பாடம்: 8. நீ எதைச் சந்திக்கப்போகிறாயோ அது குறித்து எழுதுகோல் காய்ந்துவிட்டது (முன்னரே தீர்மானிக்கப்பட்டுவிட்டது)
(ق) عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ قَالَ قَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ أَيُعْرَفُ أَهْلُ الْجَنَّةِ مِنْ أَهْلِ النَّارِ قَالَ نَعَمْ قَالَ فَلِمَ يَعْمَلُ الْعَامِلُونَ قَالَ كُلٌّ يَعْمَلُ لِمَا خُلِقَ لَهُ أَوْ لِمَا يُسِّرَ لَهُ . 265
இம்ரான் பின் ஹுஸைன் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ஒரு மனிதர் “ அல்லாஹ்வின் தூதரே ! சொர்க்கவாசிகள் யார் ? நரகவாசிகள் யார் ? என்று ( முன்பே அல்லாஹ்வுக்குத் ) தெரியுமா ?`` எனக் கேட்டார் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “ ஆம் ( தெரியும் )`` என்று சொன்னார்கள் . அவர் “ அவ்வாறாயின் ஏன் நற்செயல் புரிகின்றவர்கள் நற்செயல் புரிய வேண்டும் ?`` என்று கேட்டார் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “ ஒவ்வொருவரும் ‘ எ( தை அடைவ ) தற்காகப் படைக்கப்பட்டார்களோ ` அல்லது " எ( தை அடைவ ) தற்கு வாய்ப்பளிக்கப்பட்டார்களோ ` அதற்காகச் செயல்படுகிறார்கள் `` என்று பதிலளித்தார்கள் .
(م) عَنْ أَبِي الْأَسْوَدِ الدِّيلِيِّ قَالَ قَالَ لِي عِمْرَانُ بْنُ الْحُصَيْنِ أَرَأَيْتَ مَا يَعْمَلُ النَّاسُ الْيَوْمَ وَيَكْدَحُونَ فِيهِ أَشَيْءٌ قُضِيَ عَلَيْهِمْ وَمَضَى عَلَيْهِمْ مِنْ قَدَرِ مَا سَبَقَ أَوْ فِيمَا يُسْتَقْبَلُونَ بِهِ مِمَّا أَتَاهُمْ بِهِ نَبِيُّهُمْ وَثَبَتَتْ الْحُجَّةُ عَلَيْهِمْ فَقُلْتُ بَلْ شَيْءٌ قُضِيَ عَلَيْهِمْ وَمَضَى عَلَيْهِمْ قَالَ فَقَالَ أَفَلَا يَكُونُ ظُلْمًا قَالَ فَفَزِعْتُ مِنْ ذَلِكَ فَزَعًا شَدِيدًا وَقُلْتُ كُلُّ شَيْءٍ خَلْقُ اللَّهِ وَمِلْكُ يَدِهِ فَلَا يُسْأَلُ عَمَّا يَفْعَلُ وَهُمْ يُسْأَلُونَ . 266
அபுல்அஸ்வத் அத்தியலீ ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : என்னிடம் இம்ரான் பின் அல்ஹுஸைன் ரளியல்லாஹு அன்ஹு , “ மனிதர்கள் இன்று நற்செயல் புரிவதும் அதற்காக முனைந்து செயலாற்றுவதும் ஏற்கெனவே அவர்கள்மீது தீர்மானிக்கப்பட்டுவிட்ட , முன்பே முடிவு செய்யப்பட்டுவிட்ட விதியின் அடிப்படையிலா ? அல்லது அவர்களுக்கெதிரான ஆதாரத்தை நிலை நிறுத்தும் வகையில் , அவர்களுடைய இறைத்தூதர்கள் அவர்களிடம் கொண்டுவந்துள்ளவற்றை ஏற்றுச் செயல்படுத்துவதன் அடிப்படையிலா ?`` என்று கேட்டார்கள் . அதற்கு நான் , “ இல்லை ; ஏற்கெனவே அவர்கள்மீது தீர்மானிக்கப்பட்டுவிட்ட , நடந்துமுடிந்த ( விதியின் ) அடிப்படையில்தான் `` என்று சொன்னேன் . அதற்கு இம்ரான் ரளியல்லாஹு அன்ஹு , “ இது அநீதியாகாதா ?`` என்று கேட்டார்கள் . அதைக் கேட்டு நான் கடுமையாக அதிர்ந்துவிட்டேன் . மேலும் , “ அனைத்தும் அல்லாஹ்வின் படைப்பே ; அவனது அதிகாரத்துக்குட்பட்டவையே . அவன் செய்வது குறித்து யாரும் கேள்வி கேட்க முடியாது . ஆனால் , மனிதர்கள் விசாரிக்கப்படுவார்கள் `` என்று சொன்னேன் . அப்போது இம்ரான் ரளியல்லாஹு அன்ஹு , “ அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும் . உங்கள் அறிவைப் பரிசோதிப்பதற்காகவே நான் கேள்வி கேட்டேனே தவிர , வேறெதற்கும் நான் கேள்வி கேட்கவில்லை `` என்று கூறிவிட்டுப் பின்வருமாறு சொன்னார்கள் : " முஸைனா ` குலத்தைச் சேர்ந்த இரண்டு பேர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து , “ அல்லாஹ்வின் தூதரே ! மனிதர்கள் இன்று நற்செயல் புரிவதும் அதற்காக முனைந்து செயல்படுவதும் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட , முன்பே முடிவு செய்யப்பட்டுவிட்ட விதியின் அடிப்படையிலா ? அல்லது அவர்களுக்கெதிரான ஆதாரத்தை நிலைநிறுத்தும் வகையில் , அவர்களுடைய இறைத்தூதர்கள் அவர்களிடம் கொண்டுவந்துள்ளவற்றை ஏற்றுச் செயல்படுத்துவதன் அடிப்படையிலா ?