பாடம்: 1 நன்மை-தீமை எனும் விதியை நம்புதல்
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يُؤْمِنُ عَبْدٌ حَتَّى يُؤْمِنَ بِالْقَدَرِ خَيْرِهِ وَشَرِّهِ حَتَّى يَعْلَمَ أَنَّ مَا أَصَابَهُ لَمْ يَكُنْ لِيُخْطِئَهُ وَأَنَّ مَا أَخْطَأَهُ لَمْ يَكُنْ لِيُصِيبَهُ . 249
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அவர்கள் நன்மையும் தீமையும் விதியின் படியே நடக்கின்றன என்று நம்பாத வரை ஓர் அடியார் இறைநம்பிக்கை கொண்டவராக மாட்டார் . எந்த அளவுக்கென்றால் , தமக்குக் கிடைத்த ஒன்று , கிடைத்திருக்கக் கூடாதது அல்ல என்றும் , தமக்குக் கிடைக்காத ஒன்று கிடைத்திருக்க வேண்டியது அல்ல என்றும் அவர் அறிந்துகொள்ள வேண்டும் . ( அதாவது கிடைக்கக் கூடியதுதான் கிடைத்திருக்கிறது ; கிடைக்கக் கூடாததுதான் கிடைக்காமல் போயிருக்கிறது என்று அறிதல் வேண்டும் .)
عَنْ عَلِيٍّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يُؤْمِنُ عَبْدٌ حَتَّى يُؤْمِنَ بِأَرْبَعٍ يَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنِّي مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ بَعَثَنِي بِالْحَقِّ وَيُؤْمِنُ بِالْمَوْتِ وَبِالْبَعْثِ بَعْدَ الْمَوْتِ وَيُؤْمِنُ بِالْقَدَرِ . 250
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அலீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : நான்கு விஷயங்கள்மீது நம்பிக்கை கொள்ளாத வரை எந்த அடியாரும் இறைநம்பிக்கையாளராக ஆகமாட்டார் . 1. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை ; நான் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஆவேன் ; என்னை அவன் சத்திய ( மார்க்க ) த்துடன் அனுப்பிவைத்தான் என உறுதிமொழிவது . 2. மரணம் உண்டு என நம்புவது , 3. ( அனைவரும் ) இறந்தபின் ( உயிர் கொடுத்து ) எழுப்பப்படும் என்பதை நம்புவது 4. விதியை நம்புவது .
عَنْ ابْنِ الدَّيْلَمِيِّ قَالَ أَتَيْتُ أُبَيَّ بْنَ كَعْبٍ فَقُلْتُ لَهُ وَقَعَ فِي نَفْسِي شَيْءٌ مِنْ الْقَدَرِ فَحَدِّثْنِي بِشَيْءٍ لَعَلَّ اللَّهَ أَنْ يُذْهِبَهُ مِنْ قَلْبِي قَالَ لَوْ أَنَّ اللَّهَ عَذَّبَ أَهْلَ سَمَاوَاتِهِ وَأَهْلَ أَرْضِهِ عَذَّبَهُمْ وَهُوَ غَيْرُ ظَالِمٍ لَهُمْ وَلَوْ رَحِمَهُمْ كَانَتْ رَحْمَتُهُ خَيْرًا لَهُمْ مِنْ أَعْمَالِهِمْ وَلَوْ أَنْفَقْتَ مِثْلَ أُحُدٍ ذَهَبًا فِي سَبِيلِ اللَّهِ مَا قَبِلَهُ اللَّهُ مِنْكَ حَتَّى تُؤْمِنَ بِالْقَدَرِ وَتَعْلَمَ أَنَّ مَا أَصَابَكَ لَمْ يَكُنْ لِيُخْطِئَكَ وَأَنَّ مَا أَخْطَأَكَ لَمْ يَكُنْ لِيُصِيبَكَ وَلَوْ مُتَّ عَلَى غَيْرِ هَذَا لَدَخَلْتَ النَّارَ . 251
அப்துல்லாஹ் பின் ஃபைரூஸ் அத்தைலமீ ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : இந்த ( தலை ) விதி தொடர்பாக என் மனதுக்குள் ஐயப்பாடு எழுந்தது . எங்கே அது என் மார்க்க நம்பிக்கையையும் என் ( மற்ற ) விவகாரங்களையும் பாழாக்கிவிடுமோ என நான் அஞ்சினேன் . ஆகவே , நான் ( நபித்தோழர் ) உபை பின் கஅப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்று , " அபுல் முன்திர் ! இந்த விதி தொடர்பாக என் மனதுக்குள் ஐயம் உள்ளது . அது எங்கே என் மார்க்க நம்பிக்கையையும் என் ( இதர ) விவகாரங்களையும் பாழாக்கி விடுமோ என நான் அஞ்சினேன் . ஆகவே , இது குறித்து ஏதேனும் ( நபிமொழியைக் ) கூறுங்கள் ! அதன் மூலம் அல்லாஹ் எனக்குப் பயனளிக்கக்கூடும் `` என்று சொன்னேன் . அப்போது உபை பின் கஅப் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள் : அல்லாஹ் தனது வானத்திலும் பூமியிலும் உள்ள அனைவரையும் வேதனைப் படுத்தினால் அல்லாஹ் அவர்களை வேதனைப்படுத்தியதற்காக அவன் அநீதி