பாடம்: 7. (நிரந்தரம்; இனி மரணமே இல்லை என்று) அறிவிப்புச் செய்யப்படும்
(ق) عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُؤْتَى بِالْمَوْتِ كَهَيْئَةِ كَبْشٍ أَمْلَحَ فَيُنَادِي مُنَادٍ يَا أَهْلَ الْجَنَّةِ فَيَشْرَئِبُّونَ وَيَنْظُرُونَ فَيَقُولُ هَلْ تَعْرِفُونَ هَذَا فَيَقُولُونَ نَعَمْ هَذَا الْمَوْتُ وَكُلُّهُمْ قَدْ رَآهُ ثُمَّ يُنَادِي يَا أَهْلَ النَّارِ فَيَشْرَئِبُّونَ وَيَنْظُرُونَ فَيَقُولُ هَلْ تَعْرِفُونَ هَذَا فَيَقُولُونَ نَعَمْ هَذَا الْمَوْتُ وَكُلُّهُمْ قَدْ رَآهُ فَيُذْبَحُ ثُمَّ يَقُولُ يَا أَهْلَ الْجَنَّةِ خُلُودٌ فَلَا مَوْتَ وَيَا أَهْلَ النَّارِ خُلُودٌ فَلَا مَوْتَ ثُمَّ قَرَأَ وَأَنْذِرْهُمْ يَوْمَ الْحَسْرَةِ إِذْ قُضِيَ الْأَمْرُ وَهُمْ فِي غَفْلَةٍ وَهَؤُلَاءِ فِي غَفْلَةٍ أَهْلُ الدُّنْيَا وَهُمْ لَا يُؤْمِنُونَ . 208
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூசஈத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ( மறுமை நாளில் ) கருமை கலந்த வெண்ணிற ஆடு ஒன்றின் தோற்றத்தில் மரணம் கொண்டு வரப்படும் . அப்போது அறிவிப்புச் செய்யும் ( வானவர்களுள் ) ஒருவர் , “ சொர்க்கவாசிகளே !` என்று அழைப்பார் . அவர்கள் தலையை நீட்டிப் பார்ப்பார்கள் . அறிவிப்புச் செய்பவர் , “ இதை ( இந்த ஆட்டை ) நீங்கள் அறிவீர்களா ?`` என்று கேட்பார் . அவர்கள் , “ ஆம் ! இதுதான் மரணம் `` என்று பதிலளிப்பார்கள் . அவர்கள் அனைவரும் அதை ( முன்பே ) பார்த்திருக்கிறார்கள் . பிறகு அவர் நரகவாசிகளை நோக்கி : “ நரகவாசிகளே !` என்று அழைப்பார் . அவர்கள் தலையை நீட்டிப் பார்ப்பார்கள் . அவர் “ இதை நீங்கள் அறிவீர்களா ?`` என்று கேட்பார் . அவர்கள் , “ ஆம் ( அறிவோம் ); இதுதான் மரணம் `` என்று பதில் சொல்வார்கள் . அவர்கள் அனைவரும் அதை ( முன்பே ) பார்த்துள்ளனர் . உடனே அது ( ஆட்டின் உருவத்திலுள்ள மரணம் ) அறுக்கப்பட்டுவிடும் . பிறகு அவர் , “ சொர்க்கவாசிகளே ! நிரந்தரம் ; இனி மரணமே இல்லை . நரகவாசிகளே ! நிரந்தரம் ; இனி மரணம் என்பதே இல்லை `` என்று கூறுவார் . இதை அறிவித்த அபூசஈத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள் : இதைக் கூறிவிட்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “( நபியே !) நியாயத் தீர்ப்பளிக்கப்படும் துக்கம் நிறைந்த அந்நாளைப் பற்றி நீங்கள் அவர்களை எச்சரியுங்கள் ! எனினும் , ( இன்று உலக வாழ்வில் ) இவர்கள் கவலையற்றிருக்கின்றனர் . ஆதலால் இவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள் `` எனும் (19:39ஆம்) இறைவசனத்தை ஓதினார்கள் . மேலும் , “ இன்று உலகில் வசிக்கும் இவர்கள் கவலையற்று , அசட்டையாக உள்ளனர் . ஆகவே இவர்கள் நம்பிக்கைகொள்ள மாட்டார்கள் `` என்றும் சொன்னார்கள் .