பாடம்: 13. சொர்க்கவாசிகளுள் பாதிப்பேர் இந்தச் சமுதாயத்தைச் சார்ந்தோர்
(ق) عَنْ عَبْدِ اللَّهِ قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ فِي قُبَّةٍ فَقَالَ أَتَرْضَوْنَ أَنْ تَكُونُوا رُبُعَ أَهْلِ الْجَنَّةِ قُلْنَا نَعَمْ قَالَ أَتَرْضَوْنَ أَنْ تَكُونُوا ثُلُثَ أَهْلِ الْجَنَّةِ قُلْنَا نَعَمْ قَالَ أَتَرْضَوْنَ أَنْ تَكُونُوا شَطْرَ أَهْلِ الْجَنَّةِ قُلْنَا نَعَمْ قَالَ وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ إِنِّي لَأَرْجُو أَنْ تَكُونُوا نِصْفَ أَهْلِ الْجَنَّةِ وَذَلِكَ أَنَّ الْجَنَّةَ لَا يَدْخُلُهَا إِلَّا نَفْسٌ مُسْلِمَةٌ وَمَا أَنْتُمْ فِي أَهْلِ الشِّرْكِ إِلَّا كَالشَّعْرَةِ الْبَيْضَاءِ فِي جِلْدِ الثَّوْرِ الْأَسْوَدِ أَوْ كَالشَّعْرَةِ السَّوْدَاءِ فِي جِلْدِ الثَّوْرِ الْأَحْمَرِ . 231
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நாங்கள் ( சுமார் நாற்பது பேர் ) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஒரு ( தோல் ) கூடாரத்தினுள் இருந்து கொண்டிருந்தோம் . அப்போது அவர்கள் " சொர்க்கவாசிகளுள் நான்கில் ஒரு பகுதியினராக இருக்க நீங்கள் விரும்புகின்றீர்களா ?`` என்று கேட்டார்கள் . நாங்கள் " ஆம் ` என்று சொன்னோம் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , " சொர்க்கவாசிகளுள் மூன்றில் ஒரு பகுதியினராக நீங்கள் இருக்க வேண்டுமென விரும்புகின்றீர்களா ?`` என்று கேட்டார்கள் . நாங்கள் " ஆம் ` என்று சொன்னோம் . அவர்கள் “ சொர்க்கவாசிகளுள் பாதிப் பேராக நீங்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றீர்களா ?`` என்று கேட்டார்கள் . நாங்கள் " ஆம் ` என்று சொன்னோம் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ முஹம்மதின் உயிர் எவனது கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக ! சொர்க்கவாசிகளுள் பாதிப் பேராக ( என் சமுதாயத்தாரான ) நீங்கள் இருக்க வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன் . அதற்குக் காரணம் , சொர்க்கத்தில் முஸ்லிமானவரைத் தவிர வேறெவரும் நுழைய முடியாது . இணை வைப்பவர்களை ஒப்பிடும்போது நீங்கள் கறுப்புக் காளை மாட்டின் தோலில் உள்ள வெள்ளை முடியைப் போன்றுதான் ; அல்லது செவலைக் காளை மாட்டிலுள்ள கறுப்பு முடியைப் போன்றுதான் இருக்கிறீர்கள் `` என்று சொன்னார்கள் .