5-باب : كتابة الآجال والأَرزاق
பாடம் 5

பாடம்: 5 வாழ்நாளும் வாழ்வாதாரமும் எழுதப்படுதல்

ஹதீஸ் 262 அத்தியாயம் 7 பாடம் 5

(م) عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ قَالَتْ أُمُّ حَبِيبَةَ اللَّهُمَّ مَتِّعْنِي بِزَوْجِي رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَبِأَبِي أَبِي سُفْيَانَ وَبِأَخِي مُعَاوِيَةَ فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّكِ سَأَلْتِ اللَّهَ لِآجَالٍ مَضْرُوبَةٍ وَآثَارٍ مَوْطُوءَةٍ وَأَرْزَاقٍ مَقْسُومَةٍ لَا يُعَجِّلُ شَيْئًا مِنْهَا قَبْلَ حِلِّهِ وَلَا يُؤَخِّرُ مِنْهَا شَيْئًا بَعْدَ حِلِّهِ وَلَوْ سَأَلْتِ اللَّهَ أَنْ يُعَافِيَكِ مِنْ عَذَابٍ فِي النَّارِ وَعَذَابٍ فِي الْقَبْرِ لَكَانَ خَيْرًا لَكِ . 262

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ( ஒரு முறை ) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துணைவியார் உம்மு ஹபீபா ரளியல்லாஹு அன்ஹா , “ இறைவா ! என் கணவர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , என் தந்தை அபூசுஃப்யான் , என் சகோதரர் முஆவியா ஆகியோர் ( நீண்ட நாள்கள் வாழ்வதன் ) மூலம் எனக்குப் பயனளிப்பாயாக !`` என்று பிரார்த்தனை செய்தார்கள் . அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ நீ ( ஏற்கெனவே ) நிர்ணயிக்கப்பட்டுவிட்ட ஆயுளையும் குறிக்கப்பட்டுவிட்ட ( வாழ் ) நாள்களையும் பங்கிடப்பட்டுவிட்ட வாழ்வாதாரத்தையும் அல்லாஹ்விடம் கேட்டிருக்கிறாய் . அல்லாஹ் அவற்றில் எதையும் , அதற்குரிய நேரத்திற்கு முன்பே ஒருபோதும் கொண்டுவந்துவிடவு மாட்டான் ; அவற்றில் எதையும் , அதற்குரிய நேரத்தைவிட்டுத் தாமதப்படுத்தவு மாட்டான் . நரக நெருப்பின் வேதனையிலிருந்து அல்லது மண்ணறையின் வேதனையிலிருந்து உன்னைக் காக்கும்படி நீ அல்லாஹ்விடம் வேண்டியிருந்தால் நன்றாகவும் சிறந்ததாகவும் இருந்திருக்கும் `` என்று சொன்னார்கள் . அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் குரங்குகள் பற்றிப் பேசப்பட்டது . - பன்றிகளாக உருமாற்றப்பட்ட ( பனூ இஸ்ராயீல் சமுதாயத்த ) வர்கள் பற்றியும் பேசப்பட்டது என்று அல்கமா ரஹிமஹுல்லாஹ் கூறியதாகவே நான் கருதுகிறேன் என அறிவிப்பாளர் மிஸ்அர் ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள் . - அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ அல்லாஹ் ஊருமாற்றிய எந்தச் சமுதாயத்தாருக்கும் சந்ததிகளையோ வழித்தோன்றல்களையோ அவன் ஏற்படுத்தியதில்லை . குரங்குகளும் பன்றிகளும் அதற்கு முன்பே இருந்தன `` என்று சொன்னார்கள் .

Reference: ( முஸ்லிம் : 2663 / 5176)