1-باب : الفقه في الدين
பாடம் 1

பாடம்: 1. மார்க்கத்தை அறிந்துகொள்ளுதல்

ஹதீஸ் 294 அத்தியாயம் 8 பாடம் 1

(ق) عَنْ مُعَاوِيَةَ خَطِيبًا يَقُولُ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ يُرِدْ اللَّهُ بِهِ خَيْرًا يُفَقِّهْهُ فِي الدِّينِ وَإِنَّمَا أَنَا قَاسِمٌ وَاللَّهُ يُعْطِي وَلَنْ تَزَالَ هَذِهِ الْأُمَّةُ قَائِمَةً عَلَى أَمْرِ اللَّهِ لَا يَضُرُّهُمْ مَنْ خَالَفَهُمْ حَتَّى يَأْتِيَ أَمْرُ اللَّهِ . 294

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதைத் தாம் செவியுற்றதாக முஆவியா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : யாருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரை மார்க்கத்தில் விளக்கம் பெற்றவராக ஆக்கிவிடுகின்றான் . நான் விநியோகிப்பவன் தான் . அல்லாஹ்வே வழங்குகிறான் . இந்தச் சமுதாயத்தில் ஒரு சாரார் அல்லாஹ்வுடைய கட்டளையைப் பேணுவதில் நிலைத்தே இருப்பார்கள் . அல்லாஹ்வின் கட்டளை ( மறுமை நாள் ) வரும் வரை அவர்களுக்கு மாறு செய்பவர்களால் எந்தத் தீங்கும் செய்துவிட முடியாது .

Reference: ( புகாரீ : 71, முஸ்லிம் : 1037)
ஹதீஸ் 295 அத்தியாயம் 8 பாடம் 1

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ يُرِدْ اللَّهُ بِهِ خَيْرًا يُفَقِّهْهُ فِي الدِّينِ . 295

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது : அல்லாஹ் யாருக்கு நன்மையை நாடுகின்றானோ அவரை அவன் மார்க்க அறிவு பெற்றவராக ஆக்குகிறான் .

Reference: ( இப்னுமாஜா : 220) இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 296 அத்தியாயம் 8 பாடம் 1

عَنْ جَابِرٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ النَّاسُ مَعَادِنُ فَخِيَارُهُمْ فِي الْجَاهِلِيَّةِ خِيَارُهُمْ فِي الْإِسْلَامِ إِذَا فَقِهُوا . 296

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : மக்கள் சுரங்கங்கள் ஆவர் . அறியாமைக் காலத்தில் அவர்களுள் சிறந்தவர்களாயிருந்தவர்கள் இஸ்லாத்தைத் தழுவிவிடும் போதும் சிறந்தவர்களாயிருப்பார்கள் ; அவர்கள் மார்க்க ஞானத்தைப் பெற்றுக் கொண்டால் .

Reference: ( முஸ்னது அஹ்மத் : 14945) முஸ்லிம் இமாமின் நிபந்தனைக்கேற்ப இதன் அறிவிப்பாளர் தொடர் ‘ ஸஹீஹ் ` ஆகும் .
ஹதீஸ் 297 அத்தியாயம் 8 பாடம் 1

عَنْ أَبِي سَعِيدٍ ، قَالَ : أَصْحَابُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا جَلَسُوا كَانَ حَدِيثُهُمْ يَعْنِي الْفِقْهَ إِلَّا أَنْ يَقْرَأَ رَجُلٌ سُورَةً أَوْ يَأْمُرَ رَجُلًا بِقِرَاءَةِ سُورَةٍ. 297

அபூசஈத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்கள் ஒரு சபையில் அமர்ந்தால் அவர்களின் பேச்சு ஃபிக்ஹ் சார்ந்ததாகவே இருக்கும் . எனினும் ஒருவர் ஏதேனும் ஓர் அத்தியாயத்தை ஓதுவார் அல்லது ஓர் அத்தியாயத்தை ஓதச் சொல்லிக் கட்டளையிடுவார் .

Reference: ( ஹாகிம் : 322) இது முஸ்லிம் இமாமின் நிபந்தனைக்கேற்ப அமைந்த ஹதீஸ் ஆகும் என்று தஹபீ ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள் .