இழைத்தவனாக ஆகமாட்டான் . அவன் அவர்கள் அனைவர் மீதும் கருணை காட்டினால் அவர்கள் ( இவ்வுலகில் ) புரிந்த நல்லறங்களை விடச் சிறந்ததாகவே அது இருக்கும் . உன்னிடம் " உஹுத் மலையளவு தங்கம் ` அல்லது " உஹுத் மலையளவு செல்வம் ` இருந்து அவற்றை இறைவழியில் நீ ஈந்தாலும் நீ விதி தொடர்பாக நம்பிக்கை கொள்ளாத வரை அவை உன்னிடமிருந்து ஏற்கப்படாது . அறிந்துகொள் ! உனக்குக் கிடைத்துள்ள ஒன்று , உனக்குக் கிடைக்காதென ( விதியில் எழுதப்பட்டதாக ) இருக்கவுமில்லை ; உனக்குக் கிடைக்காமல் போன ஒன்று உனக்குக் கிடைக்குமென ( விதியில் எழுதப்பட்டதாக ) இருக்கவுமில்லை . ( உனக்குக் கிடைக்குமென விதியில் இருந்ததே கிடைத்தது ; கிடைக்காதென விதியில் இருந்ததே உனக்குக் கிடைக்கவில்லை ). இதற்கு மாறான நம்பிக்கையில் நீ இறந்துபோனால் நரகத்தில்தான் நீ நுழைவாய் `` என்று கூறிவிட்டு , “ இது குறித்து நீ என் சகோதரர் அப்துல்லாஹ் பின் மஸ்ஊதிடம் வினவினால் எந்தப் பிரச்சனையுமில்லை `` என்று கூறினார்கள் . அவ்வாறே நான் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்று இது குறித்து வினவினேன் . அப்போது அவரும் உபை பின் கஅப் ரளியல்லாஹு அன்ஹு கூறியதைப் போன்றே கூறினார்கள் . மேலும் “ நீ ஹுதைஃபா ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்று இது குறித்து வினவினால் எந்தப் பிரச்சனையும் இல்லை `` என்றார்கள் . அவ்வாறே நான் ஹுதைஃபா ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்று ( இது குறித்து ) வினவினேன் . அவர்களும் அவ்விருவரும் கூறியதைப் போன்றே கூறினார்கள் . மேலும் " நீ ஸைத் பின் ஸாபித் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்று ( இது குறித்து ) கேள் !`` என்றார்கள் அவ்வாறே நான் ஸைத் பின் ஸாபித் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்று வினவினேன் . அப்போது அவர்கள் நபியவர்கள் கூறியதாக மேற்கண்டவாறே கூறினார்கள் :
عُبَادَةُ بْنُ الصَّامِتِ لِابْنِهِ يَا بُنَيَّ إِنَّكَ لَنْ تَجِدَ طَعْمَ حَقِيقَةِ الْإِيمَانِ حَتَّى تَعْلَمَ أَنَّ مَا أَصَابَكَ لَمْ يَكُنْ لِيُخْطِئَكَ وَمَا أَخْطَأَكَ لَمْ يَكُنْ لِيُصِيبَكَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّ أَوَّلَ مَا خَلَقَ اللَّهُ الْقَلَمَ فَقَالَ لَهُ اكْتُبْ قَالَ رَبِّ وَمَاذَا أَكْتُبُ قَالَ اكْتُبْ مَقَادِيرَ كُلِّ شَيْءٍ حَتَّى تَقُومَ السَّاعَةُ يَا بُنَيَّ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ مَاتَ عَلَى غَيْرِ هَذَا فَلَيْسَ مِنِّي . 252
உபாதா பின் அஸ்ஸாமித் ரளியல்லாஹு அன்ஹு தம் மகனுக்குக் கூறியதாவது : “ என்னருமை மகனே ! நிச்சயமாக நீ , உனக்குக் கிடைத்துள்ள ஒன்று , உனக்குக் கிடைக்காதென ( விதியில் எழுதப்பட்டதாக ) இருக்கவுமில்லை ; உனக்குக் கிடைக்காமல்போன ஒன்று உனக்குக் கிடைக்குமென ( விதியில் எழுதப்பட்டதாக ) இருக்கவுமில்லை . ( உனக்குக் கிடைக்குமென விதியில் இருந்ததே கிடைத்தது ; கிடைக்காதென விதியில் இருந்ததே உனக்குக் கிடைக்கவில்லை ) என்பதை நீ அறியும் வரை நீ உண்மையான ஈமானின் சுவையை ஒருபோதும் சுவைக்க முடியாது . அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதை நான் செவியுற்றேன் : அல்லாஹ் முதன் முதலில் எழுதுகோலைப் படைத்தான் . அதனிடம் , “ நீ எழுது ” என்றான் . “ என் இறைவா ! நான் எதை எழுதுவேன் ?“ என்றது . அதற்கு அவன் , “ இறுதி நாள் வரையுள்ள எல்லாப் பொருள்களின் விதிகளையும் எழுது ” என்றான் . “ என்னருமை மகனே ! யார் இது அல்லாத நிலையில் ( விதியை நம்பாமல் ) இறந்துவிட்டாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர் ” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதை நான் செவியுற்றேன் .