4- باب : سوق الجنة
பாடம் 4

பாடம்: 4. சொர்க்கத்தின் கடைத்தெரு

ஹதீஸ் 222 அத்தியாயம் 6 பாடம் 4

(م) عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ فِي الْجَنَّةِ لَسُوقًا يَأْتُونَهَا كُلَّ جُمُعَةٍ فَتَهُبُّ رِيحُ الشَّمَالِ فَتَحْثُو فِي وُجُوهِهِمْ وَثِيَابِهِمْ فَيَزْدَادُونَ حُسْنًا وَجَمَالًا فَيَرْجِعُونَ إِلَى أَهْلِيهِمْ وَقَدْ ازْدَادُوا حُسْنًا وَجَمَالًا فَيَقُولُ لَهُمْ أَهْلُوهُمْ وَاللَّهِ لَقَدْ ازْدَدْتُمْ بَعْدَنَا حُسْنًا وَجَمَالًا فَيَقُولُونَ وَأَنْتُمْ وَاللَّهِ لَقَدْ ازْدَدْتُمْ بَعْدَنَا حُسْنًا وَجَمَالًا . 222

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : சொர்க்கத்தில் ( மக்கள் ஒன்றுகூடும் ) சந்தை ஒன்று உண்டு . அங்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சொர்க்கவாசிகள் வருவார்கள் . அப்போது வட பருவக் காற்று வீசி அவர்களுடைய முகங்களிலும் ஆடையிலும் ( கஸ்தூரி மண்ணை ) வாரிப் போடும் . உடனே அவர்கள் மேன்மேலும் அழகும் பொலிவும் பெறுவார்கள் . பிறகு அழகும் பொலிவும் அதிகமாகப் பெற்ற நிலையில் அவர்கள் தங்கள் துணைவியரிடம் திரும்பிச் செல்வார்கள் . அப்போது அவர்களிடம் அவர்களுடைய துணைவியர் , “ எங்களிடமிருந்து சென்ற பின்னர் கூடுதலான அழகும் பொலிவும் பெற்றுவிட்டீர்களே !`` என்று கூறுவர் . அதற்கு அவர்கள் , “ அல்லாஹ்வின் மீதாணையாக ! நாங்கள் சென்ற பிறகு நீங்களும்தாம் கூடுதலான அழகும் பொலிவும் பெற்றிருக்கிறீர்கள் `` என்று கூறுவர் .

Reference: ( முஸ்லிம் : 2833 / 5448)