2- باب : رؤية الإنسان مقعده من الجنة والنار
பாடம்
2
பாடம்: 2. மனிதன் தனது சொர்க்க, (அல்லது) நரக இருப்பிடத்தைப் பார்த்தல்
ஹதீஸ் 200
அத்தியாயம் 4
பாடம் 2
(خ ) عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَدْخُلُ أَحَدٌ الْجَنَّةَ إِلَّا أُرِيَ مَقْعَدَهُ مِنْ النَّارِ لَوْ أَسَاءَ لِيَزْدَادَ شُكْرًا وَلَا يَدْخُلُ النَّارَ أَحَدٌ إِلَّا أُرِيَ مَقْعَدَهُ مِنْ الْجَنَّةِ لَوْ أَحْسَنَ لِيَكُونَ عَلَيْهِ حَسْرَةً . 200
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ( சொர்க்கவாசிகளுள் ) எவரும் , ( உலக வாழ்வில் ) தாம் பாவம் புரிந்திருந்தால் நரகத்தில் தமது இருப்பிடம் எதுவாக இருந்திருக்கும் என்று காட்டப்படாமல் சொர்க்கத்தில் நுழையமாட்டார் . அவர் அதிகமாக ( மகிழ்ச்சியடைந்து இறைவனுக்கு ) நன்றி செலுத்துவதற்காகவே ( இவ்வாறு காட்டப்படும் ). ( நரகவாசிகளுள் ) எவரும் , ( உலக வாழ்வில் ) தாம் நன்மை புரிந்திருந்தால் சொர்க்கத்தில் தமது இருப்பிடம் எதுவாக இருந்திருக்கும் என்று காட்டப்படாமல் நரகத்தில் நுழையமாட்டார் . இது அவருக்கு ( பெரும் ) துயரமாக அமைய வேண்டும் என்பதற்காகவே ( காட்டப்படுகிறது ).
Reference: ( புகாரீ : 6569)