்போது வாதங்களும் சாக்குப்போக்குகளுமாக இருக்கும் . மூன்றாவது தடவை முன்னிலைப்படுத்தப்படும்போது ( ஒவ்வொருவரின் ) வினைச்சுவடிகள் அவர்களின் கைகளை நோக்கிப் பறந்துவரும் . அதை ( ச் சிலர் ) வலக்கையால் எடுப்பர் . ( வேறு சிலர் ) இடக்கையால் எடுப்பர் .
Reference: ( திர்மிதீ : 2425, இப்னுமாஜா : 4267/4277). இது ` ளஈஃப் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .