4- باب : تحاجت الجنة والنار
பாடம் 4

பாடம்: 4. சொர்க்கமும் நரகமும் வாக்குவாதம் செய்துகொண்டன

ஹதீஸ் 203 அத்தியாயம் 4 பாடம் 4

(ق) عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَحَاجَّتْ الْجَنَّةُ وَالنَّارُ فَقَالَتْ النَّارُ أُوثِرْتُ بِالْمُتَكَبِّرِينَ وَالْمُتَجَبِّرِينَ وَقَالَتْ الْجَنَّةُ مَا لِي لَا يَدْخُلُنِي إِلَّا ضُعَفَاءُ النَّاسِ وَسَقَطُهُمْ قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى لِلْجَنَّةِ أَنْتِ رَحْمَتِي أَرْحَمُ بِكِ مَنْ أَشَاءُ مِنْ عِبَادِي وَقَالَ لِلنَّارِ إِنَّمَا أَنْتِ عَذَابِي أُعَذِّبُ بِكِ مَنْ أَشَاءُ مِنْ عِبَادِي وَلِكُلِّ وَاحِدَةٍ مِنْهُمَا مِلْؤُهَا فَأَمَّا النَّارُ فَلَا تَمْتَلِئُ حَتَّى يَضَعَ رِجْلَهُ فَتَقُولُ قَطْ قَطْ فَهُنَالِكَ تَمْتَلِئُ وَيُزْوَى بَعْضُهَا إِلَى بَعْضٍ وَلَا يَظْلِمُ اللَّهُ عَزَّ وَجَلَّ مِنْ خَلْقِهِ أَحَدًا وَأَمَّا الْجَنَّةُ فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يُنْشِئُ لَهَا خَلْقًا . 203

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : சொர்க்கமும் நரகமும் வாக்குவாதம் செய்து கொண்டன . அப்போது நரகம் , “" பெருமையடிப்பவர்களுக்காகவும் அக்கிரமக்காரர்களுக்காகவும் நான் சொந்தமாக்கப்பட்டுள்ளேன் `` என்று சொன்னது . சொர்க்கம் , “ எனக்கு என்ன நேர்ந்ததோ ! மக்களுள் பலவீனர்களும் அவர்களுள் கீழ்நிலையினருமே ( அதிகமாக ) என்னுள் நுழைவார்கள் `` என்று கூறியது . அல்லாஹ் சொர்க்கத்திடம் , “ நீ எனது அருள் . உன் மூலமே என் அடியார்களுள் நான் நாடிய சிலருக்கு அருள் புரிகின்றேன் `` என்று கூறினான் . நரகத்திடம் “ நீ வேதனை ( க்காகத் ) தான் . உன் மூலமே என் அடியார்களுள் நான் நாடிய சிலருக்கு வேதனை கொடுக்கிறேன் `` என்று கூறினான் . அந்த இரண்டில் ஒவ்வொன்றுக்கும் வயிறு நிரம்பத் தரப்படும் . ஆனால் , நரகமோ இறைவன் தனது காலை அதன் மீது வைக்கும் வரை வயிறு நிரம்பாது . இறைவன் காலை வைக்கும்போது நரகம் “ போதும் ! போதும் !`` என்று கூறும் . அப்போதுதான் அதற்கு வயிறு நிரம்பும் . மேலும் , ( நரகத்திற்கெனப் புதிதாக யாரையும் அல்லாஹ் படைப்பதில்லை ; மாறாக ,) அதில் ஒரு பகுதி மற்றொரு பகுதியுடன் இணைக்கப்படும் . அல்லாஹ் தன்னுடைய படைப்புகளுள் யாருக்கும் அநியாயம் செய்யமாட்டான் . ஆனால் , வல்லவனும் மாண்புடையோனுமான அல்லாஹ் , சொர்க்கத்திற்கென்றே ( புதிதாகச் ) சிலரைப் படை ( த்து அதை நிறை ) ப்பான் .

Reference: ( புகாரீ : 4850, முஸ்லிம் : 2846)