பாடம்: 6. விடுகதை போட்டுக் கற்பித்தல்
(ق) عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ مِنْ الشَّجَرِ شَجَرَةً لَا يَسْقُطُ وَرَقُهَا وَهِيَ مَثَلُ الْمُسْلِمِ حَدِّثُونِي مَا هِيَ فَوَقَعَ النَّاسُ فِي شَجَرِ الْبَادِيَةِ وَوَقَعَ فِي نَفْسِي أَنَّهَا النَّخْلَةُ قَالَ عَبْدُ اللَّهِ فَاسْتَحْيَيْتُ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ أَخْبِرْنَا بِهَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هِيَ النَّخْلَةُ قَالَ عَبْدُ اللَّهِ فَحَدَّثْتُ أَبِي بِمَا وَقَعَ فِي نَفْسِي فَقَالَ لَأَنْ تَكُونَ قُلْتَهَا أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ يَكُونَ لِي كَذَا وَكَذَا . 312
அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : “ மரங்களில் ( இப்படியும் ) ஒருவகை மரம் உண்டு ; அதன் இலை உதிர்வதில்லை . அது முஸ்லிமுக்கு உவமையாகும் . அது என்ன மரம் என்று சொல்லுங்கள் !`` என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்டார்கள் . நாட்டு மரங்களை நோக்கி மக்களின் கவனம் போயிற்று . அது பேரீச்ச மரம்தான் என்று எனக்குத் தோன்றியது . ( மூத்தவர்கள் மௌனமாய் இருக்கும் அவையில் நான் எப்படிச் சொல்வது என்று ) வெட்கப்பட்டுக்கொண்டு ( அமைதியாக ) இருந்துவிட்டேன் . பிறகு மக்கள் “ அது என்ன மரம் என்று தாங்களே சொல்லுங்கள் , அல்லாஹ்வின் தூதரே ?`` என்று கேட்க , “ அது பேரீச்ச மரம் `` என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் . பின்னர் என் தந்தையிடம் என் மனதில் தோன்றிய விஷயத்தை நான் கூறினேன் . அதைக் கேட்ட என் தந்தை “ நீ அதைக் கூறியிருந்தால் இன்னின்னவை எனக்குக் கிடைப்பதைவிட அது எனக்கு மிகவும் விருப்பமானதாக இருந்திருக்கும் `` என்றார்கள் .