பாடம்: 12. ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களும் தர்க்கம் செய்தல்
(ق) عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ احْتَجَّ آدَم ُ وَمُوسَى فَقَالَ لَهُ مُوسَى يَا آدَم ُ أَنْتَ أَبُونَا خَيَّبْتَنَا وَأَخْرَجْتَنَا مِنْ الْجَنَّةِ قَالَ لَهُ آدَم ُ يَا مُوسَى اصْطَفَاكَ اللَّهُ بِكَلَامِهِ وَخَطَّ لَكَ بِيَدِهِ أَتَلُومُنِي عَلَى أَمْرٍ قَدَّرَهُ اللَّهُ عَلَيَّ قَبْلَ أَنْ يَخْلُقَنِي بِأَرْبَعِينَ سَنَةً فَحَجَّ آدَم ُ مُوسَى فَحَجَّ آدَم ُ مُوسَى ثَلَاثًا . 279
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ( இறைத்தூதர்களான ) ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களும் தர்க்கம் செய்தார்கள் . ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் மூஸா அலைஹிஸ்ஸலாம் “ ஆதம் அவர்களே ! எங்கள் தந்தையான நீங்கள் ( உங்கள் பாவத்தின் காரணத்தால் ) எங்களை இழப்புக்குள்ளாக்கி விட்டீர்கள் ; சொர்க்கத்திலிருந்து எங்களை வெளியேற்றி விட்டீர்கள் `` என்று சொன்னார்கள் . அதற்கு ஆதம் அலைஹிஸ்ஸலாம் , “ மூஸாவே ! அல்லாஹ் தன்னுடன் உரையாடுவதற்கு உம்மையே தேர்ந்தெடுத்தான் ; அவன் தன் கரத்தால் ( வல்லமையால் ) உமக்காக ( தவ்ராத் எனும் வேதத்தை ) வரைந்தான் . ( இத்தகைய ) நீங்கள் , அல்லாஹ் என்னைப் படைப்பதற்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே என்மீது அவன் விதித்துவிட்ட ஒரு விஷயத்திற்காக என்னைப் பழிக்கின்றீர்களா ?`` என்று கேட்டார்கள் . ( இந்த பதில் மூலம் ) மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை ஆதம் அலைஹிஸ்ஸலாம் தோற்கடித்து விட்டார்கள் ; தோற்கடித்து விட்டார்கள் என மூன்று முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் .