6- باب :في نعيم الجنة وعذاب النار
பாடம் 6

பாடம்: 6. சொர்க்கத்தின் இன்பங்களும் நரகத்தின் வேதனைகளும்

ஹதீஸ் 207 அத்தியாயம் 4 பாடம் 6

(م ) عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُؤْتَى بِأَنْعَمِ أَهْلِ الدُّنْيَا مِنْ أَهْلِ النَّارِ يَوْمَ الْقِيَامَةِ فَيُصْبَغُ فِي النَّارِ صَبْغَةً ثُمَّ يُقَالُ يَا ابْنَ آدَمَ هَلْ رَأَيْتَ خَيْرًا قَطُّ هَلْ مَرَّ بِكَ نَعِيمٌ قَطُّ فَيَقُولُ لَا وَاللَّهِ يَا رَبِّ وَيُؤْتَى بِأَشَدِّ النَّاسِ بُؤْسًا فِي الدُّنْيَا مِنْ أَهْلِ الْجَنَّةِ فَيُصْبَغُ صَبْغَةً فِي الْجَنَّةِ فَيُقَالُ لَهُ يَا ابْنَ آدَمَ هَلْ رَأَيْتَ بُؤْسًا قَطُّ هَلْ مَرَّ بِكَ شِدَّةٌ قَطُّ فَيَقُولُ لَا وَاللَّهِ يَا رَبِّ مَا مَرَّ بِي بُؤْسٌ قَطُّ وَلَا رَأَيْتُ شِدَّةً قَطُّ . 207

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : இவ்வுலகில் செல்வச் செழிப்புடன் வாழ்ந்த நரகவாசிகளுள் ஒருவர் மறுமை நாளில் கொண்டு வரப்பட்டு , நரகத்தில் ஒரு முறை அழுத்தி எடுக்கப்படுவார் . பிறகு அவரிடம் , “ ஆதமின் மகனே ( மனிதா )! எப்போதேனும் ( உலக வாழ்வில் ) நல்லதைப் பார்த்தாயா ? எப்போதேனும் அருட்கொடை ( இன்பம் ) ஏதும் உனக்குக் கிடைத்ததா ?`` என்று கேட்கப்படும் . அதற்கு அவர் , “ அல்லாஹ்வின் மீதாணையாக , இல்லை என் இறைவா !`` என்று பதிலளிப்பார் . அவ்வாறே , இவ்வுலகில் கடுமையான துன்பத்தில் வாழ்ந்த சொர்க்கவாசிகளுள் ஒருவர் மறுமை நாளில் கொண்டுவரப்பட்டு , சிறிது நேரம் சொர்க்கத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவார் . பிறகு அவரிடம் , “ ஆதமின் மகனே ! ( உலகில் ) எப்போதேனும் சிரமத்தைக் கண்டாயா ? எப்போதேனும் துன்பம் ஏதும் உமக்கு ஏற்பட்டதா ?`` என்று கேட்கப்படும் . அதற்கு அவர் “ அல்லாஹ்வின் மீதாணையாக ! இல்லை , என் இறைவா ! ஒருபோதும் எனக்கு எந்தத் துன்பமும் ஏற்பட்டதில்லை . ஒருபோதும் நான் சிரமத்தைக் கண்டதுமில்லை `` என்று கூறுவார் .

Reference: ( முஸ்லிம் : 2807 . / 5407)