22-باب : رؤية المؤمنين ربهم سبحانه في الآخرة
பாடம் 22

பாடம்: 22. சொர்க்கவாசிகளான முஃமின்கள் தூயோனாகிய தம் இறைவனை மறுமையில் பார்த்தல்

ஹதீஸ் 243 அத்தியாயம் 6 பாடம் 22

(م) عَنْ صُهَيْبٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا دَخَلَ أَهْلُ الْجَنَّةِ الْجَنَّةَ قَالَ يَقُولُ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى تُرِيدُونَ شَيْئًا أَزِيدُكُمْ فَيَقُولُونَ أَلَمْ تُبَيِّضْ وُجُوهَنَا أَلَمْ تُدْخِلْنَا الْجَنَّةَ وَتُنَجِّنَا مِنْ النَّارِ قَالَ فَيَكْشِفُ الْحِجَابَ فَمَا أُعْطُوا شَيْئًا أَحَبَّ إِلَيْهِمْ مِنْ النَّظَرِ إِلَى رَبِّهِمْ عَزَّ وَجَلَّ . 243

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக ஹுஹைப் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் நுழைந்துவிடும்போது ( அவர்களிடம் ) அல்லாஹ் , “ உங்களுக்கு நான் இன்னும் கூடுதலாக ஏதேனும் வழங்க வேண்டுமென நீங்கள் விரும்புகின்றீர்களா ?`` என்று கேட்பான் . அதற்கு அவர்கள் “( இறைவா !) நீ எங்கள் முகங்களை வெண்மையாக்கவில்லையா ? எங்களை நரகத்திலிருந்து காப்பாற்றி சொர்க்கத்திற்குள் நுழையச் செய்யவில்லையா ( இதைவிடக் கூடுதலாக எங்களுக்கு வேறென்ன வேண்டும் )?`` என்று கேட்பார்கள் . அப்போது அல்லாஹ் , ( தன்னைச் சுற்றிலும் இருக்கும் ) திரையை விலக்கி ( அவர்களுக்கு தரிசனம் தந்தி ) டுவான் . அப்போது தம் இறைவனைக் ( காணும் அவர்களுக்கு அவனைக் ) காண்பதைவிட மிகவும் விருப்பமானது வேறெதுவும் வழங்கப்பட்டிராது .

Reference: ( முஸ்லிம் : 181 / 297)