13-باب : العمل بالخواتيم
பாடம் 13

பாடம்: 13. முடிவுகளைக்கொண்டுதான் செயல் (தீர்மானிக்கப்படுகிறது)

ஹதீஸ் 280 அத்தியாயம் 7 பாடம் 13

(ق) عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْتَقَى هُوَ وَالْمُشْرِكُونَ فَاقْتَتَلُوا فَلَمَّا مَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى عَسْكَرِهِ وَمَالَ الْآخَرُونَ إِلَى عَسْكَرِهِمْ وَفِي أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ لَا يَدَعُ لَهُمْ شَاذَّةً إِلَّا اتَّبَعَهَا يَضْرِبُهَا بِسَيْفِهِ فَقَالُوا مَا أَجْزَأَ مِنَّا الْيَوْمَ أَحَدٌ كَمَا أَجْزَأَ فُلَانٌ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَا إِنَّهُ مِنْ أَهْلِ النَّارِ . 280

சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் இணை வைப்போரும் ( கைபர் போர்க்களத்தில் ) சந்தித்துப் போரிட்டுக் கொண்டனர் . நபியவர்கள் தம் படையின் பக்கம் சென்றுவிட மற்றவர்களும் தம் படையின் பக்கம் சென்றுவிட்டனர் . அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்களுக்கிடையே ஒருவர் இருந்தார் . அவர் ( எதிரிகளின் ) போரில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி நிற்பவர் , படையிலிருந்து விலகிப் போய் தனியே சென்றவர் ( அதாவது எதிர்த்து நிற்பவர் , பணிந்து செல்பவர் என்று ) எவரையும் நபித்தோழர்களுக்கு விட்டு வைக்காமல் அனைவரையும் தம் வாளால் வெட்டியபடி துரத்திச் சென்று ( மூர்க்கமாகப் போரிட்டுக் ) கொண்டிருந்தார் . ( அவரது துணிச்சலான போரைக் கண்ட ) நபித் தோழர்கள் , “ இந்த மனிதர் போரிட்டதைப் போல் இன்று நம்மில் வேறெவரும் தேவை தீரப் போரிடவில்லை `` என்று ( வியந்து ) கூறினார்கள் . இதைக் கேட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ அவரோ நரகவாசியாவார் `` என்று கூறினார்கள் . அப்போது கூட்டத்திலிருந்து ஒரு மனிதர் , “ நான் அவருடன் இருக்கிறேன் ( அவர் என்ன செய்கிறார் என்று பார்ப்பதற்கு )`` என்று சொல்லிவிட்டு அந்த மனிதருடன் புறப்பட்டார் . அவர் நின்ற போதெல்லாம் இவரும் நின்றார் . அவர் விரைந்தால் இவரும் விரைந்தார் . ( ஒரு கட்டத்தில் ) அவர் கடுமையாகக் காயப்படுத்தப்பட்டார் . அதனால் சீக்கிரமாக மரணித்துவிட விரும்பி , தம் வாளின் ( கைப்பிடியுள்ள ) முனையை பூமியில் ஊன்றி , அதன் கூரான முனையைத் தன் இரு மார்புகளுக்கு இடையே வைத்து , அந்த வாளின்மீது தம் உடலை அழுத்திக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார் . ( இதை உடனிருந்து கண்காணித்துவிட்டு ) அந்த மனிதர் அல்லாஹ்வின் தூதரிடம் சென்று , “ தாங்கள் அல்லாஹ்வின் தூதர்தாம் என்பதற்கு நான் சாட்சியம் அளிக்கிறேன் `` என்று சொன்னார் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , " என்ன விஷயம் ?`` என்று கேட்டார்கள் . அவர் , “ சற்று முன்பு தாங்கள் ஒருவரைப் பற்றி " அவர் நரகவாசி ` என்று கூறினீர்கள் அல்லவா ? அதைக் கண்டு மக்கள் வியப்படைந்தனர் . நான் ( மக்களிடம் ), “ உங்களுக்காக ( அவரது நிலைகளை அறிந்து வர ) நான் அவருடன் போய் வருகிறேன் `` என்று கூறிவிட்டு , அவரைத் தேடிப் புறப்பட்டேன் . அவர் கடுமையாகக் காயப்படுத்தப்பட்டார் . உடனே , அவர் சீக்கிரமாக மரணமடைய விரும்பி , வாளின் பிடிமுனையை பூமியில் நட்டு , அதன் கூர்முனையைத் தம் இரு மார்புகளுக்கிடையே வைத்து , அதன்மீது தம்மை அழுத்திக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார் `` என்று கூறினார் . அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ மக்களின் வெளிப் பார்வைக்கு ஒரு மனிதர் சொர்க்கத்திற்குரிய ( நற் ) செயலைச் செய்து வருவார் . ஆனால் , அவர் ( உண்மையில் ) நரகவாசியாக இருப்பார் . மக்களின் வெளிப்பார்வைக்கு ஒரு மனிதர் நரகத்திற்குரிய செயலைச் செய்து வருவார் . ஆனால் , ( உண்மையில் ) அவர் சொர்க்கவாசியாக இருப்பார் `` என்று சொன்னார்கள் .

