பாடம்: 18. தலைவிதி குறித்து விவாதம் செய்யத் தடை
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ نَتَنَازَعُ فِي الْقَدَرِ فَغَضِبَ حَتَّى احْمَرَّ وَجْهُهُ حَتَّى كَأَنَّمَا فُقِئَ فِي وَجْنَتَيْهِ الرُّمَّانُ فَقَالَ أَبِهَذَا أُمِرْتُمْ أَمْ بِهَذَا أُرْسِلْتُ إِلَيْكُمْ إِنَّمَا هَلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ حِينَ تَنَازَعُوا فِي هَذَا الْأَمْرِ عَزَمْتُ عَلَيْكُمْ أَلَّا تَتَنَازَعُوا فِيهِ . 288
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ( ஒரு நாள் ) எங்களிடையே அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் புறப்பட்டு வந்தார்கள் அப்போது நாங்கள் ‘ தலைவிதி ` குறித்து விவாதம் செய்து கொண்டிருந்தோம் . அதைப் பார்த்து அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கோபப்பட்டார்கள் . எந்த அளவுக்கென்றால் , அவர்களின் கன்னங்களில் மாதுளையைப் பிளந்து வைத்ததைப் போன்று அவர்களின் முகம் ( கடுமையாகச் ) சிவந்துவிட்டது . அப்போது அவர்கள் , “ இ( வ்வாறு விதி குறித்து விவாதிப்ப ) தற்குத்தான் உங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதா ? அல்லது இதற்காகத்தான் உங்களுக்கு நான் தூதராக அனுப்பப்பட்டுள்ளேனா ? உங்களுக்கு முன்னிருந்தோர் அழிந்ததெல்லாம் இவ்விஷயத்தில் சண்டையிட்டுக்கொண்டபோதுதான் . இது தொடர்பாக நீங்கள் விவாதம் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் உறுதியாகச் சொல்லிக் கொள்கிறேன் ” என்றார்கள் .
عَنْ عبدِ اللهِ بنِ عَمْرٍو قَالَ : خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى أَصْحَابِهِ وَهُمْ يَخْتَصِمُونَ فِي الْقَدَرِ فَكَأَنَّمَا يُفْقَأُ فِي وَجْهِهِ حَبُّ الرُّمَّانِ مِنْ الْغَضَبِ فَقَالَ بِهَذَا أُمِرْتُمْ أَوْ لِهَذَا خُلِقْتُمْ تَضْرِبُونَ الْقُرْآنَ بَعْضَهُ بِبَعْضٍ بِهَذَا هَلَكَتْ الْأُمَمُ قَبْلَكُمْ . 289
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ( ஒரு நாள் ) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தம் தோழர்களிடம் புறப்பட்டு வந்தார்கள் . அப்போது தோழர்கள் விதி தொடர்பாக விவாதித்துக் கொண்டிருந்தனர் . இதைக் கண்டவுடன் மாதுளம் பழத்தின் வித்துகளைப் பிளந்து ( அல்லது பிழிந்து ) வைத்ததைப் போன்று கோபத்தால் அவர்களது முகம் நிறமாறிவிட்டது . அப்போது அவர்கள் , இதற்காகத்தான் நீங்கள் பணிக்கப்பட்டுள்ளீர்களா ? அல்லது படைக்கப்பட்டுள்ளீர்களா ? நீங்கள் குர்ஆன் வசனங்களில் ஒன்றை மற்றொன்டோடு மோதவிடுகிறீர்களா ? இதன் காரணமாகவே உங்களுக்கு முந்தைய சமுதாயங்கள் அழிக்கப்பட்டனர் `` என்று கூறினார்கள் . நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஓர் அவையில் கலந்து கொள்ளாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என எண்ணியதில்லை . ஆனால் , இந்த அவையில் கலந்து கொள்ளாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என நான் எண்ணினேன் ( அந்த அளவுக்கு அந்த அவையில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கோபப்பட்டார்கள் .)
عَنْ ابْنَ عَبَّاسٍ أَنَّهُ قَالَ وَهُوَ عَلَى الْمِنْبَرِقاَلَ : رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَزَالُ أَمْرُ هَذِهِ الْأُمَّةِ مُوَائِمًا - أَوْ مُقَارِبًا - مَا لَمْ يَتَكَلَّمُوا فِي الْوِلْدَانِ وَالْقَدَرِ . 290
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு சொற்பொழிவு மேடை ( மிம்பர் ) மீதிருந்து கூறியதாவது : இந்தச் சமுதாயத்தின் விஷயம் ( இணைவைப்பாளர்களின் ) குழந்தைகள் குறித்தும் தலைவிதி குறித்தும் மக்கள் பேசாத வரை சீராக இருந்துகொண்டே இருக்கும் .