16- باب : أول الأمم حساباً
பாடம் 16

பாடம்: 16. முதன்முதலாகக் கேள்வி கேட்கப்படுகின்ற சமுதாயம்

ஹதீஸ் 195 அத்தியாயம் 3 பாடம் 16

عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ نَحْنُ آخِرُ الْأُمَمِ وَأَوَّلُ مَنْ يُحَاسَبُ يُقَالُ أَيْنَ الْأُمَّةُ الْأُمِّيَّةُ وَنَبِيُّهَا فَنَحْنُ الْآخِرُونَ الْأَوَّلُونَ . 195

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : நாம் கடைசிச் சமுதாயத்தினர் ஆவோம் . விசாரணை செய்யப்படுவோருள் முதன்மை ஆவோம் . “ உம்மி சமுதாயமும் அதன் நபியும் எங்கே ?“ என்று வினவப்படும் . எனவே நாம்தாம் கடைசியானவர்கள் ( அதே நேரத்தில் விசாரணையில் ) முதன்மையானவர்கள் .

Reference: ( இப்னுமாஜா : 4280 / 4290). இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .