16-باب : دوام نعيم أَهل الجنة
பாடம் 16

பாடம்: 16. சொர்க்கவாசிகளின் இன்பம் நிலையானது

ஹதீஸ் 235 அத்தியாயம் 6 பாடம் 16

(م) عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ وَأَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يُنَادِي مُنَادٍ إِنَّ لَكُمْ أَنْ تَصِحُّوا فَلَا تَسْقَمُوا أَبَدًا وَإِنَّ لَكُمْ أَنْ تَحْيَوْا فَلَا تَمُوتُوا أَبَدًا وَإِنَّ لَكُمْ أَنْ تَشِبُّوا فَلَا تَهْرَمُوا أَبَدًا وَإِنَّ لَكُمْ أَنْ تَنْعَمُوا فَلَا تَبْأَسُوا أَبَدًا فَذَلِكَ قَوْلُهُ عَزَّ وَجَلَّ وَنُودُوا أَنْ تِلْكُمْ الْجَنَّةُ أُورِثْتُمُوهَا بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ . 235

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூசஈத் அல்குத்ரீ , அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹுமா அறிவிப்பதாவது : ( சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் நுழைந்த பின்னர் ) பொது அறிவிப்பாளர் ஒருவர் , “( இனி ) நீங்கள் ஆரோக்கியத்துடனேயே இருப்பீர்கள் ; ஒருபோதும் நோய் காணமாட்டீர்கள் . நீங்கள் உயிருடன்தான் இருப்பீர்கள் ; ஒருபோதும் இறந்துபோய் விடமாட்டீர்கள் . இளமையோடுதான் இருப்பீர்கள் ; ஒருபோதும் முதுமையடைய மாட்டீர்கள் . நீங்கள் இன்பத்தோடுதான் இருப்பீர்கள் ; ஒருபோதும் துன்பம் காணமாட்டீர்கள் `` என்று அறிவிப்புச் செய்வார் . இதையே வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் , “ இதுதான் சொர்க்கம் ; நீங்கள் ( உலகில் ) நற்செயல் புரிந்து கொண்டிருந்ததற்காக இது உங்களுக்கு உடைமையாக்கப்பட்டுள்ளது என்று அவர்களிடம் எடுத்துச் சொல்லப்படும் `` (7:43) எனக் கூறுகின்றான் .

Reference: ( முஸ்லிம் : 2837 / 5457)