Reference: ( புகாரீ : 2898, முஸ்லிம் : 112)
ஹதீஸ் 281 அத்தியாயம் 7 பாடம் 13

(م) عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ الرَّجُلَ لَيَعْمَلُ الزَّمَنَ الطَّوِيلَ بِعَمَلِ أَهْلِ الْجَنَّةِ ثُمَّ يُخْتَمُ لَهُ عَمَلُهُ بِعَمَلِ أَهْلِ النَّارِ وَإِنَّ الرَّجُلَ لَيَعْمَلُ الزَّمَنَ الطَّوِيلَ بِعَمَلِ أَهْلِ النَّارِ ثُمَّ يُخْتَمُ لَهُ عَمَلُهُ بِعَمَلِ أَهْلِ الْجَنَّةِ . 281

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ஒரு மனிதர் நீண்ட காலம் சொக்கவாசிகளின் ( நற் ) செயலைச் செய்து கொண்டே வருவார் . பிறகு அவரது செயல் நரகவாசிகளின் செயலாக முடிக்கப்படும் . ஒரு மனிதர் நீண்ட காலம் நரகவாசிகளின் ( தீய ) செயலைச் செய்துகொண்டே வருவார் . பிறகு அவரது செயல் சொர்க்கவாசிகளின் செயலாக முடிக்கப்படும் .

Reference: ( முஸ்லிம் : 2651 / 5155)
ஹதீஸ் 282 அத்தியாயம் 7 பாடம் 13

عَنْ أَنَسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ الرَّجُلَ لَيَعْمَلُ الْبُرْهَةَ مِنْ عُمُرِهِ بِالْعَمَلِ الَّذِي لَوْ مَاتَ عَلَيْهِ دَخَلَ الْجَنَّةَ فَإِذَا كَانَ قَبْلَ مَوْتِهِ تَحَوَّلَ فَعَمِلَ عَمَلَ أَهْلِ النَّارِ فَمَاتَ فَدَخَلَ النَّارَ وَإِنَّ الرَّجُلَ لَيَعْمَلُ الْبُرْهَةَ مِنْ عُمُرِهِ بِالْعَمَلِ الَّذِي لَوْ مَاتَ عَلَيْهِ دَخَلَ النَّارَ فَإِذَا كَانَ قَبْلَ مَوْتِهِ تَحَوَّلَ فَعَمِلَ بِعَمَلِ أَهْلِ الْجَنَّةِ فَمَاتَ فَدَخَلَ الْجَنَّةَ . 282

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ஒரு மனிதர் தமது வாழ்நாளின் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நல்லறங்கள் செய்வார் . அவர் இறந்துவிட்டால் சொர்க்கத்தில் நுழைவார் எனுமளவிற்கு ( நல்லறங்கள் செய்வார் ). மேலும் அவரது மரணத்திற்குமுன் அவர் மாற்றப்பட்டால் , அவர் நரகவாசிகளின் செயல்களைச் செய்து , ( அந்நிலையிலேயே ) அவர் இறந்து விடுவார் ; பின்னர் அவர் நரகத்தில் நுழைவார் , ஒருவர் தமது வாழ்நாளின் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குச் செயல்படுவார் . அவர் இறந்துவிட்டால் நரகத்தில் நுழைவார் எனுமளவிற்கு ( செயல்படுவார் ). மேலும் அவரது மரணத்திற்கு முன் அவர் மாற்றப்பட்டால் , அவர் சொர்க்கவாசிகளின் செயல்களைச் செய்து , ( அந்நிலையிலேயே ) இறந்துவிடுவார் ; பின்னர் அவர் சொர்க்கத்தில் நுழைவார் .

Reference: ( முஸ்னத் அஹ்மது : 13695). இந்நூலின் மற்றோர் அறிவிப்பில் அதிகபட்சமாக இடம்பெற்றுள்ளதாவது : ஒருவர் எதுகொண்டு முடிக்கப்படுகிறார் என்பதை நீங்கள் பார்க்கும் வரை யாரையும் கண்டு ஆச்சரியப்படக்கூடாது . முஸ்லிம் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் நிபந்தனைப்படி இதன் அறிவிப்பாளர் தொடர் ஸஹீஹ் தரத்தில் உள்ளது .