`` என்று கேட்டார்கள் . அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ இல்லை ; ஏற்கெனவே அவர்கள்மீது தீர்மானிக்கப்பட்டுவிட்ட , அவர்கள் விஷயத்தில் முடிவாகிவிட்ட ( விதியின் ) அடிப்படையில்தான் `` என்று கூறிவிட்டு இதை உண்மைப்படுத்தும் சான்று வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வின் வேதத்தில் உள்ளது எனக் கூறி , பின்வரும் வசனங்களை ஓதிக்காட்டினார்கள் : உயிரின் மீதும் , அதை வடிவமைத்து , அதன் நன்மையையும் தீமையையும் அதற்கு அறிவித்தவன்மீதும் சத்தியமாக ! (91: 7-8)
(م) عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ قَالَتْ دُعِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى جَنَازَةِ صَبِيٍّ مِنْ الْأَنْصَارِ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ طُوبَى لِهَذَا عُصْفُورٌ مِنْ عَصَافِيرِ الْجَنَّةِ لَمْ يَعْمَلْ السُّوءَ وَلَمْ يُدْرِكْهُ قَالَ أَوَ غَيْرَ ذَلِكَ يَا عَائِشَةُ إِنَّ اللَّهَ خَلَقَ لِلْجَنَّةِ أَهْلًا خَلَقَهُمْ لَهَا وَهُمْ فِي أَصْلَابِ آبَائِهِمْ . 267
இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறியதாவது : அன்ஸாரிகளில் ஒரு குழந்தை இறந்தபோது , அதன் பிரேத நல்லடக்கத்திற்காக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அழைக்கப்பட்டார்கள் . அப்போது நான் , “ அல்லாஹ்வின் தூதரே ! அக்குழந்தைக்கு நல் வாழ்த்துகள் ! அது சொர்க்கத்தின் சிட்டுக் குருவிகளில் ஒரு சிட்டுக்குருவி . அது எந்தத் தீமையையும் செய்யவில்லை . அதற்கான பருவத்தையும் அது அடையவில்லை `` என்று சொன்னேன் . அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ வேறு ஏதேனும் உண்டா , ஆயிஷா ? அல்லாஹ் சொர்க்கத்திற்கென்றே சிலரைப் படைத்துள்ளான் . அவர்கள் தம் பெற்றோரின் முதுகுத்தண்டுகளில் இருந்தபோதே அதற்காக அவர்களை அவன் படைத்துவிட்டான் ; நரகத்திற்கென்றே சிலரைப் படைத்தான் . அவர்கள் தம் பெற்றோரின் முதுகுத்தண்டுகளில் இருந்தபோதே அதற்காக அவர்களைப் படைத்துவிட்டான் `` என்று கூறினார்கள் .
عَنْ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ خَلَقَ خَلْقَهُ فِي ظُلْمَةٍ فَأَلْقَى عَلَيْهِمْ مِنْ نُورِهِ فَمَنْ أَصَابَهُ مِنْ ذَلِكَ النُّورِ اهْتَدَى وَمَنْ أَخْطَأَهُ ضَلَّ فَلِذَلِكَ أَقُولُ جَفَّ الْقَلَمُ عَلَى عِلْمِ اللَّ . 268
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதைத் தாம் செவியுற்றதாக அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் தனது படைப்பினங்களை இருளில்தான் படைத்தான் . பிறகு தனது ஒளிச் சுடரிலிருந்து சிறிதை அவற்றின்மீது பாய்ச்சினான் . அந்த ஒளிச்சுடர் பட்டவர் நல்வழி கண்டார் . அந்த ஒளிச்சுடர் படாதவர் வழிதவறிச் சென்றார் . ஆகவேதான் நான் கூறுகிறேன் : ( ஏற்கெனவே ) அல்லாஹ் அறிந்துள்ளதன் படியே ( விதி எழுதிய ) எழுதுகோல் உலர்ந்துவிட்டது .
عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ قَالَ لَمَّا نَزَلَتْ هَذِهِ الْآيَةَ فَمِنْهُمْ شَقِيٌّ وَسَعِيدٌ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ يَا نَبِيَّ اللَّهِ فَعَلَى مَا نَعْمَلُ عَلَى شَيْءٍ قَدْ فُرِغَ مِنْهُ أَوْ عَلَى شَيْءٍ لَمْ يُفْرَغْ مِنْهُ قَالَ بَلْ عَلَى شَيْءٍ قَدْ فُرِغَ مِنْهُ وَجَرَتْ بِهِ الْأَقْلَامُ يَا عُمَرُ وَلَكِنْ كُلٌّ مُيَسَّرٌ لِمَا خُلِقَ لَهُ . 269
உமர் பின் அல்கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : "( மறுமை நாளில் ) அவர்களில் நற்பேறற்றவர்களும் இருப்பர் ; நற்பேறுள்ளவர்களும் இருப்பர் ’’ (11:105) என்ற இந்த வசனம் அருளப்பெற்றபோது நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் , " அல்லாஹ்வின் தூதரே ! எதன்படி நாம் செயல்படுவோம் ? ( ஏற்கெனவே ) முடிவுசெய்யப்பட்ட ஒன்றின்படி செயல்படுவோமா ? அல்லது ( இது வரை ) முடிவுசெய்யப்படாத ஒன்றின்படி செயல்படுவோமா ? எனக் கேட்டேன் . ( அப்போது ) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , " உமரே ! ( அவ்வாறன்று .) மாறாக , ( ஏற்கெனவே ) முடிவுசெய்யப்பட்டு , எழுதுகோல்கள் பதிவுசெய்த ஒன்றின்படியே நாம் செயல்படுவோம் . எனினும் ஒவ்வொருவரும் எ( தை அடைவ ) தற்காகப் படைக்கப்பட்டார்களோ அதற்கு வாய்ப்பளிக்கப்படுகிறார்கள் ’’ என்று பதிலளித்தார்கள் .
عَنْ عَائِشَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ الرَّجُلَ لَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ الْجَنَّةِ وَإِنَّهُ لَمَكْتُوبٌ فِي الْكِتَابِ مِنْ أَهْلِ النَّارِ فَإِذَا كَانَ قَبْلَ مَوْتِهِ تَحَوَّلَ فَعَمِلَ بِعَمَلِ أَهْلِ النَّارِ فَمَاتَ فَدَخَلَ النَّارَ وَإِنَّ الرَّجُلَ لَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ النَّارِ وَإِنَّهُ لَمَكْتُوبٌ فِي الْكِتَابِ مِنْ أَهْلِ الْجَنَّةِ فَإِذَا كَانَ قَبْلَ مَوْتِهِ تَحَوَّلَ فَعَمِلَ بِعَمَلِ أَهْلِ الْجَنَّةِ فَمَاتَ فَدَخَلَهَا . 270
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிப்பதாவது : ஒரு மனிதன் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்தவண்ணமிருப்பான் ஆனால் அவன் நரகவாசி என்று விதியில் எழுதப்பட்டிருக்கும் . அப்போது . ( எதிர்பாராவிதமாக ) மரணம் ஏற்படுவதற்குமுன் அவனை விதி மாற்றிவிடும் . எனவே அவன் நரகவாசிக்குரிய அமல்களைச் செய்யத் தொடங்கி , பின்னர் இறந்து விடுவான் . எனவே அவன் நரகத்தில் நுழைவான் . ஒரு மனிதன் நரகவாசிகளின் செயலைச் செய்தவண்ணமிருப்பான் ஆனால் அவன் சொர்க்கவாசி என்று விதியில் எழுதப்பட்டிருக்கும் . அப்போது . ( எதிர்பாராவிதமாக ) மரணம் ஏற்படுவதற்குமுன் அவனை விதி மாற்றிவிடும் . எனவே அவன் சொர்க்கவாசிக்குரிய அமல்களைச் செய்யத் தொடங்கி , பின்னர் இறந்து விடுவான் . எனவே அவன் சொர்க்கத்தில் நுழைவான் .