பாடம்: 23. சொர்க்கத்தின் படித்தரங்கள் (அந்தஸ்துகள்)
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْجَنَّةِ مِائَةُ دَرَجَةٍ مَا بَيْنَ كُلِّ دَرَجَتَيْنِ مِائَةُ عَامٍ . 244
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : சொர்க்கத்தில் நூறு படித்தரங்கள் ( தரஜா ) உள்ளன . ஒவ்வொரு படித்தரத்திற்கும் இடையே நூறாண்டுகள் ( தொலைதூரம் ) உள்ளது .
عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي الْجَنَّةِ مِائَةُ دَرَجَةٍ مَا بَيْنَ كُلِّ دَرَجَتَيْنِ كَمَا بَيْنَ الْأَرْضِ وَالسَّمَاءِ وَالْفِرْدَوْسُ أَعْلَاهَا دَرَجَةً وَمِنْهَا تُفَجَّرُ أَنْهَارُ الْجَنَّةِ الْأَرْبَعَةُ وَمِنْ فَوْقِهَا يَكُونُ الْعَرْشُ فَإِذَا سَأَلْتُمُ اللَّهَ فَسَلُوهُ الْفِرْدَوْسَ . 245
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக உபாதா பின் அஸ்ஸாமித் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : சொர்க்கத்தில் நூறு படித்தரங்கள் உள்ளன . ( அவற்றில் ) ஒவ்வோர் இரண்டு படித்தரங்களுக்கு இடையேயும் பூமிக்கும் வானுக்கும் இடையிலுள்ளதைப் போன்ற தொலைதூரம் உள்ளது . ஃபிர்தவ்ஸ் என்பது ( சொர்க்கத்தின் படித்தரங்களில் ) மிக உயர்ந்த படித்தரமாகும் . அதிலிருந்தே நான்கு சொர்க்க ஆறுகள் பாய்கின்றன ; அதற்கு மேலேதான் அர்ஷ் ( இறையாசனம் ) இருக்கிறது . எனவே , நீங்கள் அல்லாஹ்விடம் கோரினால் , அவனிடம் ஃபிர்தவ்ஸ் எனும் அந்தச் சொர்க்கத்தையே கோருங்கள் .